LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, August 25, 2018

கருத்துரிமை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கருத்துரிமை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)
  
 












அட, கண்ணைத் திறந்து பாரப்பா!
அநியாயத்திற்கு வெட்கப்படுகிறாயே
என்று கடகடவென்று சிரித்துக்கொண்டே
சாதுச் சிறுவனின் கண்களைப் பொத்தியிருந்த
அவன் கைகளை
வலுக்கட்டாயமாக விலக்கியபடி
எதிரே ஓடிக்கொண்டிருந்த நீலப்படத்தைப்
பார்க்கச் செய்த பெரியமனிதர்
உன் அம்மாவும் அப்பாவும் இதைச் செய்ததால்தான்
நீ பிறந்தாய்,
தெரியுமா?” என்றார்.

தெரியும் ஐயா,
அவர்களுக்கென்று அறையில்லாதபோதும்
அவர்கள் இருளையும் பிள்ளைகளின் உறக்கத்தையும்
தங்கள் தனியறையாக மாற்றிக்கொண்டவர்கள்
ன்பதையும் நான் அறிவேன்
என்றான் சிறுவன்.

’மறுத்துப்பேசுமளவுக்கு வளர்ந்துவிட்டானா
தறுதலை
வேலையை விட்டு நீக்கி வாலை ஒட்ட
அறுத்துவிடவேண்டியதுதான் என்று
கறுவிக்கொண்டவர்
வாய்திறப்பதற்குள் _

போய்வருகிறேன் ஐயா,
இன்னொரு வேலை கிடைக்காமலா போய்விடும்”
என்று அவர் மனதைப் படித்தவனாய்
கூறிய சிறுவன்

”பீயும் மூத்திரமும் கழியாமல்
பெறமுடியுமா நலவாழ்வு?
பாரு பாரு என்று சொல்வீர்களா அதையும்?”

என்று வருத்தம் நிறைந்த குரலில் கேட்டவாறு
திரும்பிப்பாராமல் சென்றான்.





Ø  

Friday, August 24, 2018

பேசா வாசகமும் பொய்சாட்சியமும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 பேசா வாசகமும் பொய்சாட்சியமும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



உதிர்க்கப்படாத  வார்த்தைகளாலான
ஒரு வாசகம் உருவாக்கப்படுகிறது.

கூறப்பட்டதாய் பொய்சாட்சியம் தரும்படி
சிலரிடம் சொல்லிவைக்கப்படுகிறது.

தெருவெங்கும் அந்த வாசகத்தை
உரத்த குரலில் அடிக்கோடிட்டுக் காட்டும்
சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

உதிர்க்கப்படாத சொற்களாலான அந்த வாசகத்தின்
முன்னும் பின்னும்
வெகு கவனமாய் இன்னும் சில சொற்கள்
கோர்க்கப்படுகின்றன.

உதிர்க்கப்படாத சொற்களாலான அந்த வாசகத்தின்
சந்துபொந்துகளில் மறைந்திருக்கும்
சொற்கள் அவை என்று
முந்திக்கொண்டு பொழிப்புரை தருவதற்கென்றே
சிலர் வழியெங்கும் அணிவகுத்து நிற்கிறார்கள்.

அவர்களுக்கு நன்றாகவே தெரியும் _
உதிர்க்கப்பட்ட சொற்களைக் காட்டிலும்
உதிர்க்கப்படாத சொற்களாலான வாசகமே
உடனடிக் கலவரத்திற்கு அதிகம் உதவி புரியும்.

Ø  



Thursday, August 23, 2018

சொற்களம் - 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சொற்களம்

'ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 போர்க்களம் என்றாலே குறைந்தபட்சம் 
இரண்டு அணிகள் எதிரிகளாய்ப்
பொருதவேண்டும்.
பேரரசர்கள் எதிரெதியேயிருப்பின்
அவரவருக்கான சிற்றரசர்கள்
அவரவர் தரப்பில் இருப்பதுதான்
வழக்கம்.
நியாயம் யார் பக்கம்
என்று பார்ப்பதைக் காட்டிலும்
நியாயம் ஒன்றல்ல
என்று நியாயம் கற்பிப்பது சுலபம்.
அந்தந்த அரசர்களின் ராணிகள்
இளவரசிகள்
பெரும்பாலும் அவர்கள் பக்கமேதான்
இருப்பார்கள்.
அப்படியிருக்கவே பயிற்றுவிக்கப்
படுகிறார்கள் என்பதோடுகூட
நியாய தர்மமெல்லாம் ஆனை
சேனை பரிவாரங்கள் அதிகாரங்களைத்
தருமா என்ன? என்று
அவர்களுடைய இயங்கியல் அறிவு
எப்போதும் அறிவுறுத்திக்
கொண்டேயிருக்கிறது.
அவரவர் அமைச்சுகள்
ஆலோசகர்கள்
அடிப்பொடிகள் எல்லோரும்
ஆஹா ஆஹா என்ற
சேர்ந்திசைக்கே.
அல்லாமல் ஆலோசனை கூற
முற்படுவோர்
கருத்துரிமையின் பெயரால்
கழுவேற்றப்படுவது உறுதி.
இறுதியென்பதே இல்லாதது
போரொன்றே இங்கே
என்ப.
எல்லாவற்றையும் அழித்தபின்
இரங்கற்பா பாடினால் ஆயிற்று.
நவீன யுகத்தில் கூர்தீட்டப்பட்ட
போராயுதங்கள்
வாளோ ஈட்டியோ,
விஷம்தோய்ந்த வில்லம்புகளோ
அல்ல.
எங்கிருந்து வருகிறதென்றே தெரியாமல்
வருபவை,
எப்படி வருகிறதென்றே தெரியாமல்
வருபவை,
நேரிடையாய் நெஞ்சைத் துளைத்து
முதுகின் வழியே வெளியேறுவதிலிருந்து
வீசிய சுவடேயின்றி கழுத்தறுப்பது வரை
நரகல்லில் தோய்த்தெடுத்ததிலிருந்து
நவீன மோஸ்தரிலான ஏவுகணைவரை
எல்லாமே
வார்த்தைகள்.
மாட மாளிகைகளும்
கூடகோபுரங்களுமாய் வாழ்ந்துவரும் -
கனகச்சிதமாய் கவசமணிந்து
கொண்டிருக்கும்
யாரோ யாருடனோ
வீண்சண்டையிடப்
புறப்பட
பெருகும் குருதியெல்லாம்
சாமானியனுடையதாக……..



Wednesday, August 22, 2018

ஆன் - லைன் வர்த்தகம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


ஆன் - லைன் வர்த்தகம்
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)



அவரவர் வீட்டிலெல்லாம் அவள் உண்டு
பல உருவில்…..
ஆனாலும்
அப்பிராணியென்ற தெரிவிலோ என்னவோ
அப்போதைக்கப்போது அவளைத்
தப்புத்தப்பாகப் பேசிச் சிரிப்பதில்
அவர்களுக்குள் குதூகலம் கொப்பளிப்பதை
சரியென்று சொல்லாதார்
கரிபூசத்தக்கவர்கள் என்றுரைக்க
நிறைய பேர்.......

அவள் என்று எதுவும் இல்லையென்று 
அடித்துச்சொல்பவர்கள்
அவளுக்குக் காதுகேட்காது என்றும் 
சிரித்தபடி சொல்லிக்
கொண்டிருப்பதிலுள்ள
முரணை எண்ணிப்பார்க்கும் 
சுரணையுள்ளவர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள்
என்றாலும் காலைமுதல் மாலைவரை 
நாளொன்றுக்கு எட்டு மணிநேரத்திற்குமேல் 
வேலைசெய்தால்தான்
மாதம் ஒருமாரியாவது பொழியும் வீட்டில் 
என்ற நிலை.

உலை பொங்க 
கலை உதவிசெய்வதில்லை சிலருக்கு
என்றாலும் அவர்கள் 
கலையின் விலை சில தலைகள் என்று
மனிதநேயத்தைத் துணைக்கழைத்து
மலைப்பிரசங்கம் செய்வதில்லை.

வேறு சிலரோ
கையில் சில காரியார்த்த இலக்குகளோடு
காய்நகர்த்தலாக அவளைக் கவிதையில்
கடைவிரித்தபடி




Tuesday, August 21, 2018

ஆமையின் பெயர்மாற்றம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 · ஆமையின் பெயர்மாற்றம்
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


ஆமை என்ற ஒன்று
இல்லவேயில்லை யெனச்
சொல்லியவாறே
ஆமை என்றாவது பேசுமா என்றும்
சீமைப்புறங்களிலிருந்தும் சுற்றுவட்டாரங்களிருந்தும்
கேட்டுக்கொண்டிருப்பவர்களை
ஊமைவலியோடு பார்த்துக்கொண்டிருந்த
ஆமை மிகவும் மனம் சோர்ந்துபோனது.
முன்பெல்லாம்
ஆமைமுயல் கதையை
அடிக்கடி கேட்க முடிந்தது…..
முயலை ஆமை ஜெயித்ததைச்
சொன்ன விதம்
முயலின் கர்வத்தையன்றி
முயலை வெறுக்கச் செய்யவில்லை
யொருபோதும்.
[முசுமுசு முயலை 
யாரால் வெறுக்க இயலும்!]
ஆமை தன்னம்பிக்கைக்கு
முன்மாதிரியாயிற்று.
ஆனால் தீமையல்ல முயல்
தோற்ற ஆங்காரத்தில் தன்
வாலில் மறைத்துவைத்திருந்த
வாளால்
ஆமையை வெட்டிவிடவில்லை.
தன் தவறை உணரும் ஆற்றலிருந்தது
அதற்கு.
ஆமையோட்டைத்
தங்கள் கனவுகளின் கருவூலமாகக்
கொண்டாடிய சிறுவர்சிறுமியரும்
தற்காப்புப் பதுங்குகுழியாக விவரித்த
பெரியவர்களுமாய்
ஆமையைத் தங்களில் ஒருவராக
அங்கீகரித்திருந்தனர்.
ஆமையும் அழகுதான் என்று புரிந்தது.
இன்று நிலைமை வேறு
ஆமையைச் சீந்துவார் யாருமில்லை
அதன் குந்துமணிக்கண்களை
உற்று நோக்கிப்
புன்னகைக்க
முற்றிலும் மறந்துவிட்டனர் மிகப் பலர்..
அநாதரவாய்க் கிடந்த ஆமையைப்
பார்க்கவந்தது புறா.
அதன் காலில் கட்டியிருந்த
முயலின் மடலில்
பரிவுமிக்க பரிந்துரையொன்று
இடம்பெற்றிருந்தது:
பெயரிலுள்ளவைதூவாக
மாற்றிக்கொள்வது
மிகவும் நல்லது.”