வனவாசம்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
திக்குத்தெரியாத காட்டில் தேடித்தேடி இளைத்தேன் என்ற பாரதி
எதை யென்று கேட்பவர்களுக்கு இதை யென்று சொல்லியிருக்கக்கூடும்
அதை யென்று சொல்லியிருக்கக்கூடும்
இல்லையில்லை, எதையெதையோ என்றும் சொல்லியிருக்கக்கூடும்
இன்னும்………
விதையோ விடுகதையோ மன்பதையோ என்பதையோ
அறியலாகாது
தேடலில் புதைந்து வதைபட்டுச் சிதையும் மனம்
பாரதிக்கு முன்னும் பின்னும்

No comments:
Post a Comment