LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, August 20, 2026

PLEASE HELP QUALITY TAMIL POET ATHMAJIV

 A POEM BY 

ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


FRIENDS,

the amount may be big or small - that doesn't matter

your participation in helping a quality Tamil poet by name Athmajiv who needs our help and support is what matters most.

please gpay any possible amount to 78455 76241

நட்பினருக்கு வணக்கம்.

தொகை பெரிதல்ல - உங்கள் பங்களிப்பு பெரிது. சக கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதிக்கு உங்களாலான தொகையை நன்கொடையாக அனுப்பிவையுங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.

                         கவிஞர் ஆத்மாஜீவ் நலநிதிக்குழுவினர்

...................................................................................

I long to see Mother

The craving proves overwhelming

Why so? I am at a loss to know.

Relations  there yet not there

Siblings being indifferent to the core

My poem  and I 

Facing rejection

Faring all alone

Though I have a family of my own

A life my own

Yet 

Today

I long to see my mother

The craving proves overwhelming

Why so? I am at a loss to know….

அம்மாவை பார்க்க வேண்டும் என்று

மிக ஏக்கமாக இருக்கிறது.

ஏனென்று தெரியவில்லை.

இருந்தும் இல்லாத உறவுகள்.

உடன்பிறந்தவர்களின் புறக்கணிப்புடன்...

புறக்கணிக்கப்படும்

என் கவிதையும் நானும்

தனிமையில்.

எனக்கென்று ஒரு குடும்பம்

ஒரு வாழ்க்கை

எல்லாம் இருந்தும் இன்று ஏனோ...

அம்மாவை பார்க்க வேண்டும் என்று

மிக ஏக்கமாக இருக்கிறது...

ஏனென்று தெரியவில்லை.

ஆத்மாஜீவ்#அகபுத்தகம்




எமோஜிக்களின் உரையாடல் - 101

 எமோஜிக்களின் உரையாடல் - 101

ஃபேஸ்புக்கில இருக்கற எல்லாரும் வெத்து வேட்டுங்க; வேலையத்தவங்க; வெளங்காத வங்க...

நீங்களும் ஃபேஸ்புக்ல இருக்கீங்களே?


எல்லாத்திலேயும் நான் விதிவிலக்காயிருப்பவன்


??????????????????????????????????????????????? 

வந்தே மாதரம் - தாய்மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்

...................................................................................

வந்தே மாதரம்  . இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது.

பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆங்கிலேய அரசின் கீழ் பணி புரிந்த போதே, வந்தே மாதரத்தை எழுதும் எண்ணம் அவருள் இருந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது. 1870 வாக்கில், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், God Save the Queen என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலைக் கட்டாயமாக் கினர்.[1]. 

பங்கிம் சந்திரர், இப்பாடலைத் தான் புலமை பெற்றி ருந்த வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கொண்டு ஒரே மூச்சில் எழுதினார். 

நாட்டளவில், வந்தே மாதரம் (தாய் (மண்ணே) உன்னை வணங்குகிறேன்) என்பதே ஆங்கிலேய அடக்கு முறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது. 

இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலைப் பொது இடங்களில் பாடுவதைத் தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களைச் சிறையில் இட்டனர். ரபீந்திரனாத் தாகூர் முதலிய பலரும் இப்பாடலைப் பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். லாலா லஜபதி ராய் லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார்.[1].

"இப்பாடல் பிரபலமடைவதைக் காண நான் உயிரோடு இல்லாமல் போகலாம். ஆனால், இது ஒவ்வொரு இந்தி யனாலும் பாடப்படும்" என்று தன் பாடல் குறித்து தீர்க்கத்தரிசனமாகக் கூறினார் பங்கிம் சந்திரர். 

இப்பாடல் வரிகளை அடிப்படையாக வைத்து பல்வேறு இசை மற்றும் கவியாக்க முயற்சிகள் செய்யப்பட்டுள் ளன. இப்பாடலின் பல்வேறு வடிவ இசைப்பதிப்புகள் இருபதாம் நூற்றாண்டு முழுக்க வெளியாகின. Leader, அமர் ஆஷா, ஆனந்த்மத் ஆகிய திரைப்படங்களில் இப்பாடலுக்கான காட்சியமைப்புகள் இடம்பெற்றன. அனைத்திந்திய வானொலி நிலையங்களில் ஒலிபரப் பப்படும் வந்தே மாதரப் பாடலுக்கு ரவி சங்கர் இசை யமைத்துத் தந்ததாக நம்பப்படுகிறது.[1]. 

இன்று வரை, வந்தே மாதரம் என்பது இந்தியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்க மாகக் கருதப்படுகிறது.


தமிழாக்கம்

தாயே வணங்குகிறோம்

இனிய நீர்

இன்சுவைக்கனிகள்

தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை

மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்

இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்

எழில்மிகு புன்னகை

இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்

எங்கள் தாய்

சுகமளிப்பவளே

வரமருள்பவளே

தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்

உன் திருப்பெயர் முழங்கவும்

கோடிக் கோடிக் கரங்கள்

உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்

அம்மா ! 'அபலா '#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?

பேராற்றல் பெற்றவள்

பேறு தருபவள்

பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

அறிவு நீ

அறம் நீ

இதயம் நீ

உணர்வும் நீ

எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ

எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ

எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்

தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ

தாயே வணங்குகிறோம்

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்

அன்னை துர்க்கை நீயே

செங்கமல மலர் இதழ்களில் உறையும்

செல்வத் திருமகள் நீயே

கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே

தாயே வணங்குகிறோம்

திருமகளே

மாசற்ற பண்புகளின் மனையகமே

ஒப்புயர்வற்ற எம் தாயகமே

இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே

கருமை அழகியே

எளிமை இலங்கும் ஏந்திழையே

புன்முறுவல் பூத்தவளே

பொன் அணிகள் பூண்டவளே

பெற்று வளர்த்தவளே

பெருமைகள் அனைத்தும் அளித்தவளே

தாயே வணங்குகிறோம்

(*விக்கீபீடியாவிலிருந்து)

LET MY COUNTRY AWAKE.... TAGORE

 


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே - அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே - அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே - இதை

வந்தனை கூறி மனதில் இருத்தி என்

வாயுற வாழ்த்தேனோ - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?


இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்

ஈந்ததும் இந்நாடே - எங்கள்

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி

அறிந்ததும் இந்நாடே - அவர்

கன்னியராகி நிலவினிலாடிக்

களித்ததும் இந்நாடே - தங்கள்

பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்

போந்ததும் இந்நாடே - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?


மங்கையராயவர் இல்லறம் நன்கு

வளர்த்ததும் இந்நாடே - அவர்

தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்

தழுவியதிந்நாடே - மக்கள்

துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்

சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்

அங்கவர் மாய அவருடல் பூந்துகள்

ஆர்ந்ததும் இந்நாடே - இதை

வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்று வணங்கேனோ?

பாரதியார்

A HANDFUL OF QUOTABLE QUOTES

 





விசுவாசம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விசுவாசம்

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


எல்லோருமே யாருடைய அல்லது எதனுடைய  விசுவாசிகளாகவோதான் இருக்கிறார்கள்.

விசுவாசம் உண்மையில் நல்ல விஷயம்தான்….

பிரச்னை என்னவென்றால்

தன்னுடைய விசுவாசத்தை அறிவார்த்தமானது என்றும்

இன்னொருவருடைய விசுவாசத்தை

ஆக்கங்கெட்டதாகவும்

அன்றாடம் அவர்கள் மண்ணில் கையடித்து 

சத்தியம் செய்துகொண்டே யிருக்கிறார்கள்.

விசுவாசிகளில் ஒருசாரார் மறுதரப்பினரை 

மின்னஞ்சலிலும் குறுஞ்செய்தியிலும் முகநூலிலும் 

அச்சு ஒளி ஒலி ஊடகங்களிலும் 

யூ-ட்யூப், ட்விட்டர், சுவரொட்டிகள் சோப்பு விளம்பரங்கள் 

என ஒன்றுவிடாமல்

எல்லாத்திசைகளிலிருந்தும் வந்தபடி 

வழிமறித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

அதேபோல் மறுசாராரும்.

அதற்கென்றே செய்துவைத்திருக்கும் 

கண்ணுக்குப் புலனாகாதவகையில் 

ஒருபக்கமாகவே சரிந்திருக்கும் 

துலாக்கோலை

 கக்கத்திலிடுக்கிக்கொண்டு

உலாவந்துகொண்டிருக்கிறார்கள்.

சதாசர்வநேரமும்

மல்லாந்தபடியே பக்கம்பக்கமாய் 

ஒருவர்மேல் ஒருவர் 

காறித்துப்பிக்கொள்கிறார்கள்.

உன் விசுவாசத்திற்குரியது / குரியவர் உத்தமரா என்று எதிர்தரப்பிலிருந்தொருவர் 

எகத்தாளச் சிரிப்போடு பெருங்குரலெடுத்துக்கூவ

பதிலுக்கு உன் விசுவாசத்திற்குரியவர் பத்தரைமாற்றுத்தங்கம் 

என்று நீதான் மெச்சிக்கொள்ளவேண்டும் என்று 

முதல் தரப்பினர்

தாவிக்குதித்துக் கூச்சலிடுகிறார்.

குறிப்பு: வசைகளில் மிக நாகரீகமானவை மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளன.  

அனைத்துத் தரப்பு விசுவாசிகளும்

சதாசர்வகாலமும்

எதாவது நஞ்சைக் கக்கிக்கொண்டே

துக்கப்படுத்துவதும் துக்கித்திருப்பதுமாக

அரிதாய்க் கிடைத்திருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும்

அற்பமானதாக்கிக்காட்டப் 

பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடையதை மட்டுமா? 

கடையில் KISSES கேட்கும் குழந்தைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

கடையில் KISSES கேட்கும் குழந்தைகள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


KISSES என்ற பெயரில் புது சாக்லெட்டுகள் விற்பனையில்

தொலைக்காட்சி விளம்பரத்தில் விதவிதமான ஜிகினாத்தாளில்

அந்த ஆங்கில வார்த்தை மின்னக்கண்டு

அதன்வழியான சின்ன பெரிய விளைவுகளை எண்ணி தன்னையுமறியாமல் சின்னதாய் அதிர்கிறது மனம்.

இறுக்கமான சட்டைகளில் இடம்பெறும் வாசகங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இறுக்கமான சட்டைகளில் இடம்பெறும் வாசகங்கள்

‘ரிஷி’ 

(லதா ராமகிருஷ்ணன்)



• I AM ALL YOURS

• ENJOY ME AS NEVER BEFORE

• BE EXCITED FOREVER

• WHAT I HAVE IS THINE

• MY BODY IS DIVINE

• ALL IS FAIR IN LOVE AND WAR 

• RULES NO BAR

• I WANT MORE

• ENTER ME I AM WITHOUT A DOOR

• AM I EXCEEDING THE LIMIT? I DON’T CARE.

_ இத்தனை வாசகங்களும் மொத்தமாகவும்

தனித்தனியாகவும்

இடம்பெற்றிருக்கும்  இறுக்கமான சட்டைகளை அணிந்துகொண்டு

சிறுவர் சிறுமியரும் இளைஞர்கள் யுவதிகளும்

இன்னும் பிறரும்

அந்தப் பூங்காவில்

வேகவேகமாக நடைப்பயிற்சி செய்துகொண்டிருக் கிறார்கள்.

அந்த வாசகங்களின் அர்த்தம் உள்ளர்த்தமெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா 

என்று தெரிந்தும் தெரியாமலுமாய் 

அந்த அந்திப்பொழுதும் கழிய

வழக்கம்போல் கவியத்தொடங்கும் இருள். 

வனவாசம் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வனவாசம்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

திக்குத்தெரியாத காட்டில் தேடித்தேடி இளைத்தேன் என்ற பாரதி

எதை யென்று கேட்பவர்களுக்கு இதை யென்று சொல்லியிருக்கக்கூடும்

அதை யென்று சொல்லியிருக்கக்கூடும்

இல்லையில்லை, எதையெதையோ என்றும் சொல்லியிருக்கக்கூடும்

இன்னும்………

விதையோ விடுகதையோ மன்பதையோ என்பதையோ

அறியலாகாது 

தேடலில் புதைந்து வதைபட்டுச் சிதையும் மனம் 

பாரதிக்கு முன்னும் பின்னும் 

நாலுவரிக் கவிதையின் நிழல் - ‘ரிஷி” (லதா ராமகிருஷ்ணன்)

நாலுவரிக் கவிதையின் நிழல்

‘ரிஷி”

(லதா ராமகிருஷ்ணன்)

இந்தப் பூ எத்தனை அழகாயிருக்கிறது என்றால்

’இதோ சில மணிநேரத்தில் வாடிவிடும் பார்’ என்கிறார்கள்.

சூரியகதிர்கள் ஆசிர்வாதங்கள் என்றால்

கதிரோன் ஒருநாள் வெடித்துச்சிதறத்தான் போகிறான் என்கிறார்கள்.

ஒரு சோற்றுப்பருக்கையை இருபது எறும்புகள் இழுத்துக்கொண்டு செல்வதை

பிரமிப்போடு பார்த்துக்கொண்டு நின்றால்

வரும் கால்களில் அவை மிதிபட்டு சாகும்பார் என்கிறார்கள்.

நாலுவரிக் கவிதை வாசித்து கண்ணில் நீர்தளும்பி நின்றால்

அரைத்த மாவையே அரைப்பதையும் அள்ளித்தின்பதையும்

நிறுத்தவே மாட்டீர்கள் நீங்கள் என்று எள்ளிநகையாடுகிறார்கள்.

ஓர் உணர்வின் வருடலை புரிந்துகொள்ளாத 

தம் இயலாமையை

பார் பார் நான் நாலுவீடு கட்டிவிட்ட வெற்றியாளன் என்று

மார்தட்டி மிகுவலிமையாகக் காட்டுபவர்கள் மத்தியில்

தத்தித் தவழ்ந்துகொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள் _

ஒரு துளி நீருக்கும் கத்துங்கடலுக்கும் இடையேயான

 வேற்றுமையில் ஒற்றுமையை, 

ஒற்றுமையில் வேற்றுமையை 

கற்கக் கசடறக் கற்றவாறிருக்கும்

வளர்ந்த குழந்தைகளாய். 

சொல்லத்தோன்றும் சில..... லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில.....

லதா ராமகிருஷ்ணன்

(*மீள்பதிவு)






வினை – எதிர்வினை. நிறைய நேரங்களில் நிறைய பேர் தமது வசதிக்கேற்ப அல்லது தமது செயல்திட்டத்திற் கேற்ப, hidden agenda வுக்கேற்ப வினையை எதிர்வினை யாகவும் எதிர்வினையை வினையாகவும் அடிக் கோடிட்டுக் காட்டுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது. Out of Context சில வரிகளை எடுத்துக்காட்டு வதுபோல்.
ஒரு வினைக்கு எல்லோரும் ஒரேவிதமாக எதிர்வினை யாற்றுவார்கள் என்று சொல்லமுடியாது; எதிர்பார்க்க வும் முடியாது. சகிப்புத்தன்மை எல்லோரிடமும் ஒரேயளவாய் இருக்கும் என்று சொல்லமுடியாது.

இரண்டு நாட்களுக்கு முன்பு பெண்பாலினத்தைச் சேர்ந்த முகநூலினர் ஒருவர் ‘அவனா, சரியான பொறுக்கியாயிற்றே’ என்று பொதுவெளியில் உள்ள ஆண் ஒருவரைக் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தபோது ’ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைப் பழிக்கும் வாசகம் அல்லது சொல்லாடல் மட்டும்தான் அழுத்த மான கண்டனத்திற்கும் எதிர்ப்புக்கும் உரியதா?’ என்ற கேள்வியெழுந்தது. யாரிடம் கேட்பது?
வீடுகளிலும், வீதிகளிலும் நடக்கும் சண்டைகளில் ஒருவரை மிக மோசமாகக் காயப்படுத்த அவருடைய தாயை வேசியாக ஏசுவார்கள். தாய் உண்மையிலேயே அப்படியிருந்தாலும் அவள் தாய். அந்த வசை குறிப் பிட்ட நபரை எத்தனைக் காயப்படுத்தும், கோபப்படுத் தும் என்பதைப் பலமுறை கண்கூடாகப் பார்த்திருக்கி றேன்.
அவரவர் நம்பிக்கை அவரவருக்கு தாய்போலத்தான். இன்னொரு மதத்தைச் சார்ந்தவரோ, நாத்திகவாதியோ – எதற்கு அத்தனை கொச்சையாகப் பழிக்க வேண்டும்?
வார்த்தைகள் இருமுனைக் கத்திபோல். எதிரேயிருப் பவரையும் குத்திக்கிளறும்; நம்மையும் விட்டுவைப்ப தில்லை.
மூட நம்பிக்கை என்பது மதம் சார்ந்தது, கடவுள் சார்ந் தது மட்டும்தானா?
மாற்று மதத்தினரின் நம்பிக்கைகளை மிக மோசமான வார்த்தைகளில் பழிக்கும் அறிவுசாலிகள் பலரை முக நூலில் பார்க்கிறேன். ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களி லும் குறிப்பிட்ட பிரிவினரை மிக மோசமாகப் பழிப்ப தையே கொள்கையாகக் கொண்டு இயங்குபவர்களும் இங்கே நிறைய.
‘உங்க ராமர் கூர்க்காதான் – தெரியுமா?’ என்று யாரையோ எகத்தாளம் செய்யும் வேகத்தில் வருடம் முழுவதும் குடும்பத்தைப் பிரிந்து எங்கேயோ குளிரிலும் வெயிலிலும் காவல்காத்துக்கொண்டி ருக்கும் தொழிலாளியைப் பழிப்பதைக்கூட உணராத மனித நேயவாதிகளையும் இங்கே பார்க்கிறேன்.
முன்பெல்லாம் கட்சிகளில் எதிர்க்கட்சியினரைக் கேவலமாகப் பொது வெளியில் பேசுவதற்கென்றே தனியாக சிலரை வைத்திருப்பார்கள். அந்த வேலையை படைப்பாளிகளாக அறியப்படும் சிலர் ஏன் விரும்பி ஏற்றுச் செய்யவேண்டும்? என்று இப்போது முகநூலில் சில அறிவுசாலிகளின் வன்மமான, கொச்சையான வசைபாடல்களைப் படிக்கநேரும் போது வருத்தத்தோடு என்னை நானே கேட்டுக் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.

PLEASE HELP A QUALITY TAMIL POET

 A POEM BY 

ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

.....................................................................................


FRIENDS, PLEASE HELP QUALITY TAMIL POET ATHMAJIV



நட்பினருக்கு வணக்கம்.

தொகை பெரிதல்ல - உங்கள் பங்களிப்பு பெரிது. சக கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதிக்கு உங்களாலான தொகையை நன்கொடையாக அனுப்பிவையுங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.

                         கவிஞர் ஆத்மாஜீவ் நலநிதிக்குழுவினர்



.....................................................................................

A POEM BY ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

The pain of not being able to return

to the passage gone beyond

is being relived

by going there

with the wings of words

is what the grand world

of the writer indeed.

The height of  release

Is but a hiatus.

That 

would be forever conversing 

in the language of silence.

That is

the soft  music of Life

Those having ears listen

When the heart wanders 

in this space

That can’t be filled  with Life

Deficiency fills and swells

I fancy

The bird craving to fly

in the bygone sky

is the writer’s heart  - Oh My!

கடந்துபோன பாதைக்கு

திரும்ப முடியாத வலியை

வார்த்தைச் சிறகுகளால்

மீளச் சென்று வாழும் மனம்தான்

படைப்பாளியின் பெரும் உலகம்.

விடுபடுதலின் உயரம்

ஓர் இடைவெளி.

அது

மௌனத்தின் மொழியில்

பேசிக் கொண்டேதான் இருக்கும்.

அது

உயிரின் மெல்லிய இசை. 

காதுள்ளவர்கள் கேட்கிறார்கள்.

உயிரிட்டு நிரப்ப முடியாத

இந்த இடைவெளியில்

மனம் சஞ்சரிக்கும்போது

போதாமை நிரம்பி விடுமென

நினைக்கிறேன்.

கடந்து விட்ட வானத்தில்

பறக்கத் துடிக்கும் பறவை

படைப்பாளியின் இதயம்.

ஆத்மாஜீவ்  :