LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 23, 2026

A POEM BY VAIDHEESWARAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) - MODEL

A POEM BY 

VAIDHEESWARAN 

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

MODEL



 A square-shaped hall

In that a round table

She stands 

Stark naked

From atop

A leaning pole of light

alights on her.

Her limbs stand firm

swelling, wholesome.

Attires leaving her

are covering a chair there.

The eyes of apprentice-artists

sitting in a circle

and assessing her figure

separate her body from her

and making them 

parts of their Art.

So long as the fingers stretch – the lines

With passionate screeching

Swallows her limbs

One by one.

The body’s 

Ups and downs

Mounds and slopes.

Melting – swirling

Sliding –Swelling

solidity and subtlety

Edges – buds

Fold and mystery

Stirring the artist endlessly

Test his skill and mastery.

There, striving to contain in a paper square

the proud human form standing there 

right in front of them

converting it into an art-piece

and exhibit

the  passion unleashed of human breath

the reverberation of human hearts in unison

For the artist who sketches 

with dreamy fingers

the marvel called woman

Time and surroundings

have no meaning.

In the folded stomach

of the figure there 

being submissive to the core

The air that roar 

in the empty stomach 

and the thin line of tears

at the corner of her eyes 

dried

never find a place

in the art-piece.

They somehow escape....

On completion

She flutters in the sheet of paper

as new-born parrot

scattering dreams galore

to all the viewers.

மாடல்   

எஸ்.வைதீஸ்வரன்.

சதுரமான ஹால் 

அதில் வட்டமான மேசை ஒன்று 

அவள் 

அப்பட்டமாக நிற்கிறாள் 

உச்சியிலிருந்து சாய்ந்த ஒளிக்  கோலொன்று 

அவள் உருவத்தில் பாய்கிறது 

அங்கங்களில் அழுத்தமான பூரிப்பு

 ஆடைகள் அவளை துறந்து

 ஒரு நாற்காலியை 

மறைத்துக் கொண்டிருக்கின்றன

 வட்டமாய் அமர்ந்து 

அவள் வடிவம் கணிக்கும் 

பயிற்சிக் கலைஞர்களின் பார்வை 

உடம்பை அவளிடமிருந்து பிரித்து 

ஓவியத்தின் உறுப்புகளாக்குகின்றன.

விரல்கள் இழுக்கும் வரை கோடுகள் 

ஆவேசமான கிரீச்சல்களுடன்

அங்க அங்கமாக அவளை விழுங்குகின்றன

மேனியின்

மேடும் – சரிவும்

குழைவும் – நெளிவும்

வழுக்கலும் - தாங்கலும்

பாரமும் - நளினமும் 

முனைகளும் மொட்டும்

மடிப்பும் – மர்மமும்

ஓவியனை ஓயாமல் சீண்டி

அவன் திறனை

ஆழம் பார்க்கின்றன.

கண்ணெதிர் நின்ற உருவத்திமிரை

காகிதக் கட்டத்துக்குள் அடக்கி 

கலை வடிவாக்கி நிறுத்த அங்கே 

மனித மூச்சின் மொத்தமான ஆவேசம் 

மனங்களின் ஒருமித்த ரீங்க ஆங்காரம்

 பெண் என்ற அற்புதத்தை 

கனவு விரல்களால் பூசும் கலைஞனுக்கு

 காலமும் சூழலும் அர்த்தமற்றது

கீழ்ப்படிந்த உருவத்தின் 

மடிந்த வயிற்றுக்குள் இரையும் 

காலிக் குடல் காற்றும் 

விழிக்கிடையில் சுவடான நீர்க்கோடும்

ஓவியத்துக்குள் வருவதில்லை.... எப்படியோ 

தப்பிவிடுகின்றன

 முடிந்த போது 

காகிதங்களில் அவள்

பிறந்த கிளி போல் படபடக்கிறாள் 

கனவுகளைப் பார்ப்போருக்கு 

வாரியிறைத்துக்கொண்டு

No comments:

Post a Comment