எமோஜிக்களின் உரையாடல் - வந்தே மாதரம்
பேரன் (கல்லூரிமாணவன்):
.......................................................
தாத்தா, ஏன் இந்திப்பாட்டுங் களை முன்னால பாடிட்டு மூணாவதா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினாங்க? - இது தப்பில்லையா
தாத்தா:
.............................................
என் செல்லப் பேராண்டி - நாம தமிழர்கள் மட்டு மில்லை -இந்தியர்களும்கூட. இந்தியர் கள் மட்டுமில்லை - தமிழர்களும் கூட. அந்தப் பாடல்கள் வெறும் இந்திப் பாடல், தமிழ்ப்பாடல் மட்டுமல்ல - நாட்டுப்பாடல். வந்தே மாதரம் ன்னா 'தாய் மண்ணே வணக்கம்'னு அர்த்தம்.
பேரன்(கல்லூரி மாணவன்) :
.....................................................................
என்ன இருந்தாலும் நம்ம மாநிலத்தில நம்ம தாய்மண் பாட்டுத் தானே முதலில் பாடப்பட வேண்டும்?
தாத்தா:
..........................................
எங்கே, அதை முழுசா தப்பில்லாம பாடு பாப்போம்
பேரன் :
.........................................
தாத்தா - அது வந்து...
.
தாத்தா
......................................
சுதந்திரப்போராட்ட காலத்தில் தமிழகம் உட்பட இந் தியா பூராவும் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து 'வந்தே மாதரம்' என்று பாடிக்கொண்டு கொடியைத் தூக்கிக்கொண்டு செல்வார்கள் இளைஞர்களும், பெரியவர்களும். 'வந்தே மாதரம்' சொல்லாதேன்னு வாயிலேயே குண்டாந்தடியால போடுவாங்க பிரிட்டிஷ் போலீஸ்காரங்க. ரத்தம் வழியும். ஆனாலும், ஆவேசமா நாங்க 'வந்தே மாதரம்னு சப்தமா கத்துவோம்..... அதெல் லாம் ஞாபகம் வரது. ...

No comments:
Post a Comment