எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும்! - 1
லதா ராமகிருஷ்ணன்
இந்தப் புகைப்படத்தைப் பாத்தாலே தெரியும் - நானும் இந்த உலகப்புகழ் ஓவியரும் ஒருவருக்கொருவர் எத்தனை நெருக்கமானவங்கன்னு.
ஆனா, இது ஏதோ கலை-இலக்கிய அமர்வுல எடுத்த குரூப் ஃப்போட்டோவை வெட்டி ஒட்டினதுதானேங்க. இதோ, அந்த குரூப் ஃபோட்டோ.
??????????????????????????????????????????????????????
என்னங்க, நீங்க இட்லி செய்யக்கூட லாயக்கில்லைன்னு இப்பிடி பட்டுன்னு சொல்லிட்டாரு?
விமர்சனம்ங்கற பேர்ல அவரோட படைப்புக்கு PRO வேலை செய்யலை. அதுனால...
இது என்ன தத்துவம் மாதிரி என்னவோ சொல்றே?
தாமாவே வந்து ‘ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தாரு.. நானே பாத்துப் பாத்து தான் நட்பழைப்பை ஏத்துப்பேன். இப்ப 1000 போல இருப்பாங்க. ஆனா, இந்த மனுஷன் அவர் சொல்ற அபத்தக் கருத்துகளுக்கெல்லாம் லைக் போட கூட ஒரு ஆளைத்தான் தேடிக் கிட்டிருக்காருன்னு அப்ப தெரியலை. பொதுவெளியில ஒரு கருத் தைப் பதி விட்டிருந்தவருக்கு கண்ணியமான முறையில மாற்றுக் கருத்துப் பதிவிட்டு பிறகு பாத்தா அவரு பேரையே ஃபேஸ்புக்கில காணலை. இன்னொருத்தருடைய ஃபேஸ்புக்கிலிருந்து பாத்தாக்கா அவருடைய பதிவுக்கான என் பின்னூட்டத்தையே டெலீட் பண்ணிருக்காரு!
என்னங்க இது – சாலையோர கோயில் உண்டியல்கள்ள எல்லாம் 2 ரூபா , 5 ரூபா நாணயம் இல்ல 10 ரூபா நோட்டுன்னு போடறீங்க? படிச்சவங்க நீங்க – இத்தனை மூடநம்பிக்கையோட இருக்கீங்க?
அடிக்கடி போடறதில்லைங்க .எங்கிட்ட பணம் இருக்கறப்ப - அது அபூர்வம் – எப்பவாச்சும் போடுவேன். மத்தபடி, இருபது லட்சம், முப்பது லட்சம்னு பகுத்தறி வோட சாமிக்கு காணிக்கை செலுத்த என்னால எப்படி முடியும், சொல்லுங்க?
F






No comments:
Post a Comment