அட்டென்ஷன்! தொண்டர்களே! தலைவர்களே! ஆதரவாளர்களே! அருமை வாக்காளப் பெருமக்களே! இன்று நீங்கள் செயல்களத் திற்குச் சொல்லப்போகிறீர் கள். நல்வாழ்த்துகள். உங்களிடம் நான் சொல்வதெல்லாம் இதுதான்.
யெஸ் ஸார்?
நீங்கள் தேர்ந்தெடுத்த அரசு நிலைத்திருப்பதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. உங்களு டைய சின்னத் தவறும் உன்னிப்பாக கவனிக்கப்படும். எச்சரிக்கை யாயிருங்கள். உங்களுடைய பணி தன்னல நோக்கங்கள் கொண்ட தாக இருக்கலாகாது. மக்கள் நலனுக்காகவே பணியாற்ற வேண்டும். அவர்கள் வாழ்வை, வாழ்வுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். மேலும் -
யெஸ் ஸார்
மக்களுக்குப் பணியாற்றவே நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கிறீர்கள். அது உங்கள் கடமை. அதற்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாகாது.
யெஸ் ஸார்.
ஆல் தி பெஸ்ட்


No comments:
Post a Comment