LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label நன்னெறியென்ப…….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label நன்னெறியென்ப…….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Monday, August 20, 2018

நன்னெறியென்ப…….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நன்னெறியென்ப……..
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


நாவடக்கம் வேண்டும்
நாலு பேருக்கு மட்டும்.
அந்த நாலு பேரும்
நான் தேர்ந்தெடுப்பவர்களாக இருக்கவேண்டும்.
நாவு எல்லோருக்கும் ஒரேபோல்தானே
என்றெல்லாம் நாக்குமேல பல்லு போட்டு
பேசிவிடலாகாது.
நாவறுந்துபோய்விடும்
(
என்று சொன்னால் அது
நகைப்புக்கிடமாக்கப்படவேண்டிய
மூடத்தனம்.
அதுவே நாக்கறுக்கப்படும் என்று சொன்னால்
அது நல்லறிவுத்திறம்).
நன்னெறியை நன்னாரி என்றெழுதினால்
என்ன குடியா முழுகிவிடும்
என்று கேட்ட கையோடு
நரியை நாய் என்றெழுதுவார்
பாயைப் பிறாண்டிக்கொண்டிருப்பார் என்றும்
காட்டமாகச் சொல்லிவிடவேண்டும்.
விதவிதமான வசைமொழிகளில் நான்
உங்கள் நம்பிக்கைகளை
குதறிக் கிழித்துக் கெக்கலிக்கலாம்.
எதிர்ப்புக்காட்டலாகாது
பொறுத்தார் பூமியாள்வார்.
(
செங்கப்பட்டிலா, சொழிங்கநல்லூரிலா
எங்கே கிடைக்கும் காணிநிலம்?
வாடகை உயர்ந்துகொண்டேபோகிறது.
வரவுக்கு மேல் செலவு
கட்டுப்படியாகவில்லை என்றெல்லாம்
முட்டாள்தனமாகக் கேட்டாலோ
பட்டென்று ஓரே போடு போட்டுவிடுவேன் வாயில்]
பட்டி என்று நீயென்னைத் திட்ட
பதிலுக்கு நான் ரெண்டு தட்டு தட்ட
கட்சொல்லாமல் ஊடகக் காமராக்கள்
படம்பிடித்துக்கொண்டிருக்கிறது பார்
விட்டகுறை தொட்ட குறையாய்
கொட்டும் அதிர்ஷ்டத்தில் உன் முகமும்
தொலைக்காட்சித்திரையில் தட்டுப்படக்கூடும்
ஓர் ஓரமாய்.
கலைந்துள்ள முடி திருத்தி வியர்வையைக்
கைக்குட்டையால்
ஒத்தியெடுக்க மறக்காதே
என்று மட்டுமே சொல்லிவைக்க முடிந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்