A POEM BY
S.VAIDHEESWARAN
POETRY
As the Poet
with the dream-net widespread
lying in wait to catch Poetry
A spider on the roof
spreading its saliva
faking sleep
so whiling away the time
memories aplenty inside
slipped off
without halting.
At one stage
the web tearing off
all too suddenly
As meaning
hidden deep down
writhed indistinguishable
many insects ensnared.
The Spider rising and swelling
With its eight-legged
conceited gait
caught hold of the meaning and
Munched it.
The mouth said:
‘Poetry’.
கவிதை
எஸ்.வைதீஸ்வரன்
கனவு வலை விரித்துக்
கவிதை பிடிக்கக் காத்திருக்கும்
கவியாய்
ஓட்டில் ஒரு சிலந்தி
எச்சிலை விரித்துப்
பொல்லாத பொய்த்துயிலில்
பொழுதோட்டிக் கிடக்கும் வேளை
மனதில் பல நினைவுகள்
நில்லாமல் நழுவிப் போச்சு.
ஒரு நிலையில் பட்டென்று வலையறுந்து
அடிமனப்பொருளென
தெளிவற்றுத் துடித்தன
சிக்கிய பல பூச்சிகள்
சிலந்தி எழுந்து விரிந்து
எட்டுக்கால் திமிர்நடையால்
பொருளைப் பிடித்து மென்றது.
வாய் ‘கவிதை’ என்றது.



No comments:
Post a Comment