கலைடாஸ்கோப் கவிதைகள் - 2
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
இவர் சில வார்த்தைகளை உதிர்க்க
அவர் சில வார்த்தைகளை உதிர்க்க
ஒரு வரி உருவானது….. வரிவரியாய்
இருநான்கு பத்திகளைக்கொண்டமைந்த அக்கவிதையில்
இரண்டறக் கலந்திருந்தவர்கள்
இன்று எங்கெங்கோ….
எதிரெதிர்துருவங்களாய்…
இறுகிப்பிணைந்திருக்கும்
சொற்களாலான கவிதை
சப்பரமாய் நின்றபடி.
அல்ல அல்லவே யல்ல யல்ல அல்ல
மெல்ல மெல்ல சொல்ல சொல்ல
சொல்லெல்லாம் கல்லாகும் வல்வினையில்
வில்லிலிருந்து விடுபடும் அம்பு
நில்லாது செல்வதும் கொல்வதும்
நியமமாகிய மெய் இல்லாதுபோமோ
புல் கத்தியாகும் வித்தை கல்லாதிருக்கலாமோ
எல்லோருக்கும் துல்லியமாய் காணக்கிடைக்குமோ
El Doradoவை
(*El Dorado ¬_ ஸ்பானிய தொன்மக் கதையில் இடம்பெறும் தங்க மனிதன். காலப்போக்கில் இந்தச் சொல் பல மாற்றங்களைக் கண்டு இன்று தொலைந்துபோன அரியவற்றைக் குறிப்பதான சொல்லாட்சியாக விளங்குகிறது.
4. முகமூடி
ஸெல்ஃபி எடுத்துக்கொண்டால் ஆபத்து.
அன்பே உருவாயொரு களங்கமில்லாக் குழந்தையாய்
என்றேனும் சிரிக்கக் கிடைத்திருந்தால்
அதை மறவாமல் ஸெல்ஃபி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
தேவைப்படும்போதெல்லாம் அதை வெளியிட்டுக்கொள்ளலாம் -
ரத்தவெறிபிடித்த கோரமுகத்தை
உள்ளுக்குத் தள்ளி.
No comments:
Post a Comment