எமோஜிக்களின் உரையாடல் - தமிழகத் தேர்தல் குறித்து - 2
ரோடு முழுக்க குண்டுங்குழியுமா இருக்குங்க. புதுசா இந்த வழியா வண்டி ஓட்டிக்கிட்டு வரவங்க நிலையை நினைச்சா பயம்மா இருக்குங்க. புதுசா வர ஆட்சியிலா வது இதெல்லாம் சரிசெய்யப்படணும்...
அப்படியிருந்துங்கூட நேரா ரோட்டைப் பாக்காம மேப் பையே பாத்து ஓட்டறாங்க, மௌபைல்ல பேசிக்கிட்டே ஓட்டறாங்க. இதெல்லாமும்கூட புதுசா வர ஆட்சியில் சரிசெய்யப்பட ணும்
சே, என்ன அநியாயம் இது தமிழ்நாட்டு மக்களெல்லாம் வெட்கப்படறாங்க. அவமானமா உணர்ராங்க... அத்தனை தமிழர்களையும் தலைகுனிய வச்சுட்டாங்க...ஸார், இருங்க, இருங்க - எப்போ சார் உங்களை தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேரும் தங்களுடைய ஒரே பிரதிநிதியா நியமிச்சாங்க? சொல்லவேயில்லையே!
“சே, இந்த மக்களுக்கு மூளையே இல்லைங்க....
உங்களுக்கு மூளையில்லேன்னு வெளிப்படையா ஒத்துக்கற துக்கு ஒரு பெரிய மனப் பக்குவம் வேணுங்க. மூளையே இல்லைன்னாலுங்கூட நீங்க பெரிய மனுஷந் தாங்க.
?????????????????????????????????????????????????????
கடலளவு அனுபவம் உள்ளவர் அவர்..... அவரைப் போய் தோக்கடிச்சிட்டாங்களே
ஓ! அதுனாலதான் கப்பலா வாங்கிப்போட்டா கண்ணுல பட்டுடும்னு நீர்மூழ்கிக்கப்பலா வாங்கிப்போட்டாரோ!
இந்தத் தேர்தல்னு இல்ல. எல்லாத் தேர்தல்களைப் பற்றி யும் என் கருத்துக்கணிப்பு இதுதான்: எந்தத் தேர்தல்லே யும் 100% வாக்களிப்பு இருக்காது. எல்லாத் தேர்தல்லே யும் புதிதாக ஒன்றிரண்டு கட்சிகள் வரும். எந்தத் தேர்தல்லேயும் ப்ரைம் சேனல்களெல்லாம் கருத்துக் கணிப்புங்கற பேர்ல காட்டுக் கத்தலா கத்தி விவாதிப்பாங்க. எந்தத் தேர்தல்லேயும் யாரும் வாக்காளர்களை விமானத்திலே கூட்டிக்கிட்டுப்போய் வாக்குச்சாவடில இறக்கிவிட மாட்டாங்க. எந்தத் தேர்தல்லேயும் வாக்க ளிக்க வரிசையில நிக்கறப்போ சில பேர் பிஸ்தாக்கள் மாதிரி எதையாவது பேசிக்கிட்டே இருப்பாங்க. எந்தத் தேர்தல்லேயும் சின்னப்புள்ளைங்க வோட்டு போட மாட் டாங்க. எந்தத் தேர்தல்லேயும் .....
????????????????????????????????????????????????????????????????????







No comments:
Post a Comment