CONDITIONAL கருணையாளர்கள்
சிற்றெறும்புக்கு சுவைக்கக் கற்கண்டு கிடைக்கவில் லையே
என்று கண்ணீர் உகுத்தவாறே
வீட்டிலிருக்கும் சர்க்கரை புட்டியின் அடியிலிருந்து
சுரண்டியெடுத்துப் போடுவார்
மதிய தேனீருக்கு இல்லையென்றால்
பரவாயில்லை என்றவாறே
வீதியோரம் அடிபட்டுக்கிடக்கும்
பூனைக்குட்டியைத்
தனது கவிதையின் சஞ்சீவி மூலிகைகளால் குணப்படுத்தி
கைகளில் எடுத்துக் கொஞ்சுவார்
சுவாசிக்கவும் மறந்து வாசிக்க வாசிக்க
நேசம் பெருக்கெடுக்கும்.....
ஆனால் தேசம் என்றால் மட்டும்
மோசக்காரா என்பார்.
ஊரையெல்லாம் நாசம் செய்வோரை
ஏசினால்
பேசாதே என்று சங்கியாக்கி சனாதனியாக்கி
மங்க்கியாக்கி
மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
சமத்துவவாதியாய்
தன்னார்வல BOUNCER ஆக, BODYGUARD ஆகக்
காவல் காத்துக்கொண்டிருப்பார் என்னாளும்
‘SOME ARE MORE (MUCH MORE) EQUAL’
சிம்மாசனவாதிகளை

No comments:
Post a Comment