LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label வள்ளுவர் வாய்மொழி -2 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label வள்ளுவர் வாய்மொழி -2 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Tuesday, November 5, 2019

வள்ளுவர் வாய்மொழி -2 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வள்ளுவர் வாய்மொழி -2


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*முன் குறிப்பு)


இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும்
பின்வரும் அதிகாரத்தை.

பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும்
உத்தரவாதமில்லை யெதுவும்.

ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு
நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு?

பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும்
அதுவேயாகலாகா தெப்போதும்.
__________________________________________




1.
எம் குரலை யாம் கேட்டலின் நன்று
உம் குரலில் எம் குறள் கேட்டல்.

2.
பேச்சுரிமை, படைப்புரிமையென்பார் கை
வீச்சரிவாள் மாற்றுக்கருத்தாளருக்காய்.

3.
ஊர்ப்பழிமுழுக்க ஒரு தலையி லேற்றிய பின்
காரில் வலம்வரலாம் வழுவிலராய்.

4.
ஏசிப்பேசியே காசுசேர்த்துவிட்டார்; கவலையில்லை
வீசுதென்றலுக்கு விலையில்லை.

5.
தன் குழந்தையும் தனதில்லையென் றறியார்
என்னைத் தமதேயாம் என்பார்.

6.
யார் நீங்கள் காற்றை சுவாசிக்க என்றால்
பேர்பேராய் காறித்துப்பாரோ?

7.
வெள்ளையாய் சக மனதைக் கற்பார் படைப்பாளி
உள்நோக்கங் கற்பிப்பார் கயவாளி.

8.
குண மொதுக்கி குற்றம் பெருக்கி
ரணகாயமாக்கி மிதித்தல் பழகு.

9.
அறிவோம் - உலகுண்டு நமக்கு முன்பும் பின்பும்
சிறுதுளிமட்டுமே நாம் மானுடத்தில்.

10.
எம் வரிகள் எம் வாழ்வு _
உம்வரியிருக்கு மும் உயர்வுதாழ்வு.

11.
இப்பொழுதும் இவ்வரிகளில் நீவிர் காண்ப தெலாம்
தப்பெனில் வீணாம் மொழியும்.