LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, November 8, 2019

வள்ளுவர் வாய்மொழி – 4 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

வள்ளுவர் வாய்மொழி – 4


‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)




1

வனவாசம்போய் தனமீட்டி கனவானாகிப் பின்
தினம் பேச வா கவிதை….


2

கவிதை எழுது; கடைவிரிக்காதே உன் பொய்களை.
புவியறியும் மெய்க்கவிகளை.


3

பேரம்படியாது; என் கவிதை கூறுபோட அல்ல.
தூரமாய்ப் போய்விடுகிறேன் மெல்ல.


4

காறித்துப்பக்கிடைத்த குப்பைத்தொட்டியா கவிதை?
நாறுகிறது பார்.


5

இலட்சியம் பேசி நெற்றிக்கண்ணைத் திறந்து
வலம்வரு முன் அறம் கவிதையில் மட்டும்.



6

கவிதைத்திறம் என்றா லது கிலோ என்ன விலை?
தவிப்பார் திடீர்ப்புகழ் நாடுவார்.


7

எட்டும் ஆறும் பதினான்கோ எண்பத்தியாறோ
சிட்டுக்குருவியிடம் கேட்பார் கவி.


8

கட்டிய கண்களுக்குள் கவிதை விரிக்கும் காட்சி
தட்டுப்படாது சில திறந்தகண்களுக்கு.


9

விட்டம் பார்த்துப் படுத்திருந்தால் வந்திடாதுவெறும் சட்டதிட்டங்களுக்கு அப்பா லானது கவிதை.


10

சிறுபத்திரிகையாயின் என்பெரும்பத்திரிகையாயின் என்?
உறுபுகழ்ப்பசிக்கு எல்லாம் சமமே சமம்.


11

கரணம் தப்பினால் மரணம் என்பர்; கச்சிதமாய்ப்
பொருந்தும் கவிதைக்கும்.









No comments:

Post a Comment