LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, November 5, 2019

வள்ளுவர் வாய்மொழி - 1 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வள்ளுவர் வாய்மொழி - 1

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*முன் குறிப்பு)

இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும்
பின்வரும் அதிகாரத்தை.

பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும்
உத்தரவாதமில்லை யெதுவும்.

ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு
நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு?

பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும்
அதுவேயாகலாகா தெப்போதும்.
__________________________________________
1.
இன்றைய உம் கொடும்பசிக்கு இரையாகினேன்
நன்று நன்று; வேறென்ன வுரைக்க?

2.
நம் சொத்தென் றெம்மைச் சொல்வார்
தம் உம் நம் யார்யார்?

3.
என் உடையைப் பேசப் புகுமுன்
எண்ணுமின் ஆடையற்றோரை.

4.
நீர் எனக்காற்றும் உதவி நாளும்
சோர்வின்றிச் சிலகுறள்கள் படித்தறிதல்.

5.
அறிதலெனல் வெறுமே மனனம் செய்வதல்ல
அறிவிலேற்றி அன்றாடம் பின்பற்றல்.

6
அறிவென்பது யாதெனில் யாரையும்
அறிவிலி யென்னா திருத்தல்.

7.
ஏழே சொற்களில் எழுதினேன ழித்திடாதீர்
கீழேயுள்ள மூன்றை.

8.
காய்சில நன்றாம் கவரலாம் புசிக்கலாம்
பாயெனில் படுப்பதே உசிதமாம்.

9.
வடிவம் மாறலா மெனில் பகடையில்
இடம்பெறும் எண்கள் மாறா.

10.
சக்கரம்போல் வாழ்க்கை யெனில் மேலோர்
வக்கிரமாக மாட்டா ரென்றும்.

11.
என்னுள் கடத்தலே எனக்கான வள்ளுவம்
சொன்ன சொல் எண்ணுவம்.

No comments:

Post a Comment