LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 2, 2015

கவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் _. ‘ரிஷி

கவிதை
1.  வெந்து தணியும் காடு….
ரிஷி



துண்டுப்பெண்ணொருத்தியிடம் இவளது அந்தரங்கத்தை
 யவர்கள் விண்டுவைத்துக்கொண்டிருக்கும் நேரம்
ஒருவேளை கள்ளச்சிரிப்புடன் கண்ணடித்துக்கொண்டிருக்கக்கூடும்;
வியூகம் அமைத்து வென்று சூடிய வாகைகளைக்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கக்கூடும்….

ன்றேனும் அறிவார்களோ _
கூண்டுக்குள் வசிக்கப் பழகிவிடும் கிளி யல்ல இவள்;
அரசனருகில் அப்பாவியாய் ஆரோகணித்திருக்கும் அன்னமும் அல்ல.
கழுகின் கூர்விரிவைக் கைக்குள் பிரபஞ்சமாக்கி
விட்டு விடுதலையாகிநிற்கும் சிட்டுக்குருவி!

ருந்தும் சக்ரவர்த்தியின் திருத்தோள்களைக் கூடாகத் தரித்திருந்ததெல்லாம்
அவர் அருமை பெருமை அறிந்ததாலேயே.

ரசவையோ, பரிவாரமோ பரிசில்களோ ஒரு பொருட்டில்லை யென்றுமே.
ஆன்மாவின் அடியாழத்தைத் தீண்டுமவர் ஆலோலங் கேட்கவே
தத்தித்தத்தி நடைபழகிவந்த திக் குருவி யவர் காலடியில்.

தானியம் கேட்டதில்லை, மானியம் கேட்டதில்லை
ஆனமட்டும் அன்பையே இறகுசிலிர்த்துத் தூவிக்கொண்டிருந்தது
வானமுதாய்!

மேவுங்காலத்தே தன் குட்டிமூக்கா லவர் நிழலை நீவித்தருவதையே
தன் நல்வினைப்பயனாய் எண்ணியிருந்தது….

ன்குரலால் என்னவெல்லாம் பாட்டிசைத்தது இப்பூங்குருவி!
கேட்டிருப்பார்தானே மாமன்னரும்……..

தோ
பொசுங்கிக்கொண்டிருக்கின்றன இதன் இறக்கைகள்.
பொந்தில் யார் வைத்தாலும்
நெருப்பு நெருப்பு தான்……

ணவலியினூடாய் விர்ரென்று உயரப் பறக்கும் எத்தனத்தில்
சிட்டுக்குருவியின் விசுவரூபம் வெளிப்படும்!

றக்கத் தெரியும் இதற்கு; பறக்க முடியும் எப்போதும்.
அதுபோதும்.
குருவியின் விரிசிறகுத் தடங்கள் பரவும் ’வெளி’யெங்கும் இனி _

மேலும்.

ழிந்துவரும் இனம் எனவும் அவர்கள் பழிக்கக்கூடும்….

ரிணாம வளர்ச்சியில் அது ஃபீனிக்ஸ் பறவையுமாகிவிட்டதை
யின்னும் அறிந்திலர் போலும்……



2. கனலும் சாம்பல்

தொழில்முறைக் கொலைஞர்கள் எல்லாம் உங்கள் செயல்நேர்த்தியின் முன்
வெறும் கத்துக்குட்டிகள் என்றாகுமாறு எப்படி
இத்தனை துல்லியமாய் ஒற்றைச் சொடுக்கில்
உயிர்நாடியை எளிதாய்
இற்று நைந்த கயிறாய்ப் பிய்த்தெறிந்துவிட முடிகிறது உங்களால்…..?

சித்திரம் மட்டுமா கைப்பழக்கம்…..

ன்னமும் துடித்துக்கொண்டிருக்கும் குற்றுயிரை
அடுத்தவீட்டுச் சிறுமியின் கையில் கொடுத்து
அரைரூபாய்க்கு விற்று ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிடச்சொல்லி
அனுப்பிவைக்கிறீர்கள் அத்தனை இயல்பாய்.

ருமானமல்ல, வீறிட்டுக் கேட்கும் வலியோலம் அளிக்கின்ற
பரவசமே சிலருக்குப் பிரதானமாய்.

மோதிப்பதாய் விரியும் சின்ன முறுவலோடு
அப்பால் செல்கிறீர்கள்.

ண்டிப்பாக பத்தோடு பதினொன்றல்ல
உங்கள் வித்தகம்.
தன்னிகரில்லா நிபுணத்துவம்.

ன்னவொன்று,
அதற்கான முன் தயாரிப்புகள்
அரதப்பழசாகிவருகிறது.

ங்கள் பட்டறை முகப்பில் மாட்டிவைக்கப்
பரிசளிக்கிறேன் இந்தப் பெயர்ப்பலகையை:

”மறுபிறவியாகுமாம் மரணம்.








Ø       

Wednesday, July 1, 2015

குகை என்பது ஓர் உணர்வுநிலை - கவிதை

 குகை என்பது ஓர் உணர்வுநிலை
அன்பின் பெயரால்...
ரிஷியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு


 புதுப்புனல் வெளியீடு







1)


காற்றாடிகளாக முடியாத காகிதத் துண்டு
துணுக்குகள் என்றாலும்
சொடுக்கியிழுக்கும் கைகளின் பிடியில்
சிக்காத பூரணத்துவம் கொண்டவை.
தலைக்கு மேலே சுற்றிச் சுழன்று
தரையிறங்கிக் கொண்டிருந்தன.
விழுந்த இடம் பொசுங்க
எழுந்த பிணவாடை
உனக்கு துர்நாற்றமென்றால்
எனக்கு சுகந்தம்.
அகராதியிலடங்காது இந்த மாற்றம்;
இரண்டறக் கலந்திருக்கும் இருட்குகையில்.


2)


குகைவாயிலில் தினமும் மாலை
பீறிட்டுயரும் ஊற்றைப் பார்ப்பதில்
வரவாகும்
நீர்த்துப் போகாத பரவசம்.
அன்றும் பார்த்துக் கொண்டிருந்தபோது
செங்குத்தாய் உயர்ந்து விரிந்து
பரவியது
செந்நிறத் தண்ணீர்.
வண்ண விளக்கைத் தேடிய கண்களுக்குத்
தட்டுப்பட்டது
வெட்டுண்ட மனமொன்று.
கிளம்பியது குருதியென்று விளங்கியதில்
கலங்கி
வாலைச் சுருட்டிக் கொண்டு குகைக்குள்
ஒடுங்கிக் கொண்டது காட்டுவிலங்கு
.

3)

தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது
தன்னைத் தானே.
கண்ணில் ததும்பிக் கண்ட வலியைக் கண்டு
வேடிக்கையாக இருந்தது.
காக்கைக் கொண்டாட்டமல்ல.
'உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை'.
வலியும், இழப்பும், அவமானமும்
கையறுநிலையும் கூட
கடவுள் தான்.
குகையிருளில் பலவீனமாய் படுத்துக் கிடக்கும்
பெண்புலியின்
புண்பட்ட மென்மார்பை ரணப்படுத்துவதாய்
வீசியெறியப்படும்
எலும்புத் துண்டத்தால் எப்படி வயிறு நிறையும்?
தன்னையுந்திக் கொண்டு எழுந்து புறப்பட்டால்
தானே கிடைக்கும் பொழுதும் இரையும்.

4)


கண்களை இடுக்கிக் கொண்டு காத்து நின்றாள்
பார்த்த விழி பூத்து.
பூப்பெய்திய நாள் நினைவுக்கு வரவில்லை.
பசிக்கிறது என்றால் அதைக் கொச்சையாகப்
பொருள்பெயர்த்து
பெருங்குரலெடுத்துச் சிரிக்கத் தயாராய்
நாலாயிரம் பேர்.
ஊர் மறந்துவிட்டது.
நசநசவென்று பெய்யத் தொடங்கிவிட்டது
மழைமனம்.
வசவுச் சொற்களின் நிண ருசியை
வாய்க்குள் உணர்ந்தவளாய் மீண்டும் குகைக்குள் நுழைந்தவாறே
முனகிக் கொண்டாள் மூதாட்டி:
காசு தராமலே கிடைப்பாள் என்றாலும்
கிழப்பரத்தையைப் புறக்கணித்தல் தானே
குடும்பத்தலைவர்களுக்கு அழகு...



5)


வெளியுலகின் இடையூறின்றி வேண்டுமட்டும் கூடிக்களிக்க
இந்தக் குகையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பெண்புலி.
பூனையாகி புதைந்து கொண்டது
அடுத்துப் படுத்துக் கிடந்த இணையின் அடிவயிற்றில். கண்துஞ்சிய நேரம் போக மீதி காலமெல்லாம்
நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது நேசமிகுதியில்.
ஆடாமல் அசையாமல் படுத்தவாறே
பங்கெடுத்துக் கொண்டிருந்த இணையின் மனதில்
நிலைகொண்டிருக்கக் கூடும்
அடுத்த வேளைக்கான இரையின் நினைவு.
சிந்தாநதியொன்று குகையின் அடியில் சீராக
ஓடிக் கொண்டிருந்தது.
பார்த்ததில்லை என்றாலும் அதன் ஒலிகேட்டுத்
தண்ணெனக் கனியும் பெண்மனம்.
குகைப்பாறையின் திண்மையைக் கொண்டாடுவதாய்
மறுபடி மறுபடி முகர்ந்து பார்க்கும்.
வினைமுடித்ததாய் வெளியேறி மறையும் இணையின்
தளதளவென்று பொலியும் வாலைப் பார்த்து
களிப்பு பெருகும்.
'பாவம், எவ்வளவு தொலைவு செல்ல வேண்டுமோ' என்று
தனக்குள் கேட்டுக் கொள்ளும்,
விசனமும், கரிசனமுமாய்.
திரும்பி வரும்போதெல்லாம் விருந்துண்ட கிறக்கமாய்
நாவைச் சுழற்றி மிச்ச ருசியை அசைபோட்டவாறிருக்கும்
இணையின் தரிசனத்தில்,
ஒரு துண்டு இறைச்சியும் தனக்குத் தரப்படவில்லை என்ற
நிதர்சனம் ஓரங்கட்டப்படும்.
திரும்பாமலே போகும் நாட்களில்
திரும்பாமலே போயிற்று ஒருநாள்.
இரண்டு மூன்று நான்காய் உருண்டோடிய பொழுதுகளில்
சுருண்டு கிடந்தது பெண்புலி, குகையின் ஒரு மூலையில்.
இதுநாள்வரை இருளிலேயே ஆனந்தமாய்க் கண்மூடி
மல்லாந்து கிடந்ததில்
கடந்துபோய்விட்ட காலத்தின் நீள்பரப்பு
சுருக்கென்று தைக்கிறது பிரக்ஞையில்.
சற்றே திரும்பிப் படுத்தபோது
பக்கவாட்டில் புதரொன்று முட்களோடு வளர்ந்திருப்பது
புரிந்தது.
அதிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் சீறலொலி
பிரமையாக இருக்கலாம், அல்லது,
பாம்பினுடையதாக இருக்கலாம்.
பலவீனம் மனம் உடலாக
மெதுவே எழுந்து நின்றது.
தலை படீரென்று இடித்தபோது தான்
குகையின் மேற்புறம் சரிந்திருப்பது தெரிந்தது.
மூச்சடைத்தது.
முன்னோக்கி எடுத்து வைத்த கால் பதிந்த இடம்
ஒரு பெரும்பள்ளத்தில் புதைய
பின்னுக்கிழுத்த வேகத்தில்
முதுகு சாய்ந்த இடத்திலிருந்த பாறை பெயர்ந்து
மோதித் தள்ளியது.
முன்மண்டையும், மூக்கும் நசுங்கி
குருதி பெருகத் தொடங்க
எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்ற
விருப்பு ஒரு வன்மமாக
மீண்டும் புலியாகி
ஒரே பாய்ச்சலில் வெளியேறிக் கொண்டிருக்கும்
பெண்புலியின் உடலெங்கும் படரும்
தண்காற்று
இன்னொரு வாழ்வாய்.

‘பாரதி’யைப் பார்க்கவேண்டும்போல்…….சிறுகதை ------

சிறுகதை

‘பாரதி’யைப் பார்க்கவேண்டும்போல்…….
‘அநாமிகா’
{* ஜூன் 22, 2015 பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது.}



”டியர் மிஸ். சுதா – பாரதி பாடல்கள் சிலவற்றைக் குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதவேண்டியிருக்கிறது. அருங்காட்சியக இயக்குநருக்கு இத்துடன் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். அவர்களிடத்தில் பாரதி பாடல்களின் மூலப்பிரதிகள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அவருடைய தனிப்பாடல்கள் சிலவற்றை அவர் கையெழுத்தில் உள்ளது உள்ளபடி ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்தனுப்பி உதவ முடியுமா? சிரமத்திற்கு மன்னிக்கவும்.”

_நேர்மையான எழுத்தாளர் என்று, எழுத்தின் மூலம் அறிந்து, முதியவரா கவும்,  விழித்திறன் குறைந்துகொண்டே வரும் நிலையில் இருப்பவராகவும் உள்ளதை அறிந்து, என்னாலான எழுத்துதவி செய்வதாய் அறிமுகமாகி, பரிச்சய நிலையைக் கடந்த பிறகும் உதவியை அதிகாரமாகக் கேட்கும் உரிமையெடுத்துக் கொள்ளாத உயரிய பண்பு; எத்தனை நெருங்கியவராயிருந்தாலும்  ‘take it for granted’ ‘ஆக நடத்தாமலிருக்கும் பெருந்தன்மை எத்தனை பேரிடம் இருக்கிறது? விரல் விட்டு எண்ணிவிடலாம்… அந்தப் பெரிய மனிதரிடம் இருந்தது. உண்மையிலேயே பெரிய மனிதர்தான் நான்கு மாடிகள் மரப்படிகளில் கால்கடுக்க ஏறி, கடிதத்தைக் காட்டி, அனுமதி பெற்று, பாரதியின் கவிதைகளடங்கிய நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்த்து, தேவைப்பட்ட கவிதைகளைச் சுட்டிக்காட்டி, ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்துத் தரச் சொல்லி, அவற்றை வாங்கிக்கொண்டுவந்த கையோடு தபாலில் பத்திரமாக அனுப்பிவைத்து…. 

தவறாமல் நன்றிக்கடிதம் வந்தது. குட்டிக் குட்டி எறும்புகள் வரிசை தவறாமல் சீராகச் செல்வதைப் போன்று அடித்தல் திருத்தல் அற்ற கையெழுத்து! ஆனால், சென்னை வந்த சமயம் அந்த மூலப்பிரதிகளைத் தானும் பார்க்கவேண்டு மென முதுமை மூச்சுவாங்கச் செய்ய, ஆமைவேகத்தில் நகரும் உடம்போடு அந்த மனிதர் என்னுடன் கைத்தடியோடு கிளம்பியபோது எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது.

 ‘எத்தனை நம்பிக்கையின்மை…. நான் சரியாகப் பிரதியெடுத்திருப்பேனா, தேர்ந்தெடுத் திருப்பேனா என்ற சந்தேகம்… செ, எத்தனை உண்மையாய் அலுவலகத்திற்கு ‘லீவு’ போட்டு வேகாத வெய்யிலில் போய் பிரதி கிடைப்பதற்கான முயற்சிகளை மேற் கொண்டேன். எனக்கு இந்த அவமானம் தேவைதானா…?’

ஆட்டோவில் அவருக்கே இயல்பாக உள்ள பண்போடு, உரிய இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டவராய், வழக்கம்போல் நலம் விசாரித்துக்கொண்டே வந்தார். குரலே பரிவாய், பரிவே குரலாய் பொருந்திய தொனி மனதை எப்பொழுதும்போலவே நெகிழச் செய்தது. ‘தலைமுறை இடைவெளி’ என்பது ஒரு myth என்று அவரோடு பேசும் போதெல்லாம் தோன்றும். ஆறே வயது பெரியவளான சக ஊழியைக்கு தயிர் வடையை எப்படி விதம்விதமாகச் செய்வது (முக்கோண வடிவில், செவ்வக வடிவில், ஏன், அணுகுண்டு வடிவில் கூட!) என்று விலாவாரியாக நீட்டி முழக்கி போதிப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது. உறவுக்கார மேன்மக்கள் ஏராளமானோர்க்கு அத்தா னுடைய மச்சானுடைய சகலையின் சித்தி பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்ததுதான் அகில உலக சதாசர்வகாலத் தலைப்புச் செய்தி….. தலைமுறை இடைவெளி என்ற பொதுத்தலைப்பின் கீழ் எல்லாவற் றையும் பகுத்துவிட முடியுமா என்ன…?’  - எப்போதும்போல் மனதில் பலவாறாய்க் கிளர்ந் தெழுந்த சிந்தனையோட் டத்தையும் மீறி உள்ளுக்குள் கனன்ற கோபத்தையும்,கசப்பையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், கொஞ்சமும் மரியாதை குறையாமல் பதிலளித்துக் கொண்டிருந்தேன்.

மாடிப்படியில் ஏற முடியாமல் மூச்சு வாங்க ஏறியவரைப் பார்த்து மனதிற்குள் கோபம் மறைந்து வருத்தமே எஞ்சியது.

‘என்னை ஏன் நம்பவில்லை….? இவருடைய எழுத்தின் மீது, மனிதம் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறேன் நான்…. சொன்னபடிக்கு சரியாய் பிரதியெடுத்திருக்க மாட்டேன் என்று இந்த மனிதருக்கு எதனால் சந்தேகம் வரப்போயிற்று…? மனதின் புலம்பல் கண்ணுக்குள் வலித்தது…..

“இதுதான் சார் இயக்குனர் அறை.”

அனுமதி பெற்று உள்ளே நுழைந்ததும், “வாங்க சார்!” என்று எழுந்துநின்று வரவேற்றார் இயக்குநர். “மெட்டீரியல்ஸ் கேட்டிருந்தீங்களே, கிடைச்சுதா?”

”ஓ! இவங்க எல்லாத்தையும் பிரதியெடுத்து அனுப்பிச்சிருந்தாங்க. ரொம்ப நன்றி. அந்த மூலப் பிரதிகளை நான் கொஞ்சம் பார்க்க வேண்டும். தயவு செய்து தர முடியுமா?”

“தாராளமா! நோட்டுப்புத்தகத்தில்தான் எழுதியிருக்கிறார் பாரதியார். இதோ கொண்டுவரேன். தேவையான பிரதிகளை எடுக்கவில்லையா?”

_ கேட்டுக்கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் உள்ளறைக்குச் சென்றார் இயக்குனர். எனக்குள் அவமானமும்,துக்கமும் கவிந்தது.

“இதோ, இந்தாங்க சார்.”

வயோதிகத்தில் தளர்ந்து மெலிந்திருந்த கைகள் மௌனமாய் ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டின.

“சரியாய்த்தானே சார் எடுத்தனுப்பியிருக்கிறேன்?” உள்ளடக்கிய அளவிலான ஒருவித கோபமும் கெஞ்சலும் கலந்த தொனியில் எழுந்த என் கேள்விக்கு மௌனமே பதில்.

அந்த மதிய நேரத்தில் சுற்றிலும் பளிங்கு நிசப்தம். நோட்டுப்புத்தகத் தாள்கள் புரட்டப்படும் ஓசை அறையெங்கும் ஓங்கரித்தது.

_”முத்து முத்தாய் எத்தனை அழகான கையெழுத்து! பார்த்தாயா சுதா!”

அந்தக் குரலில் ஒரு தழுதழுப்பு தளும்பி வழிந்தோடியது. பளிச்சென்று புதிர்முடிச்ச விழ்ந்ததாய் ‘அட! பாரதியின் கையெழுத்தை நேரில் தரிசிக்கத் தான் இந்த மனிதர் இத்தனைப் பிரயத்தனப்பட்டு இங்கே வந்திருக்கிறார்!’ என்பது புரிந்தது! அங்கே, அந்த வேளையில் கூடு விட்டு கூடு பாய்தல்போல் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது!

வெளியாளாய் நின்று வேடிக்கைப் பார்க்கத்தான் முடிந்தது அன்று….

ஆனால், அதன்பிறகு வந்த நாட்களில், உள்ளாளாகிவிட்ட நிலைபோல் ஒன்றில் மூச்சுத் திணறும் நேரமெல்லாம், மீண்டும் ‘மியூஸிய’த்திற்குச் செல்லவேண்டும்போல் தோன்றுகிறது….! பார்க்கவேண்டும் பாரதியின் முத்துமுத்தான கையெழுத்தை…..! அந்தக் கையெழுத்தைக் கொண்டு ‘கண்ணன் மனநிலையைக் கண்டுவரச் சொன்ன வனை…..! ‘ஆசை முகம் மறந்து போச்சே…..’ என்று ஆற்றாமையோடு அங்கலாய்த்த வனை…! ‘யாதுமாகி நின்றாய் காளீ! என்று கொண்டாடியவனை…! ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால், என் மூச்சை நிறுத்திவிடு!” என்று நெக்குருகிக் கேட்டவனை….!