A POEM BY
ATHMAJIV
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
.....................................................................................
நட்பினருக்கு வணக்கம்.
தொகை பெரிதல்ல - உங்கள் பங்களிப்பு பெரிது. சக கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதிக்கு உங்களாலான தொகையை நன்கொடையாக அனுப்பிவையுங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.
கவிஞர் ஆத்மாஜீவ் நலநிதிக்குழுவினர்
.....................................................................................
A POEM BY ATHMAJIV
Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
The pain of not being able to return
to the passage gone beyond
is being relived
by going there
with the wings of words
is what the grand world
of the writer indeed.
The height of release
Is but a hiatus.
That
would be forever conversing
in the language of silence.
That is
the soft music of Life
Those having ears listen
When the heart wanders
in this space
That can’t be filled with Life
Deficiency fills and swells
I fancy
The bird craving to fly
in the bygone sky
is the writer’s heart - Oh My!
கடந்துபோன பாதைக்கு
திரும்ப முடியாத வலியை
வார்த்தைச் சிறகுகளால்
மீளச் சென்று வாழும் மனம்தான்
படைப்பாளியின் பெரும் உலகம்.
விடுபடுதலின் உயரம்
ஓர் இடைவெளி.
அது
மௌனத்தின் மொழியில்
பேசிக் கொண்டேதான் இருக்கும்.
அது
உயிரின் மெல்லிய இசை.
காதுள்ளவர்கள் கேட்கிறார்கள்.
உயிரிட்டு நிரப்ப முடியாத
இந்த இடைவெளியில்
மனம் சஞ்சரிக்கும்போது
போதாமை நிரம்பி விடுமென
நினைக்கிறேன்.
கடந்து விட்ட வானத்தில்
பறக்கத் துடிக்கும் பறவை
படைப்பாளியின் இதயம்.
ஆத்மாஜீவ் :



No comments:
Post a Comment