வாழ்வை ‘அளப்பவர்’
அதிகம் தெரியும் என்றவரை
தும்பிக்கையால் தூக்கிப்போடலாமா என்று
ஒரு கணம் யோசித்த யானை
தன் தும்பிக்கையின் வலிமையிலும்
வீசியெறியப்படும் வேகத்திலுமாய் நொறுங்கிப்போய்விடக்கூடும் பாவம்
என்று ஏதும் செய்யாமல்
அப்பால் நகர்ந்துசென்றது.
'இக்குணூண்டு சிட்டுக்குருவிக்கு
இந்த உலகத்தைப் பற்றி என்ன தெரியும்'
என்றவரிடம்
தன் குட்டி இறக்கைகளை விரித்துக்காட்டி
யது பறந்துசென்றுவிட்டது.
குண்டு சட்டிக்குள் குதிரையோட்டுவதாய்
போவோர் வருவோரையெல்லாம் தூற்றிக்கொண்டேயிருந்தவரை
'நீ புதைசேறுக்குள் இறங்கிக்கொண்டிருப்பது புரியவில்லையா'
என்று தாழப்பறந்துவந்து
தலையில் குட்டுவதாய்த்
தட்டிச்செல்லக்கூடும் ஏதேனுமொரு
அண்டங் காக்காயோ, வல்லூறோ........All reactions:
No comments:
Post a Comment