உற்சவம்
கொடுப்பினையாய்
இரு கரம் கூப்பிக் கண்மூடித்
தெருநீள வழிபார்த்து
இருகால்களும் நிலம் பாவாமல்
பரந்து விரிந்த வெளியெங்கும்
பறந்து பறந்து
பரவசத்தில் கண்கிறங்கிக்
கிடந்ததொரு காலம்……
உருகும் உள்ளெங்கும் இசை
நிறைத்துப் பெருகி
வித்தாகிப் பித்தாகி கத்துங்கடல்
முத்தாகி
யெத்தாலும் அழியாச் சொத்தாகி
செத்தாலும் மறவாத நினைவாகி
மொத்தமாயெனை ஆட்கொண்டிருந்த
தொரு காலம்.....
வரமனைய இசையின் பிசிறுகளும்
பேதங்களும்
சிறுகச்சிறுகப் புரிய
புரிதலுக்கப்பால் சில நிரவல்களும்
நிறுத்தங்களும்
வெறும் பேரிரைச்சலாக
பத்தோடு பதினொன்று
அத்தோடு இதுவுமொன்றாய்
குரலின் திருக்கோலம் காணும்
பேரார்வம்
நத்தையோட்டுக்குள் சுருண்டு
முடங்கியதொரு காலம்……..
திருவீதி யுலா நாளும்….
No comments:
Post a Comment