எமோஜிக்களின் உரையாடல் - எல்லாவற்றைப் பற்றியும் - 2
என்ன இது – என் கட்டுரையில் எழுதியவர் என்று என் பெயரைப் போட்டு கீழே யாரோ ஒருவருடைய படம் போட்டிருக்காங்க?
இல்லீங்க – அது பதினைந்து வருடங்களுக்கு முன்னா லிருந்த உங்களுடைய படம்!
[’நானே நானா – யாரோதானா’ பாடல் பின்னணியில். கீறல் விழுந்த ரெகார்டாய் முதல் நான்கு வார்த்தைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்தவாறு!]
டிவி மெகாத்தொடர்களில் மதுவருந்தும் காட்சி வரும்போதெல் லாம் ‘குடி குடியைக் கெடுக்கும்’னு கீழே மங்கலா, குட்டி குட்டி எழுத்துக்களில் போடுகிறார்கள். புகைபிடிக்கும் காட்சி வரும் போதெல்லாம் அதேமாதிரி குட்டிகுட்டியா மங்கலா கீழே எழுத்து ஓடுது. அப்ப, கொலை செய்யற காட்சிகள், வரதட்சணைக் கொடு மைக் காட்சிகள், வர்க்கம் சார்ந்து ஒருவரை இழிவுபடுத்தும் காட்சிகள், இதெல்லாம் வர்ரப்ப ஏன் எந்த வாசகமும் கீழே தரப் படுவதில்லை?
???????????/????????????????
நீங்கள் அவரை எப்போதுமே பரிகசிக்கிறீர்கள், பழித்துப் பேசுகிறீர்கள், காறித்துப்புகி றீர்கள், கெட்ட கெட்ட வார்த்தை களால் திட்டித் தீர்க்கிறீர்கள். ஆனால், இவரை ஒரே முறை தான் அப்படிப் பேசினீர்கள். அதற்குப் பிறகு வாயே திறக்கவில்லையே – ஏன்?”
’அவர் பதிலுக்கு எதுவும் சொல்லா மல் புறக்கணித்து விடுவார். இவர் என்னுடைய வார்த்தைகளை விடப் பன்மடங்கு கேவலமான வார்த்தைகளால் எனக்கு ‘பதிலுக்கு பதில்’ தருவார். அதனால் தான்.’
‘ஓரு நல்ல விமர்சனம் என்று எதைச் சொல்வீர்கள்?’
‘ நான் மற்றொருவருடைய படைப்பைப் பற்றி எழுதிய விமர்சனமென்றால் - சம்பந்தப்பட்ட படைப்பைக் கிழிகிழியென்று கிழிப்பது. இன்னொருவர் என் படைப்பைப் பற்றி எழுதிய விமர்சனமென்றால் - பாராட்டுமழை பொழிவது’
’உங்களுடைய படைப்பு குறித்து எழுதப்பட்ட மிகச் சிறந்த விமர்சனம் என்று இம்மாத இதழில் வெளியாகி யிருப்பதைக் குறிப்பிடுவதற்குக் குறிப்பான காரணம் என்ன?’
‘குறிப்பான காரணம், சிறப் பான காரணம் எல்லாமே இதுதான்: என்னுடைய படைப்பை ஓஹோஹோன்னு புகழ்ந்திருக்கு. இரண்டு பக்க விமர்சனத்தில ’இதுவல்லவோ இலக்கியம்’னு 10 இடங்கள்ள வந்திருக்கு.
‘இப்ப நீங்க சொன்னதைத் தானே நான் நேத்து சொன் னேன்? அப்ப எனக்கு அறிவே கிடையாதுன்னு சொன் னீங்க – ரொம்ப தப்பா நான் யோசிக்கிறதா சாடையா திட்டித் தீத்தீங்க. இப்ப நீங்க அதையே சொல்றீங்க – என்னங்க இது?”
’இதுதான் அறிவுடைமை; ஜனநாயகப் பண்பு. மானே, தேனேன்னு இன்னும் நாலைஞ்சு சேத்துக்கலாம் – பரவா யில்லை. ஆனா, நீங்க சொன்னா தவறு. அதையே நான் சொன்னா அறிவு. அதை மட்டும் தெளிவா புரிஞ்சுக்கங்க’.






No comments:
Post a Comment