சொல்லத் தோன்றும் சில……
- லதா ராமகிருஷ்ணன்
(2023, மார்ச் 9 அன்று என் ஃபேஸ்புக் டைம்லைனில் பதிவேற்றியது இது
எப்போதுமே breaking news போல் ஏதாவ தொரு விஷயம் வெளிவரும் போது அதன் மூலம் சில mythகள் அடிபடும்.
முன்பு ஓரினச்சேர்க்கை குறித்து ஒரேயடியாக romanticize செய்யப் பட்டுக் கொண்டிருந்த போது கிண்டி கத்திப் பாரா ஜங்ஷன் பகுதியில் ஓரினச்சேர்க்கையாளர் கள் சிலர் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் மற்ற ஆண்களை மோசமாக நடத்த முயற்சிப்பது குறித்த ஆதாரபூர்வமான செய்தி வந்தது.
சமீபத்தில் ஆண்கள் பள்ளி யொன்றில் புதிதாகச் சேர்ந்த மாண வரை சீனியர் மாணவர்கள் மிக மோசமான பாலியல் சீண்டல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் ஆளாக்கி யிருப்பது குறித்த செய்தியைப் படிக்க நேர்ந்தது.
ஆண்களென்றால் பாலியல் சீண்டல்கள் செய்வார்கள், மற்றவர்கள் தங்களுக்குச் செய்வதைப் பெரிதுபடுத்த மாட்டார்கள், பாலியல் சீண்டல்களுக்கு ஆண்கள் victimகளாக இருக்க மாட்டார் கள் என்பதாய் பரவலாக பொதுப்புத்தியில் உள்ள எண்ணம் தவறு என்ற உண்மை பலருக்குத் தாமதமாகவே உறைக்கிறது.
மார்க்வெஸ்ஸின் ONE HUNDRED YEARS OF SOLITUDEஇல் இளைஞர் களுக்கு பாலுறவில் பயிற்சி தர ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி யிடம் சில பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைப் பதாகப் படித்த ஞாபகம். இப்படி சிலர் தம்மை இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு போதகர் ஸ்தானத்தில் நிறுத்திக்கொள்வதும் (அப்படி உண்மையாகவே தம்மை பாவித்துக்கொண்டோ அல்லது காரியார்த்தமாகவோ) நடக்கிறது.
பாலியல்ரீதியான உருவேற்றல்கள், அத்துமீறல்கள் கவனம் பெறும் அளவுக்கு இளம் உள்ளங்களிடம் அவர்களை சுயமாய் சிந்திக்கவிடாமல் கருத்துரீதியாக மேற்கொள்ளப்படும் உருவேற் றல்கள், மூளைச்சலவை களும் அத்துமீறல்களே. இளம் உள்ளங்க ளுக்கு வழிகாட்டுதல், அவர் களை வழிநடத்துதல் என்பது அவர் களை சுயமாய் சிந்திக்க இயலாதவர்களாய் ‘சாவி கொடுத்த பொம்மைகளாய்’ செயல்பட வைப்பது அல்ல.
மீறல் மனோபாவமே இளைஞர்களின் தனித்துவ அடையாள மாகக் காட்டப்படுகிறது; கொள்ளப்படுகிறது. எனில், எதை மீறுகி றோம் எதற்காக மீறுகிறோம், இந்த மீறலின் விளைவுகள் என்ன வாக இருக்கும் என்பது குறித்த தெளிவில்லாமல் மேற்கொள்ளப் படும் மீறலும் ஒருவகையில் நம் மீது நாமே இழைக்கும் அத்து மீறலே. ஒழுக்கம், தனி மனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம், செயலில் ஒழுக்கம், சிந்தனையில் ஒழுக்கம் - இத்தகைய ஒழுக்கங்கள் அல்லது ஒழுக்கத்தின் பல்பரிமாணங்கள் ஒருவகையில் சக மனிதர்களின் தனிமனித உரிமைகளை, சமூக உரிமைகளை அங்கீகரித்து மதித்து நடப்பதே.
இன்று ‘போர்னோ’ காணொளிகள் மிக மிகப் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. அவற்றில் காணப்படுபவர்கள் எல்லோருமே பாலுறவுக்காக ஏங்குபவர்களாகவும், யார் புணர்ந்தாலும் அதை ரசிப்பவர்களாகவும் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டு அதன் மூலம் தன்னை ஒருவர் தொடுவது, தன் மீது பாலியல் அத்துமீறல் நிகழ்த்துவது தனக் குப் பிடிக்கவில்லை என்று சொல்பவர், எதிர்ப்ப வர் போலி என்று பார்க்கப்படுமளவு அப்படியொரு பிம்பம் தொடர் ந்து கட்டமைக்கப்பட்டுவருகிறது.
சினிமாக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். Stalking தான் இங்கே காதலின் முதல் படி. நரைத்த முடியோடு நடிக்கும் நடிகரைப் பாராட்டுவதற்கு முன் படத்தில் அவரை 60 வயதை நெருங்குபவராக அல்லது கடந்தவராகக் காட்டியபடியே இளம்பெண்ணிடம் அவர் காதல் வயப்படுவதாகவும். அந்தக் கதாநாயகியும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதாகவும் காண்பிப்பதன் மூலம் ரசிகர்களிடம் எத்தகைய impact ஏற்படும் என்பதை யும் கணக்கில் கொள்ளவேண்டிய அவசியமிருக்கிறது.
உடல் பற்றி, உடலுறவு பற்றி, பாலியல் அத்துமீறல் தொடர் பாய் இருக்கும் சட்டங்கள் குறித்தெல்லாம் தொடர்ந்தரீதியில் வளரிளம் பருவத்தினருக்கும் வளர்ந்தவர்களுக்கும்கூட நிறைய தகவல்கள் கிடைக்கச்செய்ய வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment