LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

தகவல் பரிமாற்றம் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தகவல் பரிமாற்றம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன....
இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்...
தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி.....
மாறும் முகவரிகளை நான் தெரிவிக்காமலேயே தெரிந்துகொண்டு ஏதேனுமொரு வடிவத்தில்
மடல் அனுப்பிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை.
சில சமயம் வராத புறாவின் ஆயிரங் கால்களில் கட்டப்பட்டிருக்கும் காகிதத் துண்டுகள்
அதை எப்படியோ தரையிறங்க வைத்துவிடுகின்றன.
சில சமயம் தபால்காரர் வீசியெறிந்துவிட்டுச்செல்லாத
சில நூறு பக்கக் கடிதங்களைப் படிப்பதுதான்
எத்தனை சுவாரசியமாக இருக்கிறது!
காலப்போக்கில் கிழிந்ததும் கிழித்ததும்போக
எஞ்சிய கடிதங்களில் எந்தவொரு சொல்லையும் வரியையும் கண்டுபிடிக்க இயலவில்லை.
OK – Okayவுக்கு இடையே வித்தியாசம்
உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை
யாரும் யாருக்கும் எழுதுவதான தொனியில்
ஆரம்பமாகி முற்றுப்பெறாமலேயே முடிந்துவிடுபவை
வாட்ஸ் ஆப் கடிதங்கள்.
காலை ஆறுமணிக்கு எழுந்து மறுகணம்
மணி முற்பகல் பதினொன்றாகிவிடும் ஓட்டத்தில்
நிதானமாகக் கடிதங்கள் எழுதும் நேரம் பிடிபடவில்லை. எதை யென்பதும் யாருக்கு என்பதும்கூட.
எனக்கு நானே எழுதிக்கொள்ளலாமென்றால்
எதற்கு என்று கேட்பது மனமா மூளையா
இரண்டுமா புரியவில்லை.
இப்போதெல்லாம் தபால்காரர் வரும் நேரமென்ன
சரியாகத் தெரியவில்லை.
எங்கள் வீட்டு எண் தாங்கிய சிறு தபால்பெட்டியில்
குடியிருப்பினுடைய காவலாளியின் சார்ஜர் மட்டுமே எப்பொழுதும் குட்டிக் குருவிபோல் ஒரே இடத்தில் துவண்டுகிடக்கிறது.
ஒருவகையில் சார்ஜரும் மடல்தான் என்று தோன்றுகிறது.
அரிதாய்ப் பெய்யும் மழை
நீரில் கரைந்த வரிகள் நிறைந்த மடல்களை
ஒரே நேர்க்கோட்டில் தலைமீது பூவாய்ச் சொரிகிறது.
பெறவேண்டும் வரமாய இன்னும் ஒரே யொரு மடல் _
மறுமொழியளிக்காது விட்டுவிட…..

பறவையாதல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பறவையாதல்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



பறக்கக் கற்றுத்தரும் தாய்ப்பறவை
அறிவதில்லை
தன் பாப்பா எப்பொழுது
எத்தனை தொலைவாகப்
பறந்துவிடுமென்று.
பாப்பாக்களில் அதற்கு தனிப்பிரியம்
எதன் மீதாவது இருக்குமா
தந்தைப்பறவை சொல்லித்தந்ததே
யில்லையோ – தெரியவில்லை
பறவைகளில் தந்தை-தாயைக்
கண்டுபிடிப்பது
சுலபமா கடினமா
குட்டிப்பறவை தன்னால் பறக்கமுடியும்
என்று அறியுமக் கணம்
ராஜாளியாக உணருமோ
சிட்டுக்குருவியும் ஃபீனிக்ஸ் பறவைதானே
என்றாலதுவுமொரு விதத்தில் சரிதானே
கவிதையெழுதாவிட்டாலும் காயம்பட்டால்
பறவைக்கும் வலிக்குமில்லையா
வல்லூறுக்கு வானம்பாடியின் கானம்
என்னவாகும் யாருக்குத் தெரியும்
பறவை முதுகிலேறிப் பயணம்
செய்ய விழைதல்
பேதமையா பெருங்கனவா
நாமே பறவையென பாவித்தல்
பரவசமா பிறழ்மன அவசமா
உறவொரு பறவை
சிறகுகளடர்ந்து இறந்த புழுக்களைக்
கொத்தித் தின்றவாறிருக்கும்
நினைவொரு பறவை
படைத்த கவிதையுமொரு பறவை
படிக்கக் கிடைத்து
விடையறிய முடிந்த கவிதையுமொரு
பறவையாக……


சொல்லத் தோன்றும் சில…… லதா ராமகிருஷ்ணன்

 

சொல்லத் தோன்றும் சில……

 

லதா ராமகிருஷ்ணன்

ஆங்கில நாளிதழிலும் தமிழ் நாளிதழிலுமாய் தினமும் ஒன்றிரண்டு செய்திகள் மனதின் அமை தியை முறித்துப் போடத் தவறுவதில்லை.

சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி. 14 வயது டைய பள்ளிச் சிறுவர்கள் மூவரோ நால்வரோ அவர்களுடைய வகுப்புத் தோழி ஒருத்தியோடு அவளுடைய வீட்டில் ஒன்றாகப் படிப்பது வழக்க மாம். அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் வேலை நிமித்தம் வெளியே போயிருக்க அந்தப் பெண் ணின் தங்கையை வெளியே போய் விளையாடச் சொல்லியிருக்கிறார்கள் சிறுவர்கள். சிறிது நேரங் கழித்து வீடு வந்தவள் மூடியிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து பார்த்தால் வகுப்புத் தோழியை நிர்வாணமாக்கி கைகளை யும் கண்களையும் கட்டி நீலப்படம்போல் வீட்டில் நடத்திப் பார்க்க முயற்சி நடந்துகொண்டிருந்த தாம்.

அழுதுகொண்டே தங்கையிடம் வீட்டாரிடம் தெரி விக்க வேண்டாமென அக்கா சொல்லியிருக்கி றாள். சில நாட்களில் அக்காவுக்கும் தங்கைக் கும் ஏதோ சண்டை வர தங்கை அம்மாவிடம் நடந்த தைச் சொல்லிவிட்டாள்.

அவளுடைய பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தர அந்தப் பையன்கள் கூர்நோக்குப் பள்ளிக் கும் அந்தப் பெண் சீர்திருத்த இல்லத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் ஒரு செய்தி. CBSC PLUS 2 மாணவர்கள் இருவர். பெரிய விரோதமெல்லாம் கிடையாது. ஒருவனின் உடற் பருமனையும் அவனுடைய மார்புப் பகுதியையும் மற்றவன் கிண்டல் செய்துகொண்டேயிருப்பா னாம். பருமனாயிருக்கும் பையனை தேவையில் லாமல் அங்கே யிங்கே தொட்டு கேலி செய்வா னாம். அது BODY SHAMING ஆகவும் இருந் திருக்கலாம். ஓரினப்புணர்ச்சிக்கான அழைப்பாக வும் இருக்கலாம். பருமனாயுள்ள பையன் அது குறித்து பள்ளியிலும் புகார் செய்து பள்ளியிலும் அந்த இன்னொரு மாணவனைக் கண்டித்திருக்கி றார்கள். சமீபத்தில் அந்த பருமனான பையன் மற்றவனை நட்பாக ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று தயாராகக் கொண்டுசென்றிருந்த கத்தி யால் குத்தியிருக்கிறான். அந்தப் பையன் இறந்து விட்டான்.

விவரமறிந்து, கொன்றவனின் பெற்றோர் அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு எதனால் அப்படிச் செய்தேன் என்றும் தெரிவித்திருக்கிறான் அந்த மாணவன். அவனும் இப்போது கூர்நோக்கு இல்லத்தில்.

 சின்னக்குழந்தைகள் மீதான கவனமும், அக்கறை யும் வளரிளம்பருவத்தினர் மீதான அக்கறையும் இப்போதிருப்பதைக் காட்டிலும் இன்னும் பன் மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்ப தையே இத்தகைய செய்திகள் புலப்படுத்துகின் றன.

குழந்தைகளும் வளரிளம்பருவத்தினரும் பெற் றோர், ஆசிரியர்களின் பொறுப்பு என்ற பார்வை சரியல்ல. ஒட்டுமொத்த சமூகமும் இதற்கான பொறுப்பேற்க வேண்டும். இப்படி யொரு செய்தி யைப் படித்ததுமே சிலர் அதற்கு சாதிச்சாயம் பூசிப் பார்க்க முற்படுவதும் இந்தக் காலத்துப் பிள்ளை களே இப்படித்தான் என்று எல்லோரை யும் ஒரு மொந்தையாக்கி அங்கலாய்ப்பதும், பிரச்சனைக் குத் தீர்வாகாது.