LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, June 20, 2026

எமோஜிக்களின் உரையாடல் – 65

 எமோஜிக்களின் உரையாடல் – 65

...................................................................................

வாழைப்பழத்தோல் மேல கால வச்சா வழுக்கத்தான் செய்யும்.

ஆமா,

அதுக்காக வாழப்பழம் சாப்பிடாம இருக்க முடியுமா, தோலைத் தான் எறியாம இருக்க முடியுமா?

முடியாது.

அதனால, நாம செய்யவேண்டியது என்னன்னா –

வாழைப்பழத்தை சாப்பிட்டு தோலை பத்திரமா குப்பைத் தொட்டியில போடணும். பக்கத்தில குப்பைத் தொட்டி இல் லேன்னா, தெருவோரமா போடணும்... வீட்டுக்குள்ளாற இருந்து ஜன்னல் வழியா வெளிய எறியக் கூடாது.

என்னப்பா இன்னும் இதே ரீதியில யோசிச்சுக் கிட்டிருக்கே ... ? இதுக்கான தீர்வு ஒண்ணே ஒண்ணுதான்.

என்னது?

தோலே இல்லாம வாழப்பழம் கிடைக்கச்செய்ய றது தான்.

?????????????????????????????????????????????????????????????

சொல்லத்தோன்றும் சில..... நடிகைகளின் வயது

 சொல்லத்தோன்றும் சில.....

நடிகைகளின் வயது

’மௌனம் சம்மதம்’ என்ற திரைப்படம்தான் நான் தியேட்டருக்குச் சென்று பார்த்த கடைசிப் படம் என்று நினைக்கிறேன்.

மம்முட்டிக்காக இமயமலையின் உச்சிக்கு மேலாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டேகூட எந்தப் படத்தையும் பார்க்கும் முனைப்பு ஒரு காலத்தில் இருந்தது.

எத்தனை அறிவார்த்தமாகப் படங்களைப் பற்றிப் பேசினா லும் எள்ளிநகையாடினாலும் தியேட்டருக்குள் சென்று அமர்ந்துவிட் டால் பின் அந்தப் பெரிய திரையில் யாராவது அழுதால் என்னால் எப்படி அழாமலிருக்க முடியும்?!

எழுத்தோ, சினிமாவோ - வாசிப்பவை, காண்பவை எல்லாமே ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு குழுவின் கற்பனை மட்டுமே என்ற எண்ணமேற்பட்டுவிட்டால் பின் அவற்றிலிருந்து மனம் ஒருவிதத் தில் அந்நியப்பட்டு விடுகிறது.

பின், தொலைக்காட்சிப்பெட்டி வந்தது.

சின்னத்திரையில் நடக்கும் கதையோடும், காட்சிகளோடும் ஒன்றாமலேயே அதை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பது பழகி விட்டது.

வெகுநாட்களுக்குப் பிறகு 'தெனாலி' படம் தியேட்டருக்குச் சென்று பார்த்தபோது அதில் மனிதர்களின் கனபரி மாணங்கள் மிகமிகப் பெரிதாய் தலையை, கண்களைக் கிறுகிறுக்கச் செய்தன.

அதுவும் கதாநாயகி ஜோதிகா அண்ணனுடன் செல்லும் போது அணிந்திருக்கும் அதி குட்டைப் பாவாடை...... அதுநாள்வரை காதல னுடன் தான் கதாநாயகி அப்படி அணிந்துகொண்டு நடனமாடு வாள். அல்லது, காபரே நடனக்காரி அப்படியொரு ஆடையில் ஆடுவார். ஏதோ வொரு வகையில் அண்ணனுடனான அந்தக் குட்டைப் பாவாடைக்காரத் தங்கச்சியைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியாயிருந்தது.

பின், வீட்டில் ஆங்கில சேனல்களில் சிலகாலம் சில படங்கள். அதே படங்கள் பல மாதங்களுக்குத் திரும்பத் திரும்பக் காட்டப் படுமாதலால் அவற்றையும் சீரியல்கள் போலப் பார்த்துக்கொண் டிருக்கலாம். DA VINCI CODE, ANGELS AND DEMONS, THE ORIGINAL SIN, THE SCENT OF A WOMAN, THE DEVIL'S ADVOCATE - இப்படி சில படங்கள்.

இப்போதெல்லாம் இரண்டு மூன்று மணிநேரம் தொடர்ந்து எந்தப் படத்தையும் பார்க்கமுடிவதில்லை. அலுப்புத் தட்டிவிடுகிறது. நிறைய காட்சிகளை முன்னூகித்துவிட முடிகிறது. நடப்பதைக் காட்டுகிறோம் என்ற பெயரில் மிகக் கொடூரமான காட்சிகள் காட்டப் படுகின்றன. பார்க்க முடிவதில்லை.

இரண்டொரு வருடங்களுக்கு முன்பு பார்த்த கவிஞர் லீனா மணிமேகலையின் படைப்பு ’மாடத்தி’ மனதுக்கு நிறைவைய ளித்தது.

இப்போது அதிகம் பேசப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தைப் பார்க்கவில்லை. அதைப் பற்றி நிறையப் பேசப்பட்டுவிட்டன; பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆனால், எனக்கு இதில் படத்தைப் பார்க்காமலே நிறைவளித்த அம்சம் - அதில் வரும் இரண்டு கதாநாய கிகளின் வயது. அதைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்குக் கதாநாயகி அந்தஸ்து அளிக்கப்பட்டிருப்பது.

கல்கி கதையில் அந்தப் பாத்திரங்கள் நடுத்தர வயதுக் காரர்களா தெரிய வில்லை. ஆனாலும், தமிழ் சினிமா வைப் பொறுத்தவரை (அல்லது, இந்திய சினிமா என்றே சொல்லலாமா?) இது மிக மிக அரிதான விஷயம்.

//மீள்-பதிவு - ஜூன் 9, 2023//

எமோஜிக்களின் உரையாடல் - 66

 எமோஜிக்களின் உரையாடல் - 66

அநியாயம், அக்கிரமம் , உச்சபட்ச துரோகம்...

தேர்தல் முடிவுகளைச் சொல்றீங்களா

அதில்லைங்க

பின்னே? வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஏறிட்டதைச் சொல்றீங்களா?

அதெல்லாமில்லீங்க

ஆ! 'நீட் தேர்வு வினாத்தாள் கசிவைச் சொல்றீங்களா?

நீங்க வேற - அது எதுவும் இல்லீங்க.

அப்பிடின்னா - வேறென்ன?

ஜி-தமிழ்ல மெகாத்தொடர்களை மெகாஆஆஆத் தொடரா நீட்டிக்கிட்டே போறவங்க, மெகாத் தொடர்களைக் கிண்டல் பண்ணி மினி தொடர் பாருங்கன்னு சொல்ற விளம்பரத்தையும் வெளியிடறாங்க - அநியாயம், அக்கிரமம், உச்சபட்ச துரோகம்...

???????????????????????????????????????????????????

எமோஜிக்களின் உரையாடல் - 67

 எமோஜிக்களின் உரையாடல் - 67

...................................................................................

என்னங்க - ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க் கட்சியை எகத்தாளமாகவும் பேசி பரபரன்னு பதிவுகள் போட்டுக்கிட்டிருப் பீங்க. ரெண்டு மூணு மாசமா ஒண்ணுமே காணமே.

உங்ககிட்ட சொல்றதுக்கு என்னங்க - நாமெல்லாம் ஒண்ணுக் குள்ள ஒண்ணு . இப்ப எதிர்க்கட்சி ஆளுங் கட்சியாயிடுச்சு. நமக்கு வேண்டப்பட்டவர் மூலம் அதுல ஒரு நல்ல பதவி கிடைக்க வாய்ப்பிருக்கு. பேச்சு வார்த்தை, பரிந்துரையெல்லாம் பலமா நடந்துக் கிட்டிருக்கு. அதான்.......

'யதார்த்த புரட்சியாளர்'னு உங்களுக்கு ஒரு பட்டம் தர ஏற்பாடு பண்ணிடறேங்க.

எமோஜிக்களின் உரையாடல் - 68

 எமோஜிக்களின் உரையாடல் - 68

............................................கஷ்டமான கேள்வி கேட்கப்போறேன் சார் - ஆனா, கைசொடுக்கற நேரத்தில பதில் தரணும்.


தந்துட்டாப் போச்சு. கேளுங்க.

நல்ல இலக்கியம் எது?

நான் எழுதுவது.

இலக்கியமல்லாதது?

மற்றவர்கள் எழுதுவது.

எமோஜிக்களின் உரையாடல் - 69 ....................................................................................

 எமோஜிக்களின் உரையாடல் - 69




பேனா, பேப்பர் சரி. கூட, கையில கத்தி வச்சிருக் கயே ஏன்?


அதுவா அந்த இரண்டு நாள் கவிதை உருவாக்கப் பயிலரங்குல கலந்துக்கிடேனில்லே - அங்கதான் சொன்னாங்க - வார்த்தைகளை வெட்டிப் போட்டா, வரிகளை வெட்டிப்போட்டா கவிதை உருவாகும்னு. அதான்.

???????????????????????????????????????????????????

எமோஜிக்களின் உரையாடல் - 70 ....................................................................................

 எமோஜிக்களின் உரையாடல் - 70

....................................................................................


இந்த ஃபேஸ் புக்கே வேலையில் லாத வங்களோட வம்பு மடமாகிப் போச்சு. நமக்கு எவ்வளவோ வேலையிருக்கு. இதுல நேரத்தை வீணாக்கமுடியாது.

ஆனா, நீங்க ரெண்டு ஃபேக் ஐடி வச்சிருக்கீங்க. உங்க சார்பா உங்க நண்பர்கள் ரெண்டு மூணு அக்க வுண்ட்ல உங்களைப் பாராட்டிக்கிட்டே யிருக்காங்க. உங்க வீட்டாளுங்க ரெண்டு மூணு பேர் உங்க பொஸ்தகங் களைப் பட்டியலிட்டுக் கிட்டேயிருக் காங்க - இதெல்லாம் எதுக்குங்க?

என்ன பேசறீங்க? பாத்துப் பேசுங்க. ஃபேஸ்புக் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா?

??????????????????????????????????????????????????????????


எதுவும் கடந்துபோகும் - சிறுகதைத்தொகுப்பு - அநாமிகா(லதா ராமகிருஷ்ணன்)

 எதுவும் கடந்துபோகும் 

- சிறுகதைத்தொகுப்பு - 

அநாமிகா

(லதா ராமகிருஷ்ணன்)

எனது மூன்றாம் சிறுகதைத்தொகுப்பு என் அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடாக 50 பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டது. இப்போது அதிலிருந்த கதைகளும் சமீபத்தில் திண்ணை இணைய இதழில் வெளியான எட்டு-பத்து கதைகளுமாக 'எதுவும் கடந்துபோகும் என்ற தலைப்பில் புதிய சிறுகதைத்தொகுப்பாக புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புதுப்புனல் பதிப்பகத் தாருக்கு என் நன்றி.


தொடர்புக்கு:
புதுப்புனல் பதிப்பகம்
pudhupunal@gmail.com
Phone Numbers: 99623 76282 / 98844 27997

உள்ளங்கையுலகு - 1 & 2 -ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் முழுக்கவிதைத்தொகுப்புகள்

 உள்ளங்கையுலகு - 1 & 2

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின்  முழுக்கவிதைத்தொகுப்புகள்



எனது முழுக்கவிதைத்தொகுப்பு - 1, உள்ளங்கையுலகு - 1 என்ற தலைப்பில் புதுப்புனல் பதிப்பக வெளியீடாக ஓரிரு வருடங்க ளுக்கு முன்பு வெளிவந்தது. (என்னுடைய முதல் நான்கு கவிதைத் தொகுப்புகளில் உள்ள கவிதைகள் இந்த முதல் முழுக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இப்போது இரண்டாம் முழுக்கவிதைத்தொகுப்பு உள்ளங் கையுலகு - 2 என்ற தலைப்பில் புதுப்புனல் பதிப்பக வெளியீடாக பிரசுரமாகியுள்ளது. இதில் என்னுடைய 6 முதல் 10 வரையான கவிதைத்தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
எனது ஐந்தாம் தொகுப்பான 'வாக்கு' (சந்தியா பதிப்பக வெளி யீடு) கைவசம் இல்லாததால் இரண்டாவது முழுக்கவிதைத் தொகுப்பில் அது இடம்பெறவில்லை. மூன்றாவது முழுக்கவிதைத் தொகுப்பில் இடம்பெறும்.
தொடர்புக்கு:
புதுப்புனல் பதிப்பகம்
pudhupunal@gmail.com
Phone Numbers: 99623 76282 / 98844 27997

ஒரு அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில…. 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  ஒரு அதிசாதாரணக் கவிதையை அசாதாரணக் கவிதையாக்கும் வழிமுறைகள் சில….

'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
.................................................................................................................

தேவைப்படும் பொருட்கள்:
• கொஞ்சம் சாம்பிராணி
• நான்கைந்து ஊதுபத்திகள்
• எதிரிலிருப்பவர் முகம் தெளிவாகத் தெரியாத
அளவு நிழலார்ந்த பகுதி
• பின்னணியில் நிறைய இலைத்திரள்களுடனான பெரிய மரம் அல்லது நீண்டுகொண்டே போகும் கடற்கரை மணற்பரப்பு.
கூடுதல் குறிப்புகள்:
மரம் பட்டுப்போய்க்கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக இருந்தால் மிகவும் நல்லது.
அல்லது
கடற்கரை மணற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குக் கண்ணெட்டும்படியாக காலடித்தடங்கள் தெரியவேண்டும் –
தெளிவாகவும், மங்கலாகவும், இரண்டும் கலந்தும்.
புரியாத மொழியில் ஒரு பாட்டு சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கட்டும்.
(புரிந்த மொழி என்றால் ஒருவேளை அது உங்கள் கவிதையை விட மேம்பட்டதாகப் புலப்பட்டுவிட வழியுண்டு. எதற்கு வம்பு).
திடீர்திடீரென்று உங்கள் தோள்களில் சிறகுகள் முளைத்து நீங்கள் பறக்கவேண்டும் (பயப்படவேண்டாம். நிஜமாக அல்ல; காணொளித் தொழில்நுட்பத்தின் உதவியுடன்).
ஒரு விஷயத்தில் நீங்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும் _
தரையில் நின்றிருந்தாலும் சரி, அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தாலும் சரி உங்கள் கண்கள் மட்டும் அரைக்கிறக்க ‘பாவ’த்தில் அண்ணாந்து பார்த்தபடியே இருக்கவேண்டும்.
ஒரு வரியை வாசித்தவுடன் அரங்கிலுள்ளோர் பக்கமாகப் பார்வையைச் சுழலவிடுவது பழைய கவியரங்க பாணி.
நீங்கள் ஒரு வரியை வாசித்துமுடித்தவுடன் கைகளைக் கோர்த்துக்கொண்டு தலைகுனிந்து மௌனமாயிருத்தல் வேண்டும்.
கைத்தட்டலுக்கான இடைவெளி பலவிதம் என்று இத்தனை வருடங்களாக வாசித்துக்கொண்டிருப் பவர்களுக்குத் தெரியாதா என்ன?
இவர்களில் சிலருக்கு இன்னும் சிலபலவும் தெரியும் என்பதுதான் இங்குள்ள சிக்கல்.
இலக்கியத்தின்பால் உள்ள மெய்யான அக்கறையோடு இருக்கும் அவர்களுக்கு
தன்னை மறந்த பாவத்தை முழுப் பிரக்ஞையோடு தாங்கி என்னதான் அழகிய ‘prop’களோடு நீங்கள் இயங்கினாலும்
உங்கள் கவிதையில் எந்த அசாதாரணக் கவித்துவமும் இல்லையென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கிவிடும்.
அதைப் பெரிதுபடுத்தி வெளியே சொல்லாமலிருக் கும்வரை அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம்.
சொன்னாலோ அதிசாதாரணம் என்பதில் உள்ள ’தி’, ’சா’வுக்கு பதிலாக வந்துவிட்ட அச்சுப்பிழை என்று கூறத் தெரிந்திருக்கவேண்டும் எப்போதும்.
அதைவிட எளிதாக _
இன்று இலக்கியவாதிகளிடையே பெருகிவரும் எதிர்மறை முத்திரைகளில் ஒன்றைக்
(வலதுசாரி, அதிகார வர்க்கம், சாதித்திமிர், ஃபாசிஸம், நார்ஸிஸம் அன்னபிற பிற பிற பிற….)
கொண்டு அவர்களுக்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிடத் தெரிந்திருந்தால் போதும்

பிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிரதி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
.......................................................................
”எதற்கு ?
வேண்டாம் _
போதும்.”
உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய்
எழுத்தாளர் பிரதி;
கலவியின்பக் கிறக்கச்சிணுங்கலாய்
இருபதாயிரம் மைல்களுக்கப்பால்
சுயமைதுனஞ்செய்யும்
வாசகப்பிரதி;
கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது
கவிதை -
கன்னங்களில் நீர் படிய.

அடிவானப்பறவை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடிவானப்பறவை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தினமொரு சிறகிழையை மட்டுமாவது
எனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்று
பறவையைக் கேட்பது
பைத்தியக்காரத்தனம்…..
உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவை
யெலாம் தனதாய்க் கருதி
ஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவென
சதா அண்ணாந்து பார்த்திருந்து
கழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்
தடவிக்கொண்ட இடத்தில்
சுளீரென எரிவதில்
இரட்டிப்பாகும் இழப்புணர்வு.
இறங்கிவாராப் பறவையின் காலில்
அதற்கேயானதொரு மடலைக்
கட்டியனுப்பவும் இயலாது.
பறவைக்குப் படிக்கத் தெரிந்த மொழி
யெது?
மொழியே மனிதத்துயரின் மூலம் என்றால்
வழிமொழியுமோ பறவை?
பறவையின் அழகில் மனதைப் பறிகொடுத்ததோடு
அது எனக்கேயெனக்காய் பேசுமோ என்ற
எதிர்பார்ப்பும் சேர _
சிறகடித்துக்கொண்டிருக்கும் பறவையின்
ஆகாயமோ
விரிந்துகொண்டே போகிறது.
ஒருபோது சற்றே யப் பறவை தாழப்பறந்துவர
பேரதிர்வில் மனம் பிளக்க
’பச்’சென்று எச்சமிட்டுச் சென்றது பறவை
உச்சிமண்டையில்.
பச் எச் உச் மட்டுமே நிச்சயமான
மிச்சமாக….
அலகில் குச்சிபொறுக்கிச்செல்லக்கூடக்
கீழிறங்கிவராப் பறவையின் இறக்கைகளை
உடைமைகொள்ளும் வழி தெரியாமல்
அழப்பழகும் மனதிற்கு
சிறகிலாப் பறவையை ஒருநாளும்
பார்க்கப் பிடிப்பதில்லை.

Wednesday, June 17, 2026

- குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! -

 குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! -

- லதா ராமகிருஷ்ணன் -

13 ஜூன் 2026 தேதியிட்டபதிவுகள் இணைய இதழில் வெளியாகி யுள்ள கட்டுரை//



//ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை என்று உளவியலாளர்கள், உளவியல் மருத்து வர்கள், கல்வியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்த பட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர் களால் நடத்தப்படுவது அவர்களிடம் என்னென்ன அக – புற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.
ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடக வியலாளர் கள், எழுத்தாளர்கள் என பலர் முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக் கிறார்கள்; எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.....//








மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் - அத்தியாயம் – 9

 மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் -

அத்தியாயம் – 9

/ மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம்/

இவ்வார திண்ணை இணைய இதழில்

http://puthu.thinnai.com/.../%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf.../

//அவரவர் ரசனைகளுக்கு ஏற்பவும் நம்பிக்கைகளுக்கு ஏற்பவும் ஒருவரின் கண்ணோட்டத்தில் நிலவும் இத்தகைய எல்லா வேறுபாடுகளின் காரணமாக ஒரு குறிப்பிட்ட வகையில் ரசனைகளும் நம்பிக்கைகளும் கொண்ட மனிதர் வேறுவகை ரசனைகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருக்கும் மனிதக் குழுவில் ஒரு அந்நியனாகவே பாவிக்கப்படுவார்; அவ்விதமே உணர்வார். அதுவே இன்னொரு வகையான குழுவில் அவர் முற்ற முழுக்க இயல்பான மனிதப்பிறவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விடுவார்.//

காலம், கனவு மற்றும் கிலோமீட்டர்கள் -’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 காலம், கனவு மற்றும்

கிலோமீட்டர்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



கணக்கற்ற காததூரங்களைத் தனக்குள்
குவித்துவைத்திருக்கிறது
காலம்.
ஒவ்வொரு நொடிக்கும் ஒரு ஒளியாண்டு.
முந்நூறைம்பது நாட்களை மைல்களாக
நீட்டிப்போட்டால்
மறுமுனை
அண்ட்டார்ட்டிக்காவைத் தாண்டி…
அந்த நிலாவைத் தாண்டி…
இமயமலையின் உச்சிமுனைத் தொலைவு _
இனி இல்லையாகிவிட்ட அந்த
இரண்டுமணிநேரங்கள்….
புலியின் வாலில் தொங்கிக்கொண்டிருக்கும்
அந்த உயிரின் அலைச்சல்
எத்தனைக் கடலாழங்கள்?
விடை கிடைக்காத கேள்விகளின்
பாரங்களை விரித்துப்போட்டால்
உலகத்துப் பாலைகளையெல்லாம் ஒரு சேரத்
தாண்டி நீளும்.
உலர்ந்தும் உருண்டோடிக்கொண்டிருக்கும்
கண்ணீரின் நீள அகலங்கள்
பாதாளவுலகின் பரப்பளவாய்.
உடல்களின் அருகாமைக்கும் உள்ளங்களின்
அருகாமைக்கும் இடையே
சமயங்களில்
வரவாகும் அகழிகளின் ஆழம்
அளக்கமாட்டாது.
கண்ணின் காலமும் நெஞ்சின் காலமும்
வெவ்வேறு தொலைவுகளின் அலைவரிசைகளில்.
கனவின் மார்க்க்த்திற்கு மார்க்கண்டேயப்
புள்ளினங்கள் வரைந்திருக்கும்
விண்ணிலான
அருவத்தடங்களின் நீள
அளவைகள்
நிலாவிலுள்ளன.
நம்மிடமுள்ளதெல்லாம் வெறும் கிலோமீட்டர்கள் மட்டுமே.

(’காலத்தின் சில ‘தோற்ற’நிலைகள்’ (2005) தொகுப்பிலிருந்து)