//2016, டிசம்பர் 23ஆம் நாள் பதிவேற்றப்பட்ட கவிதை//
மொழித்துவம்
(*என் முதல் கவிதைத்தொகுப்பில் - அலைமுகம் - இடம்பெற்றுள்ள கவிதை)
........................................................................................................
நீலம் சிகப்பு மஞ்சள் பச்சை
கருப்பு வெளுப்பு மா பூ பலா
கண் மருந்து பால் ஈ புறா
அது இது எது எது
தினம் கணம் நிரந்தரம்
மரணம்
ஜனனம் புனரபி
ஸாம்ஸன் தலைமுடி
தகர்தூணுறு(ரு) வரு(று)
தேவ தரிசனம்!
தண்தீச்சுட ரொளிர்
தேஜோமயம்!
நிர்விசாரம் பெருகும்
விரிவெளிக் கதவருகாய்
இருகைப்புலிரோஜா சிரித்திருக்க
காற்றுக் கடிகாரம் கூறும்
நாளை படித்தாயிற்றென!
நிலவூறி யினிக்கும் நா!
நதியெல்லாம் நெஞ்சுள்ளாய்!
நட்டதழிந்தோட ஓட
விட்ட இடம் விடியும்!
சிறுகாற் பெருவளத்தா னாட்சியில்
செக்குமாடுயர்த்திய சிறகெங்கும்
பட்டொளி வீசிப் பறக்கும் காட்சி
காணப் போதுமோ கண்கோடி!
(* சமர்ப்பணம் : குட்டித்தோழனுக்கு)

No comments:
Post a Comment