LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, July 21, 2026

A POEM BY ATHMAJIV (*PLEASE HELP THIS QUALITY TAMIL POET)

 A POEM BY

ATHMAJIV






Rendered in Engish by Latha Ramakrishnan(*First Draft)
In the dream of the hungry man
costly dishes being served.
He looks around searching for his
starving family
But there was none
In front of him who likes not to eat all alone
the dishes come hand in hand and console him.
‘In their dreams too we would be served
So, eat to your heart’s content’ – They say.
But, refusing to believe
he wakes up his family members
They all get up startled
‘In your dreams were you served with
delicious costly dishes?’
Asks he hurriedly.
And, they stare at him blankly.

பசித்திருக்கும் மனிதனின் கனவில்
விலையுயர்ந்த உணவுகள் பரிமாறப்படுகிறது.
தன் குடும்பத்தை தேடுகிறான்.
பசித்திருக்கும் குடும்பத்தினர்.
அங்கே யாருமில்லை.
தனியே உண்பதற்கு விரும்பாத
அவன் முன்பு
உணவுகள் ஒன்று சேர்ந்து
சமாதானப்படுத்துகிறது.
அவர்களின் கனவுகளிலும்
நாங்கள் பரிமாறப்படுவோம்
தாரளமாக வயிராற உணவு கொள்.
அவன் நம்பத் தயாராக இல்லை.
விழித்துக் கொள்கிறான்.
அருகில் உறங்கிக் கொண்டிருக்கும்
தன் குடும்பத்தினரை எழுப்புகிறான்.
திடுக்கிட்டு எழுகிறார்கள் அனைவரும்.
"உங்கள் கனவில்
விலையேறப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டதா"
அவசர அவசரமாக கேட்கிறான்.
அவர்கள் திருதிருவென பார்க்கிறார்கள்
அவனை.
ஆத்மாஜீவ் :

பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பார்வை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வேறு வேறு நவீன உத்திகளைக் கையாண்டு
நூறு யானையின் பசியோடு
பழிபாவத்திற்கு அஞ்சாமல்
ஊருப்பணத்தையெல்லாம் விழுங்கித்தீர்ப்பவர்கள்
விழியிழந்தவர் யானையைத் தடவிப் புரிந்துகொண்ட
வழக்கொழிந்த கதையை
முழங்கிக்கொண்டிருக்கும் வெட்கக்கேட்டை யெண்ணி
ஆரம்பப்பள்ளியிலேயே யானையின் முழு உருவை
அவர்களுக்கேயான வரைபடத்தில்
தொட்டுத்தடவித் தெரிந்துகொண்டவர்கள்,
ஆசிரியர் விரித்துரைக்க காதுகளெல்லாம் கண்களாக
விரியக் கேட்டிருந்தவர்கள்,
கல்விச் சுற்றுலா சென்ற பூங்காவிலிருந்த
குட்டி யானைச் சிலையை பேர்பேராகச் சுற்றிவந்து
தொட்டுணர்ந்து தொட்டுணர்ந்து
சரியாக முதுகிலேறி
தந்தத்தைப் பிடித்துக் கீழிறங்கியவர்கள்,
அடிக்கொரு பள்ளத்தைத் தாண்டி
அவ்வப்போது தடுக்கி விழுந்து
அடிபட்டுக்கொண்டும் முன்னேறி
இன்று கணினியில் சுயமாய் உலகத்தைச் சுற்றிவரும்
பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் _
‘உங்களால் மட்டும்
பூமிப்பந்தின் மொத்தப்பரப்பையும் பார்க்கமுடிகிறதா?
உங்கள் பார்வைகளுக்கு எல்லைகளே யில்லையா
இருவிழிகளிருந்தும் நீங்கள் எப்படியெல்லாம் வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறீர்கள் .....
கொழுப்பெடுத்த அழுக்குப்பிடித்த உங்கள் நெறிபிறழ்வுகளுக்கெல்லாம்
எங்களையேன் குறியீடாக்குகிறீர்கள்....?
என்று கேட்டால்
ராஜாக்கள் தங்கள் தவறுணர்வார்களோ,
இல்லை, அவர்களைக் கொன்றுவிடுவார்களோ…….
(2017 - ஜூலை 20 - மீள்பதிவு)
See less

WHAT IS CHARACTER ? - NELSON MANDELA

”பண்பு என்பது உங்களுக்கு எதுவுமே செய்யவியலாத ஒருவரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதே”.


நெல்சன் மண்டேலா

Tuesday, July 14, 2026

OSCAR WILDE'S QUOTABLE QUOTE

 


பட்டியல்களுக்கு அப்பால்….. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

பட்டியல்களுக்கு அப்பால்…..


ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

கவிதை சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப்போகும்  கனவுகளோடு எழுதிக்கொண்டிருக்கும் இளைஞன் அவன்.

சாம்ராஜ்யம் என்பது வெறும் சொல் மட்டுமே என்று புரியும் காலம் வரை

சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கட்டுமே அரியணையைச் சுமந்தபடி.

நம்பிக்கையின் ஆதுரத்தை உணராமலேயே அந்த வளரிளம் மனம்

ஏமாற்றத்தை யெட்டிவிடலாகாது…..

உளவியலை அறிந்துகொள்ளும் முன்பே எதிர்-உளவியலை அறிந்துகொண்டதில் 

நான் அடைந்த லாப நஷ்டங்களை

உலகளாவிய பேரிழப்புகளின் சமயத்தில் 

பேசுவது சரியல்ல.


ஒருவகையில் வாழ்க்கை வியாபாரம்தான் 

என்றாலும்  

வியாபாரிக்கும் இசைகேட்கவேண்டிய தேவையிருக்கிறதுதானே….

பட்டறிவு என்ற பெயரில் அவனுக்கு அறவுரை சொல்ல அனுபவங்கள் அத்தனை ஒற்றைத்தன்மை வாய்ந்தவையா என்ன?

ஆனாலும் இன்று அந்த இளைஞனின் முகம் ஒரேயடியாக வாடியிருந்ததைக் காணச் சகிக்கவில்லை.

கண்ணீரைவிட அதிகம் உறுத்துவது அதன் அதிஉறைநிலை யிலான ஒரு முகபாவம்.


காரணம் கேட்டதற்கு

குறிப்பிடத்தக்க கவிஞர்களின் பெயர்ப் பட்டியல்களில் தன் பெயர் இடம்பெறுவதேயில்லை என்றான்.


”பலசரக்குக்கடையொன்றில் வாங்கவேண்டிய பண்டங்களின் பெயர்ப்பட்டியல்களை எழுதியதுண்டா நீ?”

”உண்டு.”

”வீட்டில் எத்தனை பேர் அந்தப் பட்டியல்களைத் தந்திருக்கி றார்கள்?”

”அம்மா, அத்தை, பெரியப்பா.”

”எல்லோருடைய பட்டியல்களும் ஒரேமாதிரி யிருக்குமா?”

”இருக்காது. அம்மாவின் பட்டியலில் வெள்ளைப்புளி யென்றால் அத்தையின் பட்டியலில் கருப்புப்புளி.

பெரியப்பாவின் பட்டியலில் சின்னகற்கண்டுப் பொட்டலமிருக்கும் கண்டிப்பாக.

அதை ஒரு கை வாயில் போட்டு ருசித்தபின் அத்தனை அருமையாகப் பாடுவார்.”

”வீட்டிற்கென அவர்கள் தயாரிக்கும் அத்தகைய பட்டியலை உன்னால் எழுத முடியுமா?”

”முடியாது. ஒருமுறை எழுதியபோது உளுத்தம்பருப்பு மூன்று முழம் என்று எழுதிவிட்டேன். எல்லோரும் அன்று முழுக்கச் சிரித்தார்கள்.”

”ஆக, பட்டியல் தயாரிப்பதற்கும் ஒரு தகுதிவேண்டும். சரிதானே?”

ஏதோ புரிவதுபோல் தலையசைத்தான் அந்த வளரிளம்பருவத் தான்.

“சரி, உனக்கான தினசரி உணவு தயாரிக்க நீ எழுதும் பட்டியலில் என்னவெல்லாமிருக்கும்?”

காற்று, சில நட்சத்திரங்கள், ஒன்றிரண்டு இனிமையான பாடல்கள், நல்ல கவிதைகள், கொஞ்சம்போல் அவல், சிறிது தண்ணீர், அல்லது ஒரேயொரு பாக்கெட் மாரி பிஸ்கெட்”

”இந்தப் பட்டியலைப் படிப்பவர்கள் _”

”என்னைப் பைத்தியம் என்பார்கள்”

”ஆனால், நீ அதுவா?”

”இல்லை. தவிர, பைத்தியம் என்று சொல்லப்படுபவர் பார்வை யில் நாமே பைத்தியமாகத் தெரியக்கூடு மல்லவா?”

”அவ்வளவுதான் எல்லாம்.”

ஒரு காதலன்கூட அப்படிப் பார்த்திருக்கமாட்டான்! _ அத்தனை உள்ளார்ந்த அன்போடு என்னைப் பார்த்த அந்த விழிகளில் புத்துயிர்ப்பு மின்னியது.

இன்றிரவு அவன் இன்னுமிரண்டு கவிதைகளைக் கண்டிப்பாக எழுதுவான். 


Monday, July 6, 2026

BOOKS BY ANAAMIKAA ALPHABETS

BOOKS BY 
ANAAMIKAA ALPHABETS

4 BILINGUAL VOLUMES 
EACH COMPRISING 20 POEMS 
OF THE POET CONCERNED 
IN ORIGINAL TAMIL 
AND IN ENGLISH TRANSLATION





POETS
1. VASANTHADHEEPAN
2.AASU SUBRAMANIAN
3.ATHMAJIV (THIS POET'S TWO BILINGUAL VOLUMES ARE PUBLISHED. ONE COMPRISING HIS POEMS TRANSLATED BY SRI.N.SRIVATSA AND THE OTHER COMPRISING HIS POEMS TRANSLATED BY ME(LATHA RAMAKRISHNAN)

EACH COPY RS. 150. 
ALL THE 4 COPIES YOU CAN GET FOR 500RS.

GPAY TO 78455 76241 
AND GIVE YOUR ADDRESS AND MOB.NO. 
FOR COURIERING THE REQUIRED COPIES.

INSIGHT (A BILINGUAL INITIATIVE - CONTEMPORARY TAMIL POETRY / APRIL, MAY,JUNE, 2026

 INSIGHT / APRIL, MAY,JUNE, 2026

சமகால தமிழ்க்கவிதைக்கான

இருமொழி வலைப்பூ

பதிவேற்றப்பட்டுள்ளது.



PARTICIPATING POETS




மம்முட்டிக்கு வயதாவதில்லை! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மம்முட்டிக்கு வயதாவதில்லை!

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மம்முட்டி
மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின்
முதல்படியிலேற முற்படும் மா கனவு.
மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும்
இயக்கங்களும் மங்கலாகவே தெரிவது
இன்றல்ல நேற்றல்ல.
மம்முட்டி காற்றுபோல்;
அவரவருக்கு மட்டும் என்று எண்ணுவதைக் காட்டிலும்
அபத்தம் வேறிருக்க முடியாது.
மம்முட்டி முழுநிலவுபோல்.
மேலேறிச்சென்று தொட்டுணரவேண்டும் என்ற நினைப்புக்கு
மிகு தொலைவில்.
மம்முட்டி யொரு கேட்கத் திகட்டாத
இசைக்கோர்வை.
செவிமடுக்கும் நேரம் அது துயரார்ந்த இசையா
துள்ளல் இசையா என்று பிரித்தறிய முற்பட
மறந்துபோய்விடுகிறது மனம்.
வில்லன் மம்முட்டியும் நல்லவனே
அவன் மம்முட்டியாக இருப்பதால்.
மம்முட்டி யொரு குறியீடு
மனதை நெகிழச்செய்யுமெல்லாவற்றிற்கும்.
மம்முட்டி யொரு கவித்துவ மொழிப்பயன்
ஆன்மாவை தூய்மையாக்கும் அனைத்திற்கும்.
மம்முட்டிக்கு வயதாவதில்லை.
மம்முட்டியைப் பார்க்கும்போதெல்லாம்
வருடங்களால் ஆட்டிப்படைக்கப்படாத
அருவவெளியொன்றை நோக்கி
இன்றின் முழுப்பிரக்ஞையோடு
இன்றிலிருந்து வெளியேறும் நான்…..

நினைவு நாள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நினைவு நாள்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


எதிர்பாராமல் தோளில் எங்கிருந்தோ வந்திறங்கும்
மலரிதழ்போல
அண்ணாந்த கண்நிறைக்கும் வானவில்போல
அரைக்கணமே உணரமுடிந்த உள்ளொளிபோல
என்றோ கண்ட குழந்தைக்கண்ணின் நிர்மலம்போல
எங்கோயிருக்கும் அருவியின் குளிர்நீர்த்திவலைகள்போல
எல்லாமாகியிருக்கும் காற்றுபோல
பொல்லாப்பாலையின் பேய்த்தகிப்புபோல
அசந்த நேரம் சுருக்கென்று தைத்துவிடும் ஊவாமுள்போல
செருப்புக்கும் பாதத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டிருக்கும்
மணற்துகள்கள்போல
வாயிலிட்ட சோறில் இடறும் கற்கள்போல்
முகக்கவசத்திற்குள் கசகசக்கும் வியர்வைத்துளிகள்போல
இடுப்புக்குடச் சுமையின் அழுத்தத்தில் மளுக்கென்று எங்கோ
மிகுவலி திரளச் சுளுக்கிக்கொள்வதுபோல
மனதைக் குடைந்தும் கடைந்தும் உடைத்தும் கடைத்தேற்றியும்
தினந்தினம் உடன்வந்துகொண்டிருக்கும்
நினைவுக்கென்று தனியாக நாள் உண்டா என்ன?

NO MAN IS RICH ENOUGH TO......

 


தொழில்நுட்பம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தொழில்நுட்பம்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவர்களுக்கு நான் தான் பேசக்கற்றுக்கொடுத்தேன் என்று சொல்லிச்சொல்லியே
AUDI கார்கள் ஐந்து வாங்கிவிட்டவர்
இவர்களுக்கு நான் தான் பேசக்கற்றுக்கொடுத்தேன் என்று சொல்லிச்சொல்லியே
இருபது ஊர்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டிவிட்டவர்
வாயில்லாத இவர்களுக்கு நானே குரல் என்று சொல்லிச்சொல்லியே
வாய்த்த இடங்களிலெல்லாம் நிலபுலன்கள் வாங்கிப்போட்டிருப்பவர்
வகைவகையாய் அடுக்குமாடி வீடுகள் வளைத்துப் போட்டிருப்பவர்
இன்னும் பல லட்ச அசையும் அசையாச் சொத்துக்களை
- இல்லையில்லை இன்றைய சூழலில் லட்சங்கள் என்றால்
அது மதிப்பழித்தலாயிற்றே – எனவே
இன்னும் பல கோடி அசையும் அசையாச் சொத்துகளை உடைமைகொள்ளும்
சமூகத் தொலைநோக்குப் பேரவாவில் பெருங்கனவில்
நேற்றிலிருந்து பெங்குவின்களுக்கு நான் தான் பேசக் கற்றுக்கொடுத்தேன் என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.....
அண்டார்ட்டிகா பிரதேசத்தில் சில ஆயிரம் ஏக்கர் பரப்பு
கிடைக்காமலாபோய்விடும்?

பொய்யிலே பிறக்கும் அழுகிய சொற்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பொய்யிலே பிறக்கும்

அழுகிய சொற்கள்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

சில பல சால்வைகளும் பூங்கொத்துகளும்
பட்டங்களும் பதாகைகளும்
சரவெடியாய்க் கிளம்பும் கரவொலிகளும்
நாளை கிடைக்கலாகும் பதவியும் வாகனமும் அதிகாரமுமாய்
ஆழ்ந்த கிறக்கத்திலிருக்கும்
காரியார்த்த இலக்கியவாதியொருவரின்
வாயிலிருந்து
கிளம்பியவாறிருக்கும் அழுகிய நாற்றம்பிடித்த சொற்கள்
முகஞ்சுளிக்க வைப்பவை எல்லோரையுமே
- அவரைத் தவிர.

சில நேரங்களில் சில சமூகப்பிரக்ஞையாளர்கள் = ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சில நேரங்களில் சில சமூகப்பிரக்ஞையாளர்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


தனது வளையல்வட்டக் கிணறில்
இல்லாத முதலையின் வாலைப்பிடித்து
முறுக்கிச் சுழற்றி
அதைச் சாகடித்துவிட்டதாக மார்தட்டிக்கொள்பவருக்கும்
அனேக ’லைக்’குகள் அன்றாடம் கிடைத்தவாறே.
அங்கே இல்லாத முதலை அவர்களுக்குமானதாய்
அந்த வளையல்வட்டக்கயிறின்
சமுத்திரக்கரையோரம்
தனது வலிக்காத வாலுடன்
அநாதிகாலம் இளைப்பாறிக்கொண்டேயிருக்கிறது.

ஒரு கவிதை எப்படி மனதில் ஒரு பொறியாக உருவாகிறது,....

 ஒரு கவிதை எப்படி மனதில் ஒரு பொறியாக உருவாகிறது....

_லதா ராமகிருஷ்ணன்

//2022, 2 July - மீள்பதிவு//

ஒரு கவிதை எப்படி மனதில் ஒரு பொறியாக உருவாகிறது, எப்படி நகர்கிறது, அதன் போக்கில் நேரும் மாற்றங்கள் என்னென்ன என்றெல்லாம் அறிய ஒரு கவிஞராகவும் வாசகராகவும் எனக்கு என்றுமே ஆர்வமுண்டு.
அதனால்தான் ஒவ்வொரு கவிஞரும் தங்களுடைய ஒரு கவிதை உருவான விதத்தையாவது எழுதி அவற்றை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரவேண்டும் (இத்தகைய தொகுப்புகள் கவிதை புரிவதற்கான, உணரப்படுவதற் கான ஒரு சில திறப்புகளை யாவது ஆர்வமுள்ள வாசகர் களுக்குக் காட்டும் என்றும் தோன்று கிறது) என்பது என் நீண்ட நாள் விருப்பம். பார்க்கலாம்.//
//கீழே தரப்பட்டுள்ள என்னுடைய கவிதையைப் பொறுத் தவரை -
காலையில் எதிர்பாராமல் ஒரு மொழிபெயர்ப்புப்பணிக் கான தொலைபேசி அழைப்பு வந்து அது ஒப்புக்கொள்ளப்பட்டு நாளை மொழிபெயர்ப்புக்கட்டண முன்பணம் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் இதுவரை சில பிரதிகளைத் தட்டச்சு செய்து கொடுத்திருக்கும் இரண்டு தோழியருக்குத் தரவேண்டிய பணத்தில் கொஞ்ச மாவது தரவேண்டும், என்னுடைய இரண்டு நூல்களை லே-அவுட் செய்துகொடுத்த தோழருக்குத் தரவேண் டிய பணத்தில் கொஞ்சமாவது தரவேண்டும் என்று தன்னிச்சை யாய் மனம் நீண்ட பட்டியல் தயாரித்துக் கொண்டேபோக _
_ மாலையில் மொழிபெயர்ப்புபணியைத் தர முன்வந்தவர்கள் அவர்களளவில் நியாயமான காரணங்களுக் காய், என்னிடம் மொழிபெயர்ப்புப் பணியைத் தரும் திட்டத்தை GREEN SIGNAL இலிருந்து ORANGE SIGNAL க்கு மாற்றியிருக்கும் செய்தியைத் தெரிவித்தார்கள். அது RED SIGNAL ஆக மாறும் சாத்தியமே அதிகம் என்பது உள்ளுணர்வுக்குப் புரிகிறது.
இதன் தொடர்பாய் ஏதேதோ எண்ணங்கள் மனதில் கலவை யாய்..... துக்கம், ஏமாற்றம் என்பதைவிட வாழ்வின் UNPREDIC TABILITY குறித்த சிந்தனையோட்டமாய் தோன்றிக் குழம்பி இந்தக் கவிதையாய் வந்து விழுந்தாயிற்று.
இன்னும் நேர்த்தியாய் கவிதையைச் செதுக்க முடியும். அப்படிச் செய்தால் வெறும் CRAFT ஆகிவிடுமோ என்று எப்போதும் போல் ஒரு சஞ்சலம்.
கவிதையை எழுதிக்கொண்டே வருகையில் இதே விஷ யம் இதைவிட அருமையாய் எழுதப்பட்டிருக்கிறதே என்ற நினைவு மேலெழும்பி மேற்கொண்டு எழுதவிடா மல் வழிமறிக்கும். ஆனால் எழுதாமலிருக்கவும் முடியாது!
எங்கோ ஓரிடத்தில் கவிதையை முடித்துத்தானே ஆக வேண்டும், அதை இங்கேயே செய்தால் என்ன என்று அங்கங்கே சில வரிக ளில் தோன்றும்.
ஆனாலும் இன்னும் சொல்ல வேண்டியது பாக்கியிருக் கிறது என்பதான உணர்வு கவிதையை இன்னும் கொஞ்சம் நீளமாக்கும்.
ஒரு கட்டத்தில் இதற்குமேல் ஏதும் சொல்வதற்கில்லை என்றவித மான நினைப்பும், ஒருவித அலுப்புமாய் கவிதை முடிக்கப்பட்டு விடும்.
ஆனாலும் கவிதையில் இன்னும் எழுதப்படாத வரிகள் மீதமுள் ளன என்பதை முதலில் எனக்குக் குறிப்புணர்த்து வதாகவே முடிவுவரிகளில் ஒருவித பூடகத்தன்மை சமயங்களில் இயல்பா கவும் சமயங்களில் பிரக்ஞாபூர்வமாகவும் இடம்பெறும்! //
//இனி கவிதை //
மாய யதார்த்தம்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
திடீரென்று ஒரு மாயக் கதவு
திறந்துகொண்டதுபோல் தோன்றியது…
மாயக்கதவு மனதின் உள்ளும் வெளியும்
பப்பாதியாய்.
மாயம் ஏன் எப்போதும் கதவாகிறது?
ஜன்னலாவதில்லை?
எத்தனை உயரத்திலிருந்தாலும்
மாயஜன்னல்வழியாக வெளியே குதிப்பது
கடினமாக இருக்கவியலாதுதானே.
மாயஜன்னலிருந்தால் அதன்வழியாக
விண்நோக்கிப் பறப்பதும் சாத்தியமே.
ஒருவேளை மாயஜன்னல் வழியாய்
ஏகமுடிந்த வானத்தில்
மேகங்கள் மெய்யாகவே நீரலைகளா
யிருக்கக்கூடும்
ஆனாலும் மாயம் எப்போதும் கதவாகவே…
மாயக்கதவு எப்படியிருக்கும்
மாயம் என்றால் என்ன?
மன்னிக்கவும் -
அகராதிச்சொற்கள் மாயத்தைப்
பொருள்பெயர்த்தால்
அது சரியாக வராது.
அதற்கொரு மாய அகராதி வேண்டும்
மாய அகராதியெனில் அதை நிரப்ப
மாய வார்த்தைகள் வேண்டும்
மாயவார்த்தை என்று தனியாக
இருக்கிறதா என்ன!
எதிர்பார்க்குமொரு குறுஞ்செய்தியில்
இல்லாதிருக்கும்
சின்னச் சொல்லொன்று
என்றுமான வானவில்லாய்!
மாயமென்பது மனமா
வாழ்வின் மர்மமா
உணர்வின் மடைதிறப்பா
உன்மத்தப் பரவசமா
அறிவின்பாற்பட்ட அதிவிழிப்புநிலையா
அறிவிற்கப்பாற்பட்ட ஆனந்தக்கண்ணீரா
காலங்காலமாய் கடைந்து மேலெழும்பி
வரும்
அமிழ்தா அதன் கசடா…..
அசடின் கைவசமுள்ள மந்திரக்கோல்
சுழலச் சுழலும் பூமிக்கோளங்கள்
அவரவருக்குள்ளும் வெளியும்…..
மாயாதிமாயங்களும் மாயமாகிப்போகு
மொரு மாயவாழ்வின் தூல சூக்குமங்கள்
மகாமாயமாய்
மாயக்கானல்நீர்குடித்துத் தாகம் தணிக்கும்
மாயமானுடைய கொம்புகளின் கொலைக்
கூர்மைக்கும்
அழகிய விழிகளின் அப்பாவித்தனமான
பார்வைக்குமான
இணைப்புப்பால மாயம்
முதல் இடை கடை யற்று…

மாற்றீடுகள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மாற்றீடுகள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

குழந்தைகள் இயல்பிலேயே புரட்சியாளர்கள்.
விலைமதிப்பற்றதென சமூகம் வைத்திருக்கும் பட்டிய லில் உள்ள பொருட்களையெல்லாம் விலக்குவதாய் அவர்களிடம் ஒரு பட்டியல் உள்ளார்ந்து இருக்கும்.
அழுக்கு மண், கசங்கிய தாள், சிகரெட் துண்டு, கையால் தொட்டு ணரத் தூண்டும் சிறுநீர், ஆட்டுப்புழுக்கைகள், யாரோ துப்பிப் போட்டிருக்கும் தூசிபடிந்த மீதி மிட்டாய் விரல் நுழைத்துப் பரவசக் கூடிய ஓட்டைகளை வைத்தி ருக்கும் சாயம்போன சட்டை…..
கோலிகுண்டைக் கண்ணருகே வைத்து உள்ளே தெரியும் வான விற்களைப் பார்த்துப் பரவசப்பட்டுக்கொண்டிருக் கும் சிறுவனிடம் வைரக்கல்லைக் கொடுத்தால் அவன் அதை மறுகையால் அப்பால் ஒதுக்கும் சாத்தியங்களே அதிகம்.
மணல்வீடு கட்டிவிளையாடும் குழந்தைகளுக்கு மண லின் விலை குறித்தோ, அதன் ஒப்பீட்டு மதிப்பீடு குறித்தோ என்ன கவலை யுமில்லை.
கஷ்டப்பட்டுக் கட்டிய மணல்வீட்டை ஒரு நொடியில் காலால் எட்டியுதைப்பது எத்தனை அளப்பரிய, விடுதலையுணர்வு, தாமரை யிலைத்தண்ணீர்த்துவம்!
விளையாடும் சிறுமிக்கு காதில் லோலாக்கும் கணுக் காலில் கொலுசும் இடைஞ்சலாகவே இருக்கும். தாகூர் சொல்லியிருக் கிறார். அவர் சொல்லாவிட்டாலும் அதுவே உண்மை.
குழந்தையின் பொம்மைகள் உயிருள்ளவை . அவை அழும் சிரிக் கும் அவற்றுக்கும் வலிக்கும் பசியெடுக் கும்.
ஊர்ந்துசெல்லும் சிற்றெறும்புகளை வேண்டுமென்றே நசுக்கி விடுவதில்லை குழந்தைகள். அவற்றோடு சேர்ந்து பொந்துக்குள் சென்று பார்க்கவே ஆவலா யிருக்கின்றன.
கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை என்றெல்லாம் குழந்தைக்குத் தெரியாது. கெட்டவர் நல்லவர் ஏழை பணக் காரர் என்ப தெல்லாமும்கூட.
ஒரு குழந்தையின் சேமிப்பில் இருக்கலாகும் குந்துமணி கள் விலைமதிப்பற்றவை.
குழந்தைக்குள்ளிருக்கும் பிரபஞ்சம் அதற்குப் போது மானதாக இருக்கிறது.
வாழ்வதும் வளர்வதும் குழந்தைக்கு ’இங்கே – இப்போது’ மட்டுமேயாகிறது.
தங்களுடைய தேர்வுகளுக்காக அடியுதைகளை, ஆங் கார வசை களை எதிர்கொள்ள அவர்கள் மன அளவில் அஞ்சு வதேயில்லை.
ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும் _ வளர்ந்தவர்கள் சூழ்நிலைக் கைதிகள், சமூக பலியாடு கள், என்பதெல்லாம்..