திண்ணை
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
12 ஆகஸ்ட்
2018
அரசுப்
பேருந்துகளில் பயணம்
செய்யும்போதெல்லாம் அதிகமாய்க்
கண்ணில் படும்
குறள்கள் இரண்டு :
§ இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று .
§ வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல் .
இந்த
இரண்டு குறள்களுமே
இவற்றிற்கு இருக்கும்
உரைகளைக் காட்டிலும்
அதிகமாய் எத்தனையோ
அடுக்குகளைக்கொண்ட அர்த்தங்கள்
செறிந்தவை . ஆனால் ,
’ எனக்கு பழத்தை
விட காய்
தான் பிடிக்கும் ’
’ பழத்தை விடக்
காயே அதிக
சத்துவாய்ந்தது ’ என்றோ
’ யாதொன்றும் தீமை
இலாத சொலல்
என்றால் இனிய
பொய் தான்
வாய்மை என்றாகிறது ’
என்றோ ’ யாதொன்றும்
தீமை இலாத
சொலல் இருக்க
வழியில்லை . அதுபோல்
‘ வாய்மை என்று
ஒன்றிருக்க வழியில்லை ’
என்றோ யாரேனும்
கூறுவாரேயாயின் அது
சரியில்லை என்று
நமக்குத் தெளிவா
கவே புரியும் .
முகநூலில்
சேர்ந்த பின்
அதில் எழுதிவரும்
எத்தனையோ , அறியப்படாத
எனில் அற்புதமான
கவிஞர்களின் நுண்ணுணர்வுமிக்க
கவிதைகளை வாசிக்கும்
வாய்ப்பு கிடைத்துவருகிறது .
அதேசமயம் நுண்ணுணர்வு
மிக்க படைப்பாளிகளாய்
அறியப்படுபவர்கள் , அத்தனை
நுண்ணுணர்வு மிக்க
கவிதைகளை எழுதிவருபவர்கள் ,
சில விஷயங்களைப்
பேசும்போது எதிராளியை மதிப்பழிக்க
வேண்டும் என்ற
ஒரே நோக்கில்
மொழியை எத்தனைக்
கொச்சையாகக் கையாள்கிறார்கள் ,
கூராயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்
என்பதைப் பார்த்து
அதிர்ச்சியாக இருந்தது .
தங்களுக்கிருக்கும்
பேச்சுரிமை , எழுத்துரிமை ,
கருத்துரிமை மற்றவர்களுக்கும்
உண்டு என்ற
பிரக்ஞயேயின்றி சிலர்
மற்றவர்கள் மேல்
( தரங் ) கெட்ட
வார்த்தைகளை , சகட்டுமேனிக்கு
வீசியெறிவதைப் படிக்கும்போதெல்லாம்
எல்லையற்ற வருத்தம்
ஏற்படுகிறது .
அவரவர்
மதிக்கும் மனிதர்களைப்
பற்றி அடுத்தவர்
அத்தனை கேவலமாய்ப்
பேசுவது இங்கே
பரவலாக நடந்துவருகிறது .
தங்களுக்குத்தான் எல்லாவற்றைப்
பற்றியும் சிந்திக்கவும் ,
கருத்துரைக்கவும் உரிமையிருக்கிறது
என்பதுபோல் சிலர்
நடந்துகொள்வதைப் பார்க்கும்போது
அதில் உள்ள
அதிகாரவுணர்வைப் பற்றி
எண்ணாமலிருக்க முடியவில்லை .
மாற்றுக்
கருத்தை கண்ணியமாக
முன்வைக்க முன்வராமல் ,
மாற்றுக்கருத்தை அதற்குரிய
மரியாதை யோடு
அணுக முயலாமல்
ஏசுவதும் வசைபாடுவதும்
மொழிசார் கூருணர்வு
மிக்க படைப்பாளிகளும்
எளிதாகக் கைக்கொள்ளும்
எதிர்ப்புமுறை , எதிர்தரப்பினரை
வாயடைக்கச் செய்யும்
முறை என்பதைக்
காணும்போது மிகவும்
வருத்தமாக இருக்கிறது .
அப்படி
வேதனையளித்த ஒரு
சில பதிவுகள் :
(* யார் சொன்னார்கள் என்பது முக்கியமல்ல , சொல்லப்பட்ட விஷயமே , அதில் தொக்கிநிற்கும் insensitivity எடுத்துக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம் என்பதால் சொன்னவர்களின் பெயர்கள் தரப்படவில்லை . மற்றபடி , கிசுகிசு பாணியில் எழுதுவது நோக்கமல்ல )
அறச்சீற்ற INSEN SITIVITY கள் :
“ அதத்தான்
நானும் சொல்ல
வர்றேன் . செவிடன்
காதுல ஊதுனது
சங்கு ன்னுன்னாவது
கண்ணு தெரிஞ்சவனுக்கு
தெரியும் . இங்க
சுயகுருடர்கள் ( கோபமா
சொல்லணும்ன்னா .. குருட்டு
கபோதிகள் ) தானே
அதிகம் .”
_ தமிழக அரசு
குறித்த விமர்சனமாய்
படிக்கக்கிடைத்த ‘ கமெண்ட் ’
இது . ஒரு
விஷயத்தை தர்மாவேசத்தோடு
அறச்சீற்றமாய் எழுதுபவர்கள்
பார்வையற்ற வர்களை ,
ஊனமுற்ற வர்களை
இப்படி உவமை
காட்டுவதிலுள்ள insensitivity ஐப்
பற்றி எண்ணிப்பார்த்து
வருத்தப்படாமல் இருக்க
முடியவில்லை . இது
குறித்து பார்வையற்றவர்கள்
பலர் என்னிடம்
கூறி வருத்தப்பட்டிருக்கிறார்கள் .
பள்ளிப்பருவத்திலேயே யானை
முதலான விலங்குகள்
பறவைகளின் உடல்வடிவம் ,
உறுப்புகளையெல்லாம் உரிய
பொம்மைகள் வார்ப்புவடிவங்
களைத் தொட்டுப்
பார்க்கச் செய்து
அறியச்செய்வார்கள் . ஆனாலும்
இந்த யானைக்
கதை மட்டும்
அப்படியே தொடர்கிறது
என்று வருத்தமும்
கோபமுமாகக் கூறுவார்கள் .
பார்வை யின்மையை
மீறி படித்துப்
பட்டம் பெற்று
இன்று தர்மபுரி
கல்லூரியில் பேராசிரியராக
(Principle-in-charge என்று நினைக்கிறேன் )
பணியாற்றிவரும் கவிஞர்
கோ . கண்ணனின்
‘ ஓசைகளின் நிறமாலை ’
என்ற தொகுப்பில்
இடம்பெறும் கவிதை
இந்த கோபத்தையும்
வருத்தத்தையும்
துல்லியமாகப் பதிவுசெய்திருக்கும் :
தடயம்
( கோ . கண்ணன் )
காவியம்
பாடி காலம்
வென்றனர் எம்
முன்னோர்
அலட்சியப்படுத்திய
அறிவீலிகளின் முகத்திரையைக்
கிழித்ததாய்
சொல்லப்பட்டனர்
எம் மூதாதையர் .
எம்
ஞானகுருவோ எம்
அறிவுத் திறவுகோலுக்காய்
அறுபது
ஆண்டு அகிம்சைப்
போர் புரிந்தார் .
அளவிலா
புகழ் கொண்டு
அறிவால் வென்றார் .
மூவாசல்
கதவுகள் அடைபட்டும்
எம் மூதாட்டி
விரல்
வழி உலகளந்தார் ;
வினோதங்களின்
வினோதமாய்த் திரிந்தார்
இன்று
எம் சோதரர்
இமயத்தில் கால்
பதித்து
பனி
கண்டத்தே பவனி
வருகின்றனர் .
சக
மனிதர்க்குச் சமமாய்
நாங்களும் அமர்ந்திருக்க
இன்றும்
சித்தரிக்கப்படுகிறோம்
துந்தனா
சகித தெருப்பாடகராய் ,
திருவோட்டோடு .
காட்சிக்கூடங்களில்
கண்காட்சிப்பொருள் ஆக்கப்படுகையில்
எப்படி
எங்கே தேடி
மீட்பது
எமக்கான
உண்மைத் தடயத்தை ?
2.
இலக்கியப் பங்களிப்பும் INSENSI TIVITY யும்
எதிர்வினை
என்பது அதற்குக்
காரணமான வினையின்
அளவு அல்லது
அதற்கும் அதிகமாக
மோசமாகிவிடும் போது
அந்த எதிர்வினை
அதற்குக் காரணமான
வினை குறித்து
குறை சொல்லும் ,
தீர்ப்பளிக்கும் தகுதியை
இழந்துவிடுகிறது என்றே
தோன்றுகிறது .
ஒரு
பிரதி புரியவில்லை
என்று படைப்பாளியிடம்
சொல்லும்போது அது
தனக்கும் தன்னொத்தவர்களுக்கும்
புரியும்படியாக எழுதப்படவில்லை ,
எழுதப்படவேண்டும் , அப்பொழுதுதான்
அது இலக்கி
யமாகக் கொள்ளப்படும்
என்ற அதிகார
தொனி அதில்
ஊடுபாவாக இடம்பெறுவதை
உணரமுடியும் .
( உண்மையாகப்
புரிந்துகொள்ளும் ஆர்வத்தில்
‘ புரியவில்லை ’ என்று
சொல்லிக் கேட்பவர்களின்
தொனியும் அணுகுமுறையும்
தெளிவான அளவில்
வேறாக இருக்கும் .
இந்த ‘ புரியவில்லையைப்
பொருட்படுத்தி விரிவாகப்
பேசுவது எந்தவொரு
படைப்பாளிக்கும் மனநிறைவைத்
தரும் ; தரவேண்டும் .)
அதேசமயம் ,
இந்த அதிகாரத்தொனிக்கு
எதிர்வினையாற்றுவதாய் கருத்துரைப்பவர்கள்
தரமாக எழுதும்
சக படைப்பாளியை
“ நீ யார்னே
தெரியாது என்று
கூறுவதில் , “ உன்
இலக்கியப் பங்களிப்பு
என்ன ?” என்று
கேட்பதில் உள்ள
அதிகார தொனியையும்
அதிலுள்ள INSENSITIVITY ஐயும்
எண்ணிப்பார்த்து வருத்தப்படாமலிருக்க
முடியவில்லை .
களிப்பும்
பரிதவிப்புமே எழுதத்தூண்டும்
படைப்பாளிக்கு தன்
இலக்கியப் பங்களிப்பை
அளக்க சிலர்
கைகளில் ஆழாக்குகளோடும் ,
அவரவர் அதிகாரத்திற்கேற்ற
துலாக் கோல்களோடும்
அலைபாய்ந்துகொண்டிருப்பது குறித்து
பிரக்ஞையிருக்க வழியில்லை .
அதுசரி ,
இங்கே இலக்கியப்
பங்களிப்பு என்பது
இலக்கியம் சார்ந்ததாக
மட்டுமா இருக்கிறது ?
இறுதிசெய்யப்படுகிறது ?
3.
INSENSITIVITY யின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர்
வயதின்
காரணமாக உடலில் ,
தோற்றத்தில் கண்டிப்பாக
மாற்றங்கள் நிகழ்கின்றன
என்றாலும் வயது
என்பது உண்மையில்
மனதால் நிர்ணயிக்கப் படுகிறது
என்று தோன்றுகிறது .
சமீபத்தில்
யதேச்சையாக தொலைக்காட்சியில்
காணநேர்ந்த பழைய
திரைப்படக் காட்சி
யொன்றில் 60 வயது
நிரம்பிய கதாநாயகி
‘ இனி தன்
வாழ்க்கை சூன்யம்
என்று அழுவதைக்
காணநேர்ந்தது . வேடிக்கையாகவும்
விசனமாகவும் இருந்தது .
வாழ்வு சூன்யமாக
வயதா காரணம் ?
பாதிப்பேற்படுத்தாத
‘ தலைமுடிச்சாயம் எல்லாம்
வந்துவிட்ட பின்பு ,
நிறைய மருந்து
மாத்திரைகள் கிடைக்கும்போது ,
முதுமை என்பது
குறித்த சமூகத்
தின் பார்வையில்
நிறைய மாற்றம்
ஏற்பட்டுவிட்ட நிலையில்
இந்த 60 வயது
இப்போது பழைய
60 வயதாக பாவிக்கப்படுவதில்லை
என்பதைப் பார்க்க
முடிகிறது .
ஆனாலும்
நிறைய திரைப்படங்களிலும்
தொலைக் காட்சித்
தொடர்களிலும் , ( இதன்
தாக்கத்தால் என்றும்
சொல்லலாம் ) தெருவில்
எதிர்ப்படும் இளைய தலை முறையினர் மத்தியிலும்
‘ பெரிசு ’ என்று
கேலியாக 60, 60+ வயதினரைக்
குறிக்கும் வார்த்தை
பரவலாகப் புழங்குகிறது .
‘ ஒண்ணுத்துக்கும்
லாயக்கில்லாதது , வீணாக
தனக்குத் தேவையில்லாத
விஷயங்களில் மூக்கை
நுழைப்பது , வாயைப்
பொத்திக்கிட்டுப் போக
வேண்டியது , என
இந்த ஒற்றைச்சொல்
பலவாறாகப் பொருள்தருவது .
சுருக்கமாகச்
சொல்வதென்றால் , சமூகம்
என்பது இந்த
வயதிலானவர்க ளையும் (60, 60+ அதற்கு
மேல் ) உள்ளடக்கியது ,
இவர்களையும் உள்ளடக்கியே
முழுமை பெறுகிறது
என்ற புரிதலை
அறவே புறந்தள்ளும்
சொல் இந்த
‘ பெரிசு ’.
சமீபத்தில்
இந்தச் சொல்லுக்கு
இணையான கிழவர்
/ கிழவர்கள் என்ற ,
ஒப்பீட்டளவில் நந்தமிழ்ச்
சொல்லை தன்னளவில்
அந்தப் பிரிவைச்
சேர்ந்த ஒரு
சீரிய இலக்கியவாதி
யும் இளக்காரமாகப்
பயன்படுத்தியிருக்கும் INSENSITIVITY ஐ
எண்ணி வருத்தப்படாமல்
இருக்கமுடியவில்லை .
4. காவியம் சார் INSENSITIVITY:
ராமன் என்பது சீதை மட்டுமல்ல சீதை என்பது ராமன் மட்டுமல்ல
‘ ராவணன் இருக்கையில் சீதைக்கு பயமேது ’ என்பது போன்ற வாசகங்களப் படிக்க நேரும்போதெல்லாம் ( அடிக்கடி படிக்க நேர்கிறது ) அதிலுள்ள அடிமட்டமான INSENSITIVITY மனதில் அறைகிறது .
ஒரு காவிய நாயகன் நாயகி , காவியக் கதை எல்லா வற்றிலுமே சாரமும் உண்டு ; சக்கையும் உண்டு . எல்லா வற்றிலும் சாரத்தை எடுத்து சக்கையை விடுத்துச் செல்வதே வாசகர்களாகிய நாம் செய்ய வேண்டியது .
ராமன் என்ற காப்பிய நாயகனை நாம் ஏன் எப்போதுமே சீதையை சந்தேகித்தவனாக மட்டுமே அணுக வேண்டும் ? அறுபதினாயிரம் மனைவியரை ஒரு மன்னர் வைத்திருந்த காலத்தில் ஒரு சொல் ஒரு இல் ஒரு வில் என வாழ்ந்தவ னும் அவன்தானே . எல்லாப் பெண்களுக்குமான ஆத்மார்த்தமான எதிர்பார்ப்பு அவன் வழி சீதைக்கு லபித்ததல்லவா ! சீதையை சந்தேகித்ததில் , அவள் பிரிந்த தில் அவன் மகிழ்ச்சியடைந்தானா ? மன நிம்மதியடைந் தானா ?
’ தீர்ப்பளிக்காதே நாமெல்லோருமே பாவிகள்தான் ’ என்று ஒரு பரத்தைமீது கல்லெறி பவர்களை நோக்கி ஏசு கூறுவது பரத்தையர்களைக் குறை சொல்வதாக தொனிக்கிறது . அவர்கள் பரத்தையரானதற்கு இந்தச் சமூகம்தானே காரணம் என் று எழுத்தாளர் தேவகாந் தன் தனது கதையொன் றில் குறிப்பிட்டிருப்பார் . இதுவோர் ஆழமான சமூகநேயம் மிக்க பார்வை என்பதில் சந்தேக மில்லை . ஆனால் , ஏசுவின் வாசகத்தில் தொனிப்பது , அடர்ந்திருப்பது பரத்தையை குறை சொல்லும் போக்கா , அல்லது அவளை ஏசுபவர்களுக்கு புத்திபுகட்டும் நோக்கமா ? எழுத்தாளர் தேவ காந்தனை எனக்குத் தெரியும் . பல வருடங்களுக்கு முன் அவர் சென்னையில் இருந்த காலத்தில் நாங்கள் இதுகுறித்து விவாதித்ததுண்டு .
‘ உனக்கும் கீழே உள்ளவர் கோடி , நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு ’ என்று முடியும் சுமைதாங்கி திரைப் படப் பாடலைப் பற்றி ( கண்ணதாசன் எழுதியது ) ஒருவர் நமக்குக் கீழே உள்ளவர் கோடி என்னும் போது அதை நினைத்துப்பார்த்து நிம்மதியாக இருக்கமுடியுமா , அப்படிச் சொல்வது அக்கிரம மல்லவா என்று கோபத்தோடு எழுதியிருந்தார் . அவருடைய சமூகப் பிரக்ஞையைப் புரிந்து கொள்ள முடி கிறது என்றாலும் அந்தப் பாட்டில் இடம்பெறும் அந்த வரிகள் அலைப்புறும் நாய கனை அமைதிப்படுத்தப் பாடப்படுவதே தவிர ’ அவருக்குக் கீழே உள்ள மனிதர்க ளைப் பொருட்படுத்தாமலிருக்கும்படி போதிப்பதல்ல .
இருபதாண்டுகளுக்கு முன்பு என் தோழியொருவர் ஆசிரியராக இருந்து வெளிவந்துகொண் டிருந்த சூர்யோதயா என்ற இதழொன்றில் ‘ படி தாண்டிய பாஞ்சாலி ’ என்ற சிறுகதையை எழுதியிருந்தேன் . மகாபாரதப் போரில் தங்கள் கணவர்கள் , குழந்தைகள் , தகப்பன் , தமையன் என்று எல்லோரையும் இழந்துபோன பெண்கள் பாஞ்சாலியை சந்தித்து உங்கள் வீட்டு விவகாரத்திற்காக எங்கள் மக்களையெல்லாம் போரில் பலியாக்கிவிட்டீர்களே இது என்ன நியாயம் என்று கோபத் தோடு கேட்க , அந்தக் கேள்வியின் உண்மையுணர்ந்த பாஞ்சாலி தன் கணவர்களி டம் தன்னுடைய சீதனத்தை கேட்டு வாங்கி அவர்களை விட்டு நீங்கி பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பணியாற்றச் செல்வதாய் அந்தக் கதை விரியும் .
மகாபாரதத்தை ஒரு புதிய சமூகக் கண்ணோட்டத்தில் அணுகிவிட்டதாய் எனக்கு உள்ளூற ஒரு பெருமை இருந்திருக்கக் கூடும் . அதற்குப் பின் சில காலம் கழித்து ஆங்கில நாளிதழொன்றில் வாசிக்க நேர்ந்த KURUKSHETHRA AND
ITS AFTERMATH என்ற கட்டுரை என் கதை முன்வைத்த பார்வையும் அதைத் தாண்டிய பல பார்வைகளும் , போரின் கொடுமை , மக்கள் சீற்றம் , போரின் வெற்றி யாருக்குமே மகிழ்ச்சியளிக்காது என்ற உண்மை என பலப்பல குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு ’ என்பதாய் அந்தக் காப்பியத்திலேயே விரிவாகப் பேசப்பட்டிருப்பதை விரித்துக் கூறியிருந்தது !
வால்மீகி ராமாயணம் என்ற கடலில் தனது காப்பிய முயற்சி ஒரு துளி என்று கம்பராமாயணத்தில் கம்பர் குறிப்பிட்டிருப்பார் . கம்பராமாயணத்தில் இந்திர னோடு கலந்திருந்த தன் விளைவாகக் கிடைத்த சாபத்தால் கல்லாகச் சமைந் திருக்கும் அகலிகை ராமனின் கால்பட்டு மீண்டும் உயிர்பெற்றதும் ராமனின் காலில் விழுந்து வணங்குவதாக வரும் . ஆனால் மூல காவியமான வால்மீகி இராமாயணத்தில் இந்திரனின் அழகில் மயங்கி , தெரிந்தே அவனோடு கலக்கும் அகலிகை சாபத்தால் அருவமாக உலவிக்கொண்டிருக்க ராமன் அந்த இடத் தின் எல்லையை மிதித்ததும் உருவம் பெறுவாள் . ஆனால் , ராமன் தான் அவள் காலில் விழுந்து வணங்குவான் . தெய்வாதீனமாக நேர்ந்துவிட்ட ஒன்று என்று தான் அவளுடைய இந்திரக் கலப்பை அவள் மகனே குறிப்பிடுவான் . அதற் காக யாரு ம் அந்தப் பெண்மணியை மதிப்பழித்து நடத்தமாட்டார்கள் .
வால்மீகி இப்படி எழுதியதால் சோரம் போகிறவள் பெண் , பெண் சோரம் போவதே சரி என்று சொல்வதாய் எடுத்துக்கொள்வது சரியா? கம்பர் இதை மாற்றி யெழுதியதால் அவர் ஆணாதிக்கவாதியாக முத்திரை குத்தத் தக்கவரா ?
நான் இந்தக் காப்பியங்களையெல்லாம் முழுமையாகப் படித்ததாகச் சொல்லிக் கொள்ள முடியாது . ஆனால் , இந்தக் காப்பியங்களிலும் சரி , வேறு பல ஆழமான ப டைப்புகளிலும் சரி – அடிநாதமாக ஒரு தொனி , ஓர்
உட்குறிப்பு வேர்ப்பிடித்து ரீங்கரித்துக் கொண்டிருக்கும் . அதை நாம் மாற்றிப் போடலாகாது . ஒரு பிரதியில் மறைவான உட்பிரதி , உப பிரதி இருந்தால் அதைக் கண்டுகொள்ளலாம் , வெளிக்கொணரலாம் . ஆனால் , நாமே மறைவான பிரதிகளை உருவாக்க லாகாது .
இராமாயணம் முன்வைப்பது ராமன் கொடுமைக்காரக் கணவன்; அடுத்தவன் மனைவியைக் கவர்ந்துசெல்கிறவனே பேராண்மையாளன் என்பதா ? இல்லை யென்றே நான் நினைக்கிறேன் . அப்படியிருக்குமானால் இராமாயணம் இத்தனை காலம் மக்களிடையே நிலைத்தி ருக்க வழியில்லை .
சீதை என்ற கதாபாத்திரம் எவ்வளவு இழிவாக ச் சித்தரிக்கப்பட்டாலும் அதைப் பற்றி சிந்திக்கும் பெண்களே கூட எதிர்வினையாற்ற முன்வராதிருப்பதையும் பார்க்க முடிகிறது .
இந்த INSENSITIVITY யின் மறுபக்கமே Adding Insult to Injury என்பதாய் ஓர் ஊரில் சில பத்து ஆண்டுகளுக்கு முன் குழந்தையற்ற பெண்கள் ஊர்த்திரு விழாவின்போது மலை மீதுள்ள கோயிலுக்குச் சென்று யாரோடு வேண்டுமானாலும்கலந்து கருவுறும் வழக்கமிருந்ததாக , உண்மையாகவே இருக்கும் ஊரின்
பெயரைக் குறிப்பிட்டு , அந்த ஊர்ப்பெண்களுக்கு அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைப் பொருட்படுத்தாமல் கதையுருவானதும் , அதை பெண் ணியப் பிரக்ஞையுள்ள பெண்களும்கூட கருத்துரிமை என்ற பெயரில் ஆதரித் துப் பேசியதும் எழுதியதும் .
காப்பியங்களாக இருந்தாலும் சரி , சமகாலப் படைப்புகளாக இருந்தாலும் சரி , வாழ்வின் BIG PICTURE அல்லது அதன் பிரதிபலிப்புகளை முன் வைக்கும் படைப் புகளை நாம் ஒற்றைப் பரிமாண வாசிப்பாக , பொருள்பெயர்ப்பாகக் குறுக்கி விடுவதால் என்ன பயன் ?
தவிர , ராமன் என்பவன் சீதையின் கணவன் மட்டும்தானா ? ஒரு தனிமனிதன் ஒரு சமூக மனிதன் , ஒரு தனயன் , ஒரு அரசன் , ஒரு மகன் , ஒரு நண்பன் – ஒரு கருத்தாக்கம் , ஒரு சிந்தனைப்போக்கு , ஒரு வாழ்முறை, ஒரு கற்றல் ( நல் லதும் அல்லதும் ) – இன்னும் எத்தனையோ . நாம் உள்வாங்கிக் கொள்வதில் தான் இருக்கிறது எல்லாம். .
நான் புகுமுக வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது கம்பராமாயணச் செய்யுள்கள் சில பாடமாக உண்டு . அதில் ஒன்று – முதல்நாள் பட்டாபிஷேகம் என்ற போதும் மறுநாள் காட்டுக்குப் போ என்றபோதும் ‘ சித்திரத்தில் வரைந்த செந்தா மரையைப்போல் அப்படியே இருந்தது அவன் முகம் என்பதாய்
விவரிக்கும் அந்தப் பக்குவப்பட்ட மனம் வாய்க்கவேண்டும் என்பதே , அதற்கான வழிகாட் டியே என்னைப் பொறுத்தவரை எனக்கான இராமார்த்தம் .
5. முகநூலில் நீலப்படங்களும் நட்புக்கோரிக்கையும்
அவை முன்வைக்கும் INSENSITIVITY யும் :
நாளும் நிறைய பேர் நட்புக்கோரிக்கை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் . பலரைப் பற்றி அவர்களது முகநூல் பக்கத்தில் எவ்வித விவரக் குறிப்பும் இல்லை . சிலருடைய முகநூல் பதிவுகளில் அநாகரீகமான ஆபாசமான பதிவுகள் சொல்லாடல்கள் மண்டிக்கிடக்கின்றன .
நான் சாதாரண ஆள் . எந்த இலக்கியக் குழுவிலோ , அரசியல்கட்சியிலோ அங்கம் வகிக்காதவள் . எனக்கு சரியென்று பட்டதை என் முகநூலில் கண்ணியம் குறையாமல் பதிவிடுகிறேன் . அத்தகை யோரிடமே நட்பு பாராட்ட வும் விரும்புகிறேன் .
சிலநாட்களுக்கு முன்பு TAMI
L(or tami l) என்பவரிடமிருந்து நட்புக் கோரிக்கை வந்திருந்தது.
அவரைப் பற்றிய விவரம் அறிய அவருடைய முகநூல் பக்கத்தில் சென்றால் அப்பட்டமான நீலப்படம் ஓட்டிக் காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது . இதைப்பார்க்க கூகுளில் எத்தனையோ வழிகள் இருக்கின்றனவே – அவரிடம் நட்புபாராட்டித்தான் பார்க்கவேண் டும் என்பதில்லையே என்று நினைத்துக் கொண்டேன் .
இணையக்குற்றங்கள் , அவற்றிற்கான தண்டனைகள் என்று எத்தனை பேசப்பட்டாலும்இத்தகைய அநாகரீகங்கள் , அத்துமீறல்கள் இருந்துகொண்டுதானிருக்கும் போலும் . அந்த முகநூல் கணக்கை ‘ ஸ்பாம் ’ செய்துவிட்டேன் .
பல வருடங்களுக்கு முன் என்னுடைய கட்டுரை அல்லது கதைக்கு எதிர்வினையாய் வந்த தபாலில் ஆண்பெண் உடலுறவு சம்பந்தமான கோட்டோவியங்கள் பல அனுப்பப்பட்டிருந்தன . அது குறித்து ஒரு பத்திரிகையில் எழுதும்போது ’ படங்கள் உண்மையிலேயே நன்றாக வரையப்பட்டிருந்தன . ஆனால் , அவை அனுப்பப் பட்டிருந்ததன் நோக்கம் ( ஒரு பெண்ணைக் கேவலப்படுத்துதல் , அச்சுறுத்துதல் ) நன்றாக இல்லை ’ என்று
நான் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது .
தங்கள் முகநூல் பக்கங்களில் இத்தகைய ஆபாசமான படங்களைப் பதிவேற்றிய கையோடு பெண்களுக்கு நட்புக்கோரிக்கையும் அனுப்புவதில் அடங்கியுள்ளது உச்சபட்ச insensitivity .
நீலப்படம் பார்க்க விரும்புபவர்கள் பார்த்துக்கொள்ளலாம் . நிறைய பேருக்கு அது வடிகாலாகக்கூட அமையலாம் . அது குறித்து நீதிநெறி புகட்டுவது என் நோக்கமல்ல . ஆனால் என்னளவில் இந்த நீலப்படங்கள் ஆண் - பெண் உறவை வெறும் உடல்ரீதியானதாக்கி , காட்சிப்பொருளாக்கி் கொச்சைப்படுத்துகின்றன . ஒரு பெண் எத்தனை ஆண்களால்வேண்டுமானாலும் என்னென்ன வக்கிரமான வழிகளிலும் புணரப்படலாம் . எந்தப் பெண்ணும் அதை உள்ளூரவிரும்புவாள் என்ற எண்ணத்தையே இந்த நீலப்படங்கள் எல்லா வழிகளி லும் உருவேற்றிக்கொண்டேயிருக்கின்றன .
இந்தப் படங்களில் ஒரு பெண்ணின் உடல் , மன ரீதியான விருப்பம் , விருப்பமின்மை குறித்த பிரக்ஞை அறவே ஓரங்கட்டப்படுகிறது . ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண் தொழிலாளியை அவளது முதலாளி தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்துவது வெகு இயல்பானது என்பதாய் , அதில்அந்தப் பெண் உள்ளூறப் பெருமையடைவதாய் திரும்பத்திரும்பக் காட்டப்படுகிறது .
அவள் உடலில் இதனால் ஏற்படும் ரணகாயங்கள் , தாங்கமுடியாத வலி குறித்த பிரக்ஞையை இவை கச்சிதமாக ஓரங்கட்டிவிடுகின்றன .
இதன் சாதக பாதகங்கள் தெரியாத இளம்பருவத்தினர் வாழ்வுகளில் இந்தப் படங்கள் எத்தனையோ விதமான அக , புற பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன .
இந்தப் படங்களில் இடம்பெறும் பெண்கள் எப்படியெல்லாம் வலைக்குள் சிக்கவைக்கப்படுகிறார்கள் , இத்தகைய படங்களைக் காட்டி இளம் பெண்களும்ஆண்களும் எப்படியெல்லாம் தூண்டப்படுகிறார்கள் , அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதை யெல்லாம் தினசரி பார்க்க , கேட்க நேர்கிறது .
இன்று தனிநபர்களாலும் , கும்பலாலும் நடத்தப்படும் வன்புணர்ச்சிகள்அதிகரித்துவரமுக்கியக் காரணம் கைபேசி வழியாகவும் இணையம் வழியாக வும் காணக்கிடைக்கும்
இத்தகைய நீலப்படங்களே என்று தோன்றுகிறது .
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துவர இந்த இணைய , கைபேசி நீலப் படங்களும்
ஒரு முக்கியக் காரணம் .
இத்தகைய படங்கள் கைபேசியிலும் இணையத்திலும் மலிந்துகிடப்பது குறித்தசமூகப்பிரக்ஞை இன்னும் பரவலாகவேண்டியது இன்றியமையாதது .