LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 1, 2022

அகங்காரம் அறியாமை அன்னபிற…5

 அகங்காரம் அறியாமை அன்னபிற…5

லதா ராமகிருஷ்ணன்
சிலரிடம் இந்தக் குணாம்சம் இருப்பதை வெளிப்படையா கவே பார்க்கமுடியும். சிலரிடம் இது அத்தனை வெளிப் படையாக இருக்காது, என்றாலும் இருக்கும்.
அதாவது, எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் கருத்து ரைக்கும் அறிவாற்ற லும் தகுதியும் தனக்கு மட்டுமே இருக்கிறது என்ற நினைப்பு.
இத்தகையோர் கருத்துரைமை, பேச்சுரிமை என்று தெளி வாகக் குரல் கொடுப்பார்கள். ஆனாலும், ஒரு கருத்தை மற்றவர் உரைத்தால் மட்டம் தட்டுவார்கள். அதே கருத்தை பிறிதொரு சமயம் வேறொரு வழியில் தன் புதிய சிந்தனையாக முன்வைப்பார்கள்.
தான் ஒருவரைப் புகழ்ந்துபேசினால் அது நியாயமான, சீரிய கணிப்பு. மற்றவர் ஒருவரைப் புகழ்ந்து பேசினால் அது ஆக்கங்கெட்ட நகைப்புக்குரிய செயல்.
அந்த மற்றவர் செய்த எத்தனையோ நல்ல காரியங்க ளைப் பற்றி மறந்தும் பேசமாட்டார்கள். ஆனால், அவர் தன் நிலைத்தகவலில் பகிர்ந்த ஒரு செய்திக்காக(அந்தச் செய்தியில் கிடைத்த ஏதோவொரு நற்செய்தியின் தாக்கத்தால் அப்படிச் செய்திருக்கலாம்) கட்டம் கட்டி அவரை மதிப்பழிக்கத் தயங்கமாட்டார்கள்.
இதையெல்லாம் நட்புரீதியாகச் செய்வதாக வேறு திட்ட வட்டமாகத் தெரிவிப்பார்கள். அப்படித்தான் திட்டவட்ட மாக நம்புகிறார்களா என்று தெரியவில்லை.
மற்றவர்களுக்கு மூளையே இல்லை என்றோ அல்லது வயது காரணமாக மூளை மழுங்கிவிட்டது என்றோ மிக எளிதாக ஒருவரை மட்டந்தட்டி விடுவதன் மூலமே தங்கள் மூளைத்திறனை மிகைப்படுத்திக் காட்டிக்கொள் வது நம்மிடையே உள்ள சிலரிடம் புரையோடியிருக்கும் ஒருவித நோய்க்கூறு.
சுய பரிசீலனை மட்டுமே இதற்கு சிறந்த மருந்து.

No comments:

Post a Comment