சொல்லத்தோன்றும் சில
லதா ராமகிருஷ்ணன்
என் டைம்லைன் என்னுடைய வெளி. என் வீட்டில் நான் செய்ப வற்றை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற ரீதியில் சிலர் எழுதுவதைப் படிக்கும்போது வேடிக்கை யாக இருக்கிறது.
தன் வீட்டுக்கூரை மேல் ஏறி நின்று கொண்டு ஒருவர் தெருவில் போவோர் வருவோரை யெல்லாம் தூற்றிக் கொண்டிருந்தால், அல்லது தனது வீட்டின் ஒரு அறைக் குள்ளிருந்து ஜன்னல் வழியாக எதிர் வீட்டுக்காரரைப் பற்றி ஏளனமாகச் சாக்கிட்டுப் பாடிக் கொண்டிருந்தால்?
PUBLIC SETTINGS இல் இருந்துகொண்டு ஒருவர் பதிவிடு வதைப் படிப்பவர்களில் மாற்றுக்கருத்துரைக்க யாருக்கும் சுதந்திரம் உண்டு. FRIENDS SETTINGSஇல் இருந்தாலும் நட்பினர் எல்லாம் எல்லாக் கருத்துகளுக் கும் ஒத்துப்போக வேண்டும் என்ற அவசிய மில்லை. அத்தகைய எதிர்பார்ப்பு சரியில்லை.
LOCKED PROFILE வைத்திருப்பவர்கள் நட்பு அழைப்பைக் கொடுப் பது வினோதமாயிருக்கிறது. ஆனால், அவர்கள் நட்புவட்டத்தில் யாரேனும் அவர்களுடைய பதிவொன்றை பொது வெளியில் வைத்தால் அதுவும் விமர்சனத்திற்குட் பட்டதுதான்.
பீடத்திலேறி பிரம்மோபதேசம் செய்வதாய் கருத்துரைப்பவர் களுக் கும், ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்துரைப் பவர்களுக்கும், தங்கள் கருத்துகளும், அவற்றைச் சொல்லும் விதமும் தங்களை யும் அம்பலமாக்கிவிடும் என்ற புரிதல் மிக மிக அவசியம்.

No comments:
Post a Comment