LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 23, 2026

A POEM BY NESAMITRAN

A POEM BY 

NESAMITRAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

That tree is just standing there

It is this ‘just standing’ tree

that ripens an old tree

A new root keeps banging against a rock 

on the way, 

piercing and probing

Worrying over the cloud going past

wondering whether it would darken

and cause the rain

it is bending and curving by way of protecting

the branch from breaking apart

in the blowing wind.

Holding so much of sun in its palm

it is cooking food;

consoles the chicks in the nest

when the return of the mother bird is delayed.

Watches helplessly the snake 

that steals the eggs from another nest.

Turns flowers into fruits.

Offers its body to the woodpecker.

Fully grown when on the day

it is cut and taken away

It would remain just standing there

Saying ‘My mother is just a house wife, Sir’,

is the same as saying 

‘The tree is just standing there’.

.............................................................................

நேச மித்ரனின் கவிதை:

..............................................................................

 அந்த மரம் சும்மாதான் நிற்கிறது 

சும்மா இருக்கும் மரம்தான் 

ஒரு பழைய இலையை பழுக்க வைக்கிறது

ஒரு புதிய வேர் வழியில் இருக்கும்

பாறையை முட்டிக் குடைந்து கொண்டிருக்கிறது

கடந்து போகும் மேகம் கருக்குமா

பொழியுமா என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது

வீசும் காற்றில் கிளை முறிந்து விடாமல் இருக்க வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது

அவ்வளவு வெய்யிலை 

உள்ளங்கையில் சுடச் சுட ஏந்தி 

சோறு சமைத்துக் கொண்டிருக்கிறது

தாமதமாய் கூடு திரும்பும் பறவைக் கூட்டில் குஞ்சுகளுக்கு சமாதானம் சொல்கிறது

இன்னொரு கூட்டில் முட்டைகளை திருடி உண்ணும் பாம்பை ஒண்னும் 

செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கிறது

பூக்களை கனியாக்குகிறது

மரங்கொத்திக்கு உடல் தருகிறது

நன்கு வளர்ந்து நின்ற ஒரு நாள் 

அறுத்துக் கொண்டு போகும்போதும்

அப்படியேதான் நின்று கொண்டிருக்கும் 

என் அம்மா

ஹவுஸ் ஒயிப்தான் சார் என்பதும்

மரம் சும்மாதான் நிற்கிறது

என்பதும் ஒன்றுதான் 

..............................................................................................................


*கவிதை குறித்து சொல்லத் தோன்றும் சில.....

லதா ராமகிருஷ்ணன்

கவிமனம் இருபாலினமானது என்ற என் நம்பிக்கையின் நிரூபணமாய் இக்கவிதை. நிறைவான வாசிப்பனுப வத்தைத் தந்தது.   

கவிதையென்றால் என்னவென்றே தெரியாதவர்களெல் லாம் கவிதைக்களத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படுவ தாகப் பதாகை ஏந்தி வர ஆரம்பித்து, பெண் இன்னின் னது தான் எழுதவேண்டும் என்று பட்டிய லிட ஆரம் பித்து, ஆணினம் சார்ந்த கவிஞர்களை வீணாகக் குற்றவுணர்வு கொள்ளவைத்து, பெண் சார்ந்த மேம் போக்கான கவிதைகளை எழுதவைத்து, கவித்துவம் அறவேயற்று எழுதப்பட்ட வெறும் போதனை, அறிவுரை, பிரச்சார வரிகளையெல்லாம் பெண்விடுதலைக் கவிதைகளாக உருவேற்றி,  அதன் மூலம் தங்களுக்கான மேடைகளை நிறுவிக் கொண்டு, பெண்கள் எழுதும் கவிதைகளை ஆண் என்ற ஒரே காரணத்தால் திறனாய்வு செய்யத் தகுதிவாய்ந்தவர்களாய் பீடத்தி லேறி பரப்புரை செய்து ....

 - என நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் நாடகங் களை யெல்லாம் வருடக் கணக்காகப் பார்த்துக் கொண்டிருப்பதில் சலிப்புற்றிருக்கும், வெறுப்புற்றி ருக்கும் மனதிற்கு ஒரு வலி நிவாரணமாய் இவ்வகைக் கவிதைகள். 

பெண்களை victims என்பதாகவே உணரவைப்பதை விட தன் மதிப்பை அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கவித் துவம் குறை யாத படைப்புமூலமாய் உணர்த்தும், இவ்வகைப் படைப்புகளே, உண்மையான பெண்ணிய எழுத்தாக்கங்கள் .

திருமணமான இளம்பெண் ஒருவர் சமீபத்தில் எனக்கு எழுதி யிருந்த தன்விவரக்குறிப்பில் கணவன் உழைப்பில் வாழ்கிறேன் என்பதாய் குறிப்பிட்டிருந்தார். இயல்பாய் எழுதினாரோ, உள்மன வலியோடு எழுதினாரோ – படிக்க வருத்தமாக இருந்தது. 

இன்றைய வாழ்க்கைச்சூழலில் வேலைக்குப் போகாத தன் மனைவி குறித்து அவமானமாக உணரும் கணவர்களையும் காண முடிகிறது. 

HOUSEWIFE என்பதற்கு பதில் இப்போது HOME-MAKER என்று சொல்லப் படுகிறது. ஆனாலும், சொற்களின் அர்த்தங்களை மனதில் வாங்கிக் கொண்டாலொழிய மனமாற்றம் ஏற்படாது. மனமாற்றத்திற்கு இத்தகைய கவிதைகள் கண்டிப்பாக உதவும்.


No comments:

Post a Comment