LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 18, 2025

சொல்லத் தோன்றும் சில…… லதா ராமகிருஷ்ணன்

  சொல்லத் தோன்றும் சில……
_லதா ராமகிருஷ்ணன்
ஆங்கில நாளிதழிலும் தமிழ் நாளிதழிலுமாய் தினமும் ஒன்றிரண்டு செய்திகள் மனதின் அமைதியை முறித்துப் போடத் தவறுவதில்லை.
சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி. 14 வயதுடைய பள்ளிச் சிறுவர்கள் மூவரோ நால்வரோ அவர்களுடைய வகுப்புத் தோழி ஒருத்தியோடு அவளுடைய வீட்டில் ஒன்றாகப் படிப்பது வழக்கமாம். அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் வேலை நிமித்தம் வெளியே போயிருக்க அந்தப் பெண்ணின் தங்கையை வெளியே போய் விளையாடச்சொல்லியிருக் கிறார்கள் சிறுவர்கள். சிறிது நேரங் கழித்து வீடு வந்தவள் மூடியிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து பார்த்தால் வகுப்புத் தோழியை நிர்வாணமாக்கி கைகளையும் கண்களையும் கட்டி நீலப்படம்போல் வீட்டில் நடத்திப்பார்க்க முயற்சி நடந்துகொண்டிருந்ததாம். அழுதுகொண்டே தங்கை யிடம் வீட்டாரிடம் தெரிவிக்கவேண்டாமென அக்கா சொல்லி யிருக்கிறாள். சில நாட்களில் அக்காவுக்கும் தங்கைக்கும் ஏதோ சண்டை வர தங்கை அம்மாவிடம் நடந்ததைச் சொல்லி விட்டாள். அவளுடைய பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தர அந்தப் பையன்கள் கூர்நோக்குப் பள்ளிக்கும் அந்தப் பெண் சீர்திருத்த இல்லத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார் கள்.
இன்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் ஒரு செய்தி. CBSC PLUS 2 மாணவர்கள் இருவர். பெரிய விரோதமெல்லாம் கிடையாது. ஒருவனின் உடற்பருமனையும் அவனுடைய மார்புப்பகுதி யையும் மற்றவன் கிண்டல் செய்துகொண்டே யிருப்பானாம். பருமனாயிருக்கும் பையனை தேவையில்லாமல் அங்கே யிங்கே தொட்டு கேலி செய்வானாம். அது BODY SHAMING ஆகவும் இருந்திருக்கலாம். ஓரினப்புணர்ச்சிக்கான அழைப் பாகவும் இருக்கலாம். பருமனாயுள்ள பையன் அது குறித்து பள்ளியிலும் புகார் செய்து பள்ளியிலும் அந்த இன்னொரு மாணவனைக் கண்டித்திருக்கிறார்கள். சமீபத்தில் அந்த பரும னான பையன் மற்றவனை நட்பாக ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று தயாராகக் கொண்டுசென்றிருந்த கத்தியால் குத்தி யிருக்கிறான். அந்தப் பையன் இறந்துவிட்டான். விவரமறிந்து, கொன்றவனின் பெற்றோர் அவனை காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். காவல்நிலையத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு எதனால் அப்படிச் செய்தேன் என்றும் தெரிவித்திருக்கிறான் அந்த மாணவன். அவனும் இப்போது கூர்நோக்கு இல்லத்தில்.
சின்னக்குழந்தைகள் மீதான கவனமும், அக்கறையும் வளரி ளம் பருவத்தினர் மீதான அக்கறையும் இப்போ திருப்பதைக் காட்டிலும் இன்னும் பன்மடங்கு அதிகமாக இருக்கவேண்டும் என்பதையே இத்தகைய செய்திகள் புலப்படுத்துகின்றன.
குழந்தைகளும் வளரிளம்பருவத் தினரும் பெற்றோர், ஆசிரி யர்களின் பொறுப்பு என்ற பார்வை சரியல்ல. ஒட்டுமொத்த சமூகமும் இதற்கான பொறுப்பேற்க வேண்டும். இப்படியொரு செய்தியைப் படித்ததுமே சிலர் அதற்கு சாதிச்சாயம் பூசிப் பார்க்க முற்படுவதும் இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்ப டித்தான் என்று எல்லோரையும் ஒரு மொந்தையாக்கி அங்கலாய்ப்பதும், பிரச்சனைக்குத் தீர்வாகாது.

No comments:

Post a Comment