கவிஞர் நகுலனைப் பற்றிய ஆவணப்படம்
https://www.youtube.com/watch?v=jcgsqOd1ZJY
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படம் எந்த வகையில் அவசியமாகிறது? முக்கியத்துவம் பெறுகிறது?
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தின் நோக்கமும் இலக்கும் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க வேண்டும்?
அப்படி திட்டவட்டமான முன்முடிவுகள் இருப்பது இயல்பா? இருக்கவேண்டியது அவசியமா?
ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தில் அவர் வாழ்க்கையைப் பற்றி அதிகம் பேசுவது சரியா? அவரு டைய படைப்பைப் பற்றி அதிகம் பேசவேண்டுமா? அல்லது இரண்டும் ஒன்றை யொன்று எப்படி supplement செய்கிறது, complement செய்கிறது என்பதற்கு சம அள வில் முக்கியத் துவம் தந்து உருவாக்கப் பட வேண்டுமா? ஒரு படைப்பாளியைப் பற்றிய ஆவணப்படத்தில் படைப்பாளி தன் வாழ்க்கை, படைப்பு சார்ந்து அதிகம் பேசவேண்டுமா? அல்லது அவரையறிந்த மற்றவர்கள் அவை குறித்து அதிகம் பேச வேண்டுமா?
சமீபத்தில் காணக்கிடைத்த ஆவணப்படங்கள் இரண்டு இவ்வாறான பல கேள்விகளை மனதில் கிளர்த்தின.
1. கவிஞர் நகுலனைப் பற்றிய ஆவணப்படம்
2. கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய ஆவணப்படம்
கீழே கவிஞர் வைதீஸ்வரன் பற்றிய ஆவணப்பட லிங்க் தரப்பட்டுள்ளது.
பார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்தால் அது படமெடுத்தவர்களுக்கு உற்சாகமளிப்பதாய் அமையும்.