ரங்கநாயகி
(புதினம்)
//இவ்வார (march 1, 2026) திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ள என் கட்டுரை யிலிருந்து ஆரம்ப வரிகள் இங்கே தரப்பட்டிருக்கின்றன. கட்டுரையை முழுவதும் வாசிக்க கீழே லிங்க் தரப்பட்டுள்ளது - லதா ராமகிருஷ்ணன்//
https://puthu.thinnai.com/2026/03/01/%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d/
நல்ல படைப்பு என்பதற்கான தர நிர்ணய அளவுகோல் எது? தர நிர்ணய அளவுகள் யாவை? ஒரு வகையில் இது வாசகருக்கு வாசகர் மாறுபடலாம் என்றாலும் பரவலாக அறியப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை அளவுகோல் கள் சில உண்டு. ஒருவகை Catharsis உணர்வை ஏற்படுத்து தல்; மனித மனதை மேம்படுத்துதல், விசாலமாக்குதல் வாழ்க்கை குறித்த நம் பார்வையை தெளிவுபடுத்துதல், விரிவுபடுத்துதல்… அதேபோல் Style of narrationனும் முக்கி யம். ஒரேடியாக புரியாமல் போனாலும் அனைத்து தரப்பு வாசகர்களாலும் ஒரு படைப்பிற்குள் ஒன்றமுடியாமல் போய்விடும் அதேசமயம், எளிமையாக எழுதுகிறேன் என்று ஒரேயடியாக வறண்ட எழுத்துநடையாக இருந் தாலும் வாசகர் மனதில் தாக்கம் ஏற்படுத்தத் தவறி விடும். படைப்பாளி கதையோட்டத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதே குறியாக கிடைத்த இடத்தி லெல்லாம் பீடம் ஏறி போதித்துக்கொண்டேயிருந்தால், மேடை ஏறி முழங்கிக்கொண்டே யிருந்தால் வாசகருக்கு கதையில் பங்கேற்க இயலாது. வாசகப் பிரதிக்கான இடமேயில்லாமல் வாசகர், வெறும் பார்வையாளர் நிலையில் நின்றுவிடுவார்.
Underplay of emotions எழுத்து, சினிமா இரண்டிலுமே தரமான படைப்புக்கான தர நிர்ணய அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. Underplay of emotionsஇல் வாசக மனங் களில், பார்வையாளர்கள் மனங்களில் உச்சபட்ச தாக்கத்தை ஏற்படுத்துதல் என்பது உட்பொருள்.....
கே.பாரதி எழுதிய ரங்கநாயகி என்ற தலைப்பிலான நாவலை (வெளியீடுகவிதாபப்ளிகேஷன்ஸ்; முதல் பதிப்பு: ஜனவரி,20 21) வாசித்த போது மேற்கண்ட சிந்தனைகள் தவிர்க்க முடியாமல் எழுந்தன. இந்த புதினத்திலும், இதற்கு முந்தைய அவரது நூல்க ளான சொந்தசகோதரிகள் என்ற தலைப்பிலான சிறுகதை தொகுப்பு, தேவ மனோகரி என்ற புதினம் போன்றவற்றி லும் கதாசிரியர் பற்றிய குறிப்பு மிகவும் சுருக்கமாகவே தரப்பட்டி ருக்கும். பல புத்தகங்களில் பெரிய பெரிய மகத்தான என்னுரைக ளும், முன்னுரைகளும், அணிந்து ரைகளுமாக அந்த படைப்பை வாசகர்கள் பாராட்டிய தீர வேண்டும் இல்லையென்றால் அவருக்குத்தான் ரசனை இல்லை தேர்ந்த வாசிப்பில்லை என்ற ஒரு நினைப்பை பதட்டத்தை வாசக மனங்களில் தோற்றுவிப்ப தைப் பார்க்க முடியும்.








