LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, September 13, 2020

சிறுமை கண்டு.....

சிறுமை கண்டு.....




இங்கே Me Too விவகாரத்தில் பாதிக்கப்பட்ட

 பெண்களின் (உடலாலோ அல்லது மனதாலோ, 

உடலாலும் மனதாலும் தனிப்பட்ட 

வாழ்க்கையிலும் சமூகரீதியாகவும்) வலியைப் 

புரிந்துகொள்ள மனமின்றி, அவர்களுக்காக 

ஒரு வார்த்தை பரிந்துபேச மனமின்றி 

பாதிக்கப்பட்ட பெண்களையும் 

பாதிப்புண்டாக்கிய ஆணை(களை)யும் கட்சி, 

சாதி, நிறம் என பல பிரிவுகளில் அணுகித் 

தீர்ப்பு சொல்லும் போக்கு (இது தமிழகத்தில் 

இருக்கும் 

அளவு அதிகமாக வேறு எந்தப் பகுதியிலாவது 

இருக்கிறதா, தெரியவில்லை), பாதிக்கப்பட்ட பெண்ணை அவள் என்ன சாதி என்று முதலில் பார்த்து பின், அந்தப் பெண்ணுக்கு அரைமனதோடு ஆதரவு தெரிவித்து கூடவே அவள் சார்ந்த சாதியைச் சாட அதை ஒரு வாய்ப்பாகப் பெண்களும்கூடப் பயன்படுத்துவது, நிஜ வாழ்வில் இப்படி ஒரு பெண் சார் அத்துமீறல் நடக்கும்போது அதற்கு எதிராய் நியாயமாய் வெகுண்டெழுவது, அதுவே உண்மை யான ஊரிலுள்ள பெண்களை பாதிக்கும் படியாக ஒரு புனைவில் எழுதப் பட்டிருப்பின், அந்த insensitivityஐ Freedom of Expression என்ற பெயரில் ஆதரிப்பது - இன்னும் நிறைய நினைவுக்கு வருகிறது

No comments:

Post a Comment