LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, September 5, 2026

A POEM BY ATHMAJIV - Translated into English by Latha Ramakrishnan

 A POEM BY 

ATHMAJIV


Translated into English by Latha Ramakrishnan

.................................................................................................................................................

முன்குறிப்பு: * நட்பினருக்கு வணக்கம். கவிஞர் ஆத்மா ஜீவ் நலநிதிக்கு உங்களால் முடிந்த நன்கொடையளித்தும், உங்களால் முடிந்த நன்கொடைகள் கிடைக்க வழி செய்தும் உதவும்படி வேண்டிக்கொள்கிறேன். 

நன்கொடையளிக்க கடைசி நாள் இம்மாதம் 15ந் தேதி.

நன்கொடையளிக்கவேண்டிய ஜிபே எண் 7845576241

*Please help POET ATHMAJIV, a quality Tamil poet who is distressed - healthwise and economically. any amount as donation would be most welcome and also help in securing more donations for the said cause. 

GPay Number for payment of donations 7845576241 (India)

......................................................................................................................................................

  A POEM BY 

ATHMAJIV

Translated into English by Latha Ramakrishnan

THE VISION

Indeed I am walking on the sky _ Oh yes, 

See for yourself

The shadows of my legs

keep strolling in the earth

On the skyway

my footprints don’t leave a trail

Dividing the Moon into two 

and holding them in both my hands

_ All for fun, you see.

If looked intently

My very own eyes – they could be

I collect a few water-fetching clouds

and carry them in my bag

to drink when I feel thirsty

From the painting brush of 

an unknown artiste

the greenish blue hue-mix is 

sprayed

I move a little away

It is absolutely out of place in

the yellow-colour upper-wear

I speak of the ocean only

On returning to the ground

for resting a while

hugging close the sleep 

that would be waiting for me in my cot

I would sleep fast.

#தரிசனம்

வானத்தின் மீதுதான்

நடந்து கொண்டிருக்கிறேன்

நன்றாக பாருங்கள்

எனது கால்களின் நிழல்கள்

பூமியில் அலைந்தபடி இருக்கிறது

வான்பாதையில்

எனது காலடித் தடங்கள் பதிவதில்லை

நிலவை இரண்டாக்கி இரண்டு கைகளிலும்

ஏந்திக் கொண்டிருப்பதும்கூட

வேடிக்கைக்காகத்தான்

உற்று நோக்கினால்

எனது கண்களாகக்கூட இருக்கக்கூடும்

நீர்சுமந்த சில மேகங்களை

எனது பையில் எடுத்துச் செல்கிறேன்

தாகமெடுக்கும்பொழுது அருந்துவதற்காக

யாரோ ஒரு ஓவியனின் தூரிகையிலிருந்து

நீலப்பச்சை வர்ணக்கலவை தெளிக்கப்படுகிறது

நான் சற்று நகர்ந்து கொள்கிறேன்.

மஞ்சள்நிற மேலாடையில் 

சற்றும் பொருந்துவதில்லை அது

சமுத்திரத்தை பற்றிதான் கூறுகிறேன்

ஓய்வுக்காக மண்ணுக்கு திரும்பும்போது

என் அறைக்கட்டிலில் காத்திருக்கும்

உறக்கத்தை அணைத்தபடி

தூங்கிவிடுவேன்

ஆத்மாஜீவ்  



மறைக்கப்படும் உண்மைகள் -- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மறைக்கப்படும் உண்மைகள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

மைக்கேல் ஜாக்சனிடமிருந்து காப்பியடித்தால் மிக உடனடியாக மாட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்

எனவே, பாகிஸ்தானிய பிரபலப் பாடலிசையை

சுட்டுக்கொள்ள கட்டுச்சோற்றுடன் கிளம்பிவிடுகிறவர்கள்

நிறைய பேர் நம்மிடையே அன்றும் இன்றும்.


அப்படித்தான் 

புள்ளிவிவரங்களைக் கொட்டிப்பேசி

அறிவாளிப்பேச்சாளர்களாகிவிடுவோர் அனேகம்.


தரப்பட்ட தரவுகளின் உண்மைத்தன்மை அறிய

நிறையவே மெனக்கெடவேண்டும் என்பதோடு

கிடைத்த விவரங்களைப் பகிர்வதும்

அத்தனை சுலபமல்ல.


அப்படித்தான் 

இன்று பெரியாளாகிவிட்ட பத்திரிகையாளரொருவர்

சிரியாவின் வளர்ச்சியைப் புகழ்ந்துபேசினார்.


தன் நாட்டை மறைமுகமாக ஒப்பிட்டு மதிப்பழிப்பது

என்றுமான Hidden Agenda.


மடாக்குடியர்களும் மண்ணாந்தைகளல்ல.


பல்வலி யுடன் 'இல்' திரும்பிய கையோடு

’கூகுளி’ல் தேடியதில் கிடைத்த முதல் தகவலறிக்கை:


• சிரியாவின் பரப்பளவு: 

        71,498 square miles (185,180 square kilometers).Aug 1, 

         2019

        மக்கட்தொகை : 

        183 லட்சம் (*2019 Estimate)

• இந்தியாவின் பரப்பளவு: 

        3,287,263[6] km2(1,269,219 sq mi)[d] 

         மக்கட்த்தொகை: 

         13392.00 லட்சம் (2017

நாயென்பது நாய் மட்டுமல்ல - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நாயென்பது நாய் மட்டுமல்ல

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

நாய் என்பது சிலருக்கு சக உயிர்;

சிலருக்கு தன் அந்தஸ்தை உயர்த்திப் பிடிக்கும் அலங்கார பொம்மை.

பைரவக்கடவுளென்றாலும் யாரும் நாயைத் தொட்டுக் கும்பிட்டுப் பார்த்ததில்லை.

கையிலிருக்கும் காசையெல்லாம் பொறை வாங்கித் 

தெருநாய்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாய் 

அத்தனை பரிவோடு தருபவரைப் பார்த்திருக் கிறேன்.

நாய் வைத்திருப்பவர் தமது நாயை அவள், அவன் என்று உயர்திணையிலும்

அடுத்தவர் நாயை அது என்று அஃறிணையிலும்  பேசுவது வழி வழி மரபு.

தன்னால் முடியாத நீளந்தாண்டுதல் அகலந் தாண்டுதல் 

தொலைவோட்டம் பந்துகவ்வல் என்றெல்லாவற்றையும்செய்யமுடிந்த 

ஒன்றைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும்அதிகாரம் அலாதியானது.


அத்தனை அன்பையும் தன் எஜமானனுக்கேதரும் நாய் என்பது எத்தனை தூரம் உண்மை யென்று வளர்த்தவரின் பட்டறிவுக்கே தெரியும்.

எனில், பட்டறிவு பொய் சொல்லாது என்று என்ன நிச்சயம்?

எத்தனை பெரிய செல்வந்தர் வீட்டு நாயானா லும் தெருவோர வீட்டுச் சுவரோரமா கவோ அருகிலுள்ள வேறெந்த வீட்டுக்குச் சொந்தமான காரின் டயரிலோதான் ஒற்றைக் காலைத் தூக்குகிறது இன்றளவும்.

வளர்ப்புநாய்க்கென்று எந்த மாளிகையிலேனும் தனி கழிப்பறை என்பது நம்பிக்கையாகவியலா நம்பிக்கையாய்.

மேலுக்கு அவரவர் செல்லப்பிராணிகளைப் பற்றிபரஸ்பரம் குசலம் விசாரித்துக்கொண்டா லும் நாய் வளர்ப்பவர்கள் பூனையை வளர்ப்பவர் களை ஒருவித எள்ளலோடு பார்ப்பதுபோல் தோன்றும்.

பூனை வளர்ப்பவர் அணில் வளர்ப்பவரை

அணில் வளர்ப்பவர் நோஞ்சான் கிளி வளர்ப்பவரை….

ஒரு அல்சேஷன் நாயின் கழுத்துப்பட்டையிலி ருந்து நீளும்சங்கிலியைப் பிடித்திழுத்த வாறே தெரு வீதி வலம் வருபவர்களில் சிலர் 

தம்மை ஆண்டைகளாகவும் எதிரே வருவோரை அடிமைகளாகவும் எண்ணிக்கொள்வது எத்தனை இயல்போ 

அத்தனை இயல்பு

குட்டிவாலை ஆட்டியபடி தன்பின்னால் ஓடிவரும் பப்பியை ஒரு சின்னப்பையன்

தன் ஆருயிர்த்தோழனாகக் கட்டிப் பிடித் துத் துள்ளிக் குதிப்பதும்.

நாயின் ஊளையை விட நெஞ்சையறுப்பதுஅதன் கண்களில் தெரியும் அடர்தனிமை.

நாய்க்கு நினைவிருக்குமாஅது ஓநாயின் வழித்தோன்றல் என்பதும்

கானகப்பெருவெளியும்….

.

என்றேனுமொருநாள் சங்கிலிக்குள் பொருந்தியிருக்கும் கழுத்துக்குரிய விலங்குமீண்டும் ஓநாயாக மாறுவதாய் தவிர்க்கமுடியாமலொரு நினைவெழ 

நடுக்கத்தோடு காலெட்டிப்போடுகிறேன்.


பின்னால் கேட்கும் புலியின் உறுமல் என் முதுகுத்தண்டைச் சில்லிடவைக்கிறது

அவள் அழுதுகொண்டிருக்கிறாள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவள் அழுதுகொண்டிருக்கிறாள்

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

அந்த நள்ளிரவில் 

அவள் அழும் விசும்பலொலி கேட்டு

கூட்டம் கூடிவிட்டது. 


ஆச்சரியத்துடன் சிலர்;

அனுதாபத்துடன் சிலர்;

அக்கறையுடன் சிலர்;

சுடச்சுடச் செய்தி சேகரிக்கும் 

ஆர்வத்தில் சிலர்;

தேர் சரிந்த பீதியில் சிலர்;

பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்;

பெருங்குரலெடுத்து அட்டகாசமாய்

இளக்காரத்தோடு சிரித்தபடி சிலர்;

‘இதென்ன புதுக்கதை' என்று

வரிந்துகட்டிக்கொண்டு

களத்திலிறங்கியவர்கள் சிலர்….


;அங்கிங்கெனாதபடியானவள்

ஆற்றொணாத் துயரத்தில்

பொங்கியழக் காரணமென்ன?


ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்தனர்;


”இவர் அவரின் அன்னையை 

தாசியென்று பேச

பதிலுக்கு

அவர் இவரின் அன்னையை 

வேசியென்று ஏச’

ஆராரோ பாடி ஊட்டிவளர்த்த 

அன்னையரெல்லாம்

யாராராலோ இப்படித் தம் 

அந்திமக் காலத்தில்

தீராப் பழிசுமக்கும்

கோராமையை என்ணியெண்ணி

ஆறவில்லையே எம் மனது”

என்று கூறியவள் 

அழுகை

நின்றபாடில்லை.


அலுவல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

அலுவல்

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

எதிரே தெரிந்த சுவரொட்டியில் 

பதவிசாய் சிரித்துக்கொண்டிருந்த

பெண்ணைச் சுட்டிக்காட்டி

பாவம் பிரசவத்தின்போது வீங்கியிருந்த 

இவள் வயிறு

எத்தனை பாரமாயிருந்திருக்கும் 

என்றார் அடுத்திருந்தவர்.


எதற்கு வம்பென்று ஆமாமாம் என்று 

சொல்லியபடியே

அடுத்துவரும் பேருந்து 

என்ன வழித்தடம் என்று

கண்களை உருப்பெருக்கிக்

கண்ணாடியாக்கப்

பிரயத்தனப்பட்டார் இவர்.


வாழ்வுப் பிரயத்தனத்தில் 

ஒருவேளை இவள் 

சோரம்போயிருந்திருப்பாளோ,

என்று மேலும் கேட்டார் 

முதலாமவர்.


போயிருக்காவிட்டாலென்ன, 

போனதாகச் சொல்வது 

வெல்லமல்லவா உமக்கு

என்று தன்னையும் மீறிச் 

சொல்லியவண்ணம்

வண்டியில் முண்டியடித்துக்கொண்டு 

ஏறினார் இவர்.

கோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடிய ஸின் ஃபிடில் இசையும் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கோதண்டராமன் காதையும் 

கிரேக்க மன்னன் நீரோ க்ளாடிய ஸின் ஃபிடில் இசையும்


’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)




”ரோமில் இருக்கும்போது ரோமானியர்களாக நடப்பதுதான் நல்லது”. 

(ரோம் என்றால் மன்னனா மக்களா என்று யாரும் கேள்வி கேட்கலாகாது).


ரோம் தீப்பற்றி எரிகிறது.

கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸ் ஃபிடில் வாசித்துக்கொண்டிருக்கிறான்

இன்னமும்கூட.


காலப்போக்கில் நீரோ கிளை பிரிந்து பல்கிப் பெருகி

இன்று

அடிக்கு அடி தட்டுப்பட்ட வண்ணம்…..


‘ரோம் தீப்பற்றி யெரியட்டுமே

அதற்காக இசையை வாசிப்பதும் ரசிப்பதும் எப்படி

 இங்கிதமற்றுப்போகும்’

என்று தர்க்கம் செய்யத் தெரிந்தவர்கள்

தேவையான பாதுகாப்புக்கவசங்களோடு

தலைமறைவாயிருந்தபடியே

தத்தமதான பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள்.


சிலர் கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெய் வார்க்கிறார்கள்

சிலர் தீயின் வெப்பத்தை அளக்க புதுக்கருவி தயாரித்துக்கொண்டிருக் கிறார்கள்;

சிலர் தீ கருக்கிய இடங்களில் தண்ணீர் தெளித்து 

கோலமிடப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்;

’நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும், நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்’ என்று கண்ணதாசனின் வரிகளை 

இரவல் வாங்கியாவது

தவறாமல் தத்துவம் பேசுகிறார்கள் சிலர்;

‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்று பாரதியை 

மனப்பாடமாய்ச் சொல்கிறார்கள் சிலர் 

(மறந்தும் பின்பற்றமாட்டார்)


துக்கிரித்தன்மாய் தீயையையும் மூட்டி ஃபிடிலையும் வாசிக்கீறானே இக்கரை இக்கால நீரோ மன்னன்

இவன் கொடுங்கோலனல்லவா என்று கேட்டுவிட்டால் போதும்

கண், காது, வாயைப் பொத்திக்கொண்டுவிடுகிறார்கள்.

காந்தியைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்களாம்.


இன்னும் சிலர் 

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று புன்சிரித்துக் கூறி

ஃபிடிலையும் அதைப் பிடித்திருக்கும் நீரோவின் கையையும்

வருடித்தருகிறார்கள்.


ஐயோ ரோம் எரிகிறதே என்றால்

புனரபி ஜனனம், புனரபி மரணம்

காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று 

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில்

ஆறுதலளித்து அவரவர் வழி சென்றவண்ணம்

சுற்றிலும் கேட்கும் வலியோலங்களை 

அலைபேசியில் படம்பிடித்தபடியே

அகன்றேகுகிறார்கள்.


நீரோ வாசிக்கும் இசைக்குத் தவறாமல் தலையாட்டியப்டி

தீயில் கருகும் சக ரோமானியர்களிடமிருந்து பார்வையை

அகற்றியபடி

சுற்றுலா செல்கிறார்கள்.


அனுமனுக்குஆச்சரியம் தாளவில்லை –

அதெப்படி இந்திரஜித்தைப் போல இவர்களால்

நினைத்த நேரத்தின் அருவமாகிவிட முடிகிறது!


அதேசமயம், போர்க்களத்தின் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்குத் தெரிந்தேயிருக்கிறது என்பது

அவர்கள் பாடும் இரங்கற்பாக்களிலிருந்து புலப்படுகிறது….


’நவீன தமிழ்க்கவிதையின் பொருள் போலவே

நீரோவின் தீயும்’ என்று 

கவிதை யாப்பதென்ன அவர்களுக்குக்

குதிரைக்கொம்பா?


வால்நுனித் தீயைக் கடலில் முக்கி அணைத்தது தவறோ

என்று தனக்குத்தான் கேட்டபடியே அண்ணாந்த அனுமன் கண்களில்

புஷ்பக விமானம் தெரிகிறது வீங்கிப் புடைத்து.


எரியும் மக்களோடு ஸெல்ஃபி பிடித்துக்கொள்ளவும், 

கூடவே நீரோ க்ளாடியஸிடம் நலம் விசாரிக்கவுமாய்

ரோமுக்குப் புறப்பட்டுச் செல்வோர் எண்ணிக்கை 

அதிகமாகிக்கொண்டே.....

பேசா வாசகமும் பொய்சாட்சியமும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பேசா வாசகமும் பொய்சாட்சியமும்

‘ரிஷி’ 

(லதா ராமகிருஷ்ணன்)

உதிர்க்கப்படாத  வார்த்தைகளாலான

ஒரு வாசகம் உருவாக்கப்படுகிறது.


கூறப்பட்டதாய் பொய்சாட்சியம் தரும்படி

சிலரிடம் சொல்லிவைக்கப்படுகிறது.


தெருவெங்கும் அந்த வாசகத்தை 

உரத்த குரலில் அடிக்கோடிட்டுக் காட்டும்

சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.


உதிர்க்கப்படாத சொற்களாலான அந்த வாசகத்தின்

முன்னும் பின்னும்

வெகு கவனமாய் இன்னும் சில சொற்கள் 

கோர்க்கப்படுகின்றன.


உதிர்க்கப்படாத சொற்களாலான அந்த வாசகத்தின்

சந்துபொந்துகளில் மறைந்திருக்கும் 

சொற்கள் அவை என்று

முந்திக்கொண்டு பொழிப்புரை தருவதற்கென்றே 

சிலர் வழியெங்கும் அணிவகுத்து நிற்கிறார்கள்.


அவர்களுக்கு நன்றாகவே தெரியும் _


உதிர்க்கப்பட்ட சொற்களைக் காட்டிலும்

உதிர்க்கப்படாத சொற்களாலான வாசகமே

உடனடிக் கலவரத்திற்கு அதிகம் உதவி புரியும்

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் - ஆசிரியர்களும் இலக்கிய ரசனையும்

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

ஆசிரியர்களும் இலக்கிய ரசனையும்

ADEMICIANS என்று பொதுவாக தொழில்முறை ஆசிரியர்களைக் கூறுவதுண்டு. அதாவது, அவர் களுக்குப் பாடபுத்தகங்கள் தாண்டி சமகால இலக்கியம் பற்றி எதுவும் தெரியாது என்ற பொரு ளில்.

ஆனால், நம்மிடையே உள்ள தரமான இலக்கிய வாதிகளில் தொழில்முறை ஆசிரியர்கள் -பள்ளி ஆசிரியர்கள் - கல்லூரி ஆசிரியர்கள் - கணிசமா கவே உண்டு. பிரம்மராஜன், ஆர்.சிவகுமார், க.மோகனரங்கன், இயற்கை, ராணி திலக், இளம் பிறை, என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் இத்தகைய படைப்பாளிகளைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டு அவர்கள் அரசியல் தலையீ டின்றி சுதந்திரமாகச் செயல்பட, மாணாக்கர் களிடம் படைப்பூக்கத்தை ஏற்படுத்த, இலக்கிய ரசனையை வளர்க்க அரசுகள், உரிய துறைகள் வழிசெய்தாலே போதும்.

ஆனால் ஒன்று, இத்தகைய இலக்கிய மேம்பாட் டுக்குழுவினரிடையேகூட எது தரமான இலக்கி யம் என்பதில் ஒத்த கருத்து (CONSENSUS) ஏற்படு வது அரிது! ஆனாலும், ஒரு COMMON MINIMUM PROGRAMMEஇன் அடிப்படையில் அவர்கள் நன் றாகவே செயல்பட முடியும்.

நதிமூலம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நதிமூலம்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

மிக நீண்ட நதி யது

மிக மிக ஆழமானது

அதன் மிகவாரம்ப மலையுச்சி

மேகங்களுக்கு அப்பாலானது

வயதென்ப பல்லாயிர வருடமெனல் தப்பாகாது.

நதிக்கரைக் கூழாங்கற்களின்

நட்சத்திர விகசிப்பில்

அவற்றின் மேற்படியுங் கைகளிலெல்லாம்

முத்துக்கள் சேகரமாகும்

ஈரமணலூறும் சின்னச்சின்ன நண்டுகள்

தோராயமாய் ஆயிரங் காலுடைத்து

நதிநீரில் நிதமும் நீந்திக் குளித்தவர்கள்

முங்கிக் குளித்தவர்கள்

கரைமீதமர்ந்து நீரின் சலசலப்பை பளபளப்பை

கண்ணாரக் கண்டவர்கள்

இன்பண்ணிசைத்தவர்கள்

இத்தனையத்தனையில்லை

எத்தனையெத்தனையோ என்ப.

அசைந்து செல்லும் தோணிகள் படகுகள்

கப்பலுக்கு அப்பன் என்று எப்பொழுதும்

சொல்லாமலிருந்ததில்லை தாத்தா

வேத்தாள் என்றெல்லாம் நதிக்கு உண்டா என்ன?

யார் கால்வைத்தாலும் தண்ணென்றிருக்கும்

கைகுவித்து அள்ளிப் பருகினாலும் தாகம் தணியும்.

அது நதியல்ல சாக்கடை என்று

நாக்கூசாமல் பொய்யுரைப்பாருக்கு

நீருள்ளிருந்து மேலெழும்பும் சிறுமீன்கள் பதிலளிக்க

தன்போக்கில் தொடர்ந்தேகுமாறு

ஊருக்கு உயிரூட்டியவாறு

INSIGHT, JULY 2026 ISSUE(www.2019insight.blogspot.com)


 

A POEM BY ATHMAJIV

A POEM BY 

ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)




.....................................................................................................................................

முன்குறிப்பு: * நட்பினருக்கு வணக்கம். கவிஞர் ஆத்மா ஜீவ் நலநிதிக்கு உங்களால் முடிந்த நன்கொடையளித்தும், உங்களால் முடிந்த நன்கொடைகள் கிடைக்க வழி செய்தும் உதவும்படி வேண்டிக்கொள்கிறேன். 

நன்கொடையளிக்க கடைசி நாள் இம்மாதம் 15ந் தேதி.

நன்கொடையளிக்கவேண்டிய ஜிபே எண் 7845576241


Please help POET ATHMAJIV, a quality Tamil poet who is distressed - healthwise and economically. any amount as donation would be most welcome and also help in securing more donations for the said cause. 

GPay Number for payment of donations 7845576241 (India)

....................................................................................................................................

A POEM BY ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

I still remain

In this cabin

Ho, Friendly Flower...


After very many years

I utter your name

Once again today.


You are the indistinct warmth  of

one half of mine.


It was you who taught me 

The language of Motherhood 

hiding inside me.


Inside the unread pages of

The story unwritten of

He who couldn’t live without attachments

And turned a prey to the man-eaters 

Who feed on his affection

You still remain

Alive


In the almirahs of forgotten memories

Escaping the termites of sorrow

infesting even miniscule reminiscences

You remain still alive

deep down


Being in the midst of all these humans

who move on with the flow of Time

I remain still here

As signifying a moving doll.


In the midst of my mass of words

that none reads

the noise of angst keeps sounding

in silence.


I remember those words of yours

Uttered before many years

Smilingly - “Just ignore those who understand not

the language of silence

and keep going”


I recall now.

“The language of silence

would always echo as deafening sound”


 Time has made the hands of he 

who penned Poetry

to stretch out for alms.


I, being crushed under the wheels of poverty

My scream seems to 

Stay outside ears many. 


Wearing the garment of  humiliations

I stand stark naked 

as personification of contradictions.

In this cabin called body

Still remaining alive.


இந்த அறைக்குள்தான்

இன்னுமிருக்கிறேன்

சிநேகப்பூ.


பல வருடங்களுக்குப் பிறகு

மீண்டும் உன் பெயரை

உச்சரிக்கிறேன் இன்று.


என்னொரு பாதியின் உருவற்ற

மென்மை நீ.


எனக்குள் ஒளிந்திருக்கும்

தாய்மையின் மொழியை

கற்றுத் தந்தவள்.


பற்றர வாழ முடியாதவனின்

பாசத்தை தின்னும் புறந்தின்னிகளின்

கொடுரப்பசிக்கு இரையாகிப் போனவனின்

எழுதப்படாத கதையில்

வாசிக்கப்படாத பக்கங்களுக்குள்

இன்னும் நீ

வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்.


மறக்கப்பட்ட ஞாபகங்களின் அலமாரியில்

சின்னஞ்சிறு நினைவுகளையும் அரித்த

துயரக் கரையான்களிடமிருந்து தப்பித்து

இன்னும்தான் உயிர்த்திருக்கிறாய்

உள்ளுக்குள் நீ.


காலத்தின் நகர்வுகளில் நகர்ந்து செல்லும்

இத்தனை மனிதர்களின் இடையில் நானும்

நகர்ந்து கொண்டு

இன்னும்தான் இங்கிருக்கிறேன்

அசையும் பொம்மையின் அடையாளமாய்.


யாரும் வாசிக்காத என்

சொற்களின் கூட்டத்திற்கிடையில்

சோகத்தின் சத்தம் ஒலித்துக் கொண்டுதான்

இருக்கிறது மெளனமாக.


"மௌனத்தின் மொழி புரியாதவர்களை

புறந்தள்ளிப் போய்கொண்டே இரு" என்று

அன்றொருநாள் நீ

புன்னகைத்தபடி கூறியதை

நினைத்துக் கொள்கிறேன் இப்போது.


"மௌனத்தின் மொழி எப்போதும்

பெருஞ்சப்தமாகத்தான் எதிரொலிக்கும்”


உண்மைதான் சிநேகப்பூ.


கவிதை எழுதியவனின் கைகளை

ஏந்த வைத்து யாசிக்க வைத்தது

காலம்.


வறுமையின் சக்கரத்தில் நசுங்கிக் கதறும்

என் சொற்களின் சத்தம்

யார் காதிலும் விழுவதாயில்லை.


அவமானங்களின் ஆடையணிந்து

நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறேன்

முரண்களின் மொத்த உருவமாய் இன்று.

உடல் என்ற இந்த அறைக்குள்

உயிருடன்தான் இருக்கிறேன்

இன்னும் நான்.


ஆத்மாஜீவ் :  #அகபுத்தகம்_IB_68  : #சிநேகப்பூ





Friday, September 4, 2026

‘சினிமாவின் ஆன்மா’ சீனு ராமசாமியின் சமீபத்திய நூல்

 

‘சினிமாவின் ஆன்மா’

சீனு ராமசாமியின் சமீபத்திய நூல்

கவிஞர், திரைப்படக்கலைஞர் திரு.சீனு ராமசாமியின் சமீபத்திய நூல் குறித்து …….

 _ லதா ராமகிருஷ்ணன்


 

(July 6, 2026 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை)

 ………………………………………………………………………………………………………………………………………….வெளியீடு: சந்தியா பதிப்பகம்

 விலைரூ.180

 தொடர்பு எண்: 044 24896979 / 98409 52919

…………………………………………………………………………………………………………………………………………

 ஒப்புநோக்க, சினிமாவைப் பற்றிய நூல்கள் குறைவு எனலாம். ஆனால், சினிமா வந்த நாளிலிருந்தே அது மக்கள் மனங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்திவருவது கண்கூடு. சினிமா ரசனை, சினிமா ரசனையை எப்படி மேம்படுத்திக்கொள்ளலாம், சினிமாவும் சமூகமும் என எத்தனையோ தலைப்புகளில் ஆழமான வாசிப்புக்குரிய சினிமா தொடர்பான விஷயங்களை எழுத முடியும். நல்ல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. என்றாலும், இன்னும் நிறைய எழுதப்படவேண்டும்.

 அதுவும் சினிமா என்ற பிரம்மாண்ட கலைவடிவால் ஈர்க்கப்பட்டு, அதேசமயம் அந்தக் கலைவடிவத்தை மனித மேம்பாட்டுக்காக ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் கொண்ட வர்கள், சினிமா குறித்த தங்களது அறிவையும், ரசனையையும் வளர்த்துக்கொள்வதில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் சினிமா குறித்து   எழுதும் நூலின் மூலம் சினிமாவின் பல பரிமா ணங்களையும், சாத்தியப்பாடுக ளையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும். அத்தகைய ஒரு நூலாக சமீபத்தில் சென்னை, சந்தியா பதிப்பக வெளியீடாக வந்துள்ள சினிமாவின் ஆன்மாவைக் கூற முடியும்.

தமிழ்த்திரையுலகில் குறிப்பிடத்தக்க பெயர்களில் இயக்குனர் சீனு ராமசாமியும் ஒன்று. சர்வதேச விருதுகளைப் பெற்ற திரைப்பட இயக்குனர். சிறந்த கவிஞரும் கூட. இதுவரை இவரது 13 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஒன்பது திரைப்படங்களை இயக்கி யுள்ளார். இந்த நூல் அவருடைய மூன்றாவது கட்டுரைத்தொகுப்பு.

 நூலாசிரியர் குறித்து பதிப்பாளர் சந்தியா நடராஜன் (இவர் சிறந்த எழுத்தாளரும்கூட!) எழுதியுள்ள ‘நிலத்தின் கலைஞன்’ என்ற தலைப்பிலான முன்னுரை குறிப்பிடத்தக்கது.

 உலக சினிமா என்பது எங்கோ அந்நிய தேசத்தில் எடுக்கப்படுவது அல்ல. உலக சினிமா என்பது உள்ளூரில் எடுக்கப்படும் நேர்த்தியான சினிமா என்ற தனது முத்திரை வாசகத்தை மீண்டும் வலியுறுத்தி ஒளிகளின் மொழி என்ற தலைப்பில் நூலாசிரியர் எழுதியுள்ள ‘என்னுரை’யும் சிறப்பா னது. “ரசனை மிகுந்த மனிதன் இந்த சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் ஒருவனாக இருக்க வாய்ப்பே இல்லை என்று நான் ஆழமாக நம்புகிறேன். நமது பார்வையாளர் கள் வெறும் திரை யில் தோன்றும் உருவங்களுக்கு விசில் அடிப்பவர்களாக மட்டும் நின்று விடாமல், அந்த உருவங் களுக்குப் பின்னால் இருக்கும் ஆன்மாவை தரிசிப்பவர்களாக மாறவேண்டும்” என்று கூறுபவர், ‘இந்த நூல் ஒரு சிறு முன்மாதிரி நூல் மட்டுமே. இதை ஒரு மூல மாகக் கொண்டு, பாடங்களில் திரைப்படங்களின் எண்ணிக் கையை நாம் இன்னும் கூட்டிக்கொள்ளலாம். உலக சினிமாக் களை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் ஒரு எளிய வழி வகையாக இந்தப் படைப்பு இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை. வாழ்க்கை என்பது ஒரு முடிவற்ற திரை. அதில் நாம் ஓட்டும் படங்கள் யாவும் பேரன்பால் நெய்யப்படட்டும்’ என்று ஒரு திரைப்பட இயக்குனராகத் தன் ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் கவித்துவமாக வெளிப்படுத்தி யிருக்கிறார்.

இந்த நூலின் சிறப்பம்சம் குழந்தைகளை பிரதான கதாபாத்திரங் களாகக் கொண்ட உலகத்தரமான 15க்கும் மேற்பட்ட திரைப்படங் களை அறிமுகம் செய்திருப்பது. அவை எதனால் சிறந்த படங்கள் என்று தேர்ந்த ரசிகர் பார்வையில் எடுத்துரைத்திருக்கிறார் நூலா சிரியர். ஒவ்வொரு படத்தைப் பற்றிப் பேசும்போதும் குழந்தைகள் பால் நூலாசிரியருக்கு உள்ள மெய்யான அக்கறை வெளிப்படு கிறது. எடுத்துக்காட்டாக, THE RED BALLOON என்ற , 1956இல் வெளி யான படம் குறித்த கட்டுரையின் ஆரம்பப் பத்தி இது:

 “குழந்தைகளின் உலகம் பெரியவர்களுக்குப் புரிவதே இல்லை. அவர்களின் கற்பனைகளுக்குத் தர்க்கங்கள் கிடையாது. ஒரு சிறிய மரக்கட்டையை மோட்டார் காராக நினைத்து ஓட்டக்கூடிய வர்கள் அவர்கள். அவர்களுக்கு உயிரற்ற பொருட்களோடும் பேசத் தெரியும். அப்படிப்பட்ட ஒரு தனிமை யான சிறுவனுக்கும், அவ னோடு ஒட்டிக் கொண்ட ஒரு சிவந்த பலூனுக்கும் இடையிலான மௌனமான காதலே பிரெஞ்சு இயக்குனர் ஆல்பர்ட் லாமோரிஸ் 1956இல் உருவாக்கிய THE RED BALLOON.’

 CHILDREN OF HEAVEN என்ற 1997ஆம் ஆண்டைய படம் பற்றிக் குறிப்பிடுகையில் ‘வாழ்க்கை சில நேரங்களில் ஒரு ஜோடி கிழிந்த காலணிகளுக்குள் அடங்கிவிடுகிறது. வறுமை என்பது வெறும் பற்றாக்குறை அல்ல. அது ஒரு மனிதனின் தன்மானத் தையும் அவனது மென்மையான உறவுகளையும் சோதித்துப் பார்க்கும் ஒரு களம். ஈரான் நாட்டின் மகத்தான இயக்குநர் மஜித் மஜிதி செதுக்கிய சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படம் வறுமை யின் நிறத்தை, அதோடு அந்த வறுமைக்குள்ளும் குடும் பம் எப்படி அன்பால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒரு கவிதையைப் போல் பதிவு செய்கிறது’ என்று எடுத்துச்சொல் கிறார்.

 இப்படி ஒவ்வொரு படமாக அதன் உள்ளடக்கச் சிறப்பை, அதிலுள்ள சமூகப்பிரக்ஞையை எடுத்துக்காட்டி அது சினிமாவாக எப்படி நேர்த்தியான பாணியில் காட்சிப்படுத்தப்பட்டிருக் கிறது என்பதை யும் விவரித்துச்சொல்கிறார்.

நூலின் இறுதிப்பக்கங்களில் சினிமா ரசனைக் கல்வியின் அவசி யமும் தேவையும் என்ற கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.

பல பள்ளிகளில் நூலகங்களே மாணாக்கர்களுக்கு எட்டாக்கனி யாக இருக்கிறது என்று கேள்விப்படுகிறோம். அரசுப்பள்ளி களில் புத்தகங்கள் கிழிந்துவிடும் என்று நூலகங்களில் பிள்ளை களை உள்ளே விடுவதில்லையென்கிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.  இந்த நிலை மாறவேண்டியது அவசியம். கூடவே, மாணாக்கர்களுக்கு உலகத்தரமான திரைப் படங்களும் அவ்வப்போது காண்பிக்கப்படலாம். அவர்களுடைய வளர்ச்சிக்காலத் திற்குத் தேவையான சில கருத்துகளை முன்வைக்கும் ஆவணப் படங்களும் காண்பிக்கப் படலாம்.

இன்று காட்சி ஊடகங்களின் காலம் எனலாம். இதில் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் திசைதப்பி தறிகெட்டுப்போய் விடாமலி ருக்க அவர்களுக்கு சினிமா ரசனை என்பதும் பாடத்திட்டத்தில் இடம்பெறுவது அவசியம் என்று நூலாசிரியர் வலியுறுத்தியிருப் பது கவனத்திற்குரியது. நூலில் கையாளப்பட்டுள்ள மொழியும், நடையும், பேச எடுத்துக்கொண்டுள்ள உலக சினிமாக்களும், சினிமா சார்ந்த விஷயங்களும்  திரு.சீனு ராமசாமியின் (தரமான) சினிமா ரசனையையும் சமூகப்பிரக்ஞையையும், தாக்கமேற் படுத்துவதான நேரிய மொழிப்பயன்பாட்டையும் எடுத்துக்காட்டு கின்றன.

A POEM BY ATHMAJIV Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

 A POEM BY 

ATHMAJIV





 

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

 

The land ploughed so deep

Cries not

It creates Life

 

In the drops poured by

clouds banged against and broke

the land blooms

 

From inside the seed

that bursts and breaks

jungle comes to be…

 

From me 

broken into smithereens

rise up and walk

Words en masse


Thursday, August 20, 2026

PLEASE HELP QUALITY TAMIL POET ATHMAJIV

 A POEM BY 

ATHMAJIV

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


FRIENDS,

the amount may be big or small - that doesn't matter

your participation in helping a quality Tamil poet by name Athmajiv who needs our help and support is what matters most.

please gpay any possible amount to 78455 76241

நட்பினருக்கு வணக்கம்.

தொகை பெரிதல்ல - உங்கள் பங்களிப்பு பெரிது. சக கவிஞர் ஆத்மாஜீவ் நல நிதிக்கு உங்களாலான தொகையை நன்கொடையாக அனுப்பிவையுங்கள். சிறுதுளி பெருவெள்ளம்.

                         கவிஞர் ஆத்மாஜீவ் நலநிதிக்குழுவினர்

...................................................................................

I long to see Mother

The craving proves overwhelming

Why so? I am at a loss to know.

Relations  there yet not there

Siblings being indifferent to the core

My poem  and I 

Facing rejection

Faring all alone

Though I have a family of my own

A life my own

Yet 

Today

I long to see my mother

The craving proves overwhelming

Why so? I am at a loss to know….

அம்மாவை பார்க்க வேண்டும் என்று

மிக ஏக்கமாக இருக்கிறது.

ஏனென்று தெரியவில்லை.

இருந்தும் இல்லாத உறவுகள்.

உடன்பிறந்தவர்களின் புறக்கணிப்புடன்...

புறக்கணிக்கப்படும்

என் கவிதையும் நானும்

தனிமையில்.

எனக்கென்று ஒரு குடும்பம்

ஒரு வாழ்க்கை

எல்லாம் இருந்தும் இன்று ஏனோ...

அம்மாவை பார்க்க வேண்டும் என்று

மிக ஏக்கமாக இருக்கிறது...

ஏனென்று தெரியவில்லை.

ஆத்மாஜீவ்#அகபுத்தகம்




எமோஜிக்களின் உரையாடல் - 101

 எமோஜிக்களின் உரையாடல் - 101

ஃபேஸ்புக்கில இருக்கற எல்லாரும் வெத்து வேட்டுங்க; வேலையத்தவங்க; வெளங்காத வங்க...

நீங்களும் ஃபேஸ்புக்ல இருக்கீங்களே?


எல்லாத்திலேயும் நான் விதிவிலக்காயிருப்பவன்


??????????????????????????????????????????????? 

வந்தே மாதரம் - தாய்மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்

...................................................................................

வந்தே மாதரம்  . இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது.

பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆங்கிலேய அரசின் கீழ் பணி புரிந்த போதே, வந்தே மாதரத்தை எழுதும் எண்ணம் அவருள் இருந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது. 1870 வாக்கில், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், God Save the Queen என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலைக் கட்டாயமாக் கினர்.[1]. 

பங்கிம் சந்திரர், இப்பாடலைத் தான் புலமை பெற்றி ருந்த வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கொண்டு ஒரே மூச்சில் எழுதினார். 

நாட்டளவில், வந்தே மாதரம் (தாய் (மண்ணே) உன்னை வணங்குகிறேன்) என்பதே ஆங்கிலேய அடக்கு முறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது. 

இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலைப் பொது இடங்களில் பாடுவதைத் தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களைச் சிறையில் இட்டனர். ரபீந்திரனாத் தாகூர் முதலிய பலரும் இப்பாடலைப் பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். லாலா லஜபதி ராய் லாகூரில் இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார்.[1].

"இப்பாடல் பிரபலமடைவதைக் காண நான் உயிரோடு இல்லாமல் போகலாம். ஆனால், இது ஒவ்வொரு இந்தி யனாலும் பாடப்படும்" என்று தன் பாடல் குறித்து தீர்க்கத்தரிசனமாகக் கூறினார் பங்கிம் சந்திரர். 

இப்பாடல் வரிகளை அடிப்படையாக வைத்து பல்வேறு இசை மற்றும் கவியாக்க முயற்சிகள் செய்யப்பட்டுள் ளன. இப்பாடலின் பல்வேறு வடிவ இசைப்பதிப்புகள் இருபதாம் நூற்றாண்டு முழுக்க வெளியாகின. Leader, அமர் ஆஷா, ஆனந்த்மத் ஆகிய திரைப்படங்களில் இப்பாடலுக்கான காட்சியமைப்புகள் இடம்பெற்றன. அனைத்திந்திய வானொலி நிலையங்களில் ஒலிபரப் பப்படும் வந்தே மாதரப் பாடலுக்கு ரவி சங்கர் இசை யமைத்துத் தந்ததாக நம்பப்படுகிறது.[1]. 

இன்று வரை, வந்தே மாதரம் என்பது இந்தியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்க மாகக் கருதப்படுகிறது.


தமிழாக்கம்

தாயே வணங்குகிறோம்

இனிய நீர்

இன்சுவைக்கனிகள்

தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை

மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்

இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்

எழில்மிகு புன்னகை

இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்

எங்கள் தாய்

சுகமளிப்பவளே

வரமருள்பவளே

தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்

உன் திருப்பெயர் முழங்கவும்

கோடிக் கோடிக் கரங்கள்

உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்

அம்மா ! 'அபலா '#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?

பேராற்றல் பெற்றவள்

பேறு தருபவள்

பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

அறிவு நீ

அறம் நீ

இதயம் நீ

உணர்வும் நீ

எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ

எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ

எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்

தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ

தாயே வணங்குகிறோம்

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்

அன்னை துர்க்கை நீயே

செங்கமல மலர் இதழ்களில் உறையும்

செல்வத் திருமகள் நீயே

கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே

தாயே வணங்குகிறோம்

திருமகளே

மாசற்ற பண்புகளின் மனையகமே

ஒப்புயர்வற்ற எம் தாயகமே

இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே

கருமை அழகியே

எளிமை இலங்கும் ஏந்திழையே

புன்முறுவல் பூத்தவளே

பொன் அணிகள் பூண்டவளே

பெற்று வளர்த்தவளே

பெருமைகள் அனைத்தும் அளித்தவளே

தாயே வணங்குகிறோம்

(*விக்கீபீடியாவிலிருந்து)