LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 23, 2026

எழுத்தாளர்களும் EMPATHYயும்! - லதா ராமகிருஷ்ணன் (பொருளாளர், WELFARE FOUNDATION OF THE BLIND)

 எழுத்தாளர்களும் EMPATHYயும்!

- லதா ராமகிருஷ்ணன்
(பொருளாளர்,
WELFARE FOUNDATION OF THE BLIND)

22 ஜூன் 2026 (*பதிவுகள் இணைய இதழில் வெளியாகி யிருக்கும் கட்டுரையிலிருந்து சில பத்திகள்.

முழுக்கட்டுரையையும் வாசிக்க



..........................................................................................................................................................
மற்றவர்களை விட எழுத்தாளர்களிடம் சகமனிதநேயம் அதிகம் இருக்கும் என்று நம்புவதும், அதிகம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும்கூட ‘அன்றாடத்தி லிருந்து அதீதம்’ தானோ – தெரியவில்லை. ஆனால், பாழாய்ப்போன மனது அப்படியே எதிர்பார்க்க, நம்ப பழகிவிட்டது. ஒவ்வொரு முறை அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்க்கும்போதும் நிறையவே வலிக்கிறது.
மேகங்களின் குரல் – அன்றாடத்திலிருந்து அதீதம் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆனந்தவிகட னில் எழுத ஆரம்பித்திருக்கும் தொடரை இன்னொரு வருக்கு வாராவாரம் படித்துக்காட்டிக்கொண்டிருக் கிறேன். இந்த வாரம் 10.06.2026 தேதியிட்ட விகடனில் தொடரின் 4வது அத்தியாயம் இடம்பெறு கிறது.
மருந்துகளை நம்பாமல் ‘ஹீலர்’ போன்றவர்களை நாடிச் செல்வது எத்தனை அபத்தம் எனத் தொடங்கி ‘டன்னிங்-க்ரூகர் விளைவு என்றால் என்ன என்று எடுத்துச் சொல்லி, ‘ஒன்றைப் பற்றி எந்த அளவுக்கு நமக்குக் குறைவாகத் தெரியுமோ அந்த அளவுக்கு அதைப் பற்றிய உறுதியான நம்பிக்கை நமக்கு உருவாகிறது’ என்று அடிக்கோடிட்டுச்சொல்லி, ‘மதம் உருவாக்கும் மூட நம்பிக்கைகள், அதேபோல் பகுத்தறிவாளர்களுக்கும் முற்போக் காளர்களுக்கும் அவர்களின் கொள்கைகள் சார்ந்தும் தலைவர் கள் சார்ந்தும் இதே அளவுக்கு மூர்க்கமான மூடநம்பிக்கை இருப்ப தைக் காணலாம்’ என்று கூறும் வரை கட்டுரை தர்க்கபூர்வமான தாக, நேர்மறையாக இருக்கிறது. ஆனால், ‘'//எந்த அளவுக்கு ஒன்று தெரியாமலிருக்கிறதோ அந்த அளவுக்கு நம்பிக்கை உறுதியாக இருக்கிறது. அறி யாமை அளிக்கும் தன்னம்பிக்கை என்று இதைச் சொல்லலாம்’ என்று கூறும் எழுத்தாளர் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் குறித்து எழுதியுள்ளவை கட்டுரையில் அதுவரை அவர் பிறரிடத் தில் உள்ள அறியாமை குறித்து அவர் சுட்டிக்காட்டியிருக்கும் குறைகள் அனைத்தையும் அவருக்கும் உரித்தாக்குகின்றன.

முதலில் கட உபநிடதத்திலிருந்து அவர் எடுத்துச் சொல்லியிருக் கும் பார்வைக் குறைபாடுடையவர்கள் குறித்த உவமையே தேவையற்றது. இந்துமதம் என்றில்லை – எல்லா மதங்களிலுமே , அவற்றின்பாற் பட்ட எல்லா சமூகங்களிலுமே உடற்குறைபாடு என்பது பாவ-புண்ணியங்களோடு தொடர்புடையதாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நாம் வெகுதூரம் வந்தா யிற்று. எத்தகைய புனிதப்பிரதியானாலும் சரி, நல்லதை எடுத்துக் கொண்டு வேண்டாததைக் கடந்து போவதுதான் விவேகம். கட உபநிடதத்திலிருந்து மேற்கோள் காட்டவேண்டிய தேவையென்ன?

இன்றுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல், சமூகரீதி யான சமத்துவம் எட்டாக்கனியாகவே உள்ளது. அதில், இது போன்ற கருத்துகள் – எனக்கு பார்க்குந் திறன் இருப்பதால் நான் மேலானவன் என்ற ‘பாவம்’ அறியாமையில் விளைந்ததே. இன்று மூக்குக்கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லோருமே கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கண்புரை போன்ற கண்சார் குறைபாடுகளுக்கான சிகிச்சையும், மூக்குக்கண்ணாடி போன்ற வையும் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால் பார்க்குந்ந்திறன் குறைந்தவர்கள்தானே.
இன்று பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கணினி யைத் திறம்படக் கையாள்கிறார்கள். இலக்கியம் படைக்கிறார் கள். ஆசிரியர் தொழிலில் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல்- சமூகஞ்சார் சமத்துவம் இன்றுவரை கிடைக்காத நிலை. சட்டசபையிலோ, பாரளுமன்றத் திலோ அவர்களுக்கான பிரதி நிதித்துவம் அறவேயில்லாத நிலை இதில், லட்சக்கணக் கானோர் படிப்பதாகக் கூறப்படும் ஆனந்த விகடன் போன்ற வெகுமக்கள் இதழில் இப்படிப்பட்ட கருத்துகள் இடம்பெறுவது பார்வையற்றோர் குறித்த எத்தனை எதிர்மறை யான பார்வையை, அணுகுமுறையை ஏற்படுத்தும் என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் பேசும் பகுதி என்று எந்த அச்சு – மின் இதழ்களிலும் தொடர்ந்த ரீதியில் ஒதுக்கப்படுவ தில்லை. எதுவுமே பேசாமல் கடந்துபோய்விடுவதைவிடக் கொடுமை இப்படி எதிர்மறையான கருத்துகளை போகிற போக்கில் பரப்புவது.
நான் சார்ந்திருக்கும் பார்வையற்றோருக்கான நன்நல அமைப் பான WELFARE FOUNDATION OF THE BLIND இன் முத்திரை வாசகம்:
WE NEED EMPATHY; NOT SYMPATHY.


(*முழுக்கட்டுரையையும் வாசிக்க -

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் (THE CONQUEST OF HAPPINESS) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்) பாகம் – 1 அத்தியாயம் – 9

 மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்

(THE CONQUEST OF HAPPINESS)
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
(தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)


பாகம் – 1
அத்தியாயம் – 9
மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம்
//*கட்டுரையிலிருந்து சில பத்திகள்கீழே தரப்பட்டுள்ளன.
திண்ணை இணைய இதழில் முழுக் கட்டுரையையும் வாசிக்க -


//எனவே, எங்கெல்லாம் சாத்தியமாகுமோ அங்கெல்லாம் தங்களு டைய சமூகக் குழுவோடு இணக்கமற்றி ருக்கும் இளைஞர்கள் தாம் எந்தத் தொழிலைச் செய்வது, எந்தப் பணியில் அமர்வது என்பது குறித்து கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் வருவாய் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை – பணியிடங் களில், பார்க்கும் தொழிலில் இணக்கமான நட்புறவு கிடைக்க வழியிருக்கும் துறைகளையே அவர்கள் தமது வாழ்க்கைத்தொழி லாக, வாழ்வாதார வழியாக தேர்ந் தெடுத்துக்கொள்ள வேண்டும். இது சாத்தியம் என்ப தையே அவர்கள் பல நேரங்களில் உணர்வ தில்லை. உலகம் பற்றிய அவர்களுடைய அறிவு மிகவும் தங்க ளுக்கு உலகம் பற்றி அவர்களுடைய அறிவு மிகவும் குறுகியதா கவே இருக்கிறது என்பதால் தங்களுடைய நிலத்தில், சூழலில் தங்களுக்கு பழக்கமாகிவிட்ட பாரபட்சப் பார்வைகள் உலக மெங்கும் இருக்கின்றன என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் வயதில் பெரியவர்கள் இளையவர்களுக்கு எத்த னையோ உதவி செய்ய முடியும். ஏனென்றால், இதற்கு மனித இனம் சார் கணிசமான அனுபவம் கட்டாயத் தேவையாகிறது.//
முழுமையாக வாசிக்க:



குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! -

 குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! -

- லதா ராமகிருஷ்ணன் -

(*பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)


முழுக்கட்டுரையையும் வாசிக்க

//ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை என்று உளவிய லாளர்கள், உளவியல் மருத்து வர்கள், கல்வியாளர்கள் கூறு கிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்த பட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர் களால் நடத்தப் படுவது அவர்களிடம் என்னென்ன அக – புற பாதிப்பு களை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக்கின்றன.

ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர் கள், எழுத்தாளர்கள் என பலர் 'முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களு டைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக் கிறார்கள்; எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.

//ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தையின் வாழ்வில் நேர்வன அதன் வாழ்வில் காலத்திற்கும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை என்று உளவிய லாளர்கள், உளவியல் மருத்து வர்கள், கல்வியாளர்கள் கூறு கிறார்கள். குழந்தைகள் வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் குறைந்த பட்ச மரியாதை யில்லாமல், புரிதலில்லாமல் பெரியவர்களால் நடத்தப் படுவது அவர்களிடம் என்னென்ன அக – புற பாதிப்பு களை ஏற்படுத்துகிறது என்பது பற்றி பல ஆய்வுகள் விரிவாக எடுத்துரைக் கின்றன.

ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர் கள், எழுத்தாளர்கள் என பலர் 'முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களு டைய குழந்தைகளை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக் கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று சமூக ஊடகங்கள் நிறைய இருப்பதால் குழந்தைகள் மீதான சுரண் டல்கள், பெரியவர்கள் சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் சிறார்களை அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ பயன்படுத்திக்கொள்வது எல்லாம் உடனுக்குடன் வெளியே தெரிந்துவிடுகின்றன. அதனால், நாற்பது-ஐம்பது வருடங்களுக்கு முன் குழந்தைகள் மீதான இத்தகைய சுரண்டல்கள் அறவே யில்லையென்றோ, அதிகம் இல்லையென்றோ சொல்லிவிட இயலாது.
ஆனால், நிறைய பேர், நுண்ணுணர்வு வாய்ந்த ஊடகவியலாளர் கள், எழுத்தாளர்கள் என சிலபலர் முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை களை அடித்து சரிசெய்யும் சுதந்திரத்தை ஆசிரியர் களுக்கு வழங்கியிருந்ததாகவும், அதனால் பிள்ளைகள் ஒழுங்காக வளர்ந்ததாகவும் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, எழுத்தாளர் வண்ணநிலவன் என சில பெயர்களைக் குறிப்பிடலாம். துக்ளக் இதழ் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ‘பள்ளிக ளில் மாணாக்கர்கள் அடித்துக் கண்டிக்கப்படவேண்டி யவர்கள் என்று வலியுறுத்துவதைத் தனது சமூகக் கடமைகளில் ஒன்றாகச் செய்துவருகிறது
சமீபத்திய துக்ளக் இதழில் எஸ்.ஜே.இதயா என்பவர் ‘குற்றங் களைக் குறைக்குமா சிங்கப்படை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலும் இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார். மேலே அந்தப் பத்தி தரப்பட்டுள்ளது:

இன்று குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் மாணவர் களுக்கு ஆசிரியர்கள் நல்லொழுக்கம் போதித்துவந்ததை நிறுத்திவிட்டதுதான் என்று அவர் சொல்வதையாவது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடுத்தாற்போல் அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்:
‘பெற்றோரும் கண்ணை மட்டும் விட்டுட்டு எப்படி வேண்டு மானாலும் அடிங்க’ என்று ஆசிரியர்களிடம் தங்கள் பிள்ளைகளை ஒப்படைப்பார்கள்’
இது என்ன விதமான சமூகவுணர்வு? ‘இதை அப்படியே அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்பவர்களைப் பார்த்து நான் கேட்கும் கேள்வி இதுதான்: ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? ஆசிரியர்களும் பெற்றோர்கள் என்ற அளவில் பெரியவர்கள் ‘தோலுரிக்க’ப் பிறந்தவர்கள் தான் குழந்தைகள்? இது என்ன காட்டுமிராண்டித்தன மான கண்ணோட் டம்; அணுகுமுறை?
அடித்துதுவைப்பதால் குழந்தைகள் நல்லொழுக்கங்க ளைக் கற்றுக் கொண்டுவிட மாட்டார்கள். ஏற்கெனவே குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லை என்பதால் அவர்களுடைய நலன்கள் சமுக்க-அரசியல் ரீதியாய் புறக்கணிக்கப்படும் நிலையே பெருமளவு நிலவுகிறது. இதில் சமூகப் பிரக்ஞை- மனிதநேயம் தூக்கலாக இருப்பவர்களாகத் தங்களைக் காண்பித்துக் கொள்ளும் பத்திரிகைகளும், ஊடகவியலாளர்களும் இப்படிப் பேசிக் கொண்டிருந்தால் எப்படி? இதுதான் உண்மையில் அதி ஆபாச மான பேச்சு; ஆதிக்க மனப்பான்மை.
முழுக் கட்டுரையையும் வாசிக்க: