LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 23, 2026

எழுத்தாளர்களும் EMPATHYயும்! - லதா ராமகிருஷ்ணன் (பொருளாளர், WELFARE FOUNDATION OF THE BLIND)

 எழுத்தாளர்களும் EMPATHYயும்!

- லதா ராமகிருஷ்ணன்
(பொருளாளர்,
WELFARE FOUNDATION OF THE BLIND)

22 ஜூன் 2026 (*பதிவுகள் இணைய இதழில் வெளியாகி யிருக்கும் கட்டுரையிலிருந்து சில பத்திகள்.

முழுக்கட்டுரையையும் வாசிக்க



..........................................................................................................................................................
மற்றவர்களை விட எழுத்தாளர்களிடம் சகமனிதநேயம் அதிகம் இருக்கும் என்று நம்புவதும், அதிகம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும்கூட ‘அன்றாடத்தி லிருந்து அதீதம்’ தானோ – தெரியவில்லை. ஆனால், பாழாய்ப்போன மனது அப்படியே எதிர்பார்க்க, நம்ப பழகிவிட்டது. ஒவ்வொரு முறை அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்க்கும்போதும் நிறையவே வலிக்கிறது.
மேகங்களின் குரல் – அன்றாடத்திலிருந்து அதீதம் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆனந்தவிகட னில் எழுத ஆரம்பித்திருக்கும் தொடரை இன்னொரு வருக்கு வாராவாரம் படித்துக்காட்டிக்கொண்டிருக் கிறேன். இந்த வாரம் 10.06.2026 தேதியிட்ட விகடனில் தொடரின் 4வது அத்தியாயம் இடம்பெறு கிறது.
மருந்துகளை நம்பாமல் ‘ஹீலர்’ போன்றவர்களை நாடிச் செல்வது எத்தனை அபத்தம் எனத் தொடங்கி ‘டன்னிங்-க்ரூகர் விளைவு என்றால் என்ன என்று எடுத்துச் சொல்லி, ‘ஒன்றைப் பற்றி எந்த அளவுக்கு நமக்குக் குறைவாகத் தெரியுமோ அந்த அளவுக்கு அதைப் பற்றிய உறுதியான நம்பிக்கை நமக்கு உருவாகிறது’ என்று அடிக்கோடிட்டுச்சொல்லி, ‘மதம் உருவாக்கும் மூட நம்பிக்கைகள், அதேபோல் பகுத்தறிவாளர்களுக்கும் முற்போக் காளர்களுக்கும் அவர்களின் கொள்கைகள் சார்ந்தும் தலைவர் கள் சார்ந்தும் இதே அளவுக்கு மூர்க்கமான மூடநம்பிக்கை இருப்ப தைக் காணலாம்’ என்று கூறும் வரை கட்டுரை தர்க்கபூர்வமான தாக, நேர்மறையாக இருக்கிறது. ஆனால், ‘'//எந்த அளவுக்கு ஒன்று தெரியாமலிருக்கிறதோ அந்த அளவுக்கு நம்பிக்கை உறுதியாக இருக்கிறது. அறி யாமை அளிக்கும் தன்னம்பிக்கை என்று இதைச் சொல்லலாம்’ என்று கூறும் எழுத்தாளர் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் குறித்து எழுதியுள்ளவை கட்டுரையில் அதுவரை அவர் பிறரிடத் தில் உள்ள அறியாமை குறித்து அவர் சுட்டிக்காட்டியிருக்கும் குறைகள் அனைத்தையும் அவருக்கும் உரித்தாக்குகின்றன.

முதலில் கட உபநிடதத்திலிருந்து அவர் எடுத்துச் சொல்லியிருக் கும் பார்வைக் குறைபாடுடையவர்கள் குறித்த உவமையே தேவையற்றது. இந்துமதம் என்றில்லை – எல்லா மதங்களிலுமே , அவற்றின்பாற் பட்ட எல்லா சமூகங்களிலுமே உடற்குறைபாடு என்பது பாவ-புண்ணியங்களோடு தொடர்புடையதாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நாம் வெகுதூரம் வந்தா யிற்று. எத்தகைய புனிதப்பிரதியானாலும் சரி, நல்லதை எடுத்துக் கொண்டு வேண்டாததைக் கடந்து போவதுதான் விவேகம். கட உபநிடதத்திலிருந்து மேற்கோள் காட்டவேண்டிய தேவையென்ன?

இன்றுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல், சமூகரீதி யான சமத்துவம் எட்டாக்கனியாகவே உள்ளது. அதில், இது போன்ற கருத்துகள் – எனக்கு பார்க்குந் திறன் இருப்பதால் நான் மேலானவன் என்ற ‘பாவம்’ அறியாமையில் விளைந்ததே. இன்று மூக்குக்கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லோருமே கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கண்புரை போன்ற கண்சார் குறைபாடுகளுக்கான சிகிச்சையும், மூக்குக்கண்ணாடி போன்ற வையும் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால் பார்க்குந்ந்திறன் குறைந்தவர்கள்தானே.
இன்று பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கணினி யைத் திறம்படக் கையாள்கிறார்கள். இலக்கியம் படைக்கிறார் கள். ஆசிரியர் தொழிலில் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல்- சமூகஞ்சார் சமத்துவம் இன்றுவரை கிடைக்காத நிலை. சட்டசபையிலோ, பாரளுமன்றத் திலோ அவர்களுக்கான பிரதி நிதித்துவம் அறவேயில்லாத நிலை இதில், லட்சக்கணக் கானோர் படிப்பதாகக் கூறப்படும் ஆனந்த விகடன் போன்ற வெகுமக்கள் இதழில் இப்படிப்பட்ட கருத்துகள் இடம்பெறுவது பார்வையற்றோர் குறித்த எத்தனை எதிர்மறை யான பார்வையை, அணுகுமுறையை ஏற்படுத்தும் என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் பேசும் பகுதி என்று எந்த அச்சு – மின் இதழ்களிலும் தொடர்ந்த ரீதியில் ஒதுக்கப்படுவ தில்லை. எதுவுமே பேசாமல் கடந்துபோய்விடுவதைவிடக் கொடுமை இப்படி எதிர்மறையான கருத்துகளை போகிற போக்கில் பரப்புவது.
நான் சார்ந்திருக்கும் பார்வையற்றோருக்கான நன்நல அமைப் பான WELFARE FOUNDATION OF THE BLIND இன் முத்திரை வாசகம்:
WE NEED EMPATHY; NOT SYMPATHY.


(*முழுக்கட்டுரையையும் வாசிக்க -

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் (THE CONQUEST OF HAPPINESS) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்) பாகம் – 1 அத்தியாயம் – 9

 மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்

(THE CONQUEST OF HAPPINESS)
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
(தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)


பாகம் – 1
அத்தியாயம் – 9
மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம்
//*கட்டுரையிலிருந்து சில பத்திகள்கீழே தரப்பட்டுள்ளன.
திண்ணை இணைய இதழில் முழுக் கட்டுரையையும் வாசிக்க -


//எனவே, எங்கெல்லாம் சாத்தியமாகுமோ அங்கெல்லாம் தங்களு டைய சமூகக் குழுவோடு இணக்கமற்றி ருக்கும் இளைஞர்கள் தாம் எந்தத் தொழிலைச் செய்வது, எந்தப் பணியில் அமர்வது என்பது குறித்து கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் வருவாய் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை – பணியிடங் களில், பார்க்கும் தொழிலில் இணக்கமான நட்புறவு கிடைக்க வழியிருக்கும் துறைகளையே அவர்கள் தமது வாழ்க்கைத்தொழி லாக, வாழ்வாதார வழியாக தேர்ந் தெடுத்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியம் என்ப தையே அவர்கள் பல நேரங்களில் உணர்வ தில்லை. உலகம் பற்றிய அவர்களுடைய அறிவு மிகவும் தங்க ளுக்கு உலகம் பற்றி அவர்களுடைய அறிவு மிகவும் குறுகியதா கவே இருக்கிறது என்பதால் தங்களுடைய நிலத்தில், சூழலில் தங்களுக்கு பழக்கமாகிவிட்ட பாரபட்சப் பார்வைகள் உலக மெங்கும் இருக்கின்றன என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் வயதில் பெரியவர்கள் இளையவர்களுக்கு எத்த னையோ உதவி செய்ய முடியும். ஏனென்றால், இதற்கு மனித இனம் சார் கணிசமான அனுபவம் கட்டாயத் தேவையாகிறது.//
முழுமையாக வாசிக்க:



குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! -

 குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! -

- லதா ராமகிருஷ்ணன் -

(*பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)


முழுக்கட்டுரையையும் வாசிக்க

//ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை என்று உளவிய லாளர்கள், உளவியல் மருத்து வர்கள், கல்வியாளர்கள் கூறு கிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்த பட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர் களால் நடத்தப் படுவது அவர்களிடம் என்னென்ன அக – புற பாதிப்பு களை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.

ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர் கள், எழுத்தாளர்கள் என பலர் 'முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களு டைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக் கிறார்கள்; எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.

//ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை என்று உளவிய லாளர்கள், உளவியல் மருத்து வர்கள், கல்வியாளர்கள் கூறு கிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்த பட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர்களால் நடத்தப் படுவது அவர்களிடம் என்னென்ன அக – புற பாதிப்பு களை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக் கின்றன.

ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர் கள், எழுத்தாளர்கள் என பலர் 'முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களு டைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக் கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று சமூக ஊடகங்கள் நிறைய இருப்பதால் குழந்தைகள் மீதான சுரண் டல்கள், பெரியவர்கள் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் சிறார்களை அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ பயன்படுத்திக்கொள்வது எல்லாம் உடனுக்குடன் வெளியே தெரிந்துவிடுகின்றன. அதனால், நாற்பது-ஐம்பது வருடங்களுக்கு முன் குழந்தைகள் மீதான இத்தகைய சுரண்டல்கள் அறவே யில்லையென்றோ, அதிகம் இல்லையென்றோ சொல்லிவிட இயலாது.
ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர் கள், எழுத்தாளர்கள் என சிலபலர் முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை களை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, எழுத்தாளர் வண்ணநிலவன் என சில பெயர்களைக் குறிப்பிடலாம். துக்ளக் இதழ் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ‘பள்ளிக ளில் மாணாக்கர்கள் அடித்துக் கண்டிக்கப்படவேண்டி யவர்கள் என்று வலியுறுத்துவதைத் தனது சமூகக் கடமைகளில் ஒன்றாகச் செய்துவருகிறது
சமீபத்திய துக்ளக் இதழில் எஸ்.ஜே.இதயா என்பவர் ‘குற்றங் களைக் குறைக்குமா சிங்கப்படை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலும் இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். மேலே அந்தப் பத்தி தரப்பட்டுள்ளது:

இன்று குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் மாணவர் களுக்கு ஆசிரியர்கள் நல்லொழுக்கம் போதித்துவந்ததை நிறுத்திவிட்டதுதான் என்று அவர் சொல்வதையாவது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடுத்தாற்போல் அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்:
‘பெற்றோரும் கண்ணை மட்டும் விட்டுட்டு எப்படி வேண்டு மானாலும் அடிங்க’ என்று ஆசிரியர்களிடம் தங்கள் பிள்ளைகளை ஒப்படைப்பார்கள்’
இது என்ன விதமான சமூகவுணர்வு? ‘இதை அப்படியே அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்பவர்களைப் பார்த்து நான் கேட்கும் கேள்வி இதுதான்: ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? ஆசிரியர்களும் பெற்றோர்கள் என்ற அளவில் பெரியவர்கள் ‘தோலுரிக்க’ப் பிறந்தவர்கள் தான் குழந்தைகள்? இது என்ன காட்டுமிராண்டித்தன மான கண்ணோட் டம்; அணுகுமுறை?
அடித்துதுவைப்பதால் குழந்தைகள் நல்லொழுக்கங்க ளைக் கற்றுக் கொண்டுவிட மாட்டார்கள். ஏற்கெனவே குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லை என்பதால் அவர்களுடைய நலன்கள் சமுக்க-அரசியல் ரீதியாய் புறக்கணிக்கப்படும் நிலையே பெருமளவு நிலவுகிறது. இதில் சமூகப் பிரக்ஞை- மனிதநேயம் தூக்கலாக இருப்பவர்களாகத் தங்களைக் காண்பித்துக் கொள்ளும் பத்திரிகைகளும், ஊடகவியலாளர்களும் இப்படிப் பேசிக் கொண்டிருந்தால் எப்படி? இதுதான் உண்மையில் அதி ஆபாச மான பேச்சு; ஆதிக்க மனப்பான்மை.
முழுக் கட்டுரையையும் வாசிக்க:




Saturday, June 20, 2026

எமோஜிக்களின் உரையாடல் – 65

 எமோஜிக்களின் உரையாடல் – 65

...................................................................................

வாழைப்பழத்தோல் மேல கால வச்சா வழுக்கத்தான் செய்யும்.

ஆமா,

அதுக்காக வாழப்பழம் சாப்பிடாம இருக்க முடியுமா, தோலைத் தான் எறியாம இருக்க முடியுமா?

முடியாது.

அதனால, நாம செய்யவேண்டியது என்னன்னா –

வாழைப்பழத்தை சாப்பிட்டு தோலை பத்திரமா குப்பைத் தொட்டியில போடணும். பக்கத்தில குப்பைத் தொட்டி இல் லேன்னா, தெருவோரமா போடணும்... வீட்டுக்குள்ளாற இருந்து ஜன்னல் வழியா வெளிய எறியக் கூடாது.

என்னப்பா இன்னும் இதே ரீதியில யோசிச்சுக் கிட்டிருக்கே ... ? இதுக்கான தீர்வு ஒண்ணே ஒண்ணுதான்.

என்னது?

தோலே இல்லாம வாழப்பழம் கிடைக்கச்செய்ய றது தான்.

?????????????????????????????????????????????????????????????

சொல்லத்தோன்றும் சில..... நடிகைகளின் வயது

 சொல்லத்தோன்றும் சில.....

நடிகைகளின் வயது

’மௌனம் சம்மதம்’ என்ற திரைப்படம்தான் நான் தியேட்டருக்குச் சென்று பார்த்த கடைசிப் படம் என்று நினைக்கிறேன்.

மம்முட்டிக்காக இமயமலையின் உச்சிக்கு மேலாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டேகூட எந்தப் படத்தையும் பார்க்கும் முனைப்பு ஒரு காலத்தில் இருந்தது.

எத்தனை அறிவார்த்தமாகப் படங்களைப் பற்றிப் பேசினா லும் எள்ளிநகையாடினாலும் தியேட்டருக்குள் சென்று அமர்ந்துவிட் டால் பின் அந்தப் பெரிய திரையில் யாராவது அழுதால் என்னால் எப்படி அழாமலிருக்க முடியும்?!

எழுத்தோ, சினிமாவோ - வாசிப்பவை, காண்பவை எல்லாமே ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு குழுவின் கற்பனை மட்டுமே என்ற எண்ணமேற்பட்டுவிட்டால் பின் அவற்றிலிருந்து மனம் ஒருவிதத் தில் அந்நியப்பட்டு விடுகிறது.

பின், தொலைக்காட்சிப்பெட்டி வந்தது.

சின்னத்திரையில் நடக்கும் கதையோடும், காட்சிகளோடும் ஒன்றாமலேயே அதை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பது பழகி விட்டது.

வெகுநாட்களுக்குப் பிறகு 'தெனாலி' படம் தியேட்டருக்குச் சென்று பார்த்தபோது அதில் மனிதர்களின் கனபரி மாணங்கள் மிகமிகப் பெரிதாய் தலையை, கண்களைக் கிறுகிறுக்கச் செய்தன.

அதுவும் கதாநாயகி ஜோதிகா அண்ணனுடன் செல்லும் போது அணிந்திருக்கும் அதி குட்டைப் பாவாடை...... அதுநாள்வரை காதல னுடன் தான் கதாநாயகி அப்படி அணிந்துகொண்டு நடனமாடு வாள். அல்லது, காபரே நடனக்காரி அப்படியொரு ஆடையில் ஆடுவார். ஏதோ வொரு வகையில் அண்ணனுடனான அந்தக் குட்டைப் பாவாடைக்காரத் தங்கச்சியைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியாயிருந்தது.

பின், வீட்டில் ஆங்கில சேனல்களில் சிலகாலம் சில படங்கள். அதே படங்கள் பல மாதங்களுக்குத் திரும்பத் திரும்பக் காட்டப் படுமாதலால் அவற்றையும் சீரியல்கள் போலப் பார்த்துக்கொண் டிருக்கலாம். DA VINCI CODE, ANGELS AND DEMONS, THE ORIGINAL SIN, THE SCENT OF A WOMAN, THE DEVIL'S ADVOCATE - இப்படி சில படங்கள்.

இப்போதெல்லாம் இரண்டு மூன்று மணிநேரம் தொடர்ந்து எந்தப் படத்தையும் பார்க்கமுடிவதில்லை. அலுப்புத் தட்டிவிடுகிறது. நிறைய காட்சிகளை முன்னூகித்துவிட முடிகிறது. நடப்பதைக் காட்டுகிறோம் என்ற பெயரில் மிகக் கொடூரமான காட்சிகள் காட்டப் படுகின்றன. பார்க்க முடிவதில்லை.

இரண்டொரு வருடங்களுக்கு முன்பு பார்த்த கவிஞர் லீனா மணிமேகலையின் படைப்பு ’மாடத்தி’ மனதுக்கு நிறைவைய ளித்தது.

இப்போது அதிகம் பேசப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தைப் பார்க்கவில்லை. அதைப் பற்றி நிறையப் பேசப்பட்டுவிட்டன; பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆனால், எனக்கு இதில் படத்தைப் பார்க்காமலே நிறைவளித்த அம்சம் - அதில் வரும் இரண்டு கதாநாய கிகளின் வயது. அதைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்குக் கதாநாயகி அந்தஸ்து அளிக்கப்பட்டிருப்பது.

கல்கி கதையில் அந்தப் பாத்திரங்கள் நடுத்தர வயதுக் காரர்களா தெரிய வில்லை. ஆனாலும், தமிழ் சினிமா வைப் பொறுத்தவரை (அல்லது, இந்திய சினிமா என்றே சொல்லலாமா?) இது மிக மிக அரிதான விஷயம்.

//மீள்-பதிவு - ஜூன் 9, 2023//

எமோஜிக்களின் உரையாடல் - 66

 எமோஜிக்களின் உரையாடல் - 66

அநியாயம், அக்கிரமம் , உச்சபட்ச துரோகம்...

தேர்தல் முடிவுகளைச் சொல்றீங்களா

அதில்லைங்க

பின்னே? வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஏறிட்டதைச் சொல்றீங்களா?

அதெல்லாமில்லீங்க

ஆ! 'நீட் தேர்வு வினாத்தாள் கசிவைச் சொல்றீங்களா?

நீங்க வேற - அது எதுவும் இல்லீங்க.

அப்பிடின்னா - வேறென்ன?

ஜி-தமிழ்ல மெகாத்தொடர்களை மெகாஆஆஆத் தொடரா நீட்டிக்கிட்டே போறவங்க, மெகாத் தொடர்களைக் கிண்டல் பண்ணி மினி தொடர் பாருங்கன்னு சொல்ற விளம்பரத்தையும் வெளியிடறாங்க - அநியாயம், அக்கிரமம், உச்சபட்ச துரோகம்...

???????????????????????????????????????????????????

எமோஜிக்களின் உரையாடல் - 67

 எமோஜிக்களின் உரையாடல் - 67

...................................................................................

என்னங்க - ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க் கட்சியை எகத்தாளமாகவும் பேசி பரபரன்னு பதிவுகள் போட்டுக்கிட்டிருப் பீங்க. ரெண்டு மூணு மாசமா ஒண்ணுமே காணமே.

உங்ககிட்ட சொல்றதுக்கு என்னங்க - நாமெல்லாம் ஒண்ணுக் குள்ள ஒண்ணு . இப்ப எதிர்க்கட்சி ஆளுங் கட்சியாயிடுச்சு. நமக்கு வேண்டப்பட்டவர் மூலம் அதுல ஒரு நல்ல பதவி கிடைக்க வாய்ப்பிருக்கு. பேச்சு வார்த்தை, பரிந்துரையெல்லாம் பலமா நடந்துக் கிட்டிருக்கு. அதான்.......

'யதார்த்த புரட்சியாளர்'னு உங்களுக்கு ஒரு பட்டம் தர ஏற்பாடு பண்ணிடறேங்க.

எமோஜிக்களின் உரையாடல் - 68

 எமோஜிக்களின் உரையாடல் - 68

............................................கஷ்டமான கேள்வி கேட்கப்போறேன் சார் - ஆனா, கைசொடுக்கற நேரத்தில பதில் தரணும்.


தந்துட்டாப் போச்சு. கேளுங்க.

நல்ல இலக்கியம் எது?

நான் எழுதுவது.

இலக்கியமல்லாதது?

மற்றவர்கள் எழுதுவது.

எமோஜிக்களின் உரையாடல் - 69 ....................................................................................

 எமோஜிக்களின் உரையாடல் - 69




பேனா, பேப்பர் சரி. கூட, கையில கத்தி வச்சிருக் கயே ஏன்?


அதுவா அந்த இரண்டு நாள் கவிதை உருவாக்கப் பயிலரங்குல கலந்துக்கிடேனில்லே - அங்கதான் சொன்னாங்க - வார்த்தைகளை வெட்டிப் போட்டா, வரிகளை வெட்டிப்போட்டா கவிதை உருவாகும்னு. அதான்.

???????????????????????????????????????????????????

எமோஜிக்களின் உரையாடல் - 70 ....................................................................................

 எமோஜிக்களின் உரையாடல் - 70

....................................................................................


இந்த ஃபேஸ் புக்கே வேலையில் லாத வங்களோட வம்பு மடமாகிப் போச்சு. நமக்கு எவ்வளவோ வேலையிருக்கு. இதுல நேரத்தை வீணாக்கமுடியாது.

ஆனா, நீங்க ரெண்டு ஃபேக் ஐடி வச்சிருக்கீங்க. உங்க சார்பா உங்க நண்பர்கள் ரெண்டு மூணு அக்க வுண்ட்ல உங்களைப் பாராட்டிக்கிட்டே யிருக்காங்க. உங்க வீட்டாளுங்க ரெண்டு மூணு பேர் உங்க பொஸ்தகங் களைப் பட்டியலிட்டுக் கிட்டேயிருக் காங்க - இதெல்லாம் எதுக்குங்க?

என்ன பேசறீங்க? பாத்துப் பேசுங்க. ஃபேஸ்புக் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா?

??????????????????????????????????????????????????????????


எதுவும் கடந்துபோகும் - சிறுகதைத்தொகுப்பு - அநாமிகா(லதா ராமகிருஷ்ணன்)

 எதுவும் கடந்துபோகும் 

- சிறுகதைத்தொகுப்பு - 

அநாமிகா

(லதா ராமகிருஷ்ணன்)

எனது மூன்றாம் சிறுகதைத்தொகுப்பு என் அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடாக 50 பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டது. இப்போது அதிலிருந்த கதைகளும் சமீபத்தில் திண்ணை இணைய இதழில் வெளியான எட்டு-பத்து கதைகளுமாக 'எதுவும் கடந்துபோகும் என்ற தலைப்பில் புதிய சிறுகதைத்தொகுப்பாக புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புதுப்புனல் பதிப்பகத் தாருக்கு என் நன்றி.


தொடர்புக்கு:
புதுப்புனல் பதிப்பகம்
pudhupunal@gmail.com
Phone Numbers: 99623 76282 / 98844 27997

உள்ளங்கையுலகு - 1 & 2 -ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் முழுக்கவிதைத்தொகுப்புகள்

 உள்ளங்கையுலகு - 1 & 2

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின்  முழுக்கவிதைத்தொகுப்புகள்



எனது முழுக்கவிதைத்தொகுப்பு - 1, உள்ளங்கையுலகு - 1 என்ற தலைப்பில் புதுப்புனல் பதிப்பக வெளியீடாக ஓரிரு வருடங்க ளுக்கு முன்பு வெளிவந்தது. (என்னுடைய முதல் நான்கு கவிதைத் தொகுப்புகளில் உள்ள கவிதைகள் இந்த முதல் முழுக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இப்போது இரண்டாம் முழுக்கவிதைத்தொகுப்பு உள்ளங் கையுலகு - 2 என்ற தலைப்பில் புதுப்புனல் பதிப்பக வெளியீடாக பிரசுரமாகியுள்ளது. இதில் என்னுடைய 6 முதல் 10 வரையான கவிதைத்தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
எனது ஐந்தாம் தொகுப்பான 'வாக்கு' (சந்தியா பதிப்பக வெளி யீடு) கைவசம் இல்லாததால் இரண்டாவது முழுக்கவிதைத் தொகுப்பில் அது இடம்பெறவில்லை. மூன்றாவது முழுக்கவிதைத் தொகுப்பில் இடம்பெறும்.
தொடர்புக்கு:
புதுப்புனல் பதிப்பகம்
pudhupunal@gmail.com
Phone Numbers: 99623 76282 / 98844 27997

ஒரு அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில…. 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  ஒரு அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில….

'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
.................................................................................................................

தேவைப்படும் பொருட்கள்:
• கொஞ்சம் சாம்பிராணி
• நான்கைந்து ஊதுபத்திகள்
• எதிரிலிருப்பவர் முகம் தெளிவாகத் தெரியாத
அளவு நிழலார்ந்த பகுதி
• பின்னணியில் நிறைய இலைத்திரள்களுடனான பெரிய மரம் அல்லது நீண்டுகொண்டே போகும் கடற்கரை மணற்பரப்பு.
கூடுதல் குறிப்புகள்:
மரம் பட்டுப்போய்க்கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக இருந்தால் மிகவும் நல்லது.
அல்லது
கடற்கரை மணற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குக் கண்ணெட்டும்படியாக காலடித்தடங்கள் தெரியவேண்டும் –
தெளிவாகவும், மங்கலாகவும், இரண்டும் கலந்தும்.
புரியாத மொழியில் ஒரு பாட்டு சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கட்டும்.
(புரிந்த மொழி என்றால் ஒருவேளை அது உங்கள் கவிதையை விட மேம்பட்டதாகப் புலப்பட்டுவிட வழியுண்டு. எதற்கு வம்பு).
திடீர்திடீரென்று உங்கள் தோள்களில் சிறகுகள் முளைத்து நீங்கள் பறக்கவேண்டும் (பயப்படவேண்டாம். நிஜமாக அல்ல; காணொளித் தொழில்நுட்பத்தின் உதவியுடன்).
ஒரு விஷயத்தில் நீங்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும் _
தரையில் நின்றிருந்தாலும் சரி, அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தாலும் சரி உங்கள் கண்கள் மட்டும் அரைக்கிறக்க ‘பாவ’த்தில் அண்ணாந்து பார்த்தபடியே இருக்கவேண்டும்.
ஒரு வரியை வாசித்தவுடன் அரங்கிலுள்ளோர் பக்கமாகப் பார்வையைச் சுழலவிடுவது பழைய கவியரங்க பாணி.
நீங்கள் ஒரு வரியை வாசித்துமுடித்தவுடன் கைகளைக் கோர்த்துக்கொண்டு தலைகுனிந்து மௌனமாயிருத்தல் வேண்டும்.
கைத்தட்டலுக்கான இடைவெளி பலவிதம் என்று இத்தனை வருடங்களாக வாசித்துக்கொண்டிருப் பவர்களுக்குத் தெரியாதா என்ன?
இவர்களில் சிலருக்கு இன்னும் சிலபலவும் தெரியும் என்பதுதான் இங்குள்ள சிக்கல்.
இலக்கியத்தின்பால் உள்ள மெய்யான அக்கறையோடு இருக்கும் அவர்களுக்கு
தன்னை மறந்த பாவத்தை முழுப் பிரக்ஞையோடு தாங்கி என்னதான் அழகிய ‘prop’களோடு நீங்கள் இயங்கினாலும்
உங்கள் கவிதையில் எந்த அசாதாரணக் கவித்துவமும் இல்லையென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிவிடும்.
அதைப் பெரிதுபடுத்தி வெளியே சொல்லாமலிருக் கும்வரை அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம்.
சொன்னாலோ அதிசாதாரணம் என்பதில் உள்ள ’தி’, ’சா’வுக்கு பதிலாக வந்துவிட்ட அச்சுப்பிழை என்று கூறத் தெரிந்திருக்கவேண்டும் எப்போதும்.
அதைவிட எளிதாக _
இன்று இலக்கியவாதிகளிடையே பெருகிவரும் எதிர்மறை முத்திரைகளில் ஒன்றைக்
(வலதுசாரி, அதிகார வர்க்கம், சாதித்திமிர், ஃபாசிஸம், நார்ஸிஸம் அன்னபிற பிற பிற பிற….)
கொண்டு அவர்களுக்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிடத் தெரிந்திருந்தால் போதும்