LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 1, 2022

அகங்காரம் அறியாமை அன்னபிற….. 3 லதா ராமகிருஷ்ணன்

 அகங்காரம் அறியாமை அன்னபிற….. 3

லதா ராமகிருஷ்ணன்

தொலைக்காட்சி சேனல்களில் சில நிகழ்ச்சிகள் நேர் காணல்களில் பங்கேற்றி ருக்கிறேன்.
பெரும்பாலும் பேட்டி காண்பவர் நியமமான கேள்விகள் சிலவற்றைத் தயாராகக் கொண்டுவந்திருப்பார்கள். சிலர் ‘உங்களிடம் என்னென்ன கேள்விகள் கேட்டால் நன்றாயி ருக்கும் என்று நீங்களே சொல்லிவிட்டால் உதவியாயி ருக்கும் என்று கேட்பார்கள்.
ஒரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்துபவருக்கு அது அவருடைய வேலைகளில் ஒன்று. ஒரு நேர்காணலை நடத்துவதற்கு சில முன் தயாரிப்புகள் அவசியமே என்றா லும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவரளவிலேயே ஆர்வ மான வாசகராக இருந்தாலொழிய அவர் பேட்டி காண வேண்டிய அனைத்துப் படைப்பாளிகளின் எழுத்தாக்கங் களையெல்லாம் அவர் படித்திருக்க வழியில்லை. அத னால் அவரைக் கோபித்துப் பயனில்லை.
பேட்டி கொடுத்துவிட்டுத் திரும்பும்போது ஜெயா டிவி யில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு டப்பா ஒன்று தந் தார்கள். சன் டிவியில் என் முத்திரைவாசகங்கள் சில வற்றை சொல்லாமல் வெட்டி அப்புறப்படுத்தி ஒளிபரப்பி யிருந்தார்கள்.
விஜய் டிவியிலிருந்து ஒருமுறை பெண் ஒருவர் என் னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பெண்ணா வேலைக்குப் போகும் பெண்ணா – யார் சிறந்தவர் என்றவிதமாய் ஒரு தலைப் பைக் கூறி அதில் கலந்துகொள்ளும்படி அழைத்தார். அத்தகைய தலைப்புகளின் அபத்தத்தைச் சுருக்கமாக எடுத்துரைத்து வர இயலாது என்றேன்.
சில வருடங்களுக்கு முன்பு பொதிகை தொலைக்காட்சி யில், பார்வைக் குறைபாடுடையவர்களைப் பற்றிய கலந்துரையாடலில் பங்குபெற மருத்துவர் ஒருவரும் பார்வையற் றோர் நன்னல அமைப்பான WELFARE FOUND ATION OF THE BLINDஇல் இடம்பெற்றுள்ள நானும் அழைக் கப்பட்டிருந்தோம்.
பார்வைக் குறைபாடுடைய பெண்ணொருவரும் இடம் பெற்றுக் கருத்துரைத்தால் நன்றாயிருக்கும் என்று நான் சொன்ன ஆலோசனையை ஏற்று எனக்குத் தெரிந்த பெண் யாரையேனும் அழைத்துக்கொண்டுவரச் சொன் னார்கள். எனக்குத் தெரிந்த மாணவி ஒருவரையும் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றதில் எனக்குச் செலவு ரூ.300.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக எனக்கு ரூ 1000 வழங்கப்படுமென்றும் அந்த பார்வையற்ற மாணவிக்குத் தனியாக சன்மானம் தர இயலாது என்றும் தெரிவித்தார் கள்.
எனக்குக் கிடைக்கும் ஆயிரம் ரூபாயில் உனக்கும் பாதி தருகிறேன். என்றேன் அந்தப் பெண்ணிடம். சில கருத்துக ளைச் சொல்ல முடியுமே என்ற ஆர்வம் அந்தப் பெண்ணி டம் இருந்தது. அருமையாகப் பேசினார்.
ஆனால் எனக்கான சன்மானம் வரவேயில்லை. கடிதம் மின்னஞ்சல், அலைபேசி, தொலைபேசி என்று நயமாக வும் நறுக் கென்றும் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் தேற வில்லை.
ஒரு கட்டத்தில் அலுப்புத்தட்டி, என் கைக்காசிலிருந்து அந்த மாணவிக்கு ரூ500ஐக் கொடுத்துமுடித்தேன்.
’வாரா வரவு எட்டணா வந்த செலவு பத்தணா – இப்ப டியே போனால் துந்தனா துந்தனா’ என்று கவிதையாகா வரிகள் சில மனதிலோடின!

No comments:

Post a Comment