கலைடாஸ்கோப் கவிதைகள்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
1. அவரவர் உலகங்கள்
நாம் சிறிய கோடுகளா? பெரிய கோடுகளா?
இணைக்கும் புள்ளிகளா? வரையும் எழுதுகோலா?
வெள்ளைத்தாளா? விழிகளா? பார்க்குந்திறனா ?
விரல்களா? வேறு ஏதாவதா?" என்று
இருவருக்கிடையேயான இணைபிரியா நெருக்கத்தை அடிக்கோடிட்டுக்காட்டவேண்டிக் கேட்டவளிடம்
"உலகம் உருண்டை" என்று மட்டுமே
அறிவாளியாய் சொன்னவனுக்கு
அதைக் கேட்டு அவள் ஏன்
அப்படி உடைந்துபோனாள்
என்று இன்னமும் புரியவில்லை.
ஸ்ட்ரெச்சரில் ஏந்தி மருத்துவமனைக்குக்
கொண்டுசெல்வதற்கும்
பாடையில் தூக்கி சுடுகாட்டிற்குக்
கொண்டுசெல்வதற்கும்
குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்களாவது
உண்டுதானே...?
வேண்டும்
நம்மெல்லோருக்கும்.
No comments:
Post a Comment