LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, January 25, 2026

அகங்காரம் அறியாமை அன்னபிற….. 1 லதா ராமகிருஷ்ணன்

 அகங்காரம் அறியாமை அன்னபிற….. 1

லதா ராமகிருஷ்ணன்
ஒரு கவிஞரின் கவிதைகள் இன்று பிரசுரமாகாதிருக் கலாம். குறிப்பாக, அச்சில். அதற்காக, அவர் கவிதையே எழுதுவதில்லை என்று சொல்லிவிட முடியுமா?
அப்படியே அவர் இன்று எழுதுவதில்லையென்றாலும் அதற்காக அவர் எழுதியதெல்லாம் இல்லையென்றாகி விடுமா?
அவர் இலக்கியத்தின் வேறு துறையில் இயங்கத் தீர்மானித்திருக்கலாம்; இயங்கிக்கொண்டிருக்கலாம்.
அட, அவர் எழுதிய அருமையான கவிதைகள் அகல்விரி வாக இன்றளவும் பேசப்படவில்லையே. அதனால் அவர் கவியில்லையென்றாகிவிடுமா?
அட, சும்மாவே உட்கார்ந்திருந்தாலும்கூட அவர் எழுதிய கவிதைகள் இல்லாமலாகிவிடுமா?
யாருக்கு யார் எதற்குத் தன்னை நிரூபிக்கவேண்டும்?
ஒருவர் கவிதையெழுதிக்கொண்டேயிருந்தால்தான் அவர் கவிஞர் என்றால் பின் நம்மிடையே நினைவுமண்ட பங்கள் எதற்கு? நினைவுதான் எதற்கு?

No comments:

Post a Comment