தெய்வம் நின்று கொல்லும்
சிலர் பொய்சாட்சி சொன்ன காரணத்தாலும்
ஒரு ‘ஹை – ஃபை’ சீரியல் கொலையாளி நிரபராதியாய்
திரிந்துகொண்டிருக்க…..
தக்க தருணத்திற்காகக்
காத்துக்கொண்டிருந்தது தெய்வம்
கால்கடுக்க நின்றபடி.
கையில் கிடைத்த முக்காலியை இழுத்துப்போட்டு
உட்காரச் சொன்ன என்னைக்
கனிவோடு பார்த்து_
"உன் கால்களும் என் கால்களும் ஒருவகையில்
ஒன்றேயென்றாலும்
இன்னொருவகையில் அப்படியில்லை.,
அவை தருக்களும்கூட!” என்று புன்னகைத்த கடவுள்
இதோ இன்று
வேரடிமண்ணிலிருந்து தோண்டியெடுத்த
balance-sheetஐப் பிரிக்கிறது.
அதனுள்ளிருந்து துருத்திக்கொண்டு நீள்கிறது
ஸைலன்ஸர் பொருத்திய துப்பாக்கிக்குழல் _
குற்றவாளியின் பின்மண்டையையும் நடுமார்பையும்
ஒரே சமயத்தில் குறிபார்த்தவாறு!
No comments:
Post a Comment