LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, September 13, 2020

நெஞ்சில் உரமுமின்றி , நேர்மைத் திறமுமின்றி

 நெஞ்சில் உரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி 

வஞ்சனை சொல்வாரடீ...


ஜூன்21 சர்வதேச தந்தையர் தினம்.


தொலைக்காட்சி விளம்பரங்களில்

வருவதுபோல் ஏதாவது விலையுயர்ந்த 

 

பொருட்களை வாங்கிக் கொண்டுத்துக்கொண்டேயிருப்பவர்தான் தந்தை என்று குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்படுவது தொடர்ந்து   ஊடகங்கள் குழந்தைகள் மேல் கட்டவிழ்த்து விடும் வன்முறையாக பட்டப்பகலில் நடந்துகொண்டேதான் இருக்கிறது.


இதில் எழுதி பணம் பண்ண இயலாததெரியாத  எழுத்தாளர்கள் ’பொறுப்பற்ற பெற்றோர்களாக’ பேசப்படுவதும்பாவிக்கப்படுவதும் வாடிக்கை யாக நடக்கும் ஒன்று.

ஆனால்எழுத்தாளர்களின் குழந்தைகள் எல்லோ ருமே அப்படி என்று சொல்லிவிட முடியாதுபேரும் புகழும் பணமும் அடைய முடியாவிட்டாலும் தங்கள் பெற்றோர் – தாயோ  தந்தை யோஎழுத்தாளர் என்பதில் பெருமை கொள் ளும் பிள்ளைகளை நான் பார்த்திருக் கிறேன்.

ஆனால் இங்கு ஒருவர் பேரும் புகழும் பெற்றதோடு தன் எழுத்துகளுக்காகப் பெரிதும் கொண்டாடப்பட்டவரானதன் எழுத்தின் மூலம் போதுமான பணமும் ஈட்டிய தன் தந்தையின் படைப்புகளுக்கு வாரிசான கையோடு அவரை மதிப்பழிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருக் கிறார்.

என் தந்தையை மதிப்புக்குறைவாக நான் எதுவும் கூறவில்லையே’ என்று வெள்ளந்தி பாவம் தாங்கி அவர் கூறக்கூடும்ஆனால்வாழ்நாளெல்லாம் தந்தை மதித்த நட்பினரை ‘தந்தை நாய் வளர்க்க வில்லைநண்பர்களை வளர்த்தார்’ என்று பதிவிடு வதன் மூலம் அவர் தன் தந்தையின் நட்பினரைக் கேவலப்படுத்தவில்லைதன் தந்தையைத்தான் கேவலப்படுத்துகிறார்.

அதைவிட மோசம்தந்தையோடு தன் வாழ்க்கை யைப் பகிர்ந்துகொண்டஇன்று 80க்கு மேல் வயதா கும் பெண்ணைதந்தை இறந்த பிறகு அவருடைய சாதியை சொல்லி இழிவுபடுத்துவதையும்தன் தாயின் வாழ்க்கையைக் கெடுக்க வந்த வில்லியாகப் பழிப்பதையும் தன் னைப் பெண்ணியவாதியாகப் பல வகையி லும் பிரகடனப் படுத்திக்கொண்டே இந்த ‘மகள்’ தொடர்ந்து செய்து வருகிறார்.

இதையெல்லாம் தந்தை உயிரோடிருக்கும்போதே அவர் செய்யாதது ஏன்?

ஒரு பெண் தன் தந்தையை ஏமாற்றிவிட்டது போலவே பேசுகிறாரே தவிரதந்தையை ஆணாதிக்க வாதியாகப் பேசாதது ஏன்?

அந்தப் பெண்ணை வாழ்க்கைத்துணை நிலையில் நடத்தாமல் அடிமை நிலையில் நடத்தினார் தன் தந்தை என்று அகமகிழ்ந்து எழுதுவது 

ஏன்?

அது உண்மையில்லை என்பது அந்தக் குடும்பத்தை அறிந்த எல்லோருக்கும் தெரியும்.

தந்தையின் பேர் புகழ் பணம் எல்லாம் வேண்டும். ஆனால்அவர் மதித்த மனிதர்களை வார்த்தைக ளால் மதிப்பழித்துக்கொண்டேயிருக்கவேண்டும்இது என்னவிதமான அணுகுமுறை?

ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவினரைக் கேவலப் படுத்தப் பயன்படும் பகடைக்காயாக தன் தந்தையுடைய திருமணத்திற்கப்பாலான உறவைக் கையிலெடுத்துக்கொண்டு தந்தையை அந்த   
உறவிலிருந்து அறவே தள்ளி வைத்து விட்டு –சம்பந்தப் பட்ட பெண்ணை மட்டும் திரும்பத் திரும்பப் பலவாறாகக் கொச்சைப்படுத்தவேண்டும் – இது என்னவிதமாய்த் திறந்திருக் கும் பெண்ணிய அறிவுக்கண்?


சம்பந்தப்பட்ட படைப்பாளி உயிரோடிருந்தால் இப்படி அவருடைய மகள் இப்படியெல்லாம் பேசுவாரா?

பேசியிருக்கிறாரா?

பேசமுடியுமா?

இப்படியேதான் அவர் இனியும் பேசிக்கொண்டிருப்பா ரெனில் இதற்கான எதிர்வினை அவருடைய படைப் பாளித் தந்தையின் வாசகர்களிடமிருந்துசக எழுத் தாளர்களிடமிருந்துசம்பந்தப்பட்ட படைப்பாளியை அறிந்த பதிப்பகத்தாரிடமிருந்துநியாயப்பார்வை கொஞ்சமேனும் இருக்கக்கூடிய எல்லாத் தரப்பினரிடமிருந்தும் கண்டிப்பாக எழவேண்டும்.

எழும்
.

 


No comments:

Post a Comment