எழுத்தாளர்களும் EMPATHYயும்!
- லதா ராமகிருஷ்ணன்
(பொருளாளர்,
WELFARE FOUNDATION OF THE BLIND)
22 ஜூன் 2026 (*பதிவுகள் இணைய இதழில் வெளியாகி யிருக்கும் கட்டுரையிலிருந்து சில பத்திகள்.
முழுக்கட்டுரையையும் வாசிக்க
..........................................................................................................................................................
மற்றவர்களை விட எழுத்தாளர்களிடம் சகமனிதநேயம் அதிகம் இருக்கும் என்று நம்புவதும், அதிகம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும்கூட ‘அன்றாடத்தி லிருந்து அதீதம்’ தானோ – தெரியவில்லை. ஆனால், பாழாய்ப்போன மனது அப்படியே எதிர்பார்க்க, நம்ப பழகிவிட்டது. ஒவ்வொரு முறை அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்க்கும்போதும் நிறையவே வலிக்கிறது.
மேகங்களின் குரல் – அன்றாடத்திலிருந்து அதீதம் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆனந்தவிகட னில் எழுத ஆரம்பித்திருக்கும் தொடரை இன்னொரு வருக்கு வாராவாரம் படித்துக்காட்டிக்கொண்டிருக் கிறேன். இந்த வாரம் 10.06.2026 தேதியிட்ட விகடனில் தொடரின் 4வது அத்தியாயம் இடம்பெறு கிறது.
மருந்துகளை நம்பாமல் ‘ஹீலர்’ போன்றவர்களை நாடிச் செல்வது எத்தனை அபத்தம் எனத் தொடங்கி ‘டன்னிங்-க்ரூகர் விளைவு என்றால் என்ன என்று எடுத்துச் சொல்லி, ‘ஒன்றைப் பற்றி எந்த அளவுக்கு நமக்குக் குறைவாகத் தெரியுமோ அந்த அளவுக்கு அதைப் பற்றிய உறுதியான நம்பிக்கை நமக்கு உருவாகிறது’ என்று அடிக்கோடிட்டுச்சொல்லி, ‘மதம் உருவாக்கும் மூட நம்பிக்கைகள், அதேபோல் பகுத்தறிவாளர்களுக்கும் முற்போக் காளர்களுக்கும் அவர்களின் கொள்கைகள் சார்ந்தும் தலைவர் கள் சார்ந்தும் இதே அளவுக்கு மூர்க்கமான மூடநம்பிக்கை இருப்ப தைக் காணலாம்’ என்று கூறும் வரை கட்டுரை தர்க்கபூர்வமான தாக, நேர்மறையாக இருக்கிறது. ஆனால், ‘'//எந்த அளவுக்கு ஒன்று தெரியாமலிருக்கிறதோ அந்த அளவுக்கு நம்பிக்கை உறுதியாக இருக்கிறது. அறி யாமை அளிக்கும் தன்னம்பிக்கை என்று இதைச் சொல்லலாம்’ என்று கூறும் எழுத்தாளர் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் குறித்து எழுதியுள்ளவை கட்டுரையில் அதுவரை அவர் பிறரிடத் தில் உள்ள அறியாமை குறித்து அவர் சுட்டிக்காட்டியிருக்கும் குறைகள் அனைத்தையும் அவருக்கும் உரித்தாக்குகின்றன.
முதலில் கட உபநிடதத்திலிருந்து அவர் எடுத்துச் சொல்லியிருக் கும் பார்வைக் குறைபாடுடையவர்கள் குறித்த உவமையே தேவையற்றது. இந்துமதம் என்றில்லை – எல்லா மதங்களிலுமே , அவற்றின்பாற் பட்ட எல்லா சமூகங்களிலுமே உடற்குறைபாடு என்பது பாவ-புண்ணியங்களோடு தொடர்புடையதாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நாம் வெகுதூரம் வந்தா யிற்று. எத்தகைய புனிதப்பிரதியானாலும் சரி, நல்லதை எடுத்துக் கொண்டு வேண்டாததைக் கடந்து போவதுதான் விவேகம். கட உபநிடதத்திலிருந்து மேற்கோள் காட்டவேண்டிய தேவையென்ன?
இன்றுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல், சமூகரீதி யான சமத்துவம் எட்டாக்கனியாகவே உள்ளது. அதில், இது போன்ற கருத்துகள் – எனக்கு பார்க்குந் திறன் இருப்பதால் நான் மேலானவன் என்ற ‘பாவம்’ அறியாமையில் விளைந்ததே. இன்று மூக்குக்கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லோருமே கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கண்புரை போன்ற கண்சார் குறைபாடுகளுக்கான சிகிச்சையும், மூக்குக்கண்ணாடி போன்ற வையும் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால் பார்க்குந்ந்திறன் குறைந்தவர்கள்தானே.
இன்று பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கணினி யைத் திறம்படக் கையாள்கிறார்கள். இலக்கியம் படைக்கிறார் கள். ஆசிரியர் தொழிலில் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல்- சமூகஞ்சார் சமத்துவம் இன்றுவரை கிடைக்காத நிலை. சட்டசபையிலோ, பாரளுமன்றத் திலோ அவர்களுக்கான பிரதி நிதித்துவம் அறவேயில்லாத நிலை இதில், லட்சக்கணக் கானோர் படிப்பதாகக் கூறப்படும் ஆனந்த விகடன் போன்ற வெகுமக்கள் இதழில் இப்படிப்பட்ட கருத்துகள் இடம்பெறுவது பார்வையற்றோர் குறித்த எத்தனை எதிர்மறை யான பார்வையை, அணுகுமுறையை ஏற்படுத்தும் என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் பேசும் பகுதி என்று எந்த அச்சு – மின் இதழ்களிலும் தொடர்ந்த ரீதியில் ஒதுக்கப்படுவ தில்லை. எதுவுமே பேசாமல் கடந்துபோய்விடுவதைவிடக் கொடுமை இப்படி எதிர்மறையான கருத்துகளை போகிற போக்கில் பரப்புவது.
நான் சார்ந்திருக்கும் பார்வையற்றோருக்கான நன்நல அமைப் பான WELFARE FOUNDATION OF THE BLIND இன் முத்திரை வாசகம்:
WE NEED EMPATHY; NOT SYMPATHY.
(*முழுக்கட்டுரையையும் வாசிக்க -