LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, February 3, 2015

மாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில….

மாதொருபாகன் குறித்து
சொல்லத் தோன்றும் சில….
லதா ராமகிருஷ்ணன்
(ஜனவரி 2015பதிவு இணைய இதழில் வெளியாகியுள்ளது)



மாதொருபாகன் கதையைப் பதி விறக்கம் செய்து வாசித்தேன்.

எழுத்தாளரை ஒடுக்க நினைக்கும் போக் கிற்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

அதே சமயம், கதை குறித்த எதிர்மறைக் கருத்துகள் கட்டாயம் எழும் தான். ஊரைக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுதும் போது சம்பந்தப்பட்ட ஊர் மக்களுக்கு எழும் அக, புற பாதிப்புகளை நம் மால் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டு அதற்கேற்ப எழுத்தை வடிவமை த்துக் கொள்ள முடியாதா?

இல்லை, பெண் சிசுக் கொலை போல் இத்தகைய வழக்கம் இன்னமும் சில இடங்களில் குழந்தையில்லா தம்பதிகளின் உறவினர்களின் தொல் லையால் தொடருகிறதென்றால் அதை தைரியமாக எதிர்த்து எழுத வேண்டும். 

ஆசிரியருக்கு இந்த விஷயத்தை எழுதும்படியான தூண்டுதல் எழுந்தது எதனால் என்பது அவருக்குத் தான் தெரியும். பல்வேறு காரணங்களால் அவர் வெளியிடத் தயங்கும் ஏதோவொரு விஷயம் அவரை அலைக்கழித் திருக்கிறது என்று தோன்றுகிறது. 

கதை மேம்போக்காக, இந்துக்கடவுளர்களை மதிப்பழிப்பதற்காக எழுதப் பட்டதாகத் தெரியவில்லை. [பொன்னா திருவிழாவுக்குப் போகும் சமயம் நடக்கும் கூத்து நிகழ்வில் கோமாளியின் பேச்சில் கடவுளர்கள் கேலி செய்யப்படுகிறார்கள். என்றாலும்].

சொல்லப்போனால், மாதொருபாகன் என்ற கதைத் தலைப்பை ONE PART WOMAN என்று ஆங்கிலத்தில் கொச்சையாக [பரபரப்பிற்காகவா?] மொழி பெயர்த்திருப்பதுதான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரம் என்பதன் தமிழ்மொழிபெயர்ப்பான மாதொருபாகனை ஆண்மையும் பெண்மையும் சரிசம விகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா?   மொத்த மொழியாக் கம் எப்படியிருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும். 

உலகத் தரமான கதையைப் படித்து முடிக்கும்போது ஏற்படக்கூடிய catharsis உணர்வு இந்தக் கதையைப் படித்தபோது கிடைக்கவில்லை. 

நாலு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட போது இந்த எதிர்ப்பு எழ வில்லையே, இது ‘இந்துத்வா’ சதி என்பதெல்லாம் பிரச்னையை திசை திருப்பும் செயல். உண்மையான ஊரின் பெயரும், குறிப்பிட்ட சாதியின் பெயரும் கதையில் இடம்பெறுவது தான் உண்மையான பிரச்னை. இந்து நாளிதழுக்கும் இந்துமத எதிர்ப்பாளர்களுக்கும்  இந்தப் படைப்புக்கான உள்ளூர் எதிர்ப்பு தங்களுடைய மோடி அரசு எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்புக் கான தக்கதோர் வாய்ப்பாகியிருக்கிறது.

பெண் கணவனைத் தவிர வேறொருவரோடு படுக்கிறாள் என்பதை செரித்துக்கொள்ள முடியாத ஆணின் மேலாதிக்க மனப்பான்மையைத் தான் இந்த கதைக்கான எதிர்ப்பு காட்டு வதாக டெக்கான் க்ரானிக்கிளில் கவிஞர் சல்மா கூறியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இது ஒருவித clicheத்தனமான வாதம். இதே வாதத்தை மனைவி திருவிழாவுக்குப் போய்விட்டாள் என்ற விஷயம் தெரிந்ததும் கதாநாயகன் காளி பரிதவித் துப் போவதாகச் சித்தரிக்கும் ககதாசிரியர் மேலும் ஏற்றிவைக்க முடியும். 

கதை நாயகி பொன்னாவை வறடி என்னும்போது அவள் வலித்தழு கிறாள். ஆனால் அவள் ‘வெள்ளைச்சீலைக்காரி’ என்று சக-பெண்ணை ஆங்காரமாக ஏசுகிறாள். காளி யின் சித்தப்பா பாத்திரம் - காளியால் மதிக்கப்படுபவரும், கதாசிரி யரால் சமூகப் பொய்மைகளுக்கு எதிர் நிலையில் காண்பிக்கப் படுபவருமாகிய மனிதர் தான் கூட்டிக்கொண்டு வந்த வெள்ளைச் சீலைக்காரி தாலி கேட்கிறாள் என்பதை கேலி பேசி அவளைத் துரத்திவிட்டதாகக் காளியிடம் தெரிவிக்கிறார். 

அத்தனை அந்நியோன்யமான காளி-பொன்னா தம்பதி தாழ்த்தப்பட்டவர் களுடைய குழந்தையை தத்து எடுத்துக்கொள்வது குறித்து அவர்கள் சாதி வழக்கப்படியேதான் தயக்கங் காட்டுகிறார்கள். 

இது சரி, தவறு என்று ஆசிரியர் கூற்றாக எதுவுமே வருவதில்லை. கதை யில் ஆசிரியர் தன்னைத் துருத்திக்கொண்டு வெளிப்படுத்தக்கூடாது என் பது உண்மைதான். ஆனால், குழந்தையில்லாத பெண்ணைக் கேவலம் செய்யலாகாது என்பதைச் சொல்ல விழையும் ஆசிரியர் மற்ற தரப்பி னரையும் காயப்படுத்தலாகாது என்பதைக் கதாபாத்திரங்கள் மூலமா வது, அல்லது ஆசிரியர் கூற்றாகவாவது புலப்படுத்தியிருக்க வேண் டாமா? கதை சொல்லப்பட்ட விதம் யதார்த்தபாணி நடையில் தான் என்ப தால் வரியிடை வரிகளில் அது சொல்லப்பட்டிருக்க இடமில்லை.

’அந்த நாளில்’ எல்லோரும் சாமி என்று சொன்னாலும், அங்கே பெண் கிடைக்காதா என்று சுற்றுபவர்களும் உண்டு என்பதையும், பொன்னா வின் அண்ணனுமே அப்படிப் போனதுண்டு என்றும் கதை கூறுகிறது. அப்படியெனில், அந்த சடங்கின் அனர்த்தம், போலித்தனம் முழுமையாக எதிர்க்கப்பட வேண்டியது. ஆனால் ஆசிரியர் பொன்னா தனக்கான சாமி யைத் தேர்ந்தெடுத்துப் போவதாய் நயம்படக் கூறுகிறார். 

கதையில் நுட்பமாகச் சொல்லப்பட்ட இடமாக எனக்குப் புலப்படுவது, தனக்கான சாமியைத் தேடும் போக்கில் பொன்னா இளவயதில் தன் நேசத்திற்குரியவனாக இருந்தவனை நினைவு கூர்வதுதான்.

இன்று செய்தித்தாளில் சங்கரின் ‘ஐ’ படத்தில் திருநங்கைகளை இழிவு படுத்தியிருப்பதாக அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கி றார்கள் என்ற செய்தி படித்தேன். இது அவர்களின் உரிமைதானல்லவா? 

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் ஊனமுற்றவர்க ளும் விளிம்புநிலை மனிதர்களும் எப்படியெல்லாம் மதிப்பழிக்கப்படுகி றார்கள் என்று நாம் நன்கறிவோம்.வலியுணரா மனிதர்கள் செய்யும் அதே தவறை வலியுணரும் மனிதர்களும் செய்யலாமா என்ற கேள்வி எழுவ தைத் தவிர்க்க முடியவில்லை.

புத்தகக் கண்காட்சியில் சிற்றரங்கக் கூட்டத்தில் இந்தக் கதை குறித்த தனது எதிர்க்கருத்தை முன்வைத்தமைக்காக எழுத்தாளர் சாருநிவேதி தாவைத் தாக்கத் தயாராய் சில பேர் வந்ததும், அவரைக் கருத்துரைக்க விடாமல் தடுத்ததும் கண்டனத்திற்குரியது.



மாதொருபாகனை முன்வைத்து
மேலும் சில கருத்துப்பகிர்வுகள்
_ லதா ராமகிருஷ்ணன்

  ஒரு எழுத்தாளர் ஏன் இந்தக் கதைக்கருவைத் தெரிவு செய்து கொண்டார், ஏன் அந்தக் கதைக் கருவைத் தெரிவு செய்து கொள்ள வில்லை; ஏன் இந்தக் கதைக் கருவை இப்படிக் கையாளவி ல்லை, ஏன் அந்தக் கதைக் கருவை அப்படிக் கையாண் டார் என்று கேட்பதெல்லாம் ஒரு வகையில் அபத்தம்தான். அதே சமயம் _

 ஒரு கருப்பொருளை எழுத எடுத்துக்கொள்வ தற்கு ஒரு கதாசிரியருக்கான நோக்கம் என்று ஒன்று இருக்கும் போதுதான் அந்த எழுத்து பொருட்படுத்தக் தக்கதாகிறது. அப்படியொரு நோக்கமிருந்து அது எழுத்து மூலம் நேர்த்தி யாக, அழுத்தமாக வெளிப்படும்போதுதான் அந்தப் படைப்பு வாசகரிடையே நேர்மறையான பரிவதிர்வை ஏற்படுத்துகிறது.


தன்னுடைய கருத்தை ‘அடிமைத்தனமாக’ மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஏற்காத யாரையும் ’வெறியர்களாக’ச் சித்தரிப் பது சில அறிவுசாலி களின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், ஒரு சமூக மாற்றத்திற்கான முன்முனைப்பை மெய் யாலுமே மேற்கொள்கிறவர்கள் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரிடமும் அதற்கான மனமாற்றத்தை உரு வாக்கவே முற்படுவார்கள். ஈழத் தமிழர்கள் பிரச்னையில் கூட நிறைய அறிவுசாலிகள் ‘சிங்கள மக்களை’ ஒட்டுமொத்த மாக காடையர்கள், இனவெறியர்கள் என்று முத்திரை குத்தி எழுதிவந்தார்கள். இவ்விதமான அணுகுமுறையால் அவ்வப் பிரிவு மக்களிடையே உள்ள ‘மனசாட்சியுள்ள மனிதர்களும் புறக்கணிக்கப்படும், ஒதுங்கிக்கொண்டுவிடும் எதிர்மறை பாதிப்புகளே அதிகம் ஏற்படும்.


இந்த அடிப்படையில் மாதொருபாகன் புதினத்தை அணுகும் போது, அந்தப் படைப்பு எடுத்துக் காட்ட முனையும், எடுத்து ரைக்க விரும்பும், மையக் கருத்து என்ன? குழந்தையில்லாத தம்பதியர் சமூகத்தில் எதிர்கொள்ளும் மதிப்பழிப்பா? கடவுள் மதம் என்ற பெயரால் மனிதர்கள் மீது என்னவெல்லாம் கட்டு திட்டங்கள், கட்டாயங்கள் காலங்காலமாகத் திணிக்கப்பட்டு வருகின்றன என்பதா? இந்த இரண்டும் தான் பிரதானமாக கருத்தோட்டங்களாக கதையில் புலப்படுகின்றன. ஆனால், இரண்டையுமே கையாண்ட விதத்தில் ஏதோவொரு போதா மையை உணர முடிகிறது.


INDIAN FOUNDAITON FOR THE ARTS, BANGALORE  என்ற அமைப்பின் நிதியுதவி (ரூ 3,28,500) பெற்று இரண்டு வருடங்கள் ஆய்வு மேற் கொண்டு இந்த நூலை ஆசிரியர் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அந்த மையத்தின் MISSION ‘is to enrich the Arts in India by providing support to innovati ve projects’ என்று தரப்பட்டிருக்கிறது. கதாசிரியரின் ஆய்வு குறித்து பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது.


For research towards the writing of a novelized history of Thiruchenkode in Namakkal district, Tamil Nadu. A town with an ancient history. Thiruchenkode is today marked by its hill temple dedicated to Murugan and Ardhanaarees wara but is also known for its vibrant modern industry. In the course of writing a historical account of Thiruchenkode the author will document references to the town in litera ture, analyze the town’s design and study its ritual and reli gious life.


மேற்குறிப்பிட்ட அத்தனை விஷயங்களையும் அந்த ‘அர்த்த நாரீஸ்வரர்’ கோயில் சடங்கே உச்சக் கட்டமாக ஆசிரியர் முடித்துக்கொண்டுவிட்டதுதான் [அந்தச் சடங்கையும் அவர் முழுவீச்சாக எதிர்க்கவில்லை] உண்மையிலேயே வருத்தத் திற்குரிய விஷயம். தரப்பட்ட வரைச்சட்டகத்திற்குள்ளாக ஊர் குறித்த, அதன் வரலாறு குறித்த, மக்கள் குறித்த, அவர் களின் வாழ்நிலைமை சாதிப் பிரிவினை, குறித்த எத்தனை யோ விஷயங்களை, அவற்றின் அடிப்படையிலான ஆக்க பூர்வமான கருத்துகளைப் பேசியிருக்க முடியும். ஊரின் நில வளம், இயற்கைக்காட்சிகள் குறித்து விவரிக்கும் அளவு கூட ஆசிரியர் வேறு முக்கியமான விஷயங்களை – கோயில் சார் அந்த நம்பிக்கை தவிர்த்து, விரிவாக, in all seriousness,  பேசத் தலைப்படவில்லை.


கதாசிரியராவது ஒரு கதைக்கருவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதன் பின்னணியில் ‘அந்தக் காலத் தைய’ கோயில் உற்சவம், அது தொடர்பான சடங்கு , நம்பிக்கை குறித்துப் பேசியிருக்கிறார். ஆனால், அவருக்கு ஆதரவு தெரி விப்பதாக  ‘கருத்துச் சுதந்திரம்’ காக்க வேண்டி 15.1.2015 தேதியிட்ட தினமணி நாளி தழில் வெளியாகியுள்ள தலையங் கம் நிலைமையை இன்னும் மோசமாக்குவதாகவே அமைந் துள்ளது. (பார்க்க : பெட்டிச் செய்தி:)



 தினமணி 15.1.2015 தேதியிட்ட நாளிதழின் தலையங்கம்
அட, பெருமாளே!
By ஆசிரியர்
First Published : 15 January 2015 01:44 AM IST

தமிழனுக்குத் தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும் போலிருக்கிறது. வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வந்த பிறகுதான் கொங்கு மண்டலத்தில் உள்ள சிலருக்கு பெரு மாள் முருகன் எழுதிய "மாதொருபாகன்' நாவல் புரிகிறது கோபம் வருகிறது. திருச்செங் கோட்டில் கடையடைப்பு, ஆர்.டி.ஓ.வுடன் பேச்சு வார்த்தை, காவல் துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, பாதுகாப்பு கருதி, எழுத்தாளர் தன் குடும்பத்துடன் சற்று வெளியே இருத் தல் போன்ற எல்லாமும் நடக்கின்றன.

கொங்கு மண்டலத்தின் பெருமைகளை, கலாசார விழுமியங்களை, பழக் கவழக்கங் களைப் பதிவு செய்த பாராட்டுக்குரிய எழுத்தாளர் பெருமாள் முருகன், மனம் நொந்து, தனது பேனாவை இனி திறப்பதில்லை என்று மூடி வைத்துவிட்டார். தன்னுள் இருக்கும் இலக்கியவாதிக்கு மரண சாச னம் எழுதவும் முற்பட்டிருக்கிறார்.

பிள்ளைச்செல்வம் இல்லாத பெண்கள் தெய்வத்தை வேண்டி, யார் எனத் தெரியாமல் "கண்மூடி' ஏற்றுக் கருவுறுகிற, சாமி தந்த பிள்ளையாக அக் குழந்தையைப் பார்க்கிற, ஒரு பழைய நடைமுறையை அந்த நாவலில் பெருமாள் முருகன் பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். அவர் எழுதியது பொய் அல்ல. சமூகத்தில் இருந்த பழக்கம் தான். கோயிலில் இரவு தங்கி இருத்தல், குறிப்பிட்ட நாளில் இரவு முழு வதும் கோயில் வளாகத்தில் கண்விழித்து மண்சோறு சாப்பிடுதல், தீர்த் தமாடுதல் இவை யாவும், "இத்தனை நாள் இல்லா மல் எப்படி இப்போது?' என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சமூகம் தந்த அங்கீகா ரச் சடங்குகள் என்பதை நாம் மறுத்துவிட லாகாது.

மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர், "இரண்டாம் இடம்' என்கிற நாவலை எழுதியிருக்கிறார். அதனை சாகித்ய அகாதெமி தமிழிலும் வெளியிட்டுள்ளது. பீமன் எப்போதும் தான் இரண்டாம் இடத்தில் வைக்கப் படுவதற்காக ஆதங்கப்படுவதுதான் கதை. "நான் அறியாப் பருவத்தில் தேரோட்டியுடன் கலந்து பெற்ற மகன் தான் கர்ணன். பாண்டுவை மணந்த பிறகு, பாண்டு மகாராஜா கலவிக்கும் தகுதியில்லாமல் இருதயமும் பல வீனமாக இருந்ததால், விதுரருக்கு பெற்ற மகன்தான் தருமன். மிகத் திட காத்திரமான காட்டுவாசிக்குப் பிறந்தவன்தான் நீ...' என்று குந்தி சொல்வ தாகக் கதை செல்கிறது. 

இந்த நாவலை மலையாள உலகம் எதிர்க்கவில்லை. பல பதிப்புகள் கண்ட நாவல் இது. இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கத் தெரிந்த சமு தாயம் அது. படைப்பிலக்கியவாதியின் கற்பனைக்குக் கடிவாளம் போடாத நாகரிக சமுதாயம் அது. 

லக்கியத்தை, கோயில் வழிபாட்டுச் சடங்கு களை எல்லாம் விட்டுவிடு வோம். இன்று "ஃபெர்டிலிடி சென்டர்' எனப்படும் கருவூட்டு மருத்துவ மனையில் என்ன நடக்கிறது? ஓர் ஆண், மலடு. பெண்ணோ கருவுறத் தகுதி படைத்தவள். அவர்கள் பெர்டிலிடி மருத்துவமனைக்குச் செல்லும் போது, "உங்கள் குடும்ப மரபீனி தொடர விரும்பினால், உங்கள் சகோதரர் யாரிடமாவது விந்து தானம் பெற்று, உங்கள் மனை வியை கருவுறச் செய் யலாம். இல்லையென்றால், விந்து வங்கியில் பெற்று கருவுறச் செய்ய லாம். உங்களுக்குச் சம்மதமா' என்பதுதான் நேர்மை யான, நல்லிதயம் படைத்த மருத்துவரின் முதல் கேள்வி. 

பல லட்சம்ரூபாய் செலவுசெய்ய வசதி இல்லாத ஒரு தம்பதி, தங்களுக்கு கு பிள்ளை வரம் வேண்டும் என்பதற்காக சமூகம் அங்கீகரித்த, கோயில் கள் உருவாக்கித் தந்த, யார் யாருடன் என்றறியாத கண்மறைப்பு நடைமு றைகள் இன்று வழக்கத்தில் இல்லாததால், ஒரு பெண் தனக்கான விந்து தானத்தை, தானே தன் விருப்பப்படி, மகாபாரதக் குந்தியைப் போலத் தேர்வு செய்து கொள்கிறாளே, அதைத் தவிர்க்க முடியுமா, மறுக்க முடி யுமா அல்லது தடுக்கத்தான் முடியுமா?

சங்க காலத் தமிழனின் காதல் வாழ்க்கையைப் பதிவு செய்ததுதானே அகநானூறு. தான் வாழ்ந்த காலத்தில், அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த நடைமுறையை, தான் எழுதும் கதையில் பதிவு செய்வது என்பது படைப்பிலக்கியவாதியான பெருமாள் முருகனின் உரிமை, கடமை. இல் லாத தையேகூட எழுதியிருந்தாலும் அது அவரது கற்பனைக்குத் தரப்பட வேண்டிய சுதந்திரம். அதைத் தடுக்க முற்படுவது எப்படி சரியாகும்? 

எதைச் சொன்னாலும் அது யாராவது ஒருவர் மனதைப் புண்படுத்துகிறது என்கிற பெயரில் போராட்டம் நடத்துவது தற்போது வழக்கமாகி விட்டது. ஒரு கருத்து ஏற்புடையதல்ல என்றால் அதற்கு மாற்றுக் கருத்தை முன் வைக்கலாம். மாறாக, யாரும் கருத்தே கூறக்கூடாது என்றால் எப்படி சரி? பெருமாள் முருகனுக்குப் பக்கபலமாக நின்றிருக்கவேண்டிய அரசு நிர்வாகம் போராட்டக்காரர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததே கூட மிகப்பெரிய தவறு. 

சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெளிவாக வழங்கிய தீர்ப்பு, "தணிக்கைக் குழு வால் சான்றிதழ் வழங்கப் பட்ட திரைப் படத்தை வெளியிடாமல் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடை யாது. அந்தத் திரைப்படம் வெளிவருவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு' என்பது. அதுவே பெருமாள் முருகனின் "மாதொ ருபாகன்' பிரச்னைக்கும் பொருந்தும். 

சாதியும், சமயமும், கணவனும் ஏற்றுக்கொண்டா லும் ஆணாதிக்க மானு டம் ஏற்க மறுக்கிறது. இது சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் மற்றொரு பாகம். இதுவே வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ நடந்திருந்தால் கருத்துச் சுதந் திரத்திற்கு ஆதரவாக உலகமே திரண்டெழுந் திருக்கும். தமிழனாய் பிறந் தது பெருமாள் முருகனின் தவறு!

              
மேற்படி தலையங்கத்துக்கு வந்த எதிர்வினை களில் ஒன்று பின்வருமாறு:     
            
yampalayam Venkateswaran
22-01-2015 | 19:36:45

தினமணிஇன் உபதேசம் ஊருக்கு மட்டும்தானா?வாசகர்கள் தங்களது விமர்சனங்களை வெளியிட நீங்கள் விதித்திருக்கும் கட்டுபாடுகளை முத லில் நீங்கள் பின்பற்றுங்கள். எழுத்தாளர்களுக்கும் இருக்கும் உரிமை வாசகர்களுக்கு இல்லையா என்ன? நாகரீகமற்ற வாசகங்களை ஏன் நீங்கள் நீக்குகிறீர்கள். அது வாசகர்களின் எழுத்துரிமை இல்லையா?

///வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரே னும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடு க்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தை களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்கு தலை, கட்டுரைகளுக்குப் பொருத்த மில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்தி ரத்துக்கு வாய்ப்ப ளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.///

       



Saturday, January 31, 2015

PRAYER

PRAYER


Am I a believer or non-believer?
Whom should I believe? Whom should I believe not?
Am I to believe belief?  Am I to dis-believe?
Am I to believe or/and disbelieve
Everything or Something
At times everything becomes something
And vice-versa…..
Sea-saw I go up and down the scale of belief
Sea saw I long ago
To see again I must go
So belief also…
How is life?
So so…
So and so
said something about You me everybody
Buddy or enemy he or she is?
Bull-shit
Miss or hit _
should keep my mind fit
For what?
To change the sad lot
 of a twenty year old lad….
In ICU or general ward?
How nice it would be if we can
have the power of resurrection?
The pain of uncertainty …
hovering over the head of a hardworking noble lady
full of cheer, a well-wisher 
of not just me but the whole of humanity
Her son _
Her stars moon and sun…
gone are the days of fun?
Are his days numbered? Oh when?
Let it not be so
A face in the crowd
In one shuffle
Moves so close
Endearingly
Why so?
Eyes so full of tears
At this hour of midnight
 utterly paralyzed
even half-baked poetry providing relief
In willing suspension of disbelief
I beseech thee, gods of all religions
To come to her rescue
Save her boy , will you?
Please do…..





Monday, January 26, 2015

நாடெனும்போது...

கவிதை

நாடெனும்போது.....

                  ரிஷி


1.

நந்தியாவட்டை,  மந்தமாருதம்
வந்தியத்தேவன்,  சொந்தக்காரன்
சந்தியா விந்தியா முந்தியா பிந்தியா

_ எந்த வார்த்தையை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்

”இந்தியா என் தாய்த்திருநாடு; வந்தனத்திற்குரியது”
என்று
நாக்குமேல் பல்லுபோட்டுச் சொல்லிவிட்டாலோ
வில்லங்கம்தான்.

தடையற்ற தாக்குதலுக்காளாக நேரிடும்.
எச்சரிக்கையா யிருக்க வேண்டும்.

2.

”எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
யிருந்ததும் இந்நாடே, அவர் முந்தையர் ஆயிரம் _”

“_ மேலே பாடாதே. என்னவொரு தன்னலம்
உன் பெற்றோர் மட்டும் நலமாயிருந்தால்
எல்லாம் வளமாகிவிடும். அப்படித்தானே?”

_தவறாமல் வந்துவிழும் தப்படி யிப்படி.

3.

இந்தியா சகதி என்றார்.
வெறெங்கு சென்றாலும் நாம் இரண்டாந்தரக் குடிகள்  அல்லது
அகதிகள் தானே என்றேன்.
என்ன தகுதி உனக்கு மனிதநேயம் பேச என
மிகுதியாய் வசைபாடிச் சென்றுவிட்டார் வந்தவர்.

4.

”நம்பத்தகுதியற்றதாய் தன்னை மீண்டுமொருமுறை நிரூபித்துக்கொண்டுவிட்டது இந்தியா”
என்று வெம்பி வெடித்ததொரு மின்னஞ்சல்.

முப்பதாவது முறையா?
முந்நூற்றியைம்பதாவதா?

”தப்பாது எப்போதும் ஏமாற்றியே வரும் நாட்டை
இப்போதும் எதிர்ப்பார்ப்பதும் ஏன்?” எனக் கேட்டாலோ
மாட்டிக்கொள்வீர்கள் முடியா வசைப்பாட்டில்.

5.

”ஆயிரம் காதங்களுக்கப்பால் இறந்தவர்களுக்காக அழுகிறாயே நியாயமா?”
என்று வாரந்தோறும்
ஒளியூடகத்தில் முழங்கிக்கொண்டிருக்கிறார் ஒருவர்
அபிமானமும் வருமானமும் கொண்டு.
எல்லைப்புறத்தில்
மூன்றாம்பேருக்குத் தெரியாமல்
மடிந்துகொண்டிருப்போரில்
தென்கோடி குக்கிராம தனபாலும் உண்டு.

6.

போராளிகள் புரட்சியாளர்களின் நாட்டுப்பற்று போற்றத்தக்கது.
நீயும் நானும் கொண்டிருந்தால் அது நகைப்பிற்குரியது.

”_ எனவே, தேர்தலைப் புறக்கணியுங்கள்”
என்று திரும்பத் திரும்ப அறிவுறுத்திவருகின்றன
சில குறுஞ்செய்திகள்.
மாற்றென்ன என்று கேட்டால்
தூற்றலுக்காளாக வேண்டும்.

”மீள்நிர்மாணம் குறித்து மலைப்பெதற்கு
முதலில் கலைத்துப்போட்டுவிட வேண்டும்”.

7.

’இந்தியா என்றால் எந்தை உந்தையல்ல;
விந்தியமலையுமல்ல _
மத்தியில் குந்தியிருக்கும் அரசு’ என்பார்
வந்துபோகும் நாளிலெல்லாம் உதிர்த்துக்கொண்டிருக்கும்
வெறுப்பு மந்திரத்தில்
அந்தப் பிரிகோடு அழியும் நிலையை
என்னென்பாரோ…..?



 0

PROUD TO BE AN INDIAN!



















Thursday, January 22, 2015

[விமர்சன] வெறுமாண்டி _ சிறுகதை

சிறுகதை
[விமர்சன] வெறுமாண்டி
அநாமிகா
[கவிதாசரண் ஏப்ர-ஜூன், 2005இல் வெளியானது]






’விமர்சன வீரன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டிருந் தால் அவர் வலுக்கட்டாயமாக மறுத்திருப்பார். வெறும் எதுகை மோனைக்காக ‘கட்டாயமாக’ என்பதை நான் ‘வலுக்கட்டாயமாக்கியிருப்பதாக உங்கள் வாசகப் பிரதிக்குப் பட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. சிறு பத்திரிகைகள், பெரும் பத்திரிகைகளையெல்லாம் தொடர்ந்து படித்துவருபவர் நீங்கள் என்ற வகையில் ‘கட்டாய மாக மறுத்திருப்பார்’ என்பதற்கும் ‘வலுக்கட்டாய மாக மறுத்திருப்பார்’ என்பதற்கும் இடையேயான வேறுபாடு உங்களால் கட்டாயமாக உள்வாங்கப்பட் டிருக்கும். கவனிக்கவும் _ கட்டாயமாக; வலுக்கட் டாயமாக அல்ல. வீரன் என்பது கிட்டத்தட்ட பழந் தமிழ்ச்சொல். வெகுஜனங்களோடு, திராவிடக் கட்சி களோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் சாத்தியப் பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘விமர்சனச் செம்மலு’ம் வலுக்கட்டாயமாக மறுதலிக்கப்பட்டி ருக்கும். ‘விமர்சன வள்ளல்’ என்பதும் வெகுஜன வாடை வீசுவதாக இருந்தாலும் அது தனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று அவர் உள்மனத் திற்குப் பட்டது. எட்டாவது அதிசயம், ஒன்பதாவது அதிசயம் என்பதாக இன்று புதிதாகச் சேர்க்கப்படு வதைப் போல், பாரி, ஓரி, காரி முதலான கடையேழு வள்ளல்களின் வரிசை எண்ணிக்கையை இடம் மாற்றுவதால் தன் பெயர் இனி வரலாற்றில் இடம்பெறலாம்.

அதுவும் எப்படிப்பட்ட வள்ளன்மை! வேண்டியவர்களுக்கு அதீதப் புகழுரை களும், வேண்டாதவர்களுக்கு அதலபாதாளக் குழிகளுமாய் இரு துருவ சஞ்சாரங்களுக்கிடையேயான விரிபரப்பு அவருடைய வள்ளன்மையின்  அளவு. அந்தக் காலத்திலிருந்து அவர் ஆடிக்கொண்டிருக்கும் ’கூத்தை’ பம்மாத்து என்று சொல்லுகிறவர்கள் ஆத்தோடு போவார்கள். அதாவது, நதியில் முங்கிச் சாவார்கள். அப்படி நேரிடையாகச் சொன்னால் ‘சாப மிடுகிறவர்’ என்று நம்மை மற்றவர்கள் சரியாக, எளிதாக அடையாளங் கண்டு, காட்டிவிடுவார்கள். நாம் இலக்கியத்தில் இருண்மையைப் பழிக்கலாம். ஆனால், உள்ளத்தின் இருளைப் போற்றிப் பேணிவர வேண்டும். மற்றவர்க ளையும் அவ்வாறே நம் மனதின் இருளை மேதைமையாக இனங்காணப் பழகச் செய்ய வேண்டும்.

இதற்கென்று விமர்சன வீரன், இல்லை, விமர்சனச் செம்மல், இல்லை விமர்சன வள்ளல், இல்லை, விமர்சன மேதை, இல்லை, விமர்சனச் சக்கரவர்த்தி, இல்லை, விமர்சன வைபோகன், இல்லை, விமர்சன வித்தகன், இல்லை, வி….(அ) வி…., (அ) வி….., (அ) வி….. சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், பேசப்படுவோர் பெருமையைப் ஏசாமல், பேசுவோன் புகழைப் பறைசாற்றுவதாக ஆகிவிடும். அது முறையல்ல. அதைவிட முக்கியமாக, அது விமர்சனாதி பதியின் தனி பாணி. நான்காவது அல்லது ஐந்தாவது படித்த கட்சித்தொண்டர் ஒருவர், அல்லது, தொண்டர்களின் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றிருப்பவர், ஹெலன் கெல்லரின் பிறந்த நாள் விழாவில் தனது உரையில் ஒவ்வொரு பத்திக்கும் ஒரு தரம் தன் தலைவருக்கு அடைமொழி களை உச்சரித்துத் தன்னை உயர்த்திக்கொள்ள முயல்வதைப் போல்(பல நேரங்களில் இந்த முயற்சிகள் விழலுக்கிறைத்த நீராகி விடுமென்றாலும் விண்ணுலகில் அரைவட்டங்களும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன என்ற உண்மை நம் நினைவிலி ருந்து நீங்கிவிடலாகாது. சம்பந்தப் பட்ட ‘விமர்சன விற்பண்ணல்’ பேச எடுத்துக்கொண்ட புத்தகத்தைப் பற்றி, அதை எழுதியவரைப் பற்றி இரண்டொரு வரிகளும்,மற்ற வரிகள் பத்திகள், பக்கங்களில் தனது ஆப்பிரிக்கப் பயணம், அர்ஜெண்டீனியாப் பரிச்சயம் பேசப்படும் படைப்பாளி சின்னப்பையனாயிருந்த போது தன் மடியில் அமர்ந்து பம்பரம் கேட்டது (விமர்சனம் வசைபாடலாக இருக்கும்போது, ‘அந்தப் பையன் பள்ளிக்கூட வாத்தியார் கேட்ட ஒன்னாம் வாய்ப்பாட்டை ஒப்பிக்க முடியாமல் முட்டி போட்டது’ என்பதாய் மூளை பிறவேறு அடுக்குகளி லிருந்து நினைவு களை வெளிக்கிளப்பும்) என்று தன் புராணமுமாய் பாடிவருவதன் விளைவா கவே ‘விமர்சனாழ்வார்’ என்ற பட்டமும் அவருக்குப் பரிந் துரைக்கப்பட்டது.

வழக்கொழிந்த நாட்டியக் கலைஞர்கள் சிலர் நடாப் பயிற்சி மையங்கள் ஆரம்பிப்பதைப் போல் இந்த ‘விமர்சனச் சித்தரு’ம் ஒரு பள்ளியை நாக்பூரி லும், இன்னொரு பள்ளியை நாகாலாந்திலும் திறந்திருக்கிறார். மூன்றாவது பள்ளி ‘நோய்டா’வில். விரை வில் ‘நியூயார்க்’கிலும் திறக்கலாம்.

அந்தப் பயிற்சிப் பள்ளிகளின் ஒரே பாடத்திட்டம் இதுதான்: நிர்வாணமாக ஒருவரைக் குதிரையில் ஏற்றி வலம்வரச் செய்வார்கள். பயிற்சி மாணவர்கள அந்த மனிதர் எந்த நிறத்தில் ஆடையணிந்திருக்கிறார், என்னவிதமான அணிகலன்கள் அணிந்திருக் கிறார் என்று கவனித்துப் பார்த்துச் சொல்லவேண் டும். அவர் ஒருவரே ‘விமர்சன விசுவரூபி’யாய்த் திகழும் காரணத்தால் பன்மையில் குறிக்கப்படுகிறார் ’ஆசிரியர்கள்’ என்பதாய்.  ஒருமை, பன்மை இலக்கணப் பிழைகளைக் கவிதைகளில் தோண்டித் துருவிக் கண்டெடுப் பவர்கள் இந்த ‘விமர்சன தேவனி’ன் ‘பன்மை’ அந்தஸ்தைப் பற்றிக் குரல் எழுப்புவதேயில்லை. எளிய கவிஞனை எவ்வளவு வேண்டுமானாலும் எள்ள லாம். மேல்மட்டத்தாரோடு மோதாமலிருப்பதே நயத்தக்க நாகரிகம்.

ஒருமுறை கட்டுவிரியன் பாம்பைப் பற்றிய கதை யொன்று அந்த ‘விமர்சன சிங்க’த்தின் கைகளில் கிடைத்தது. வெகு கவனமாய், தான் அதுகாறும் நேர்கொள்ள, எதிர்கொள்ளவேண்டியிருந்த சட்டை யுரித்த பாம்பு, பெருமாளின் படுக்கைப் பாம்பு, சிவன்தலைப் பாம்பு, பல்பிடுங்கிய பாம்பு, மிருகக் காட்சிச்சாலைப் பாம்பு, மற்றும் நெடுஞ்சாலைப் பாம்பு, குறுக்குத் தெருப் பாம்பு என எல்லாவற் றையும் பட்டியலிட்டுக் காட்டி ‘இந்தப் பாம்பு மகோன்னதமாகச் சட்டையுரிக்கிறது என்று புக ழாரம் சூட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்த கட்டுவிரியன், புத்தகத்தின் பக்கங்களிலிருந்து படம் விரித்தாடிக்கொண்டே வந்து ‘விமர்சனக் கோமகனை’க் கட்டிக்கொண்டுவிட்டது! ஆனால், மாணிக்கம் ஒன்றும் தராமல் வெறுமே ‘ஜங்கிள் புக்’ ‘மோகிளி’யிடம் கண்கிறங்கக் கிசுகிசுத்து வசியம் செய்ய முயலும் தளுக்குப் பாம்பைப் போல் நடந்துகொண்டு போய்விட்டதே என்று உள்ளுக்குள் பொருமிக்கொண்டார் ’விமர்சன வாள்’. பல்லியின் வால் வெட்டப்படவேண்டியதே என்பார். ‘பல்லியும் முதலையே; முதலையும் பல்லியே’ என்பார். ஆனால், வெகு கவனமாக முதலையின் வாலை வெட்டுவது பற்றி மூச்சு விட மாட்டார். வெட்டுப்பட்ட பகுதி தன் கைக்கு வருமா, அதைத் தன்னால் விற்க முடியுமா, எவ் வளவு விலை பெறும் என்பதெல்லாம் திட்ட வட்டமாகத் தெரியாத நிலையில் எதற்கு முதலையின் வாலைப் பற்றிக் கருத்துத் தெரிவிப் பது! அவரால் வாழ்த்தப்பட்டவர்கள் அவரை ‘விமர்சனச் செங்கோலன்’ என, அவரால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்கள் அவரை ’விமர்சனக் கடுங் கோலன்’ என்றார்கள். அதைப்பற்றி அவருக் கென்ன? விமர்சனச் சக்கரவர்த்தியோ, விமர்சனச் சர்வாதிகாரியோ _ பீடம் கிடைத்துவிடுகிறது. அது தான் முக்கியம்.

முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும், தன்னி கரற்ற விமர்சனப் பயிற்சி மையம் நடத்திவந்த அவரே அந்தப் பள்ளியின் பாடபுத்தகங்களுக்கான கோனார் உரை நூல்களையும் எழுதினார். ‘ஊரெங் கும் நடப்பது தானே, இதில் என்ன முரணைக் கண்டோம்? வெங்காயம்’ என்று நீங்கள் சொன் னால் எதிர்த்துச் சொல்ல என்னிடம் எதுவு மில்லை என்பது உண்மை. ஆனால், ’விமர்சன வேந்தனி’ன் பயிற்சி மைய அடிப்படைக் கோட் பாட்டின்படி பார்த்தால் ‘என்னிடம் எதுவுமில் லா ததே என்னை எல்லாம் இருப்பவராக்குகிறது அல் லவா!

‘விமர்சன பூபதி’யின் [சம்பந்தப்பட்ட திரைப்படத் தில் ‘ஆள்தோட்ட பூபதி’ பாடல் எப்படி கதைக்கு சம்பந்தமேயில்லாத போதிலும் சக்கை போடு போட்டது என்பதை நினைவுபடுத்திப் பார்க்கவும்] தனித்தன்மை வாய்ந்த நபும்சகத்தனத்தை, இல் லையில்லை, நிபுணத்துவத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு ஒருநாள் சூரியனும் நிலாவும் அவரைத் தேடி பூலோகம் வந்தார்கள். அவர்கள் வந்த சமய த்தில் அவர் ஒரு சிறுகதைத் தொகுப்பைத் தனது தனித்துவம் வாய்ந்த தராசுக்கோலில் நிறுத்திப் பார்ப்பதில் மும்முரமாய் இருந்தார். முப்பது படைப்பாளிகள் கொண்ட நூல் இது. தொகுப்பாசி ரியர்கள் தங்களது முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள் :”சிலர் அவர்களுடைய சிறு கதைகளைத் தர விரும்பவில்லை. சிலருடைய முகவரிகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இன்னொரு தொகுப்பில் இதில் காணும் குறை பாடுகளை நிவர்த்தி செய்வோம்.”

தப்புக்குறியைத் தாளின் ‘நடுமையத்தில்’ போட்டு விட்டு எழுதத் தொடங்கினார் ’விமர்சன வேதா ளம்’. [ஒரு விஷயம், வேதாளம் என்பது வஞ்சப் புகழ்ச்சியல்ல. அதே சமயம் இந்த விமர்சனப் பெருச்சாளி’ வஞ்சப் புகழ்ச்சிக்குப் பெரிதும் தகுதி வாய்ந்தவரே]. ’இங்கே விடுபட்டுப் போயிருக்கும் படைப்பாளிகள் ஏன் இடம்பெறவில்லை? நான் அவர்களை எப்படியெல்லாம் எள்ளிநகையாடியி ருக்கிறேன் என்பது இங்கே தேவையில்லாத விஷயம்… இப்பொழுது அவர்கள் உரிமைக்காக நான் போராடுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்… இதில் இருபது முப்பது நல்ல படைப்பாளியைத் தொகுப்பாசிரியர்கள் புறக்க ணித்தது ஏன்? இதிலுள்ள உள் நோக்கம் என்ன? (மற்ற இருபது பேரைக் குறிப்பிடவில்லையே என் கிறீர்களா? அதனால் எனக்கு என்ன பயன், மன விகாரம் பிடித்தவர்களே!)

இப்படியே இருபது வரிகள் நீட்டிய பின், சிறு கதைக் கோட்பாடு என்பதாய் இரு வரிகளைப் போட்டு, ‘அடுத்த முறை அதிக கவனத்தோடு தொகுப்பு உருவாக்கப்படுவது அவசியம்,’ என்ற ‘அக்மார்க்’ வாசகத்தோடு(அப்படியொரு கோட் பாடே கிடையாது என்று யார் மறுத்தாலும், அது வெளியாக குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகி விடும். தவிர, இப்பொழுது வெளியாகும் இலக் கிய இதழ்களில் சிலபல நின்றுபோய்விடும் வாய்ப்புகளும் அதிகம்.)

தன்னுடைய திருத்தமான மனக்கணக்கை சிலா கித்தவாறே, பேனாவை மூடி, நெட்டி முறித்து நிமிர்ந்தபோது, எதிரே நிலவும் சூரியனும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

“என்ன வேண்டும் உங்களுக்கு?”

“எங்களைப் பற்றி நீங்கள் என்ன எழுதுவீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் இங்கு வந்தோம், ‘விமர்சன சற்குருவே’,” என்றது நிலவு.

“எத்தனை பயபக்தியோடு பேசுகிறாய்!” என்று மகிழ்ந்து கூறினார் ‘விமர்சன சீமான்’. “என்னு டைய பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றால் விமர்சன ஏணியின் மேல்படிக்கு நீ விரைவில் சென்றுவிடலாம்!”

“மேலே இருந்து அலுத்துப்போய்த் தானே இங்கே வந்திருக்கிறோம்” என்று நறுக்கென்று சொன்னது சூரியன்.

“ஆவேசப்படாதே, அமைதியாயிரு.” என்றார் விமர் சன விற்பன்னர்.

“நான் அழுத்தமாய் என் கருத்தைப் பதிவுசெய்வது உனக்கு ஆவேசமாய் படுகிறது. உமி மெல்வதாய் எப்பொழுதும் ‘கிசுகிசுப் பேச்சே உனக்குப் பழகி விட்டதால் அப்படித்தான் தோன்றும்.”

“அப்படியா சொல்கிறாய்?.... உன்னைப் பற்றிய என் மதிப்புரை எப்படி யிருக்கும் தெரியுமா?”

“சொல், கேட்கிறோம்,” என்று சமாதானப்படுத்து வதாய் மென்மையாய் கூறியது நிலவு.

“தேவைக்கு அதிகமாய்க் கதிர்களைக் கொட்டி உயிர்களைச் சூறையாடுகிறான் சூரியன்.”

“இது மிகவும் ஒருதலைப்பட்சமான மதிப்புரை.” என்று கோபமாகக் கூறியது சூரியன். “நான் பகலை உங்களுக்கு வரவாக்குவதில்லையா? பயிர் வளர்ப்பதில்லையா? எத்தனை செய்கிறேன் உங்களுக்கு.”

“அதெல்லாம் நீ எனக்கு ‘சலாம்’ போட்டால் தான் பட்டியலிடப்படும். சரி, அங்கே பார், அதோ ஆரோ கணித்திருப்பவர்கள் எத்தனை நிறங்களில் உடை தரித்திருக்கிறார்கள், சொல்.”

கூர்ந்து கவனித்துப் பார்த்துவிட்டு, பின், உதடு களைப் பிதுக்கியது சூரியன். “எல்லோரும் நிர் வாணமாய்த்தானே இருக்கிறார்கள்.”

“என்ன அநியாயம், எதைப் பார்த்தாலும் நிர்வா ணத்தையே நாடும் ‘மஞ்சள் பத்திரிகை’க் கண்கள் உனக்கு.”

“நான் நிர்வாணத்தைக் கேவலப்படுத்தவில் லையே.”

“அப்படியானால், நிர்வாணத்தை உயர்த்திப் பிடிக் கிறாய், அப்படித்தானே? அக்கிரமம்.”

“அவர்கள் உடையணிந்திருப்பதாய் நீ கூறுகிறாய். இல்ல என்கிறேன் நான். இதில் எதற்கு ஏதேதோ பேசுகிறாய்?”

“நீ ஒரு ஒளிக்கீற்றாய் இருந்தபோது நான் படம் பிடித்திருக்கிறேன். அந்தப் படம் ‘எக்ஸ்போஸ்’ ஆகிவிட்டது என்பது ஒரு விஷய மில்லை. ஆனால், உன்னை நான் பொருட்படுத்திப் புகைப் படம் எடுத்ததற்கான துளி நன்றியுணர்வு கூட உன்னிடமில்லையே,” என்று ’விமர்சனப் பேரொளி’ வினவ,

“எல்லாம் அந்த விமர்சனக் கழிவாளர் வெளி யேற்றிய நச்சுவாயுப் படலம்தான், நீங்காத கறை யாக என்மேல் படிந்துவிட்டது. சும்மாவா சொல் கிறார்கள், ‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகிச் செல்’ என்று….”

“அப்படியே விட்டுவிடவும் முடியாதே. கேட்க ஆளில்லை என்று காட்டுச்செடியாய் வளர்ந்து விடுவார்கள். அவ்வப்போது சுட்டெரிக்க வேண்டி யதும் அவசியம். அதோ, அங்கே பார்…”

கதிரவன் கீழ்முகமாய் தன் ஒளிக்கீற்றைக் கொண்டு சுட்டிக்காட்டிய இடத்தில் ஓர் ‘இடை நிலை’ இதழின் நடுப்பக்கம் விரிந்துகிடக்க, அதன் அரைவட்டப்பகுதியில் ‘விமர்சன வீர்யன்’(ஓரள வுக்குப் பின்- நவீனமாக இருப்பதால் ‘விமர்சன விதூஷகர்’ புன்னகைத்துக்கொண்டிருக்க) என்ற வார்த்தைகளின் கீழான புகைப்படத்தின் வலப் புறமாய் கீழ்க்கண்ட வாசகங்கள் காணப்பட்டன:

“உலக விமர்சகன்! இவரைத் தேடி விண்ணு லகமே தரையிறங்கி வந்தது! ஆனால் சில தறுதலைகள் இவரை மறுதலித்துவருகிறார்கள். அவதூறு பரப்பியே தீருவோம் அவர்களைப் பற்றி. அதுவே எங்கள் இலக்கிய தர்மம். ‘அக்கப்போர்’ வெல்லும்.”

இதை வாசித்ததும் மூண்ட வெஞ்சினத்தில் விண் ணிலுள்ள கோள்களும் ஒளிமீன்களும் தங்களை மறுவரிசைப்படுத்திக் கொண்டதில், இங்கிருந்தே உற்றுப் பார்த்தாலும் போதும், தொலைநோக்கி யின் உதவியின்றியே நம்மால் படிக்கக்கூடிய அளவில் ஆகாயப்பரப்பில் காணத்தொடங்கி யுள்ள வார்த்தைகளே இந்தக் கதைக்குத் தலைப் பாக்கப்பட்டுள்ளன.




0