LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 12, 2026

எமோஜிக்களின் உரையாடல் - வந்தே மாதரம்

 எமோஜிக்களின் உரையாடல் - வந்தே மாதரம்



பேரன் (கல்லூரிமாணவன்):

.......................................................

தாத்தா, ஏன் இந்திப்பாட்டுங் களை முன்னால பாடிட்டு மூணாவதா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினாங்க? - இது தப்பில்லையா


தாத்தா:
.............................................
என் செல்லப் பேராண்டி - நாம தமிழர்கள் மட்டு மில்லை -இந்தியர்களும்கூட. இந்தியர் கள் மட்டுமில்லை - தமிழர்களும் கூட. அந்தப் பாடல்கள் வெறும் இந்திப் பாடல், தமிழ்ப்பாடல் மட்டுமல்ல - நாட்டுப்பாடல். வந்தே மாதரம் ன்னா 'தாய் மண்ணே வணக்கம்'னு அர்த்தம்.

பேரன்(கல்லூரி மாணவன்) :
.....................................................................
என்ன இருந்தாலும் நம்ம மாநிலத்தில நம்ம தாய்மண் பாட்டுத் தானே முதலில் பாடப்பட வேண்டும்?

தாத்தா:
..........................................
எங்கே, அதை முழுசா தப்பில்லாம பாடு பாப்போம்

பேரன் :
.........................................
தாத்தா - அது வந்து...
.

தாத்தா
......................................
சுதந்திரப்போராட்ட காலத்தில் தமிழகம் உட்பட இந் தியா பூராவும் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து 'வந்தே மாதரம்' என்று பாடிக்கொண்டு கொடியைத் தூக்கிக்கொண்டு செல்வார்கள் இளைஞர்களும், பெரியவர்களும். 'வந்தே மாதரம்' சொல்லாதேன்னு வாயிலேயே குண்டாந்தடியால போடுவாங்க பிரிட்டிஷ் போலீஸ்காரங்க. ரத்தம் வழியும். ஆனாலும், ஆவேசமா நாங்க 'வந்தே மாதரம்னு சப்தமா கத்துவோம்..... அதெல் லாம் ஞாபகம் வரது. ...

எமோஜிக்களின் உரையாடல் - தமிழக அரசியல் களம் - 2

 எமோஜிக்களின் உரையாடல் - தமிழக அரசியல் களம் - 2

ஆட்சிக்கு வரப்போகும் கட்சியின் தொண்டர்கள் கேலியா சுத்தி சுத்தி வந்து விசிலடிச்சாங்களாமே - இனி எல்லாமே நாசம் தான்னு ரொம்ப வருத்தப்பட்டிருக்காரே ஆட்சியிலிருக்கும் கட்சியின் முக்கியப் பிரமுகர் ?


யார் இந்தமாதிரி கேலி செய்தாலும் அது கண்டிக்கத் தக்கது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மதச் சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கட்சியைச் சேர்ந்த இவர், மதச்சார்பின் மையை முன்வைக்கும் அரசியல் சாஸனத்தின் மேல் உறுதி மொழியெடுத்து பதவிக்கு வந்தவர் விஸிலடிப்பதை விட மோசமாக பாரதப்பிரதமரை, இந்துமதத்தை எப்படியெல்லாம் தன் பதிவுகளில் இழிவுபடுத்தியிருக்கிறார் என்பதையும் எண்ணிப்பார்க்காமலிருக்க முடியவில்லை.

இந்தியாவின் எல்லைப்புறங்களில் உள்ள நாடுகளும், எல்லைப்புறங்களில் உள்ள இந்திய மாநிலங்களும்.

 இந்தியாவின் எல்லைப்புறங்களில் உள்ள நாடுகளும், எல்லைப்புறங்களில் உள்ள இந்திய மாநிலங்களும்.

இந்திய எல்லைப்புறங்களில் உள்ள நாடுகள்:

1. பாகிஸ்தான்.
2. சீனா,
3. நேபாளம்
4. பங்களாதேஷ்
5. பூடான்
6. மியன்மார்
7. இலங்கை
8. ஆஃப்கா னிஸ்தான்.
எல்லைப் பரப்பின் மொத்த நீளம் ஏறத்தாழ 15,200 கிலோ மீட்டர்கள். இதில் கடலோர எல்லைப்பரப்பு 7515 கிலோ மீட்டர்கள். நிலஞ்சார் எல்லைப் பரப்பு ஏறத்தாழ 15,200 கிலோ மீட்டர்கள்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பரப்பை விண்ணி லிருந்து பார்க்க முடியும். இது மிகவும் அபாயகரமான எல்லைப்பகுதி களில் ஒன்றாக அரசு ஒலிபரப்புச் சேவையால் (Public Broadcasting Service) கொள்ளப்படுகிறது.
இந்திய எல்லைப் பகுதிகளில் அமைந் துள்ள மாநிலங் கள் பின்வருமாறு:
ஜம்மு காஷ்மீர்,
பஞ்சாப்,
ராஜஸ்தான்,
குஜராத்,
சிக்கிம்,
அசாம்,
மேற்கு வங்கம்,
திரிபுரா,
மேகாலயா,
மிசோரம்,
அருணாசலப் பிரதேசம்,
நாகாலாந்து,
மணிப்பூர்,
மினோ.
பாகிஸ்தான்: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லை யைப் பகிர்ந்து கொள்கின்றன.
ஆப்கானிஸ்தான்: ஜம்மு காஷ்மீர் ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
சீனா: ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தர காண்ட், சிக்கிம், அருணா சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
நேபாளம்: சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
பூடான்: அருணாசலப் பிரதேசம், சிக்கிம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பூட்டானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
மியான்மர்: அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப் பூர், மினோ ஆகிய மாநிலங்கள் மியான்மருடன் எல்லை யைப் பகிர்ந்து கொள்கின்றன.
பங்களாதேஷ்: அசாம், மேற்கு வங்கம், திரிபுரா, மேகா லயா, மிசோரம் ஆகிய மாநி லங்கள் பங்களாதேஷுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
*
இந்த எல்லைப் பகுதிகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
தமிழகம் நாட்டின் உட்புறத்தில் இருப்பதால் நமக்கு இந்திய ராணுவத்தின் அருமை, பயங்கரவாதிகளால் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் தெரிவதில்லை. இங்கே எல்லாம் இயல்பாக, அமைதியாக, இணக்கமாக இருப்ப தாக பாவித்துக் கொள்கிறோம்.
ஆனால், ஒவ்வொரு நாளும், அல்லும்பகலும் நம் ராணு வத்தினர், கடற்படை யினர், வான்படையினர் வெகு கவனமாக எல்லையோரப் பகுதிகளை கண்காணித்து, பதுகாத்துக்கொண்டிருப்பதால்தான் நாம் இங்கே நிம்மதியாக வழ்ந்துகொண்டி ருக்கிறோம் என்பதை நாம் எண்ணிப்பார்க்க மறநதுவிடுகிறோம்.
ஆனால் இந்திய எல்லையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு – அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி – பயங்கரவாதிகளின் தாக்குதல்களி லிருந்து, பயங்கரவாதிகள் என்ற போர்வையில் எதிரி நாட்டு ராணுவம் மேற்கொள்ளும் அத்துமீறல்களிலி ருந்து நம்மைக் காப்பது நம் படைவீரர்களே என்பது நன்றாகவே தெரியும்.
இந்திய ராணுவத்தில் எத்தனையோ தமிழர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எமோஜிக்களின் உரையாடல் - தமிழக அரசியல் களம்

 எமோஜிக்களின் உரையாடல் - தமிழக அரசியல் களம்



இப்போதுதான் தமிழகத்தில் புதிய முதலமைச்சரும் அவருடைய அமைச்சர்கள் சிலரும் பதவியேற்றுள்ளனர். அதற்குள் இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வில்லையே, அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வில்லையே என்று குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார் கள் அறிவுசாலிகளில் சிலபேர். வருத்தமா யிருக்கிறது.


நானும் அதையெல்லாம் படிச்சேன். உண்மையிலேயே வருத்த மாயிருக்கு. சாதிப்பிரிவினைகளைப் பகடைக்காயாக்கிய அரசியல்கட்சிகள் மக்கள்நலனைப் பணயம் வைத்து சூதாடிக் கொண்டிருக்கின்றன. சுய சாதிக்கார சட்ட சபை உறுப்பினர்கள் அப்படி எல்லா சுயசாதி மக்களுக் கும் நல்லது செய்கிறார்களா என்ன ? நேர்மை, கடமை யுணர்வு, திறமை, பாரபட்சமற்ற அணுகுமுறை மக்கள் நலனில் ஆர்வமும் அக்கறையும் - இதெல் லாம் மக்கள் பிரதிநிதிகளிடம் இருப்பதல்லவா முக்கியம்........

எமோஜிக்களின் உரையாடல் - HEIGHT OF VENOM, HEIGHT OF NARCISSISM .....

 எமோஜிக்களின் உரையாடல் - 

HEIGHT OF VENOM,

HEIGHT OF NARCISSISM .....


HEIGHT OF VENOM, HEIGHT OF NARCISSISM .....


எது?

எந்தவிதத்திலும் பொதுமக்களுக்குப் பயனில்லாத, தம்மை முன்னிறுத்திக் கொள்ள மட்டுமே பயன்படுகின்ற தேசிய சர்வதேசிய கலை இலக்கிய சமூகக் கருத்தரங்குகளுக்கு வாரம் ஒருமுறை ஆகாயமார்க்கமாகப் பயணிப்பவர்கள், போகுமிடத்தி லெல் லாம் அங்கேயிங்கே நின்று நடந்து புகைப்படங்களாக எடுத்துக்கொண் டிருப்பவர்கள் 140 கோடி மக்களின் பிரதமர் நாட்டுநலனுக்கான கருத்தரங்குகளில் கலந்துகொள்ள தனி விமானத்தில் பயணிப் பதைப் பரிகசிப்ப தும், பழிப்பதும்தான். பெட்ரோல் முதலான எரிபொருள் பயன் பாட்டை முடிந்தவரை கட்டுப்படுத்துங்கள் என்று அவர் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கு இந்த எள்ளல், 'வெறுப்புப் பேச்சு....

என்ன இருந்தாலும் அவங்க பெருந்தன்மையானவங்க தான். பிரத மரை கால்நடையாவோ அல்லது கட்டவண்டி யிலோ ஆப்பிரிக்கா வுக்குப் போகச்சொல்லலியே!


எமோஜிக்களின் உரையாடல் பெண்ணியமும் தங்கமும்

எமோஜிக்களின் உரையாடல்
பெண்ணியமும் தங்கமும்

என்ன, உனக்கு நீயே சோகமா சிரிச்சுக்கறே?
இல்லே - எங்க காலத்தில நகை நட்டை மறுதலிக்கிறது பெண்ணியவாதிகளின் ஒரு கொள்கையாக இருந்தது. ஆனா, இப்ப, உரிமைவாதிகள்னு சொல்லிக்கறவங்களே ஒரே ஒப்பனையும் தங்க அணிமணி களுமா தான் வராங்க. நாட்ல தங்கம் தான் அதிக அளவு பெருஞ் செலவுல இறக்குமதியாகிறதுங்கறதைச் சொல்லி இப்போ இருக்கற உலகளாவிய போர்ச்சூழல், அது சார்ந்த நெருக்கடிகளை மனதில் வைத்து இந்தியப் பிரதமர் ஒரு வருடம் நகை வாங்கறதை நிறுத் துங்கன்னு நாட்டுமக்கள்கிட்ட வேண்டுகோள் விடுத்திருப்பதை இந்த உரிமைவாதிகளே கரிச்சுக்கொட்டறாங்க.... இதையெல்லாம் பார்க்கும்போது சிரிக்கத்தான் தோணுது....
(பின்னணியில் பாட்டு ஒலிக்கிறது)
'சிலர் அழுவார், சிலர் சிரிப்பார் - நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்...............'
S
·

எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும் - 3

 எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும் - 3




எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்….. டாட்டா டீ சக்ரா கோல்ட் விளம்பரமொன்றில் போக்கு வரத்து நெரிசலில் ஒரு கார்க்காரர் ‘ராங் சைடில்’ சாலையின் அந்தப்புறமாய் வண்டியை வளைத்து ஓட்டுவார். எதிரில் ஒரு டூ-வீலர் பெண் சரியான வழியில் வண்டியை ஓட்டிக்கொண்டுவர, அவளை வழியை விட்டு நீங்கும்படி எரிச்சலாக சைகை செய்வார். அந்தப் பெண் அசராமல்’ நீ சரியான வழியில் செல்’ என்று சைகை செய் வாள். வேறுவழியின்றி அந்த கார் பின்வாங்கும்.


இதில் என்ன பிரச்சனை ? சரியாத்தானே காட்டி யிருக்காங்க.

ஆனா, கூடவே ஒரு குரல் ’தமிழர்கள் மன உறுதி வாய்ந்தவர்கள்’ என்பதுபோல் ஏதோ சொல் கிறது. உறுதியாக இருந்த அந்தப் பெண் தமிழ ரென்றால் ராங்க் சைடில் காரை ஓட்டி வந்த அந்த நபர் வேறு மாநிலமா? எந்த மாநிலம்?

???????????????????????????????????????????

எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும் - 2

எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும் - 2


 என்ன இது – என் கட்டுரையில் எழுதியவர் என்று என் பெயரைப் போட்டு கீழே யாரோ ஒருவருடைய படம் போட்டிருக்காங்க?


இல்லீங்க – அது பதினைந்து வருடங்களுக்கு முன்னா லிருந்த உங்களுடைய படம்!

[’நானே நானா – யாரோதானா’ பாடல் பின்னணியில். கீறல் விழுந்த ரெகார்டாய் முதல் நான்கு வார்த்தைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்தவாறு!]



டிவி மெகாத்தொடர்களில் மதுவருந்தும் காட்சி வரும்போதெல் லாம் ‘குடி குடியைக் கெடுக்கும்’னு கீழே மங்கலா, குட்டி குட்டி எழுத்துக்களில் போடுகிறார்கள். புகைபிடிக்கும் காட்சி வரும் போதெல்லாம் அதேமாதிரி குட்டிகுட்டியா மங்கலா கீழே எழுத்து ஓடுது. அப்ப, கொலை செய்யற காட்சிகள், வரதட்சணைக் கொடு மைக் காட்சிகள், வர்க்கம் சார்ந்து ஒருவரை இழிவுபடுத்தும் காட்சிகள், இதெல்லாம் வர்ரப்ப ஏன் எந்த வாசகமும் கீழே தரப் படுவதில்லை?

???????????/????????????????






நீங்கள் அவரை எப்போதுமே பரிகசிக்கிறீர்கள், பழித்துப் பேசுகிறீர்கள், காறித்துப்புகி றீர்கள், கெட்ட கெட்ட வார்த்தை களால் திட்டித் தீர்க்கிறீர்கள். ஆனால், இவரை ஒரே முறை தான் அப்படிப் பேசினீர்கள். அதற்குப் பிறகு வாயே திறக்கவில்லையே – ஏன்?”

’அவர் பதிலுக்கு எதுவும் சொல்லா மல் புறக்கணித்து விடுவார். இவர் என்னுடைய வார்த்தைகளை விடப் பன்மடங்கு கேவலமான வார்த்தைகளால் எனக்கு ‘பதிலுக்கு பதில்’ தருவார். அதனால் தான்.’





‘ஓரு நல்ல விமர்சனம் என்று எதைச் சொல்வீர்கள்?’

‘ நான் மற்றொருவருடைய படைப்பைப் பற்றி எழுதிய விமர்சனமென்றால் - சம்பந்தப்பட்ட படைப்பைக் கிழிகிழியென்று கிழிப்பது. இன்னொருவர் என் படைப்பைப் பற்றி எழுதிய விமர்சனமென்றால் - பாராட்டுமழை பொழிவது’







’உங்களுடைய படைப்பு குறித்து எழுதப்பட்ட மிகச் சிறந்த விமர்சனம் என்று இம்மாத இதழில் வெளியாகி யிருப்பதைக் குறிப்பிடுவதற்குக் குறிப்பான காரணம் என்ன?’

‘குறிப்பான காரணம், சிறப் பான காரணம் எல்லாமே இதுதான்: என்னுடைய படைப்பை ஓஹோஹோன்னு புகழ்ந்திருக்கு. இரண்டு பக்க விமர்சனத்தில ’இதுவல்லவோ இலக்கியம்’னு 10 இடங்கள்ள வந்திருக்கு.





இப்ப நீங்க சொன்னதைத் தானே நான் நேத்து சொன் னேன்? அப்ப எனக்கு அறிவே கிடையாதுன்னு சொன் னீங்க – ரொம்ப தப்பா நான் யோசிக்கிறதா சாடையா திட்டித் தீத்தீங்க. இப்ப நீங்க அதையே சொல்றீங்க – என்னங்க இது?”


’இதுதான் அறிவுடைமை; ஜனநாயகப் பண்பு. மானே, தேனேன்னு இன்னும் நாலைஞ்சு சேத்துக்கலாம் – பரவா யில்லை. ஆனா, நீங்க சொன்னா தவறு. அதையே நான் சொன்னா அறிவு. அதை மட்டும் தெளிவா புரிஞ்சுக்கங்க’.

அரசியல் கட்சிகள் .......................................................................

 அரசியல் கட்சிகள்

.......................................................................



மிகப் பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவில் பெரிய தும் சிறியதுமாக பல கட்சிகள் உண்டு.


இத்தனை நாட்களாக பெருங்கட்சிகள் சிறுகட்சிகளைப் புரந்து காக்கின் றன என்றிருந்த பிம்பம் – குறிப்பாக தமிழகத்தில் அத்தகைய பிம்பமே பரவலாக நிலவியது – இப்போதைய தேர்தலில் தகர்ந்துவிட்டது.

அத்தகைய அரசியல் கட்சிகளின் உண்மையான மதிப்பு இப்போது புலப்பட்டிருக்கும்.

குறிப்பான சில நோக்கங்களுக்காக பெருங்கட்சிகளில் இணையாமல் தனித்து கட்சி அமைப்பவர்கள் அந்த நோக்கங் களுக்காக ஜனநாயகரீதியாக முனைப்பாகச் செயல்படாமல், சுயநல நோக்கங்களுக்காக பெருங்கட்சிகளின் கைப்பாவை யாகச் செயல்படும் போது அந்தக் கட்சிகள் தங்கள் கடமை யிலிருந்து தவறிவிடுகின்றன என்றே கூறலாம்.

எமோஜிக்களின் உரையாடல் -

 எமோஜிக்களின் உரையாடல் -


சொல்லவந்த சேதியை கனகச்சிதமாய் சொல்வதற்கு ஓர் உதாரணம் – ‘கண்டேன் சீதையை’ இதையே சீரியல்தனமாய் சொல்வதென்றால் ?


‘அதாவது ராமா – நான் என்ன சொல்ல வருகிறேனென் றால் …. இருங்கள், என் தொண்டையடைக்கிறது. ....கண்ணீர் கரை புரளுமோ என்று பயமாயிருக்கிறது… கொஞ்சம் பொறுங்கள் ராமா – இப்போது சோப்பு சீப்பு கண்ணாடி விளம்பரம் வரப் போகிறது….. சரி, இப்போது சொல்கிறேன் – சீதையைத் தேடிச் சென்ற நானாகிய அனுமன் – சீதையைக் கண்டேனா என்றால்…. காண்ப தெல்லாம் காட்சிப்பிழை, தோற்ற மயக்கம் என்றால் சீதையை நான் கண்டேனா, காணவில்லையா – இருங்கள் - பின்னணியிசை வீணையிலிருந்தால் அது நல்ல செய்தியா, கெட்ட செய்தியா என்பதை ’மதரா, மம்மியா’ அல்லது ’அவையா சபையா’விவாத நிகழ்ச்சியில் வரும் ஞாயிற்றுக் கிழமை தெரிந்துகொண்டுவிடுவீர்கள்…

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து -3

எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து -3
‘ இங்கே பாருங்க, நான் சொல்றதைக் கேளுங்க’

” நீங்க சொல்றதை நான் எதுக்குங்க கேக்கணும்?’

‘உங்களுக்கு நன்மை செய்யணும்னு அமெரிக்கா விலேர்ந்து வந்திருக்கேன்.

அதுக்கு முன்னாடி எங்கேயிருந்தீங்க?:

நியூஜிலாந்தில்.

இப்ப என்னை மாதிரி ஆளுங்கிட்ட பேசி எங்க அறிவுக்கண்ணைத் தெறந்த பிறகு எங்க போவீங்க?

ஸ்விட்ஜர்லாந்துக்கு. அக்டோபர், நவம்பர் டிசம்பர் ஸ்பெயினுக்கு…..

ஆக மொத்தம் – இந்தியாவில் இருப்பதே யில்லை. நாங்க இங்கயே தான் எப்பவும். இங்கேத்த நிலவரத்தை நீங்க எடுத்துச்சொல்லி நாங்க புரிஞ்சுக்கவேண்டிய அவசியமில்லை. போய்ட்டு வாங்க.




மாதம் 2000 ரூபாய் அல்லது 5000 ரூபாயில் ஒரு பெண் என்னவெல்லாம் வாங்கலாம் தெரியுமா! ’

‘இன்று படித்தவர்களோ, படிக்காதவர்களோ , கிராமமோ நகரமோ – பெரும்பாலான பெண்கள் வருவாய் ஈட்டக் கூடிய வேலை ஏதாவது செய்கிறார்கள். வீட்டுவேலை முதல் வயதானவர்களைப் பார்த்துக்கொள்ளும் வேலை என எத்தனையோ வேலைகள். எனக்குத் தெரிந்து எத்தனையோ ஆட்டோ ஓட்டுனர்களின் மனைவியர் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வீட்டுவேலை செய்து கணவன் மதியம் வீடு திரும்புவதற்குள் வேலை முடிந்து வீடு திரும்பி சுடச்சுட உணவு தயாரித்து வைத்திருப்பார்கள். கேட்டரிங் தொழிலில் பல பெண்கள் வீட்டிலிருந்தே உணவுப்பண்டங்கள் சமைத் துத் தந்து வருமானமீட்ட முடிகிறது. எத்தனை பணம் வந்தாலும் செலவு அதிகம்தான் என்பது உண்மை. ஆனால், 1000, 2000 கூடுதலாகக் கிடைத்தால் அதைக் கொண்டு என்ன வாங்க முடியும் என்று பெண்களுக்கு நன்றாகவே தெரியும்.’






’படித்தவர்களாகிய நாங்கள் சொல்கிறோம் – கேளுங் கள். தமிழகம் வளர்கிறது, வளர்கிறது - வளர்ந்து கொண்டே போகிறது’

நீங்கள் பாரதியார் சொன்னதை முதலில் கேளுங்கள் - ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்’
_ பாரதியார்




மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மிக மிக விழிப்பாக இருக்கவேண்டும். மூடநம்பிக்கை களுக்கு அடிமையாகிவிடக்க்கூடாது…..

அதாவது, ஆளுங்கட்சியே சர்வ வல்லமை பொருந்திய ஆண்டை என்று நம்பிவிடலா காது. 'மக்களாகிய நாங்கள் எப்போதுமே பல்லக்குத்தூக்கிகள்' என்ற மூடநம்பிக்கை யைப் புறந்தள்ளிவிடவேண்டும் - அப்படித் தானே?'

????????????????????????????????????????????



அவர் இதுவரை தேர்தல்ல நின்னு ஜெயிச்சிருக்காரா, சொல்லுங்க

’இல்லை. அதனாலே என்ன?’

’அதனாலே என்னவா? மக்களாட்சியிலே மக்களால தேர்ந்தெடுக்கப்படாமல் வரலாமா?’

’அப்படின்னா, தேர்தல்ல ஜெயிச்சு வரவங்க எல்லாம் நல்லவங்களா? மக்களுக்கு நல்லது பண்றவங்களா?”


????????????????????????????????????????????





எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து

 எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 1



‘ நம் வாக்கு நம் உரிமை ’
‘ஆமாங்க – இதே தான் எல்லா சேனல்லேயும் வருது.
'அதை நாம் வீணடிக்கக் கூடாது'.

அப்படியெல்லாம் வீணடிக்க மாட்டோமுங்க – பணம் கிடைச்சாலும், கிடைக்காட்டியும் கட்டாயம் போடு வோம்ங்க. நீங்க?
நாங்க நீலாங்கரையில வீடு கட்டி குடியேறி நாலு வருஷம் ஆகுது. இன்னும் வாக்காளர் அட்டை விலா சத்தை மாத்த நேரம் கிடைக்கலை.
அடடா – அப்ப எப்பிடி வோட்டு போடுவீங்க?
நம்ம ஒருத்தர் வோட்டில என்ன இருக்கு? WHATEVER WILL BE, WILL BE’
எதுக்குங்க திடீர்னு இங்கிலீஷுக்கு மாறிட்டீங்க?
இங்கீலீஷ்ல ஏதாவது சொன்னா நான் அறிவாளின்னு நம்பிடுவீங்க, நான் வாக்களிக்காமலிருப்பது என்னு டைய அலட்சியம் இல்லை, அறச்சீற்றம்னு நினைச்சுக்கு வீங்கன்னுதான்….
?????????????????????????????????????????????????????????




அய்யோ – இது என்ன ?….
எது என்ன?
நேத்துவரைக்கும் ஆளுங்கட்சியைத் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்த இந்த நாளிதழ் இன்னிக்கு ஆளுங் கட்சியின் சாதனை களை விளக்கி முழுப்பக்கம் எழுதியிருக்குதே

அது அரசு விளம்பரம்ங்க

PAID NEWS போலவா

அப்படிச் சொல்ல முடியாது. ஆனா, அப்படிச் சொல்லாம லிருக்கவும் முடியாது....



ஐயா, அம்மா – உங்கள் பொன்னான வாக்கை எனக்கே அளிக்க வேண்டுகிறேன்.

’ஆனா, யார் தன்னுடைய மொத்த சொத்தில பாதியை சமூக மேம்பாட்டுக்காக முதலிலேயே கொடுத்துவிடு கிறாரோ அவருக்குத்தான் என் ஓட்டு.

அய்யய்யோ, இது என்ன வம்பா போச்சு.....




எல்லோரும் இந்நாட்டு மன்னர்’

‘மொதல்ல, இது மக்களாட்சி’.

‘மக்களாட்சியிலும் மன்னர்கள் உண்டு; இளவரசர்கள் உண்டு.

‘அடிமைகளும் உண்டுதான். இதில் ’எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பது நல்ல நகைச்சுவை; பொழுதுபோக்கு'




’கற்றது கையளவு; கல்லாதது கடலளவு.’

இது நம்ம எல்லோருக்கும் பொருந்தும். இதிலே அவரை மட்டும் கத்துக்குட்டின்னு சொன்னா எப்பிடி?

'வாயை மூடு, அதிகப்பிரசங்கி.






‘எனக்குத் தெரியும் மேடம் – நீங்க எந்தக் கட்சிக்கு ஓட்டுப்போடு வீங்கன்னு… இருந்தாலும், மனசு கேக்கலை – அதனால சொல் றேன். அந்தக் கட்சிக்கு ஓட்டுப்போட றது உங்க மூஞ்சில நீங்களே கரி பூசிக்கிறதுக்கு சமம்.


அட! அப்படியானால், அந்தக் கட்சிக்கு நான் ஓட்டுப் போட்டா நீ என் மூஞ்சில கரி பூசுற சிரமம் உனக்குக் இருக்காது. அதுக்காக நீ எனக்கு நன்றி சொல்லணும்!


??????????????????????????????????




மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மிக மிக விழிப்பாக இருக்கவேண்டும். மூடநம்பிக்கைகளுக்கு அடிமையாகிவிடக் க்கூடாது…..

அதாவது, ஆளுங்கட்சியே சர்வ வல்லமை பொருந்திய ஆண்டை என்று நம்பிவிடலாகாது. 'மக்க ளாகிய நாங்கள் எப்போதுமே பல்லக்குத்தூக்கிகள்' என்ற மூட நம்பிக்கையைப் புறந்தள்ளிவிட வேண்டும் - அப்படித்தானே?'


?????????????????????????????????????????????????????????????????????????????



காலைல 11 மணிக்கு உங்களைப் பார்க்க வரவா?


நான் பல்கலைக் கழகம் வரை போகணும்.


ஐயையோ – என்ன இது – கட்சி மாறப்போறீங் களா?