LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 17, 2019

TO THOSE PLAYING TO THE GALLERY …. Latha Ramakrishnan

TO THOSE 
PLAYING TO THE GALLERY ….
Latha Ramakrishnan
Something to decry
Something to denigrate
Something to scoff at
Something to shout against
Something to rage
Something to stage-manage
something to wage
Something to sabotage.
Something to divide
Something to override….
So many somethings to abide
Thereby making you cast aside
Your Conscience – the Guide
who helps you discern and decide.

THE ART OF BEING A HALF-BAKED INTELLECTUAL…Latha Ramakrishnan

THE ART OF BEING A 
HALF-BAKED INTELLECTUAL…

Latha Ramakrishnan
You say that 'a rioter can be identified
by their dress'
and so denigrate a people’s leader
in the true spirit of a
half-baked intellectual…
Well _
You should have added
one or two _
such as
Ah, yes _
'AND BY THEIR VENOM-SPITTING WORDS TOO'

THE CORRUPT VOICE.. Latha Ramakrishnan


THE CORRUPT VOICE..

Latha Ramakrishnan


“Gone with the wind
Our Democracy” he opined.
When asked to give reason _
“Police force is not in my hand;
Nor have I the power to pronounce judgment
and remand
And….”
He went on and on.
Agonized, away I ran.


APPEAL - LATHA RAMAKRISHNAN

APPEAL

LET’S CARE TO KNOW


BEFORE WE CONDEMN;

CRITICIZE;

LET’S CARE TO BE WISE.

AMEN.

THE PARADE Latha Ramakrishnan


THE PARADE


Latha Ramakrishnan


FOR THOSE
WAITING FOR A CHANCE
TO RAISE THEIR VOICE
AGAINST ANYTHING, ALWAYS
CHAOS IS MARVELLOUS;
MARVELLOUS, CHAOS.
IN THE NAME OF ‘MILK OF HUMAN KINDNESS’
THEY REMAIN BLOODTHIRSTY
IN ALL SENSE.
UTTERING LIES MILLION
ALL FOR FUN.....
OH MY!
MAY THEIR TRIBE
NEVER MULTIPLY.


Tuesday, December 3, 2019

கண்ணோட்டம் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கண்ணோட்டம்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)




காதுகளும் நாசியுமாகத் 
தாங்கிப்பிடித்திருக்கும்
மூக்குக்கண்ணாடி உதவியோடு
சில பல மின்விளக்குகளின் உதவியோடு
என்னால் பார்க்க முடியும்;
படிக்க முடியும்


ஆனால்,எனக்கு பானை செய்யத் தெரியாது.
பாடத் தெரியாது.
பறவைகளின் மொழியைப்
புரிந்துகொள்ளவியலாது.
பல காதங்கள் நடந்துசெல்ல முடியாது.
பகலவனை அண்ணாந்து பார்த்து
சரியான நேரத்தைக்கணித்துச்
சொல்லவியலாது.
பசியில் வாடும் அனைத்துயிர்களுக்கும்
அட்சயபாத்திரமாகவியலாது.

பார்ப்பதால் எனக்குப்பார்க்கத்
தெரியுமென்று
நிச்சயமாகச் சொல்லவியலுமா என்ன?

பார்வைகள் ஆயிரம் எனில்
எனக்குத் தெரிந்தவை
பத்துக்குள் தான் இருக்கும்.....

அவருக்குப் பார்க்கமுடியாது;
ஆனால் பாடத் தெரியும்;
அற்புதமாக கிடார் வாசிக்கத் தெரியும்;
அவர்கள் வீட்டுப்பூனையிடம்
அவர் எப்படி அளவளாவுவார் தெரியுமா!

அந்தத் தெருமுனையிலிருக்கும் ஜூஸ் கடையில்
அவர் முப்பது ரூபாய் ஜூஸ்
குடிக்கும்போதெல்லாம்
அந்தக் கடைப்பையன்கள்
அத்தனை நேர்மையாகப் பிழிந்துதரும்
ஒன்றரை கோப்பை பழச்சாறில்
அரைகோப்பையை
தொலைதூர ஊரிலிருந்து வந்து
வேலைபார்த்துக்கொண்டிருக்கும்
தன் தம்பியொத்த சிறுவனுக்கு
அத்தனை அன்போடு தந்துவிடுவார்.

பார்க்கவியலாத தன்னைப் பார்த்தபடி
பேசும் மனிதரின்
மனதிலோடும் வரிகளை மிக நன்றாகவே
படித்துவிட முடியும் அவரால்.

பார்வைகள் ஆயிரமும் அவருக்கு
அத்துப்படியில்லையாயினும்
அறுபதாவது பரிச்சயமுண்டு கண்டிப்பாய்.

அதற்கும் மேல்

அம்மா அப்பாவிடம் அன்பாக
நடந்துகொள்ளத் தெரியும்;
அடுத்தவர் மனம் நோகாமல்
மாற்றுக்கருத்துகளை முன்வைக்கத்
தெரியும்.
அவ்வளவாகத் தன்னைப் பொருட்படுத்தாத
சமூகத்தின் அறியாமையை
மன்னிக்கத் தெரிகிறது;
மறந்துவிடக்கூட முடிகிறதுஅவரால்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் _
அவரால் பார்க்கமுடியவில்லையெனில்
அவரைப்போலவே என்னாலும்;

என்னால் பார்க்கமுடியுமெனில்
பார்த்தபடியேதான் அவரும்.


ON THIS DAY 3RD DECEMBER - INTERNATIONAL DAY OF THE DIFFERENTLY-ABLED....





The Differently Abled || A Heart Touching Short Film

Monday, November 18, 2019

மந்தைவெளி மரணக்கிணறுகள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மந்தைவெளி மரணக்கிணறுகள்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)





கிணறு தரையில்தான் திறந்திருக்க
வேண்டுமென்பதில்லை.

இரு சக்கர முச்சக்கர நாற்சக்கரங்களில்
வெறிமீறிய வேகத்தில் வருமவற்றில்
விழுந்துவிடாது தப்பிக்கப் பிரயத்தனம்
செய்பவர்களில்
முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள்
மாணாக்கர்கள் பல பருவங்களில்
மழலையை ஏந்திச்செல்பவர்கள்
எனப் பலதிறத்தார்…
கரணம் தப்பினால் மரணம் சம்பவிக்கும்
அந்த உருண்டோடும் கிணறுகளில்.
ஒருமுறை அப்படித்தான் சம்பவித்தது
கோர விபத்து.
உயிர்பலி ஒன்றோ இரண்டோ –
நினைவில்லை.
(வரம்போலும் சாபம் போலும்
மறதி வாழ்வில்)
உறுத்தும் மனசாட்சியை அடக்க
மந்தைவெளி பஸ் டெர்மினஸைச்
சுற்றியுள்ள நான்கு வீதிகளும்
‘ஒன் வே’ ஆக மாறின.
சிறிதுகாலம் சட்டப்படி நடந்து
கொண்டவர்கள்
மெல்லமெல்ல தம் இட்டப்படி
நடக்க ஆரம்பித்தார்கள்.
சரியாகச் சொல்வதென்றால்,
ஓட்ட ஆரம்பித்தார்கள்.
தொடக்கத்தில் அங்கங்கே
காவல்துறையினர் சிலர்
காட்சியளித்தார்கள்.
காலப்போக்கில் அவர்களும்
காணாமல் போனார்கள்.
காணக்கிடைக்காதவை
நடைபாதைகள்.
பெரியவர்கள் படித்தவர்கள்
அவரவர் வீடு கடைகளுக்கு
வாயிலாக நடைபாதைகளை
வெட்டிச்சாய்த்து, வேலியிட்டு
மாமாங்கமாகிவிட்டது.
இருக்கும் அற்பசொற்ப நடைபாதைகளை
பூக்கடை, காய்கறிக்கடை,
வத்தல் வடாம் கடை
வாகாய் அடைத்திருக்க _
வேகமாய்த் திரும்பும் பேருந்துகளையும்
பொருட்படுத்தாமல்
வீதியோரமாகவே நடக்கவேண்டும்
பாதசாரிகள்.
ஏழை வியாபாரிகளிடம் சட்டம் பேசினால்
ஏழை பாதசாரி ஏகாதிபத்தியவாதி
யாகிவிடுவார்.
அத்திபூத்தாற்போலிருக்குமொரு
பிளாட்பாரத்தின் பெருஞ்சதுரப்பகுதியில்
PRESS என்ற சொல்லைத் தாங்கிய
கார்வண்டியொன்று
காலங்காலமாக நின்றுகொண்
டிருக்கிறது.
பேருந்தை ஓவர்-டேக் செய்யும்
இருசக்கரவாகனம்
வீதியோரமாய்ப் போவோரை
வெட்டிச்சாய்க்காதிருந்தால்
அவருக்கு ஆயுள் கெட்டி.
மந்தைவெளி பேருந்துநிலையத்தினுள்
மின்னலெனப் புகுந்து வெளியேறும்
மோட்டோர்பைக்குகளும்
ஆட்டோரிக்ஷாக்களும்
முழுவேகத்தில்.
ஒன் -வே தானே என்று
வண்டிவரக்கூடாத பக்கம்
ஒதுங்கி நடந்துவந்தால்
கொன்றுவிடும் வேகத்தில்
ஒன் – வேயை டூ-வே ஆக்கி
எதிரே சட்டத்திற்குப் புறம்பாய்
சீறிக்கொண்டுவரும் வண்டியின் ஓட்டுநர்
முறைப்பார் நம்மை.
சமயத்தில் கெட்டவார்த்தையில்
திட்டவும் செய்வார்.
மதியழிந்தொரு கணம் தோன்றும்
நாம்தான் சரியில்லையோவென.
இம்மை மறுமை யென்பதான
வார்த்தைகளெல்லாம்
நம்மையும் மீறி நினைக்கப்படும்.
ஒன் – வே என்று தெரிந்தும்
இந்த வீதிகளில்
வரக்கூடாத வழியில் புகுந்து
புறப்படுபவர்கள்
முன்பெல்லாம் கள்ளனுக்கேயுரித்தான திருட்டுமுழியுடன்
செல்வார்கள் சற்று மெல்ல.
இன்றோ
இது சரியல்ல என்று நாம் சொல்வதைக்
கேட்டுப்
புத்தி பேதலித்துவிட்டதோ என்றொரு
பார்வை பார்த்து
பத்திரம் தொலைத்துச்
சீறிப் பாய்கிறார்கள்.
இன்றைய தலைமுறைக்குத் தெரியாத
அரசியல் ரகசியங்கள்போல் _
இன்னும் சரியாகச் சொல்வதென்றால்,
அரசியல்வாதிகள் சிலரின் அறியாத்
திரைமறைவுச் சரித்திரங்கள்போல் _
இந்த வீதிகள் ஒன் – வே என்றறியாத
ஒரு தலைமுறை உருவாகிவிட்டது
புரிகிறது.
கரணம் தப்பி யாரேனும்
நரபலியானால்
ஒருவேளை மீள்கவனம் பெறக்கூடும்
மந்தைவெளி ஒருவழிச்சாலைகள்.

பாவனைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பாவனைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


தான் அறிந்த எனில் அங்கீகரிக்க விரும்பாத நாலுபேர் சொல்லும் உலகத்தரமான படைப்புகளில் ஒன்றிரண்டை அரைகுறையாகப் படித்துவைத்து
அவ்வப்போது உங்களை நேராகவும் பக்கவாட்டிலுமாய்ப் பார்த்தபடி
அந்த எழுத்தாக்கங்கள் பற்றிச்
சில மேலோட்டமான கருத்துரைப்பார்.
அதிக வேலையிருப்பதால் விரிவாக எழுதமுடியவில்லை என்று
விளக்கம் தரக்கூடும்.
கவனமாகக் கேட்டுக்கொள்வதோடு
கண்டிப்பாக ‘லைக்’ போடவேண்டும் நீங்கள்.

நாளையே இதைச் செய்துவிட மாட்டார். அப்படிச் செய்தால் இன்னொருவரிடமிருந்து இரவல் வாங்கியிருப்பது தெரியவந்துவிடும்.
இன்னாரிடமிருந்து என்றுகூட.
அதுவே நான்கைந்து வாரங்களுக்குப் பின்
கூறினால்
அந்தக் கூற்றின் இரவல்தன்மை குறைந்துவிடுமென்பது
களநிலவரம்.

கலவரம் வேண்டாம்.
தரமான படைப்பாளியாவதற்கு
தரமான படைப்புகளைத் தரவேண்டும்
என்பதெல்லாம் சரிதான்.
ஆனால், அதுமட்டும்போதாது.
அதிக பாவனைகளைக் கைக்கொள்ளவேண்டும்.
ஷேக்ஸ்பியரே தன்னைக் கேட்டுக்கொண்டுதான் அத்தனை நாடகங்களையும் எழுதினார் என்று அடித்துக்கூறவேண்டும்.
அதெல்லாம் அத்துப்படி யவருக்கு.

அதை அவர் செய்யச்செய்ய
அதிக ’லைக்கு’களை நீங்கள் போட்டுப்போட்டு
போட்டிபோட்டு போட்டுப்போட்டு
கூட்டிக் கழித்து வகுத்துப் பெருக்கி எப்படிப்பார்த்தாலும்
அவர் அறிவுசாலிப் படைப்பாளியாகத்
தெரியும்படி
பீடத்தில் உயரே ஏற்றிப்
போற்றிப்பாடவேண்டும்.

படைப்பாளி பெரிய படைப்பாளியாக,
அவரைப் படிப்பவர்களும் பெரிய வாசகர்களாகிவிடுவார்கள்!

ஆனால் அவரையன்றி வேறு எந்தவொரு
அசலான பெரிய படைப்பாளியைக்
கொண்டாடினாலும்
அப்படிச் செய்யும் வாசகர்கள்
நரகத்திற்குத்தான் போவார்கள்
அங்கே யவர் பேயாக வந்து
உங்கள் ரத்தம் குடிப்பார்.

அவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது;
ஆனால் பேய் பிசாசுகள் மீது நிறையவே உண்டு.
அதனால்தான் பகுத்தறிவின் தேவையைத் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறார்.

புரிந்தால் சரி.

விறுவிறுவென உங்கள் வலக்கர அல்லது இடக்கர ஆள்காட்டிவிரல் அல்லது மோதிரவிரலால்
’Like’ -ஐ அழுத்துங்கள்.
'Like - Love' இரண்டையும் ஒருசேர அழுத்த முடிந்தால்
இன்னும் நல்லது.

இதோ அடுத்த உலகத்தரமான இன்னொரு எழுத்தாளரின் இரண்டு மூன்று வரிகளை வாசித்துமுடித்துவிட்டார் மேதகு படைப்பாளி்.
அவை குறித்த தனது மேலான பார்வையை
இன்றிரவுக்குள் பதிவேற்றிவிடுவாரோ…
இல்லை, இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்திருப்பாரோ……