LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

கேட்கமுடியாத, கேட்காமலிருக்கமுடியாத கேள்விகள் சில….

 கேட்கமுடியாத,

கேட்காமலிருக்கமுடியாத
கேள்விகள் சில….



_ லதா ராமகிருஷ்ணன்

நிர்பயா கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளான நிகழ்வு ஆறாத்துயரம்.

நேற்றோ, இன்றோ நாளையோ ஒரு பெண் இத்தகைய கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவருக்கு நீதி கிடைக்க வில்லையானால் அது குறித்துக் கண்டனம் எழுப்பலாமே தவிர, நிர்பயா மேல்சாதியினப் பெண் என்றும்(இது உண்மை யல்ல) அதனால்தான் அவருக்கு நீதி கிடைத்தது என்றும் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாய்’ திரும்பத்திரும்ப நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமை யைப் புறந்தள்ளிப் பேசுவது என்னவிதமான சமூகப் பிரக்ஞை? என்னவிதமான பெண்ணியப் பிரக்ஞை?

ஆபாசமாக எழுதுகிறார் என்று ஓர் எழுத்தாள ரைக் கட்டங்கட்டி ‘ஆள்காட்டிக்’ கொடுப்பதாய் அந்த எழுத்தா ளரின் ஒரு புதினத்தில் இடம் பெறும் பகுதிகளை ‘out of context’இல் நிலைத் தகவலில் பகிர்வதும், அப்படிப் பகிர்வதன் மூலம் ஆபாசமெனக் கட்டங்கட்டிய அதே பகுதிகளைத் தன் நிலைத்தகவலில் தந்து அதைப் பலரும் படிக்கச் செய்வதும் என்னவிதமான சமூகப் பிரக்ஞை? என்னவிதமான பெண்ணியப் பிரக்ஞை?

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை சாதி பார்த்து கட்டங்கட்டி அடிப்பது என்னவிதமான சமூகப்பிரக்ஞை? என்னவிதமான பெண்ணியப் பிரக்ஞை?

No comments:

Post a Comment