LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, November 10, 2019

ரத்தக்காட்டேரிகளின் வரலாற்றுச்சுருக்கம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


ரத்தக்காட்டேரிகளின் வரலாற்றுச்சுருக்கம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


ரத்தக்காட்டேரிகள் பசியோடு 
உலவிக்கொண்டிருக்கும்.

நிலவும் அமைதியை அவற்றால் 

அங்கீகரிக்கமுடியாது.

அவற்றைப் பொறுத்தவரை 

வெறுப்பும் விரோத முமே வாழ்வியல்பு.

தலைகள் அறுபட்டு விழுந்தால்தான் அவற்றைப்
பொறுக்கியெடுத்து சூனி்யக்காரர்களின் வசியத்திறத்தோடு
அவற்றை ஆட்டியாட்டிக் காட்டி
அக்கம்பக்கத்திலிருப்பவரை 

அச்சத்திலாழ்த்தி
தினமுமான குறையாத தீனிக்கு
வழிசெய்துகொள்ள முடியும்.

ரத்தக்காட்டேரிகள் நாவறள 
உலவிக்கொண்
டிருக்கும்.

நிலவும் அமைதியை ஏற்றுக்கொள்ள 

முடியா மல்
அது பயத்தால் விளைந்தது என்று 

நாளும் சொல்லிச்சொல்லி 
உருவேற்றப்பார்க்கும்.

நயத்தக்க நாகரீகமும் நட்பும் நேசமும்
தன் துட்ட நடமாட்டத்தைக் 

கட்டுப்படுத்திவிடும்
என்று ரத்தக்காட்டேரிகளுக்குத் 

தெரியாதா என்ன?

அறைக்குள் பாதுகாப்பாயமர்ந்தபடி  
சுற்றுவட்டாரத்திலேதேனும் 
சின்னச்சண்டை நடக்குமா என்று சதா கண்களை இடுக்கித் 
துருவிக்கொண்டிருக்கும் அவை.

ஒரு பொறி போதும் கவிதை உருவாக 
என்பது உண்மையோ பொய்யோ
அய்யோ அதுபோதுமே ரத்தக் 

காட்டேரிகளுக்கு _
தறிகெட்டோடி யனைத்தையும் 

உருக்குலைக்க.

யாருடைய கரங்களாவது 
யாருடைய
குரல்வளைகளையாவது
கடித்துக்குதறிக்கொண்டே

யிருக்கவேண்டும்.
வழியும் ரத்தம் நின்றுவிடாதிருக்க 

அதுவே வழி.

பருகும் குருதியே பிரதானம் 
ரத்தக்காட்டேரிகளுக்கு.
கலவரமுண்டாகிக் கைகால்கள் 
பிய்த்தெறியப்படாவிட்டால் 
பின் எப்படி குருதி குடிப்பது?

புத்தியைத் தீட்டிச் சில வித்தைகளைச் 
செய்யும்.சித்தங்கலங்காமல்
அதன் பாட்டில் அமைதியாயிருக்கும் 

ஊரின்ரத்தம் வழியச்செய்யும் வழி பிடிபடாவிடில்
முட்டும் வெறியில்
திட்டமிட்டுப் படுகொலையைச் 

செய்யும்
தன் கூற்றில் கவிதையில் 

கலந்துரையாடலில்.

அண்டசராசரமும் சொந்தமாயி
ருப்பவனிடம்
நான் தருகிறேன் அரைக்காணி 

யென்று அறியாமையால் அறைகூவி அவசரஅவசரமாய்
பொதுவழியைக் கழிப்பறையாக்கிக்

கொள்ளும் ரத்தக்காட்டேரியிடம்
சுத்தம் பற்றி யார் பேசுவது?

மக்களே போல்வர் மாக்க
ளென்பார்...
மக்கள் மத்தியிலிருக்கும் 

இரத்தக்காட்டேரிகள்
மனித உருவில்.

ஹாம்லெட்டும் ஆம்லட்டும்
ஒலிக்கக்கூடுமொருபோலெனில்
இருவேறிரண்டுமென்

றறிதல் வேண்டும்.

ரத்தக்காட்டேரிகளுக்குச் 
கரங்களுண்டோதெரியாது,
சிறகுகள் உண்டோ 
- தெரியாது

எனில் _
கண்டிப்பாக இருக்கும்
மனசாட்சியிருக்கவேண்டிய 

இடத்தில்
மிகப்பெரிய வெற்றிடம்.




Friday, November 8, 2019

வள்ளுவர் வாய்மொழி – 5 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வள்ளுவர் வாய்மொழி – 5

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



(*முன் குறிப்பு)

இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும்
பின்வரும் அதிகாரத்தை.

பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும்
உத்தரவாதமில்லை யெதுவும்.

ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு
நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு?

பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும்
அதுவேயாகலாகா தெப்போதும்.
________________________________________________

1

கவிதை யாத்தல் காற்பந்தாட்டமா? உணர்வுகளை
உதைத்துருட்டித் தள்ளுகிறார் சிலர்.


2

கவிதை உன்னிலிருந்து வந்தாலும் உன்னுடையதல்ல என்பார்;
எனதல்லவென்றாலும் என்னிலிருந்தே வந்ததென் பேன்.


3

இக்கவிதை கடலல்ல; வெறும் கடற்கரை யென்றார்’ –
அக்கக்கோ பறவை அதுபாட்டுக்குச் சென்றது.


4

இக்கிணியூண்டு கவிதையையும் படிக்காமலே அதைப்பற்றி
பக்கம்பக்கமா யெழுதுவார் உக்கிரமாய்.


5

பரிசளிப்பார் தகுதியைப் பொறுத்ததே யாகுமாம்
பெறுவார் தகுதியும்.


6

உரிய காலத்தே யவரை அங்கீகரிக்காமல் பயனென்கொல்
அரிய உயிர் பிரியும்போ தளித்தல்.


7

ஹாம்லெட்டும் ஆம்லட்டும் ஒலிக்கும் ஒருபோல வெனில்
நாமறிவோம்() வெவ்வேறென.


 8

அருமையா யொரு கவிதை உருவாகப் பெறு மின்பம்
அறுநூறுகோடிக்குச் சமமாம்!


9

அறுநூறு கோடியல்லகோடிகள்என்பார்
சிறிதும தன் பெறுமதி யறியார்.


10

உறுமீனாகுமாம் கவிதை ஓடுமீ னோட
வருமளவு வாடியிருக்கும் வாசிப்போருக்கு.


11

நிழலின் அருமை வெய்யிலில் புரியும்;
மொழியின் அருமை கவிதையில்.


வள்ளுவர் வாய்மொழி – 4 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

வள்ளுவர் வாய்மொழி – 4


‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)




1

வனவாசம்போய் தனமீட்டி கனவானாகிப் பின்
தினம் பேச வா கவிதை….


2

கவிதை எழுது; கடைவிரிக்காதே உன் பொய்களை.
புவியறியும் மெய்க்கவிகளை.


3

பேரம்படியாது; என் கவிதை கூறுபோட அல்ல.
தூரமாய்ப் போய்விடுகிறேன் மெல்ல.


4

காறித்துப்பக்கிடைத்த குப்பைத்தொட்டியா கவிதை?
நாறுகிறது பார்.


5

இலட்சியம் பேசி நெற்றிக்கண்ணைத் திறந்து
வலம்வரு முன் அறம் கவிதையில் மட்டும்.



6

கவிதைத்திறம் என்றா லது கிலோ என்ன விலை?
தவிப்பார் திடீர்ப்புகழ் நாடுவார்.


7

எட்டும் ஆறும் பதினான்கோ எண்பத்தியாறோ
சிட்டுக்குருவியிடம் கேட்பார் கவி.


8

கட்டிய கண்களுக்குள் கவிதை விரிக்கும் காட்சி
தட்டுப்படாது சில திறந்தகண்களுக்கு.


9

விட்டம் பார்த்துப் படுத்திருந்தால் வந்திடாதுவெறும் சட்டதிட்டங்களுக்கு அப்பா லானது கவிதை.


10

சிறுபத்திரிகையாயின் என்பெரும்பத்திரிகையாயின் என்?
உறுபுகழ்ப்பசிக்கு எல்லாம் சமமே சமம்.


11

கரணம் தப்பினால் மரணம் என்பர்; கச்சிதமாய்ப்
பொருந்தும் கவிதைக்கும்.









Tuesday, November 5, 2019

வள்ளுவர் வாய்மொழி - 1 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வள்ளுவர் வாய்மொழி - 1

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*முன் குறிப்பு)

இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும்
பின்வரும் அதிகாரத்தை.

பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும்
உத்தரவாதமில்லை யெதுவும்.

ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு
நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு?

பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும்
அதுவேயாகலாகா தெப்போதும்.
__________________________________________
1.
இன்றைய உம் கொடும்பசிக்கு இரையாகினேன்
நன்று நன்று; வேறென்ன வுரைக்க?

2.
நம் சொத்தென் றெம்மைச் சொல்வார்
தம் உம் நம் யார்யார்?

3.
என் உடையைப் பேசப் புகுமுன்
எண்ணுமின் ஆடையற்றோரை.

4.
நீர் எனக்காற்றும் உதவி நாளும்
சோர்வின்றிச் சிலகுறள்கள் படித்தறிதல்.

5.
அறிதலெனல் வெறுமே மனனம் செய்வதல்ல
அறிவிலேற்றி அன்றாடம் பின்பற்றல்.

6
அறிவென்பது யாதெனில் யாரையும்
அறிவிலி யென்னா திருத்தல்.

7.
ஏழே சொற்களில் எழுதினேன ழித்திடாதீர்
கீழேயுள்ள மூன்றை.

8.
காய்சில நன்றாம் கவரலாம் புசிக்கலாம்
பாயெனில் படுப்பதே உசிதமாம்.

9.
வடிவம் மாறலா மெனில் பகடையில்
இடம்பெறும் எண்கள் மாறா.

10.
சக்கரம்போல் வாழ்க்கை யெனில் மேலோர்
வக்கிரமாக மாட்டா ரென்றும்.

11.
என்னுள் கடத்தலே எனக்கான வள்ளுவம்
சொன்ன சொல் எண்ணுவம்.

வள்ளுவர் வாய்மொழி -2 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வள்ளுவர் வாய்மொழி -2


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*முன் குறிப்பு)


இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும்
பின்வரும் அதிகாரத்தை.

பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும்
உத்தரவாதமில்லை யெதுவும்.

ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு
நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு?

பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும்
அதுவேயாகலாகா தெப்போதும்.
__________________________________________




1.
எம் குரலை யாம் கேட்டலின் நன்று
உம் குரலில் எம் குறள் கேட்டல்.

2.
பேச்சுரிமை, படைப்புரிமையென்பார் கை
வீச்சரிவாள் மாற்றுக்கருத்தாளருக்காய்.

3.
ஊர்ப்பழிமுழுக்க ஒரு தலையி லேற்றிய பின்
காரில் வலம்வரலாம் வழுவிலராய்.

4.
ஏசிப்பேசியே காசுசேர்த்துவிட்டார்; கவலையில்லை
வீசுதென்றலுக்கு விலையில்லை.

5.
தன் குழந்தையும் தனதில்லையென் றறியார்
என்னைத் தமதேயாம் என்பார்.

6.
யார் நீங்கள் காற்றை சுவாசிக்க என்றால்
பேர்பேராய் காறித்துப்பாரோ?

7.
வெள்ளையாய் சக மனதைக் கற்பார் படைப்பாளி
உள்நோக்கங் கற்பிப்பார் கயவாளி.

8.
குண மொதுக்கி குற்றம் பெருக்கி
ரணகாயமாக்கி மிதித்தல் பழகு.

9.
அறிவோம் - உலகுண்டு நமக்கு முன்பும் பின்பும்
சிறுதுளிமட்டுமே நாம் மானுடத்தில்.

10.
எம் வரிகள் எம் வாழ்வு _
உம்வரியிருக்கு மும் உயர்வுதாழ்வு.

11.
இப்பொழுதும் இவ்வரிகளில் நீவிர் காண்ப தெலாம்
தப்பெனில் வீணாம் மொழியும்.

வள்ளுவர் வாய்மொழி – 3 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

வள்ளுவர் வாய்மொழி – 3

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



(*முன் குறிப்பு)

இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும்
பின்வரும் அதிகாரத்தை.


பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும்
உத்தரவாதமில்லை யெதுவும்.


ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு
நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு?


பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும்
அதுவேயாகலாகா தெப்போதும்.


__________________________________________


1.
அவரிவருக்குமட்டுமானவை யல்ல எம் சொற்கள்
எவருக்குமானவை காண்.


2.
இப்படிச் சொல்வது அவருக்கு மட்டுமல்ல _
உமக்கும்தான்.


3.
சித்திரம் வரைந்த கையை முறித்துத்தான்
பத்திரப்படுத்த வேண்டுமா? ஏன்?


4.
சத்தமிட்டே பொய்யை மெய்யாக்கச் சித்தமாயின்
சத்திழந்துபோவோம் நாம்.


5.
வீணையை காட்சிப்பொருளாக்கல்போலும்
சிலர்க்கு வள்ளுவம் வாங்கலும்.


6.
கை யொரு பக்கமாய்ச் சாய்ப்பின்
வைத்த எடைக்கல்லால் பயனென்ன பின்?


7.
ஊர்கூட்டித் திட்டித் தீர்த்து உயர்ந்தாரெனப்
பேர்பெற்றார்தான் உத்தமராமோ?


8.
யார்யார்க்கோ பூ காய் கனி தந்த வேர்களை
நீருரிமை பாராட்டல் தகுமோ?


9.
கொள்கலம் நீவிர் குறுகியிருந்தா லெனை
அள்ள நேரமாகும் அதிகம்.


10
அள்ளத்தான் வேண்டுமா? அவசியமில்லை யேதும்;
கள்ளமுரைக்காதிருந்தாலே போதும்.


11.
நல்லதென்ன அல்லதென்ன _ சொல்லென்கிறீர்கள்;
சொல்லித் தெரிவதல்ல உள்ளுணர்வுகள்.