இலக்கிய நிகழ்வும் INCLUSIVITYயும்
சமீபத்தில் தில்லியில் சாகித்ய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த இலக்கிய நிகழ்வொன்றில் ‘ மாற்றுத் திறனாளிப் படைப்பாளிகளுக்கென தனி அமர்வு இருந்ததாகத் தெரியவந்தது.
ஆனால், அந்த அமர்விலும் கலந்துகொண்ட படைப்பாளி கள் அவர்களுடைய படைப்புகளை வாசித்துக்காட்டத் தான் செய்தார்களாம். மாற்றுத்திறனாளிகள் படைப் பாளிகளாக இயங்குவதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்பதாக எந்தக் கலந்துரையாடலோ, கட்டுரை வாசிப்போ இல்லையாம்.
அப்படியிருக்க, படைப்பியக்க வெளியில் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அமர்வு எதற்கு?
ஒருவேளை, அவர்கள் எண்ணிக்கையில் அதிக அளவு கலந்துகொள்ள வழிவகுக்கும் நோக்கில் இப்படி செய்தி ருக்கலாம்.
ஆனால், இது தேவையற்றது.


No comments:
Post a Comment