LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, December 1, 2025

கண்ணோட்டம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கண்ணோட்டம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)







காதுகளும் நாசியுமாகத் தாங்கிப்பிடித்திருக்கும்
மூக்குக்கண்ணாடி உதவியோடு
சில பல மின்விளக்குகளின் உதவியோடு
என்னால் பார்க்க முடியும்;
படிக்க முடியும்
ஆனால்,
எனக்கு பானை செய்யத் தெரியாது.
பாடத் தெரியாது.
பறவைகளின் மொழியைப்
புரிந்துகொள்ளவியலாது.
பல காதங்கள் நடந்துசெல்ல முடியாது.
பகலவனை அண்ணாந்து பார்த்து
சரியான நேரத்தைக்கணித்துச்
சொல்லவியலாது.
பசியில் வாடும் அனைத்துயிர்களுக்கும்
அட்சயபாத்திரமாகவியலாது.
பார்ப்பதால் எனக்குப் ’பார்க்க’த்
தெரியுமென்று
நிச்சயமாகச் சொல்லவியலுமா என்ன?
பார்வைகள் ஆயிரம் எனில்
எனக்குத் தெரிந்தவை
பத்துக்குள் தான் இருக்கும்.....
அவருக்குப் பார்க்கமுடியாது;
ஆனால் பாடத் தெரியும்;
அற்புதமாக கிடார் வாசிக்கத் தெரியும்;
அவர்கள் வீட்டுப்பூனையிடம்
அவர் எப்படி அளவளாவுவார் தெரியுமா!
அந்தத் தெருமுனையிலிருக்கும் ஜூஸ் கடையில்
அவர் முப்பது ரூபாய் ஜூஸ்
குடிக்கும்போதெல்லாம்
அந்தக் கடைப்பையன்கள்
அத்தனை நேர்மையாகப் பிழிந்துதரும்
ஒன்றரை கோப்பை பழச்சாறில்
அரைகோப்பையை
தொலைதூர ஊரிலிருந்து வந்து
வேலைபார்த்துக்கொண்டிருக்கும்
தன் தம்பியொத்த சிறுவனுக்கு
அத்தனை அன்போடு தந்துவிடுவார்.
பார்க்கவியலாத தன்னைப் பார்த்தபடி
பேசும் மனிதரின்
மனதிலோடும் வரிகளை மிக நன்றாகவே
படித்துவிட முடியும் அவரால்.
பார்வைகள் ஆயிரமும் அவருக்கு
அத்துப்படியில்லையாயினும்
அறுபதாவது பரிச்சயமுண்டு கண்டிப்பாய்.
அதற்கும் மேல்
அம்மா அப்பாவிடம் அன்பாக
நடந்துகொள்ளத் தெரியும்;
அடுத்தவர் மனம் நோகாமல்
மாற்றுக்கருத்துகளை முன்வைக்கத்
தெரியும்.
அவ்வளவாகத் தன்னைப் பொருட்படுத்தாத
சமூகத்தின் அறியாமையை
மன்னிக்கத் தெரிகிறது;
மறந்துவிடக்கூட முடிகிறதுஅவரால்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் _
அவரால் பார்க்கமுடியவில்லையெனில்
அவரைப்போலவே என்னாலும்;
என்னால் பார்க்கமுடியுமெனில்
பார்த்தபடியேதான் அவரும்.

அகமும் புறமும் கவிதையும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அகமும் புறமும் கவிதையும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

‘இதோ நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள்’ என்கிறார்.
’இதோ இங்கே பாருங்களேன் நான் கவிதை எழுதிக் கொண் டிருக்கிறேன்’, என்கிறார்.
’இதோ சற்றே இப்படித் திரும்பிப்பாருங்களேன். நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்’, என்கிறார்.
’கண்டிப்பாகக் கவிதைதான் எழுதுகிறாயா’ என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது கவிதைக்கு.
ஆனால் அது கண்ணாடிக்கு அப்பாலிருக்கிறது.
அதற்கு அசரீரியாகப் பேச வராது.
வேண்டும்போது ரௌத்ரம் பழகினாலும்
பொதுவாக கவிதை கனிவானது
குட்டிப்பாப்பா போல் மென்மையானது.
புறாக்கண்களை உருட்டி உருட்டிப் பார்ப்பதே
அதற்கு மிகவும் பிடிக்கும்.
சண்டை பிடிக்கவே பிடிக்காது.
’இத்தனை சொல்லியும் திரும்பிப்பார்க்க மறுக்கிறாயே -
என்னவொரு திமிர்
எத்தனை தெனாவெட்டு
என்னோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள
எத்தனை பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா
சுண்டைக்காய் நீ – சோப்ளாங்கி'
என்று அன்னார் உச்சஸ்தாயியில் கூவக்கூவ
கமறிய அவர் குரல்வளையிலிருந்து
இருமல் பெருகிவர
வேகவேகமாய்ச் சென்று எங்கிருந்தோ வொரு
மினரல் வாட்டர் புட்டியையும்
ஒலிவாங்கியையும்
கொண்டுவந்து கொடுத்துவிட்டுத்
தன்வழியே செல்கிறது கவிதை.

பூமராங்……! ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பூமராங்……!

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சுய லாபத்திற்காய் சுயநலவாதியொருவரை
சக மனிதர்களை ரட்சிக்க வந்தவராய்
சுண்டுவிரலை அல்லது கட்டைவிரலைச்
சரேலென்றறுத்து
பெருகும் செவ்விரத்தத்தால் கையெழுத்திடாத குறையாய்
சொல்லிச்சொல்லிச்சொல்லிக்கொண்டே
யிருப்பவரால்
என்றுமே ஏனோ காண முடிவதில்லை
யவ்வொரு செயலில்
தன் சாயம் வெளுத்து
சுயரூபம் சுருங்கிக்கொண்டே போவதை

குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
போகக்கிடைத்த நாடுகளின் பெயர்ப்பட்டியலிலோ
பேசக்கிடைத்த அரங்குகளில் குழுமியிருந்த
பார்வையாளர்கள் எண்ணிக்கையிலோ
பரஸ்பர முதுகு சொறிதலாய் பக்கம்பக்கமாக
எழுதப்பட்ட ஆஹா ஓஹோ விமர்சனக்
கட்டுரைகளிலோ
பெரிய பதவிகளிலோ
பிரமுகர்களின் அறிமுகங்களிலோ
பாரிய அரசியல்கட்சியின் அரவணைப்பிலோ
ஊர் சாதி இன மத குழு மனப்பான்மையிலோ
நேர் நிறை இலக்கணமறிந்ததிலோ
அறியாததிலோ
கார்கால மழைக்கொரு புதுப்பெயர் சேர்ப்பதிலோ
வாலைத் தலையாக்கி வித்தைகாட்டுவதிலோ
பாலையைச் சோலையென்று
அம்மியாய்க் கும்மியடித்துச் சொல்வதிலோ
அடங்காது.....
பூக்களும் பூங்காற்றும் புறாக்களும்
அலைக்கழியும் மனம் ஆற்றி
அக்கடா என்று அமர்ந்திருக்க
அன்றாடம் தேடிவரும் மனிதக்கூட்டமும்
அங்கே பூரணமாக இருந்தாகவேண்டும்.
அதுவேயாம் கவிதையும்.

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் - மகிழ்ச்சிடைக் கையகப்படுத்துதல் - அத்தியாயம் - 5 - தமிழில்: லதா ராமகிருஷ்ணன்

 THE CONQUEST OF HAPPINESS By BERTRAND RUSSEL

தமிழில்: லதா ராமகிருஷ்ணன்

அத்தியாயம் 5: சோர்வு





சோர்வு பலவகையானது. அவற்றில் சில மற்றவற்றைக்  காட்டிலும் அதிகமான அளவு மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. முழுவதும் உடல்ரீதியான சோர்வு அது மட்டுமீறிப்போகாமலிருந்தால், மகிழ்ச்சிக்கான காரணமாகக்கூட அமைய முனையும் என்று சொல்லலாம். அத்தகைய உடல்சோர்வு நல்ல தூக்கத்திற்கும், நல்ல பசிக்கும் நம்மை இட்டுச்செல்லும். விடுமுறை நாட்களில் சாத்தியமாகின்ற ஆனந்தக்களிப்புகளுக்கு அவை உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. ஆனால், அது மிகவும் அதிகமாக, , மட்டுமீறியதாகிவிடும்போது, அது அதிதீவிரமான தீமையாக மாறிவிடுகிறது.

மிகவும் முன்னேறிய சமூகங்களைத் தவிர மற்ற எல்லாவிடங்களிலும் குடியானவப் பெண்கள் மிகவும் அதிகப்படியான உழைப்பால் முப்பது வயதிலேயே வயதானவர் களாகிவிடுகிறார்கள்; உடல் நலிவடைந்துவிடுகிறார்கள். தொழில்மயமாதலின் ஆரம்ப நாட்களில் பிறந்த குழந்தைகளின் உடல்ரீதியான வளர்ச்சி முடங்கி அதிக நேரங்களில் அவர்கள் அதீத வேலைப்பளுவால் சீக்கிரமே இறந்துபோக நேர்ந்தது. இந்த விளைவுகள் இன்றளவும் சீனாவிலும், ஜப்பானிலும்  - தொழில்மயமாதல் புதிய ஒன்றாக இருக்கும் நிலங்களில் - நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஓரளவிற்கு அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களிலும். இந்த எதிர்மறை விளைவுகளைக் காணமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் நீட்டிக்கப்படும்  உடல் உழைப்பு அராஜகமான சித்திரவதையாக உயிர்வாழ்தலை தாங்கமுடியாத வேதனையாக மாற்றும் அளவுக்கு வெகுவாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், நவீன உலகின் முன்னேறிய நிலங்கள் பெரும்பாலானவற்றில், தொழில்துறை சார் சூழ்நிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் உடல் சோர்வு நிறையவே குறைக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் முன்னேறிய சமூகங்களில் நிலவும்  மிக ஆபத்தான சோர்வு நரம்புரீதியான சோர்வு ஆகும். விசித்திரமான அளவில், இந்தவகை சோர்வு வசதி படைத்தவர்கள் மத்தியில்தன் மிகவும் கணிசமான அளவு நிலவுகிறது. தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் மூளை சார் உழைப்பாளர்கள் மத்தியில் நரம்புச் சோர்வு காணப்படுவதைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே அது வேலை செய்து சம்பளம் ஈட்டுபவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இது விந்தையாக, இந்த வகை, வசதி படைத்தவர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது, மேலும் கூலி சம்பாதிப்பவர்களிடையே இது வணிகர்கள் மற்றும் மூளைத் தொழிலாளர்களை விட மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

நவீன வாழ்க்கையில் இவ்வகையான நரம்புரீதியான சோர்விலிருந்து தப்பிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. முதலில், வேலை பார்க்கும் நேரமெல்லாம், அதைவிட அதிகமாக வேலைக்கும் வீட்டுக்கும் இடையே கழிக்கும் செலவிடப்படும் நேரமெல்லாம் நகர்ப்புற ஊழியர் சபலவிதமான இரைச்சல்களுக்கு மத்தியில் இருக்கவேண்டிய நிலை, அவற்றில் பல சப்தங்களை அவர்கவனமின்றித் தான் கேட்டுக்கொண்டிருக்கிறார். என்றாலும், அந்த சப்தங்கள் அவரை சோர்ந்துபோக வைக்கின்றன. அதுவும், அந்த சப்தங்களைக் கேட்காமலிருக்க அவரையுமறியாமல் அவரால் மேற்கொள்ளப்படும் ஆழ்மனப் பிரயத்தனங்களால் அவருடைய சோர்வு இன்னும் அதிகமாக அவரை வாட்டுகிறது.

நாம் அறியாதவாறு நம்மை மிகுந்த சோர்வுக்காளாக்கும் இன்னொரு விஷயம், எப்பொழுதுமே அந்நியர்கள் மத்தியில், அவர்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலை. மனிதனின் இயல்பான உள்ளுணர்வு, மற்ற எல்லா மிருகங்க ளையும் போலவே, தனது இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு அந்நியரையும் பற்றிய துப்பாய்வை, விசாரணையை மேற்கொண்டு அவரோடு நாம் நட்பாகப் பழகவேண்டுமா அல்லது அவரை எதிரியாக பாவிக்கவேண்டுமா என்று தீர்மானித்துக்கொள்வதற்காக மேற்கொள்ளவேண்டியது. நெரிசல் நேரத்தில் சுரங்கப்பாதைகளில் பயணம் மேற்கொள்வோர் கைக்கொள்வதான இந்த உள்ளுணர்வின் காரணமாக தாங்கள் இவ்விதமாய் தினசரி வாழ்வின் நிர்பந்தங்களால் தாம் சந்திக்கவேண்டியிருக்கும்,, சேர்ந்திருக்கவேண்டியிருக்கும் கலந்துறவாட வேண்டியிருக்கும், மேலும், காலை நேர ரயிலைப் பிடிக்க விரையவேண்டும் அதன் விளைவாக செரிமானக் கோளாறுக்காளாகி, அலுவலகம் சென்றடைந்ததுமே வேலை ஆரம்பமாகிவிடுகிறது. கருப்பு கோட் அணிந்திருக்கும் ஊழியருக்கு ஏற்கெனவே நரம்புத்தளர்ச்சி, மன அழுத்தம் ஏற்பட்டு, மனித இனத்தையே ஒரு தொந்தரவாகப் பார்க்கத் தலைப்படும் ஒரு மனப்போக்கு அவருக்கு ஏற்பட்டுவிடுகிறது..

 

 

 

அதே மனநிலையில் வரும் லுவலகம் வந்துசேரும் அவருடைய முதலாளி, தன் ஊழியரின் அந்த மனப்போக்கைஅவரது முதலாளி, ஊழியரிடம் இருக்கும் அந்த எண்ணத்தை/ மனோபாவத்தை தகர்த்து அகற்றுவதற்கு எதுவுமே செய்வதில்லை. வேலையை விட்டு எடுத்துவிடுவார்களோ என்ற பயம் முதலாளியிடன் மரியாதையாக நடந்து கொள்ளச் செய்கிறது. ஆனால், இந்த இயல்பு மீறிய நடத்தை ஊழியரின் நரம்புத்தளர்ச்சியை, மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. வாரத்திற்கு ஒரு முறை முதலாளியின் மூக்கைத் திருகியோ அல்லது வேறு விதமாகவோ அவரைப் பற்றித் தாம் என்ன நினைக்கிறோம் என்பதைத் தெரிவிக்க வாய்ப்பளித்தால் ஊழியர்களின் மன அழுத்தம் குறையலாம் அல்லது காணாமல் போகலாம், ஆனால், அந்த முதலாளியைப் பொறுத்தவரை, அவருக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதால், ஊழியரின் இந்த நடத்தையால் விஷயம் சரியாகிவிடப்போவதில்லை.சில முதலாளிகள் இத்தகைய பயங்களைக் கடந்த வலுவான நிலையில் இருப்பவர்கள் என்பது உண்மைதான். ஆனால் பொதுவாக அவர்களும் இந்தவகையான ஓர் உயரிடத்தை எட்டிப்பிடிக்க வருடக்கணக்காக அயராமல் கடுமையாகப் பிரயத்தனப்படவேண்டியிருகிறது. இந்த சமயத்தில் அவர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் நடந்துகொண்டிருக்கும் முக்கிய நிகழ்வுகளை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கவேண்டியுள்ளது; அவற்றைப் பற்றிய தகவல்களை முனைப்பாக அறிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. தங்களுடைய போட்டியாளர்கள் தமக்கு எதிராகத் தீட்டும் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிக்கவேண்டியுள்ளது. இவையெல்லாவற்றின் விளைவு, மிக உறுதியான, பெரிய வெற்றி அந்த முதலாளிக்குக் கிட்டும்போது அவர் ஏற்கெனவே அத்க மன அழுத்தத்திற்காளானவராக, நரம்புத்தளர்ச்சியுடையவராக மாறியிருக்கிறார்.  கவலை என்பதும் மன அழுத்தம் என்பதும் அவருடைய இரண்டாம் இயல்பாகிவிட்ட நிலை. அவற்றிற்கான தேவையில்லாமல் போய்விட்டபோதும் அவரால் அவற்றைத் தன்னிடமிருந்து உதறிவிட முடிவதில்லை. சில செல்வந்தர்களின் மகன்கள்  இருக்கிறார்கள். பணக்காரர்களாகவே பிறந்திருந்த போதிலும் அவர்கள் பணகாரர்களாகப் பிறக்காதவர்கள் அனுபவிக்கும் அத்தனை மன அழுத்தங்களையும், நரம்புத்தளர்ச்சிகளையும் அனுபவிக்குமளவு புதிது புதிதாகத் தங்களுக்குக் கவலைகளையும் பரிதவிப்புகளையும் உண்டாக்கிக்கொள்வதில் வெற்றி பெறுகிறார்கள். சூதாட்டம், பந்தயம் கட்டுவது போன்ற செயல்பாடுகளால் அவர்கள் தமது தந்தையரின் அதிருப்திக்கு ஆளாகிறார்கள்.; தங்கள் கேளிக்கைகளுக்காக தூக்கத்தைக் குறைத்துக்கொள்கிறர்கள். அதனால் அவர்களுடைய உடல்நலன் வலுவிழக்கிறது; சீர்குலைகிறது.  ஒருவழியாக அவர்கள் வாழ்க்கையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும்போது அவர்கள் தமது தந்தையர்கள் இருந்ததைப் போலவே வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியாதவர்களாகிவிடுகிறார்கள். தாமாக மனமுவந்தோ, அல்லது தம்மையும் மீறிய நிலையிலோ, தங்கள் விருப்பத்தேர்வாகவோ அல்லது அவசியத்தேவையினாலோ பெரும்பாலான நவீன மனிதர்கள் நரம்புத்தளர்ச்சியை உண்டுபண்ணுவதான, மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதான பதற்றமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுகிறார்கள். தொடர்ந்த ரீதியாக மிகவும் களைத்துச் சோர்வின் பிடியில் இருக்கும் அவர்களால் மதுவின் உதவியின்றி மகிழ்ச்சியை உணரமுடிவதில்லை.

அப்பட்டமான முட்டாள்களாக இருக்கும் பணக்காரர்களை ஒருபுறம் விலக்கிவைப்போம், வாழ்வதற்காக அயராது உடலுழைப்பை நல்கவேண்டியிருக்கும் சாதாரண மனிதரைப் பற்றிப் பார்ப்போம். இத்தகைய மனிதர்களின் விஷயத்தில் சோர்வு என்பது பெருமளவு கவலையால் ஏற்படுகிறது. இந்தக் கவலையை வாழ்வு குறித்த இன்னும் மேலானதொரு தத்துவத்தாலும், சற்று அதிகமான மன ஒழுக்கத்தினாலும் தவிர்க்கலாம். பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தங்கள் எண்ணங்களை எந்தவிதத்திலும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். கவலையளிக்கக் கூடிய விஷயங்களையே அவர்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவை குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வழியில்லை என்ற நிலையிலும் அவற்றைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக் கிறார்கள். மீண்டும் மீண்டும் தங்களுடைய பிரச்சனைகள், கவலைகளையே மண்டைக்குள் ஒடவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மறுநாள் அவற்றை திருத்தமாக எதிர்கொண்டு சமாளிக்கும் அளவில் அவற்றைப் பற்றி யோசிக்காமல், தூங்கவிலாமலிருப்பவர்களின் இயல்பான நடவடிக்கையாக அமைகின்ற கவலை யிலாழ்ந்த சிந்தித்தலாக, பாதி – சித்தங்கலங்கிய நிலையிலான நினைவோட்டமாக அவர்கள் சிந்திக்கிறார்கள். அந்த நள்ளிரவு சித்தங்கலங்கிய நிலையின் ஒரு பகுதி காலையிலும் அவர்களிடமே தங்கிவிடுகிறது. அவர்களுடைய தெளிவான சிந்தனையை மங்கலாக்கி அவர்கள் சரியானபடி சிந்திப்பதை, மதிப்பிடுவதை மழுங்கடித்துவிடுகிறது.  அவர்களுடைய அமைதியைக் குலைத்து அவர்களுக்குக் கோபமும் எரிச்சலும் ஏற்படுத்துகிறது, எதிர்ப்படும் எந்தத் தடங்கலும் ஒரேயடியாக அவர்களுடைய சமன்நிலையைக் குலைக்கும்படி செய்கிறது. மனப்பக்குவமுள்ள மனிதன் தனது பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்பதற்கென ஏதாவது குறிப்பான நோக்கம் அல்லது இலக்கு இருக்கும்போது மட்டுமே அவற்றை எண்ணத் தலைப்படுகிறான். மற்ற நேரங்களில் அவன் வேறு விஷயங்களைப் பற்ரி நினைக்கிறான், அல்லது, அது இரவு நேரமாயிருந்தால் அவன் எதைப்பற்றியுமே சிந்திப்பதில்லை. இப்படி நான் சொல்வதால், ஒரு மிக அவசரமான காலகட்டத்தில், மிக நெருக்கடியான நேரத்தில், உதாரணத்திற்கு, ஒருவருடைய உயிருக்கே ஆபத்து என்கிற நிலையில் தனது மனைவி தனக்கு துரோகம் செய்கிறாள் என்று ஒரு மனிதர் தகுந்த காரணங்களின் அடிப்படையில் சந்தேகப்படுகிறார் என்கிற நிலையில், வெகு சில மிக உயரிய மனக்கட்டுப்பாடு உடைய வெகு சிலரைத் தவிர, மற்றவர்கள் அது குறித்து எதுவுமே சிந்திக்காமல், தங்களால் அது குறித்து எதுவும் செய்யவியலாது என்ற புரிதலில் வாளாவிருந்துவிட முடியும் என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல. ஆனால், வழக்கமான நாட்களின் வழக்கமான பிரச்சனைகளை, அவற்றை எந்தவகையிலாவது கையாண்டாகவேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டாலொழிய சிந்திக்காமலிருந்துவிடுவது சாத்தியமே. ஒரு பிரச்சனையை உரிய நேரத்தில் உரிய அளவாக எண்ணிப்பார்ப்பதை வழக்கமாகக் கொண்ட, அவசியமில்லாதபோதும் எல்லாப் பிரச்சனைகளையும் எண்னிக்கொண்டேயிருக்காத ஒருவித ஒழுங்கமைவு கொண்ட கட்டுப்பாடுடைய சிந்தனைப்போக்கை வளர்த்துக்கொண்டால் நம்முடைய மகிழ்ச்சியும், செயல்திறனாற்றலும் பன்மடங்கு பெருகும் என்பது மலைக்கவைக்கும் உண்மை. கவலையளிக்கும் அல்லது கடினமான முடிவு அல்லது தீர்வை எட்டியே ஆகவேண்டும் என்ற கட்டாயமிருப்பின், தேவையான தரவுகள் எல்லாம் கிடைத்தவுடன் கையிலுள்ள பிரச்சனைக்கு உங்களுடைய ஆகச்சிறந்த கூரிய, தெளிந்த சிந்தனையை அளித்து அதன் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டவும். அப்படியொரு முடிவை எடுத்துவிட்ட பிறகு, பிரச்சனை குறித்த புதிய உண்மை ஏதாவது தெரியவரும் வரை உங்கள் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாதிர்கள். முடிவெடுக்க முடியாத நிலையை விட மிகவும் மனச்சோர்வளிக்கும் விஷயம் ஏதுமில்லை. முடிவெடுக்கவியலாததை விட மோசமான அளவு அர்த்தமற்ற, பயனற்ற வீண்விரய விஷயம் வேறெதுவும் இல்லை.

நமக்குக் கவலையையும் பதற்றத்தையும் உண்டாக்கும் விஷயத்தின் முக்கியத்துவ மின்மையைப் உணர்ந்துகொள்வதன் மூலம் பெருமளவு கவலைகளையும் அலைக் கழிப்புகளையும் இல்லாமலாக்கிவிட முடியும். எனது வாழ்நாளில் நான் நிறைய உரைகள் ஆற்றியிருக்கிறேன். ஆரம்பத்தில் பார்வையாளர்களைப் பார்த்து மிகவும் பயந்தேன். அந்த பயமும் பதற்றமும் என் உரைகளைப் பெரிதும் பாதித்தன. சொற்பொழிவாற்றுவது என்பது எனக்கு அத்தனை அச்சமூட்டியதால் நான் பேசப்போவதற்கு முன்பு என் கால் உடைந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எப்போதுமே இருந்தது. சொற்பொழிவாற்றி முடித்தவுடன் அதில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நான் மிகவும் சோர்ந்துபோவேன்.சிறிது சிறிதாக , நான் நன்றாகப் பேசுகிறேனோ, மோசமாகப் பேசுகிறேனோ – அஹ்டனால் உலகுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. இந்தப் பிரபஞ்சம் எப்போதும் இருப்பதைப்போலவே தான் இருக்கும் என்று நினைக்கும்படி என்னை நானே பழக்கப்படுத்திக்கொண்டேன். நான் நன்றாகப் பேசினேனா அல்லது மோசமாகப் பேசினேனா என்பதை பற்றி நான் கவலைப்படாமல் இருந்தால், என் பேச்சு மோசமாகிவிடுவதில்லை என்பதை கண்டுகொண்டேன். என் மன அழுத்தம் படிப்படியாக மறைந்து ஏறத்தாழ இல்லாமலாகிவிட்டது. நம்முடைய மன அழுத்தத்தின் பெரும்பகுதியை இவ்விதமாகக் கையாளமுடியும். நாம் செய்வதெல்லாம் மிக முக்கியமானவை, முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நாம் அனுமானித்துக்கொள்கிறோம். ஆனால், உண்மையில் அப்படியொன்றுமில்லை. நம்முடைய வெற்றிகளும், தோல்விகளும் அப்படியொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல.

மிகப்பெரிய துயரங்களைக்கூடக் கடந்துவாழ முடியும்; நமது வாழ்க்கையில் இனி மகிழ்ச்சியே இல்லாமல் செய்துவிடும் என்று தோன்றும் பிரச்சனைகள் கூட காலப்போக்கில் மங்கி மறைந்துவிடும். ஒரு கட்டத்தில்  அவற்றின் தீவிரத்தை நினைவுபடுத்திப்பார்ப்பதுகூட நம்மால் முடியாத காரியமாகிவிடும். ஆனால், இத்தகைய சுயஞ்சார் அக்கறைகளைக் காட்டிலும் பெரிது, ஒருவருடைய ‘ஈகோ’ உலகத்தின் பெரிய பகுதியெல்லாம் கிடையாது என்ற உண்மை. ஒரு மனிதர் சுயத்தைக் கடந்துசெல்லும் ஒன்றிடம் தனது எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் ஒருமுகப்படுத்தியிருப்பாரேயானால் அவனால் வாழ்வின் சாதாரணமான பிரச்சனைகளில் ஒருவித அமைதியை கண்டறிய முடியும். அப்பட்டமான தன்முனைப்புவாதிக்கு அது முடியாத காரியம்.

 

நம் நரம்புகளுக்கு மிகவும் சுகாதாரமானது என்று அழைக்கப்படக்கூடியவற்றைப் பற்றி ஆய்வலசல்களே இல்லையெனலாம். தொழிற்துறை சார் உளவியல் இந்த உடல்நோர்வு, உளச்சோர்வு குறித்து அகல்விரிவான விசாரணைகளை மேற்கொண் டுள்ளது என்பது உண்மைதான். அந்த ஆய்வலசல்கள் மூலம், நாம் ஒன்றை நீண்ட நேரம், நீண்ட காலம் செய்துகொண்டே யிருந்தால் இறுதியில் நாம் மிகுந்த சோர்வுக்காளாவோம் என்பதை கவனமாய்த் திரட்டிய புள்ளிவிவரங்களிலிருந்து நிரூபித்திருக்கிறது – இந்த விளைவை, அறிவியலின் ஆடம்பரமான அணிவகுப்பில் லாமலே அனுமானிக்க முடியும்.  உளவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சோர்வு குறித்த ஆய்வுகள், கணிசமான அளவு பள்ளிக்கூடக் குழந்தைகளிடம் காணப்படும் சோர்வு குறித்த ஆய்வலசல்களும் இருந்த போதிலும்,   முக்கியமாக தசைசார் சோர்வையே கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பவை. ஆனால் இவற்றில் எதுவுமே முக்கியமான பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொள்ளவில்லை.

 

நவீன வாழ்க்கையில் முக்கியமான வகை சோர்வு என்பது எப்போதுமே உணர்வுரீதியான, மனரீதியான சோர்வாகவே இருக்கிறது; முற்ற முழுக்க அறிவுத்திறன் சார் சோர்வு, முற்ற முழுக்க தசை சார்ந்த சோர்வைப்போலவே, அதனுடையதேயான நிவாரணத்தைத் தூக்கத்தில் உற்பத்திசெய்கிறது. அறிவுத்திறன் சார்ந்த கடின உழைப்பை, உணர்ச்சிகளுக்கு வேலையற்ற உழைப்பை, மேற்கொள்ளவேண்டிய நிலையிலிருக்கும் எந்த நபரும் – எடுத்துக்காட்டாக, அகல்விரிவான எண்கணிதக் கணக்கீடுகளைச் செய்யவேண்டியிருப்பதுபோல் – அந்த நாள் வரவாக்கிய சோர்வை ஒவ்வொரு நாளின் முடிவிலும் தூங்கிச் சரியாக்கிக்கொள்வார். ஏற்பட்ட சோர்வு என்னும் பாதிப்பு அதிகமாக வேலை செய்ததன் காரணமாக உண்டாவதாகச் சொல்லப்பட்டாலும். அது அரிதாகவே நிகழ்கிறது. ஆனால், ஏதோ கவலை அல்லது பதற்றம் காரணமாகவே அந்த சோர்வு உண்டாகிறது. உணர்வுரீதியான சோர்வின் பிரச்சனை அது ஓய்வில் குறுக்கிடுகிறது. ஒரு மனிதர் எத்தனைக்கெத்தனை சோர்ந்துபோகிறாரோ அத்தனைக்கத்தனை அவரால் வேலை செய்வதை நிறுத்த முடியாமல் போய்விடுகிறது. நரம்புத்தளர்ச்சியின் / உச்சமான nervous breakdown (மன அழுத்தம், மனமுறிவு)ஐ ஒருவர் நெருங்கிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளில் ஒன்று, அவருடைய வேலை அதிமுக்கியமானது என்ற நினைப்பும், வேலையிலிருந்து சவிடுமுறை எடுத்துக்கொண்டால் பேரழிவுக்கு அது வழிவகுக்கும் என்ற நம்பிக்கையாகும்

நான் ஒரு மருத்துவம் சார்ந்த நபராக இருப்பின், தனது வேலை மிக மிக முக்கியம் என்று நம்பும், பாவிக்கும் எல்லா நோயாளிகளுக்கும் விடுமுறை தேவை என்று பரிந்துரைப்பேன். அதிக வேலைப்பளுவினால் ஏற்பட்டிருப்பதாகத் ஹ்டோன்றும் மன அழுத்தம் என்பது, எனக்குத் தனிப்பட்ட அள்வில் மிகவும் பரிச்சயமாயிருக்கும் எல்லோர் விஷயத்திலும், வேறு ஏதோ உணர்வு சார்ந்த பிரச்சனை காரணமாகவே உருவானதாக இருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க அதீதமாக உழைக்கிறார் நோயாளி. தனது வேலையைத் தாமதப்படுத்துவதையோ, தவிர்ப்பதையோ அவர் தீர வெறுக்கிறார். காரணம், அவர் அப்படிச் செய்தால், பின் அவருடைய அந்தப் பிரச்சனையிலிருந்து, அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்,  கவனத்தைத் திருப்ப அவருக்கு வேறு எதுவுமே இல்லாமல்போய்விடும்.  அவருக்கிருக்கும் இக்கட்டு நிலை, வங்கிக்கணக்கு காலாவதியாகிவிட்டதாக, அவர் போண்டியாகி விட்டதாக இருக்கலாம். அத்தகைய விஷயங்களில் அவருடைய கவலை என்பது அவருடைய பணியோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதுவும் கூட, அவரது பிரச்சனை அவரை நீண்ட நேரம் பணியாற்றச் செய்யும் சாத்தியப்பாடு உண்டு. அதன் விளைவாய்,  அவரால் விஷயத்தைத் தெளிவாக அலசிப்பார்க்க முடியாமல் போகும் நிலையும், அதன் காரணமாய், அவர் குறைவாகவே வேலை செய்திருந்தாலும்கூட சீக்கிரமே அவர் போண்டியாகியிருக்கவும் வழியுண்டு. எப்படிப்பார்த்தாலும், இத்தகையோர் ஒவ்வொருவர் விஷயத்திலும், உணர்வுரீதியான பிரச்னை தான் மன அழுத்தத்திற்கும் நரம்புத்தளர்ச்சிக்கும் வித்திடுகிறதே தவிர வேலைப்பளு அல்ல,

 கவலையின் உளவியல் என்பது எந்த வகையிலும் சுலபமான ஒன்றல்ல.  நான் ஏற்கனவே மன ஒழுங்கு குறித்துப் பேசியிருந்தேன். அதாவது, விஷயங்களை சரியான நேரத்தில் சிந்தித்தல். இதற்கு அதனுடையதேயான முக்கியத்துவம் இருக்கிறது. முதலில், இது குறைந்த அலவு சிந்தித்தலிலேயே ஒரு நாளின் வேலையைச் செய்துமுடிக்க வழிவகுக்கிறது. இரண்டாவது, இது தூக்கமின்மையைக் குணப்படுத்த வழிசெய்கிறது. மூன்றாவதாக, இது முடிவெடுத்தலில் ஆற்றலையும் விவேகத்தையும் வளர்க்கிறது. ஆனால், இவ்வகையான வழிமுறைகள் ஆழ் மனதையோ, நனவிலி மனதையோ தொடுவதில்லை.  இரண்டாவது, இது தூக்கமின் மையைக் குணப்படுத்த வழிசெய்கிறது. மூன்றாவதாக, இது முடிவெடுத்தலில் ஆற்றலையும் விவேகத்தையும் வளர்க்கிறது.வுகளில் செயல்திறன் மற்றும் ஞானத்தை ஊக்குவிக்கிறது. ஆனால் இந்த வகையான முறைகள் ஆழ்மனதையோ அல்லது நனவிலி மனதையோ தொடுவதில்லை, மேலும், பிரச்ச்னை மிகவும் ஹ்டீவிரமானதாக இருந்தால், எந்த வழிமுறையும், அந்த வழிமுறை பிரக்ஞை மட்டத்திற்கு அடியில் ஊடுருவிச் சென்றாலொழிய அதனால் நேரிய பயனிருக்காது. நனவிலி மனம் பிரக்ஞையின் மீது செலுத்தும் தாக்கம், ஆதிக்கம் குறித்தெல்லாம் உளவியலாலர்கள் நிறைய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நனவிலி மனதின் மேல் பிரக்ஞை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து மிக மிகக் குறைவாகவே உளவியலாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. .

எனினும், மன சுகாதாரம் என்பதில் பின்னது அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது. தர்க்கபூர்வமான உறுதிப்பாடுகள் நனவிலி வெளியில் செயல்பட வேண்டுமென்றால். இதைப் புரிந்துகொள்ளவேண்டியது இன்றியமையாதது. கவலை என்ற விஷயத்தில் இது மிகவும் பொருந்தும். அத்தகையதொரு துரதிர்ஷ்டம் நடந்தால் அது அவ்வளவு பயங்கரமானதாக இருக்காது என்று ஒருவர் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது சுலபம். ஆனால் இதுவொரு பிரக்ஞாபூர்வமான உறுதியான எண்ணமாக இருக்கும்வரை அது இரவின் கண்காணிப்புகளில் செயல்படாது, அல்லது அது பீதிக்கனவுகள் தோன்றுவதைத் தவிர்க்கும்.

என்னுடைய நம்பிக்கை என்னவென்ரால், ஒரு பிரக்ஞாபூர்வமான எண்ணத்தை, போதுமான அளவு வீரியத்தோடும், தீவிரத்தன்மையோடும்,  நனவிலி மனதுக்குள் ஊன்ற முடியும். நனவிலி மனதின் பெரும்பான்மைப் பகுதியில் இடம்பெறுவன ஒரு சமயம் நம்மிடத்தில் மிக வலுவாய், உணர்வுபூர்வமாய் பிரக்ஞாபூர்வமாய் இருந்து தற்போது புதையுண்டுவிட்ட எண்ணங்களே. அத்தகைய எண்ணங்களைப் புதைப்பது வேண்டுமென்றே செய்யப்படலாம். இந்த வழியில் நனவிலி மனம் நிறைய பயனுள்ள வேலைகளைச் செய்யும்படி வழிநடத்தப்பட முடியும். உதாரணமாக, ஒரு கடினமான கருப்பொருளில் எழுதவேண்டுமென்றால் அதற்கான சிறந்த திட்டம் அதை பற்றி மிகத் தீவிரமாக, எனக்கு சாத்தியமான உச்சபட்ச தீவிரத்தன்மையோடு சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் சிந்தித்துக்கொண்டிருப்பது, அப்படி சிந்தித்து அதன் முடிவில் அதை எழுதும் பணி வெளியே தெரியாத அளவு உருப்பெறவேண்டும் என்று கட்டளையிடுவதுதான் தான் என்று நான் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன்.

 

 

 

சில மாதங்களுக்குப் பிறகு நான் அந்தக் கருப்பொருளுக்குப் பிரக்ஞாபூர்வமாகத் திரும்புவேன். அந்த வேலை நிறைவுபெற்றிருப்பதை உணர்வேன். இந்த உத்தியை நான் கண்டறிவதற்கு முன்பாக, இடைப்பட்ட மாதங்களில் நான் மிகவும் கவலையோடிருப்பேன். எழுதவேண்டிய விஷயத்தில் நான் எந்த முன்னேற்றமும் அடையவில்லையே என்று மிகவும் கவலைப்படுவேன். அந்தக் கவலை சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு சீக்கிரமே தீர்வையெட்ட எந்தவகையிலும் உதவாது.;. அந்த இடைப்பட்ட மாதங்கள் வீண்விரயமாகிவிடும், ஆனால், இப்போது என்னால் அவற்றை என்னுடைய பிற தேடல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். .கவலைகள் தொடர்பாய் நான் மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்குப் பலவகையிலும் ஒத்த வேறொரு வழியையும் நாம் மேற்கொள்ளலாம். ஏதாவதொரு துரதிருஷ்டம் அச்சுறுத்தும்போது உச்சபட்ச மோசமாக என்ன நடக்கும் என்பதை தீவிரமாக, நிதானமாக யோசியுங்கள். அப்படி நேருக்கு நேரே இந்த சாத்தியமாகக்கூடிய துரதிருஷ்டத்தைப் பார்த்தபிறகு, இது அப்படியொன்றும் படுபயங்கரமான பேரழிவு இல்லை என்று எண்ணிக்கொள்வதற்கான வலுவான காரணங்களை உங்களுக்கு நீங்களே தரவும். அத்தகைய காரணங்கள் எப்போதுமே இருக்கும் – அதாவது, உச்சபட்ச மோசமாக ஒருவருக்கு நடக்கக்கூடிய எதுவுமே பிரபஞ்ச அளவில் எந்தவொரு முக்கியத்துவமும் வாய்ந்ததாக இருப்பதில்லை. அப்படி உச்சபட்ச மோசமான சாத்தியப்பாட்டை சிறிதுநேரம் பார்த்தபிறகு. உங்களுக்கு நீங்களே உறுதியோடு திட்டவட்டமாக, “அட, பார்க்கப்போனால்ம் அது அப்படியொன்றும் பெரிதாகப் பொருட்படுத்தத் தக்கதல்ல” என்று சொல்லிக்கொண்டால், உங்களுடைய கவலை அசாதாரணமான அளவு மங்கிவிடுவதை உங்களால் உணர முடியும். இந்த வழிமுறையை ஒரு சில தடவைகள் சொல்லிக்கொள்வது அவசியமாக இருக்கக்கூடும், ஆனால், முடிவில், அந்த மோசமான சாத்தியப்பாட்டை நேரடியாக முகத்துக்கு நேராக இந்ன்று பார்ப்பதை எந்தவிதத்திலும் நீங்கள் தவிர்க்காதிருந்திருப்பின், உங்களுடைய கவலை முற்றிலுமாக மறைந்து அந்த இடத்தில் ஒருவிதக் களிப்பும் கிளர்ச்சியும் வந்துசேர்ந்திருப்பதையும் உங்களால் உணரமுடியும்.

இது பயத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு பொதுவான செயல்நுட்பத்தின் ஒரு பகுதியாகும். கவலை என்பது ஒருவகை அச்சம். எல்லாவகையான அச்சமும் சோர்வை ஏற்படுத்துகிறது. அச்சத்தை உணராமலிருக்கக் கற்றுக்கொண்டுவிட்ட மனிதன் தினசரி வாழ்வு வரவாக்கும் சோர்வு பெருமளவு குறைந்துவிட்டதை உணர்வான் நாம் நேருக்கு நேர் சந்திக்க அஞ்சும்படியான ஓர் ஆபத்து இருக்கும் போதுதான் . பயம் என்பது அதன் மிகவும் அழிவாக்கத்தன்மையோடு ஏற்படுகிறது. சில எதிர்பாராத தருணங்களில் படுமோசமான எண்ணங்கள் நம் மனதுக்குள் சரேலெனப் பாய்ந்து நுழைகின்றன. அவை என்ன என்பது சம்பந்தப்பட்ட நபரைப் பொறுத்தது. ஆனால், ஏறத்தாழ எல்லோருக்குமே சில பயங்கள் உள்ளார்ந்து இருக்கும். ஒரு மனிதருக்கு அது புற்றுநோயாக இருக்கலாம். இன்னொருவருக்கு அது நிதிசார் சரிவாக இருக்கலாம், மூன்றாமவருக்கு அது இழிவுண்டாக்குவதான ஒரு ரகசியத்தை அறிந்துகொள்வதாக இருக்கலாம். நான்காமவர் பொறாமையில் பிறக்கும் சந்தேகங்களால் அலைக்கழிக்கப்படுபவராக இருக்கலாம், ஐந்தாமவர் இரவுகளில், தனது இளம் வயதில் தனக்கு நரகத்தின் நெருப்புக்குழிகள் குறித்துச் சொல்லப்பட்ட கதைகள் உண்மையாக இருக்கக்கூடும் என்ற நினைப்பால் இரவில் அலைக்கழிக்கப் படுபவராக இருக்கலாம்.

ஒருக்கால் இந்த மனிதர்கள் தங்களுடைய அச்சத்தைக் கையாள்வதில் தவறான உத்தியைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்கக்கூடும்.’ அவர்களை ஆட்டுவிக்கும் அந்த பயம் அவர்கள் மனதில் நினைக்கப்படும்போதெல்லாம் அவர்கள் ஏறு எதையாவது நினைக்க முயற்சி செய்கிறார்கள்; வேலை செய்வதிலோ, பொழுதுபோக்கி மகிழ்வதிலோ, வேறு எதிலாவதோ அவர்கள் தங்களுடைய கவனத்தையும் எண்ணங்களையும் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு பயமும் அதைப் பார்க்காதிருப்பதன் மூலம் மேலும் மோசமடைகிறது; தீவிரமடைகிறது. ஒருவர் தனது எண்ணத்தை ஒரு விஷயத்திடமிருந்து அப்பால் திருப்பிக்கொள்ளப் பிரயத்தனப்படுவது உண்மையில், அவர் எந்த அவலமான, மோசமான காட்சியிலிருந்து கண்களை அப்பால் திருப்பிக்கொள்கிறாரோ அந்த பயங்கரத்திற்குத் தரப்படும் பாராட்டாகும்; எந்தவொரு பயத்திற்கும், எல்லா பயங்களுக்கும் சரியான வழிமுறை என்பது அந்த பயத்தைத் தர்க்கபூர்வமாகவும், அமைதியாகவும், ஆனால் அதி கவனத்தோடும், அந்த பயம் நமக்கு முழுக்கப் பரிச்சயமானதாகப் பழகிப்போகும் வரை, சிந்தித்துப்பார்ப்பது. முடிவில், அந்த பரிச்சயத்தன்மை என்பது அந்த பயத்தின் பயங்கரங்களை கூர்மழுங்கச்செய்துவிடும்’ அந்த மொத்த விஷயமுமே அலுப்பூட்டுவதாக மாறிவுடும். நம்முடைய எண்ணங்கள் அவற்றை விட்டு அப்பால் திரும்பிவிடும். – முன்பு போல் ,அப்படியாகவேண்டும் என்று நாம் முனைப்பாக முயற்சி மேற்கொள்வதால் அல்ல. மாறாக, அந்த விஷயத்தில் நமக்கு ஆர்வம் குறைந்துவிடுவதால். நீங்கள் எதைப் பற்றியும் அது என்ன விஷயமாக இருந்தாலும் சரி, கவலைப்பட்டுக்கொண்டேயிருக்கத் தலைப்பட்டால், அத்தகையதொரு போக்கு உங்களிடமிருப்பதை உணர்ந்தால், அதற்கான சரியான செயல்திட்டம் கவலையளிக்கும் அந்த விஷயத்தை நீங்கள் இயல்பாக எண்ணத் தலைப்படுவதைக் காட்டிலும் அதிகமான அளவு எண்ணிப்பாருங்கள். அந்த பயம் குறித்து உங்களிடமுள்ள சாவனைய ஈர்ப்பு முற்றிலுமாக மங்கி மறையும் வரை அதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருங்கள்.

 நவீன ஒழுக்க நெறி மிகவும் பழுதுபட்டதாக இருக்கும் விஷயங்களில் ஒன்று இந்த அச்சம் என்ற ஒன்று. உடல்ரீதியான துணிச்சல், குறிப்பாக போரில், ஆண்களிடம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது உண்மையே, ஆனால், வேறுவிதமான துணிச்சல்கள் அவர்களிடம் எதிர்பார்க்கப்படுவதில்லை. பெண்களிடம் எந்தவகையான துணிச்சலும் எதிர்ப்பார்க்கப்படுவதில்லை. தைரியசாலிப் பெண்ணை ஆண்கள் விரும்பவேண்டும் என்றால் அவள் தனது துணிச்சலை மறைக்க வேண்டியதாகிறது. உடல்ரீதியான ஆபத்தைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் தைரியமாக உள்ள ஆணும்கூட மோசமானவனாகவே பார்க்கப்படுகிறான். உதாரணமாக, வெகுஜன அபிப்பிராயத்தைப் பொருட்படுத்தாமலிருப்பது ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது. வெகுஜன மேலாதிக்கத்தை எதிர்க்கத் துணியும் ஆணைத் தண்டிக்க பொது சமூகம் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறது. இவையெல்லாமே அது அவசியமாக இருக்கவேண்டிய நிலைக்கு நேர் எதிர் நிலை.

ஆண்களோ, பெண்களோ அவர்களிடம் உள்ள எல்லாவகையான தைரியமும். ஒரு படைவீரனின் தைரியம் பாராட்டப்படுவதே போல் பாராட்டப்படவேண்டும்.. இளைஞர்களிடையே காணப்படும் தைரியம் சார் பொதுத்தன்மை, ஒரேமாதிரித்தன்மை , பொது சமூகம் எவ்வகையான தைரியத்தைக் கோருகிறதோ அது  குறித்து முன்வைக்க்கப்படும் பொதுக்கருத்திற்கு எதிர்வினையாகவே தயாரிக்கப்படுவதாகலாம் என்பதற்கான ஒரு நிரூபணம். அதிகத் துணிச்சல் இருந்தால் அங்கே கவலை குறைவாக இருக்கும்,, எனவே, சோர்வு குறைவாக இருக்கும். தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் துன்புறும் நரம்புசார் சோர்வுகளின் மிகப் பெரும்பாலானவை, பயங்களினால் - பிரக்ஞாபூர்வமானவையும், நனவிலி மனம் சார்ந்ததுவையும் – ஏற்படுபவை.,

சோர்வு ஏற்பட மிகப்பல நேரங்களில் காரணமாவது ஆர்வப் பரவசத்திற்கான ஆவல்; பெருவிருப்பு. ஒரு மனிதன் தனது ஓய்வுநேரத்தை தூக்கத்தில் செலவழித்தால் அவனுடைய உடல் நலம் சிறப்பாக இருக்க முடியும். ஆனால், அவனுடைய பணிநேரம் ஒரேமாதிரியாக இருந்தால் அவன் தனது வேலைநேரம் முடிந்தபின் ஆனந்தம் அனுபவித்து மகிழ்வடையவேண்டிய தேவையை உணர்வான். இதில் பிரச்சனை என்னவென்றால், மிக எளிதாக அடையக்கூடிய இன்பங்கள், குதூகலங்கள் உச்சபட்சமாக மேலோட்டமான ஈர்ப்புத்தன்மை வாய்ந்தவை. நரம்புகளைக் களைத்துப்போகச் செய்பவை. ஆர்வப் பரவசத்திற்கான ஆர்வமும் விருப்பமும் ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்று ஒருவித முறுக்கிவிடப்பட்ட மனநிலையின் அல்லது உள்ளார்ந்த ஒருவித அதிருப்தியின் அறிகுறியாக அமைகிறது. ஒரு மகிழ்ச்சிகரமான மணவாழ்வின் ஆரம்பநாட்களில் பெரும்பாலான ஆண்கள் வேறு ஆனந்தக் கிளர்ச்சிக்கான தேவையை உணர்வதில்லை, ஆனால், நவீன உலகில் திருமணம் என்பது மிகவும் ஒத்திப்போடப்பட்டு மிகத் தாமதமாக  பொருளாதார ரீதியாக சாத்தியமாகக்கூடிய ஒன்றாக மாறும்போது ஆர்வக்கிளர்ச்சி என்பது மனிதனின் ஒரு பழக்கமாகவே மாறிவிடுகிறது. குறுகிய காலத்திற்கு மட்டுமே அதை விட்டு விலகியிருப்பது சாத்தியப்படுகிறது. இப்போது திருமண நிகழ்வுக்கு ஆகும் பொருளாதாரச் சுமை இல்லாமலே ஆண்கள் இருபத்தியோரு வயதில் திருமணம் செய்துகொள்ளலாம் என்றிருந்தால் பல ஆண்கள் தங்கள் பணியைப் போல் அத்தனை சோர்வுண்டாக்கும் இன்பக்கிளர்ச்சிகளைக் கோரும் வழியைத் தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள். இது சாத்தியமாக்கப்படவேண்டும் என்று குறிப்புணர்த்துவது ஒழுக்கக்கேடானது – நீதிபதி லிண்ட்ஸே (LINDSEY)யின் விதியிலிருந்து - அவர் நீண்டதொரு மதிப்பார்ந்த பணிக்காலத்தைக் கடந்துமுடித்திருக்கிறார் என்றாலும் பெரியவர்களின் மதவெறியினால் ஏற்படும் அவலங்களிலிருந்து இளைய தலைமுறையினரைக் காப்பாற்றவேண்டும் என்று அவர் விரும்பிய ஒரே குற்றத்திற்காக அவதூறுக்காளானார் - இதை நம்மால் கண்டறிய முடியும். எப்படியும், தற்சமயம், இந்த விஷயம் பற்றி நான் மேலும் பேசப்போவதில்லை. ஏனெனில், இது பொறாமை என்ர தலைப்பின் கீழ் வருகிறது. பொறாமை குறித்து இனி வரும் அத்தியாயத்தில் நாம் கவனம் செலுத்துவோம்.

எந்த சட்டங்களின், அமைப்புகளின் கீழ் வாழ்கிறாரோ அவற்றை மாற்ற முடியாத, திருத்தியமைக்க முடியாத நிலையில் உள்ள தனிநபரைப் பொறுத்தவரை ஒடுக்குமுறையைக் கையாளும் ஒழுக்கவியலாளர்களால் உருவாக்கப்பட்டு வளர்த்துவிடப்படும் சந்தர்ப்பசூழலைக் கையாள்வது மிகவும் கடினமான காரியம். அதிக அளவு திருப்தியளிக்கும் ஆனந்தங்களை அடைய வழியில்லாதபோது ஒரு மனிதனுக்கு இந்தவிதமான இன்பக்கிளர்ச்சியில்லாமல் வாழ்க்கையை சகித்துக்கொள்ளவியலாது என்றபோதும், இன்பக்கிளர்ச்சிகள் என்பவை மகிழ்ச்சிக்கான பாதையல்ல என்பதை உணர்ந்துகொள்வது நன்மைபயக்கும் விஷயம். இத்தகைய சூழலில் விவேகமுள்ள மனிதன் செய்யக்கூடியது தன்னைத்தான் கட்டுப்படுத்திக்கொள்வது. தன்னுடைய உடல்நலனை பாதித்து தனது வேலையில் குறுக்கிடுவதாய் அமையும் அளவு சோர்வூட்டும் இன்பங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ளாமலிருப்பது.தான்.

 

இளைய தலைமுறையினரின் பிரச்சனைகளுக்கான முழுமொத்த நிவாரணம் பொது சமூக ஒழுக்கநெறிகளில் மாற்றம் ஏற்படுவதில் இருக்கிறது.  இடைப்பட்ட காலத்தில் ஒரு மனிதன் தான் மணம் செய்துகொள்ளத் தகுதியானவன் என்ற நிலை கண்டிப்பாக ஏற்படும், அந்த சமயத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை அசாத்தியமானதாக்குவதாய் அதற்கு முந்திய அவனது வாழ்க்கைமுறை அமைந்திருக்கலாகாது என்பதை சிந்தித்துப் புரிந்துகொள்வதுதான் அவனுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் தனது வாழ்க்கைமுறையினால் நைந்து நலிந்த நரம்புகள் வழியாகவும், மென்மையான இன்பங்களைத் துய்க்க முடியாமல் போவதாலும் அத்தகையதொரு நிலைமை, மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அனுபவிக்க முடியாத அவலநிலை, எளிதில் ஏற்பட வழியுண்டு.

 

நரம்புசார் சோர்வின் மிக மோசமான அம்சங்களில் ஒன்று அது மனிதனுக்கும் வெளியுலகுக்கும் இடையிலான ஒருவகைத் திரையாய் செயல்படுகிறது. பதிவுகள் கம்மிய குரலில் அல்லது குரலெழும்பாத நிலையில் அவனை வந்தடைகின்றன. அவன் சகமனிதர்களை கவனிப்பதே அற்ப தந்திரங்களினால் அல்லது பழக்கவழக்கங் களினால் எரிச்சலுறுவதற்காக மட்டுமே என்றாகிறது; அவன் தனது உணவிலோ, சூரியவொளியிலோ இன்பங்காண்பதில்லை. ஆனால் ஒரு சில பொருட்கள் மீதே அவனது முழுகவனமும் ஒருவித பதற்றத்தோடு குவிகிறது. மற்ற எதையுமே அவன் பொருட்படுத்துவதில்லை.இந்தவிதமான மனப்போக்கு அவனை ஓய்வெடுக்கவே அனுமதிப்பதில்லை, எனவே, சோர்வு தொடர்ச்சியாக அதிகமாகிக் கொண்டே போய், ஒரு கட்டத்தில் மருத்துவ சிகிச்சை இன்றியமையாததாகிறது. இவையெல்லாமே அடிப்படையில் இதற்கு முந்தைய அத்தியாயத்தில் நாம் பேசிய புவியுடனான அந்தத் தொடர்பைப் பறிகொடுத்ததற்கான ஓர் அபராதமாகும். ஆனால், இந்தத் தொடர்பை  நவீன நகர்ப்புறப்பகுதிகளின் மக்கட்தொகைப் பெருக்கத்தில், நெரிசலில் எப்படிப் பேணிப் பராமரிக்க முடியும். இதை எண்ணிப்பார்ப்பது மிகவும் கடினம். என்றாலும், இங்கும் நாம் பெரிய, சமூகஞ்சார் கேள்விகளின் எல்லைக்கோடுகளில் நாம் இருப்பதைக் கண்டறிய முடியும். இந்த நூலில் அந்தக் கேள்விகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வது என் நோக்கமல்ல.

*


 

Sunday, November 30, 2025

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் - மகிழ்ச்சிடைக் கையகப்படுத்துதல் - தமிழில் லதா ராமகிருஷ்ணன் - அத்தியாயம் 1

 பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் - மகிழ்ச்சிடைக் கையகப்படுத்துதல் - தமிழில் லதா ராமகிருஷ்ணன் - அத்தியாயம் 1


மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்:

(THE CONQUEST OF HAPPINESS)

[*OUR SWEETEST SONGS ARE THOSE THAT TELL OF SAADEST THOUGHT என்று உலகம் புகழும் கவிஞர் SHELLEY எழுதியிருக்கிறார். இருந்தாலும், ஏன் எப்போதுமே துயரத்த்தில் தோய்ந்த கவிதைகளையே எழுதவேண்டும்? அப்பழுக்கற்ற சோகத்தை எழுதுவதைப்போல் ஏன் அப்பழுக்கற்ற சந்தோஷகணத்தை நாம் எழுதக்கூடாது என்று ஒரு கவிதைநூலுக்கான முன்னுரையில் வாசகர் விருப்பமாகக் கேட்டிருந்தேன். கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் அதுகுறித்து என்னைக் குற்றஞ்சாட்டுவதாக விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்த இன்னொரு கவிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். சபை நாகரீகம் கருதி நான் பேசாமலிருந்தேன். பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் இந்த நூல் THE CONQUEST OF HAPPINESS தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வந்தது.]

 பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்!

(BERTRAND RUSSEL)

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:

லதா ராமகிருஷ்ணன்

ஒரு பிரிட்டிஷ் தத்துவஞானி, தர்க்கவாதி, கணிதவியலாளர், வரலாற்றாசிரியர் மற்றும் சமூக விமர்சகர், போர் எதிர்ப்பு ஆர்வலர். அணு ஆயுதக் குறைப்பு மற்றும் வியட்நாம் போரை எதிர்த்தார், மேலும் முதல் உலகப் போரின் போது அமைதிக்காக சிறை சென்றார்

இவர் சமூக மற்றும் தார்மீக பிரச்சினைகள் குறித்த ஒரு பிரபலமான எழுத்தாளர் ஆவார்ஆவார்அவர் பகுப்பாய்வு தத்துவத்தின் (Analyrical Philosophy) நிறுவனர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.  1950 ஆம் ஆண்டு மனித விழுமியங்களுக்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு  இவருக்கு வழங்கப்பட்டது

"தத்துவத்தின் மதிப்பில்", "கணிதத்தின் கோட்பாடுகள்" போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்தத்துவத்தின் முக்கியத்துவத்தையும், அறிவை நோக்கிய அதன் பங்கையும் வலியுறுத்தினார்சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார் மற்றும் சமூக மாற்றத்திற்காக வாதிட்டார்

 1970 பிப்ரவரி 2 அன்று இறந்தார்

 

THE CONQUEST OF HAPPINESS (மகிழ்ச்சியைக் கைவசப்படுத்துதல்) என்ற இவருடைய நூல் 1930இல் பிரசுரமானது. இதுவரை பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது.

 இது இவருடைய பரவலாகப் பேசப்படும் நூல்களுள் ஒன்று. மொத்தம் 17 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் மனிதன் ஏன் மகிழ்ச்சியற்றவனாக இருக்கிறான்? அவன் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யவேண்டும்? என்று மானுடத்தின் மீதான உண்மையான அக்கறையோடும் கரிசனத்தோடும் மனித வாழ்வின் இந்த அடிப்படை அம்சத்தை பல்வேறு கோணங்களிலிருந்து ஆய்ந்தலசுகிறது. பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் முன்வைக்கும் ஆய்வலசல்கள் சிலவற்றோடு நான்ம் உடன்படாமல் போகலாம், ஆனால், அவர் மனிதனின் என்றுமான தேடலாகிய மகிழ்ச்சி  குறித்தும் அதன் இன்மை குறித்தும் in all seriousness தீர ஆய்ந்தலசிக் கருத்துரைத்திருக்கிறார் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இந்த நூல், 1) எது மனிதர்களை மகிழ்ச்சியற்றவர் களாக்குகிறது? 2) Byron வகை மகிழ்ச்சியின்மை 3) போட்டி 4) அலுப்பும் பரவசமும் 5) சோர்வு 6) பொறாமை 7) பாவ உணர்வு 8) தண்டிக்கப்படுவோம் என்ற பீதிக்கலவரம் 9) பொதுமக்களின் அபிப்பிராயம் குறித்த அச்சம் 10) மகிழ்ச்சியடைதல் இனியும் சாத்தியமா? 11) உற்சாகம் 12) பாசம் 13) குடும்பம் 14) பணி 15) பொதுவான ஆர்வங்களும் ஈடுபாடுகளும் 16) முயற்சியும் விலகிய மனப்பான்மையும் 17) மகிழ்ச்சியான மனிதர்

 பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் வாழ்க்கை வரலாறும், அவருடைய எழுத்தாக்கங்களும் தமிழில் வெளிவந்திருக்கின்றனவா, மொழிபெயர்க் கப்பட்டிருக்கின்றனவா என்று விவரம் தெரியவில்லை.

 இங்கே நூலின் முதல் அத்தியாயம் தமிழாக்கம் செய்யப்பட்டுத் தரப்பட்டுள்ளது.


முன்னுரை

 

 இந்த புத்தகம் கற்றறிந்த சான்றோர்களுக்கானது அல்ல. அல்லது, வாழ்வியல் ரீதியான ஒரு பிரச்சினையை வெறுமே பேசிக்கொண்டிருந்தால் போதும் என்பதாக பாவிப்பவர்களுக்கு அல்ல. இந்த நூலின் இனியான பக்கங்களில் ஆழமான தத்துவமோ அல்லது ஆழ்ந்த புலமையையோ காண இயலாது.  பொது அறிவு அல்லது நடைமுறை அறிவு என்று நான் நம்புகின்ற ஒன்றால் உத்வேகம் அளிக்கப்பட்ட சில கூற்றுக்களை ஒருங்கிணைத்துத் தருவது மட்டுமே என் நோக்கமாக அமைந்துள்ளது. நான் இதில் வாசகர்களுக்குத் தந்திருக்கும் செய்முறை விளக்கங்களைப் பற்றி நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்: அவை என்னுடைய அனுபவத்தாலும், அவதானிப்பாலும் உறுதிசெய்யப் பட்டவை. அவற்றோடு பொருந்திய அளவில் நான் இயங்கியபோதெல்லாம் அவை எனதேயான மகிழ்ச்சியை அதிகரித்திருக்கின்றன. இந்த ஆதாரத்தின் அடிப்படையில், இங்குள்ள பெருந்திரளான ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியை அனுபவிக்காமலேயே இருப்பவர்கள், மகிழ்ச்சியின்மையால் துயருற்றிருப்பவர் களாக உள்ளவர்கள்,  தங்களுடைய நிலைமைக்கான காரண காரியங்கள் பரிசோதிக்கப்பட்டு அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிவகை ஒன்று பரிந்துரைக் கப்பட்டிருப்பதை இந்த நூலில் கண்டறியக் கூடும். நல்லவிதமாக மேற்கொள்ளப் படும் முயற்சியின் மூலம் மகிழ்ச்சியற்றிருக்கும் பலர் மகிழ்ச்சி அடைய முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் இந்த நூலை எழுதியிருக்கிறேன்.

 ***

 பாகம் – 1

மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள்

 

அத்தியாயம் 1

எது மனிதர்களை மகிழ்ச்சியற்றவர்களாக்குகிறது?

 


மிருகங்கள் எல்லாம் உடல்நலன் சரியாக இருந்து உணவும் போதுமான அளவு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றன. மனிதர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவர்கள் என்று நாம் விழைகிறோம். ஆனால் நவீன உலகில் அவர்கள் அப்படி இல்லை குறைந்தபட்சம் மிகப் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியாக இல்லை எனலாம். நீங்கள் உங்களவில் மகிழ்ச்சியற்றிருந்தால், நீங்கள் மட்டுமே அப்படியில்லை, மகிழ்ச்சியற்றிருத்தல் என்பதான அசாதாரணத் தன்மையுடையவர்கள் அல்ல என்பதை ஒப்புக்கொள்ளவாவது நீங்கள் தயாராக இருக்கவேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்களெனில், உங்களுடைய நட்பினரில் எத்தனை பேர் அப்படியிருக்கிறார்கள் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அப்படி உங்கள் நட்பினரை ஆய்ந்து அலசிய பிறகு முகங்களை படித்தறியும் கலையை உங்களுக்கு நீங்களே கற்பித்துக்கொள்ளுங்கள். ஒரு சாதாரண நாளில் நீங்கள் சந்திப்பவர்களுடைய மனநிலைகளை உணர்ந்து உள்வாங்கிக் கொள்ள முடிந்தவர்களாக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

 

ஓர் அடையாளக்குறியிருக்கிறது நான் சந்திக்கும் ஒவ்வொரு முகத்திலும்.  பலவீனத்தின் அடையாளங்கள்; துயரின் அடையாளங்கள்’ என்று கூறுகிறார் கவிஞர் Blake. இந்த அடையாளங்கள் வெவ்வேறாக இருக்கிறது என்றாலும் மகிழ்ச்சியின்மை உங்களை எல்லாவிடங்களிலும் எதிர்கொள்வதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் நியூயார்க்கில் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் தலைசிறந்த நகரங்களில் அச்சு அசலான ஒன்று. அங்கே பரபரப்பான தெருவொன்றில் வேலை நேரங்களில் நில்லுங்கள். அல்லது, வார இறுதியில் ஒரு பிரதான வீதியில் அல்லது ஒரு மாலை நேர நடனக்கூடத்தில் இருந்துபாருங்கள். உங்களுடையதான்’ என்ற உணர்வை, தன் முனைப்பை உங்களுடைய மனதிலிருந்து அகற்றி விடுங்கள். உங்களைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் அந்நியர்களின் ஆளுமைகள் உங்களை ஒவ்வொருவராக ஆக்கிரமிக்க அனுமதியுங்கள். இந்த வெவ்வேறு விதமான கூட்டங்களில் ஒவ்வொன்றுமே தனதே யான பிரச்சனையுள்ளதாக இருப்பதை உங்களால் கண்டறிய முடியும். வேலைநேரக் கூட்டங்களில் உங்களால் பரபரப்பை. படபடப்பை, அதீத கவனக்குவிப்பை,  ஜீரணக்கோளாறை, கையிலுள்ள போராட்டம் தவிர வேறெதிலும் ஆர்வமற்ற தன்மையை, வேடிக்கை விளையாட்டுக்கான இயலாமையை, தங்களுடைய சக உயிர்கள் குறித்த பிரக்ஞையின்மையை உங்களால் காண முடியும். வார இறுதியில் ஒரு பிரதான வீதியில் ஆண்களும் பெண்களும் - எல்லோருமே வசதியானவர்கள்; அவர்கள் சிலர் மிகவும் செல்வந்தர்கள் - மகிழ்ச்சியின்பத்திற்கான தேடலில், நாடலில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.  இந்த நாடலும் தேடலும் எல்லோராலுமே ஒரே சீரான வேகத்தில், ஊர்வலத்தில் உச்சபட்ச மெதுவாக ஓடும் காரின் வேகத்தில் மேற்கொள்ளப் பட்டு வருவதைக் காண முடியும். அந்த கார்களால் சாலையைப் பார்க்க முடிவதில்லை. சுற்றிலும் இருக்கும் இயற்கை காட்சிகளைக் காண முடிவதில்லை. ஏனெனில், கண்ணையும் கவனத்தையும் வேறு பக்கம் திருப்பினால் விபத்து ஏற்பட்டுவிடும். அந்த கார்வண்டிகளில் உள்ள எல்லோருமே மற்ற கார்களை முந்திச் செல்வதில் முழு கவனத்தையும் செலுத்துகிறார்கள். கூட்டம் காரணமாக அதை அவர்களால் சாதிக்க இயலாது. இந்த கவனக்குவிப்பிலிருந்து அவருடைய மனங்கள் விலகி அலையத் தொடங்கினால், வண்டியை ஓட்டும் பொறுப்பிலில்லாமல் வண்டியில் பயணம் செய்யும் சிலருக்கு இப்படி அவ்வப்போது நடப்பதுண்டு, விவரிக்க இயலாத அலுப்பும் சலிப்பும் அவர்களை ஆக்கிரமித்து சிறிய அதிருப்தி என்பதாக தங்கள் அடையாளங்களை அவர்கள் மீதும் பதிக்கின்றன. அவ்வப்போது ஒரு கார் வண்டி முழுக்க நிறைந்திருக்கும் ஆப்பிரிக்க- அமெரிக்கர்கள் உண்மையான மகிழ்ச்சியின்பத்தை வெளிப்படுத்துவார்கள் ஆனால், அவர்களுடைய ஆரவாரச் செய்கைகளால், அதிரடி நடவடிக்கைகளால் சூழலில் ஒவ்வாமையுணர்வை ஏற்படுத்தி முடிவில் ஒரு விபத்தை ஏற்படுத்தி காவல்துறை யினரின் கைகளில் மாட்டிக்கொள்வார்கள். விடுமுறைக்காலத்தில் மகிழ்ச்சி அனுபவித்தல் சட்டத்திற்கு புறம்பானது.

 

 அல்லது, மறுபடியும், ஒரு மகிழ்ச்சியான மாலைப்பொழுதில் மனிதர்களை கவனித்துப்பாருங்கள்.  எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற தீர்மானத் தோடுதான் வருகிறார்கள். ஒரு பல் மருத்துவரிடம் செல்லும்போது அங்கே கத்திக் கூப்பாடு போடக்கூடாது என்று அழுத்தமான சங்கல்பத்துடன் செல்வது போன்ற அதே அளவு தீர்மானத்தோடுதான் வருகிறார்கள். மதுவருந்தலும் இணையைத் தொட்டுத்தடவுவதுமே மகிழ்ச்சியின் நுழைவாயில்கள் என்று கொள்ளப்பட்டுள்ளன. எனவே அங்கே வருவோர் உடனடியாகக் குடிக்கிறார்கள். தங்கள் இணையர்கள் தங்களை எத்தனை மனஞ்சுளுங்கவைக்கிறார்கள், வெறுப்பேற்றுகிறார்கள் என்பதை கவனிக்காமல் இருக்க முயற்சி செய்கிறார்கள். குறிப்பிட்ட அளவு மதுவருந்திய பின் ஆண்கள் விசும்பத் தொடங்குகிறார்கள். தாம் எத்தனை உதவாக்கரைகள், ஒழுக்க ரீதியாக எந்த அளவுக்கு தரம் தாழ்ந்தவர்கள், தங்களுடைய தாயாரின் அன்புக்கும் அபிமானத்திற்கும் தாம் எந்தவிதத்திலும் தகுதியானவர்களாக ஒழுக்கரீதியாக இல்லையே என்றெல்லாம் புலம்பத்தொடங்குகிறார்கள். மது அவர்களுக்காகச் செய்வதெல்லாம் நிதானமாக, சுயவுணர்வோடு அவர்கள் இருக்கும் சமயங்களில் தங்களது தர்க்க அறிவு அழுத்தி – அடக்கிவைத்திருக்கும் அவர்களுடைய குற்ற வுணர்வை விடுதலை செய்வதுதான்.

 

இத்தகைய பலவிதமான மகிழ்ச்சியின்மைகளுக்கான காரணங்களில் சில சமூகக் கட்டமைப்பில் பகுதியளவு இருக்கின்றன; பகுதியளவு தனிநபர் சார் உளவியலில், மனப்போக்கில் அடங்கியிருக்கின்றன. இதுவுமே கூட கணிசமான அளவு சமூகக் கட்டமைப்பினால் உருவாவதுதான்.  இதற்கு முன்பு நான் மகிழ்ச்சி வளர்த்தெடுக்க சமூகக் கட்டமைப்பில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் குறித்து எழுதியிருக்கிறேன். போர் என்ற ஒன்று இல்லாமல் ஆக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து, பொருளாதார ரீதியான சுரண்டல் குறித்து, கொடூரத்திலும் அச்சத்திலும் நிலைகொண்டிருக்கும் கல்வி குறித்து எல்லாம் இந்த புத்தகத்தில் பேசுவது என் நோக்கம் நோக்கம் அல்ல

 

 போரை முற்றிலுமாக தவிர்க்கவும் ஒழிக்கவும் உதவும் ஒரு சமூக கட்டமைப்பை கண்டறிந்துகொள்ள வேண்டியது நம்முடைய மனித நாகரீகத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், மனிதர்கள் இத்தனை மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கையில் எந்தவித சமூகக் கட்டமைப்பாலும் போரை ஒழிக்க இயலாது. மனிதர்கள் இத்தனை அதிகம் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கும்போது, பகலின் ஒளியைத் தொடர்ந்த ரீதியில் பொறுத்துக்கொண்டிருப்பதை விட ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதே குறைந்த அளவு பயங்கரமானதாக அவர்களுக்குத் தோன்றுகிறது. இயந்திரங்களின் வழியாக உற்பத்தி சார் நன்மைகள் அவை மிகவும் தேவைப்படுபவருக்குக் கொஞ்சமேனும் பயனளிப்பதற்கு வறுமை பல்கிப் பெருகுவதைத் தடுக்கவேண்டியது மிகவும் அவசிய மாகிறது. ஆனால், வசதி படைத்தவர்களே மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கும் போது எல்லோரையும் செல்வந்தர்கள் ஆக்குவதால் என்ன பயன்? கொடூரத்திலும், அச்சத்திலும் கல்வி கற்கும் நிலை மோசமான விஷயம். ஆனால், இத்தகைய வேட்கைகளிடம் அடிமைகளாக இருப்பவர்களுக்கு வேறு எந்த விதமான கல்வியும் தரப்பட வழியில்லை. இத்தகைய அக்கறைகள் நம்மை தனிநபர் சார் பிரச்சனைக்கு இட்டுச்செல்கின்றன. ஒரு ஆனால் அல்லது பெண்ணால் இங்கே இப்போது, நம்முடைய எப்போதுமே ஏக்கத்தின் பிடியிலிருக்கும் சமூகத்தின் மத்தியில் இருப்பவர்கள் தமக்கான மகிழ்ச்சியை அடைவதற்கு என்ன செய்யலாம்? இந்தப் பிரச்சினையை விவாதிப்பதில் நான் புறவயமாகக் காணப்படும் அவலத்தின், துன்பத்தின் உச்சபட்ச காரணத்தினால் பாதிக்கப் பட்டிருக்கிறவர்களை மட்டுமே இந்த புத்தகத்திற்காக கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். உணவுக்கும் உறைவிடத்திற்கும் போதுமான அளவு வருமானமும், தினசரி வேலை களைச் செய்துவரப் போதுமான உடல்நலமும் கிடைப்பது சாத்தியமே என்று அனுமானித்துக்கொள்கிறேன் மனித வாழ்வில் ஏற்படும் பேரழிவுகளை, பெரும் சோகங் களை -  ஒருவருடைய குழந்தைகள் இறந்துவிடுவது, அல்லது, அனைவரும் காண மதிப்பழிக்கப்படுவது போன்றவற்றை நான் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இத்தகைய பேரழிவுகள் பெரும் சோகங்கள் பற்றியும் பேசவேண்டிய விஷயங்கள் உள்ளன. அவை மிக முக்கியமானவை. ஆனால், அவை இந்த நூலில் நான் சொல்ல விரும்பும் விஷயங்களிலிருந்து வேறுபட்டதொரு ஒழுங்கமைவைச் சேர்ந்தவை. நாடுகள் பலவற்றிலும் பெரும்பாலான மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் தினசரி வாழ்வில் அவர்களை அலைக்கழிக்கும் மகிழ்ச்சியின்மைக்கு ஒரு நிவாரணத்தை, அதிலிருந்து குணமாவதற்கான வழியைப் பரிந்துரை செய்வதே என் நோக்கம். இத்தகைய மகிழ்ச்சியின்மை சகிக்கமுடியாததாக இருக்கிறது. ஏனெனில், இதற்கான புறவயக் காரணம் என்று எதுவும் இல்லை. அதே சமயம், இந்த மகிழ்ச்சியின்மையிலிருந்து தப்பிப்பது இயலாத காரியமாகத் தோன்றுகிறது

இந்த மகிழ்ச்சியின்மை பெருமளவில் உலகைப் பற்றிய தவறான கண்ணோட்டங்களின் விளைவாக ஏற்படுகிறது. நெறிமுறைகள் / ஒழுக்கவியல் குறித்த தவறான கண்ணோட்டங்கள் மூலமாக, வாழ்வு சார்ந்த, பழக்க வழக்கங்கள் குறித்த தவறான கண்ணோட்டங்களின் விளைவாக ஏற்பட்டிருப்பது என்று நான் நம்புகிறேன். இந்த மகிழ்ச்சியின்மை,  மனிதர்களோ மிருகங்களோ  - அவற்றின் எல்லாவிதமான மகிழ்ச்சியும் முடிவில் எதைச் சார்ந்திருக்கிறதோ அந்த, சாத்தியமாகும் விஷயங்களை அடைய இயல்பாகவே நம்மிடம் இருக்கும் உத்வேகமும் பசியும் அழிந்தொழியவே வழிவகுக்கிறது. இந்த இயல்பான விஷயங்கள் மனித சக்திக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன.மனிதனின் மகிழ்ச்சி, சராசரியான நல்ல வாழ்க்கை அமைந்திருக்கும் நிலையில் அவனால் கைக்கொள்ளப்படத் தேவைப்படும் மாற்றங்களை இந்த நூலில் சுட்டிக்காட்ட, பரிந்துரைக்க முனைந்துள்ளேன்.

 

 நான் பரிந்துரைக்க விரும்பும் வாழ்க்கைதத்துவத்தை மிகச் சிறந்த முறையில் அறிமுகம் செய்ய சிலதன்வரலாற்று’ச் சொற்களை எடுத்துரைக்க விரும்புகிறேன். ஒரு குழந்தையாக எனக்கு மிகவும் பிடித்த  பிரார்த்தனை கீதம் WEARY OF EARTH AND LADEN WITH MY SIN ( இந்த பூமி களைப்பூட்டுகிறது; பாவங்கள் பாரமேற்றுகின்றன). எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, நான் எழுபது வயது வரை வாழ நேருமானால் என் வாழ்வின் 14 பங்கில் ஒரு பங்கைதான் இதுவரை சகித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பில் எனக்கு இன்னும் எஞ்சியுள்ள அலுப்பும் சலிப்பும் சகிக்க முடியாததாகவே இருக்கும் என்ற கருதினேன். வளரிளம் பருவத்தில் வாழ்க்கையை தீர வெறுத்தேன். பல நேரங்களில் தற்கொலையின் விளிம்புக்குச் சென்றேன். ஆனால், கணிதவியலை இன்னும் அதிகம் கற்க வேண்டும், அறிய வேண்டும் என்ற ஆர்வம் என்னை தற்கொலை யிலிருந்து காப்பாற்றியது. இப்பொழுது அதற்கு எதிர்நிலையில் நான் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறேன். வருடா வருடம் எனக்கு வயது அதிகமாக ஆக நான் வாழ்க்கையை இன்னும் அதிகமான மகிழ்ச்சியோடு அனுபவிக் கிறேன்.

 

இதற்கு ஓரளவு காரணமாக இருப்பது வாழ்வில் நான் மிகவும் விரும்பியவை என்னென்ன என்பதை நான் கண்டறிந்துகொண்டு அவற்றில் பலவற்றை படிப்படியாக அடைந்து விட்டதும், விரும்பிய சிலவற்றை  - அடையமுடியாதது, அசாத்தியமானது -  வெற்றிகர மாக புறமொதுக்கிவிட்டதுமே இதற்கான காரணமாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, சந்தேகத்திற்கிடமில்லாத அறிவுஞானம் ஏதாவது ஒன்றைப் பற்றி அல்லது எவரொருவரை பற்றி அடைவது என்பது ஆகக்கூடிய காரியம் அல்ல என்ற முடிவை வெற்றிகரமாக எட்டிவிட்டதைக் கூறலாம். ஆனால்,  மிகப்பெரிய அளவிலான காரணம் என் மீது எனக்கு இருக்கும் தன்முனைப்புச் சிந்தனை குறைந்துகொண்டே வருவதுதான். PURITAN EDUCATION பெற்ற பலரைப் போலவே எனக்கும் என்னைப் பற்றியே, என்னுடைய பிழைகள், பாவங்கள், போதாமைகள் இவற்றைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கும் வழக்கமிருந்தது. அதனால் எனக்கு நானே - நியாயமான அளவில் என்று உறுதியாகக் கூற முடியும் - அவலமான ஒன்றாகத் தோன்றினேன். படிப்படியாக நான் என்னுடைய போதாமைகள் போன்ற தன்முனைப்பான கண்ணோட்டங்களில் அக்கறை யற்றிருக்கப் பழகிக்கொண்டேன். புறவயமான விஷயங்களில் என்னுடைய கவனத்தை குவிக்க தொடங்கினேன். உலகம் இருக்கும் நிலைமை, அறிவு சார் பல்வேறு துறைகள், நான் நேசிக்கும் தனிநபர்கள் போன்று புறவய விஷயங்கள் ஒவ்வொன்றும் அவற்றிற்கே உரிய வேதனையை தரக்கூடிய, கொண்டுவரக்கூடியவை என்பது உண்மையை. உலகம் போரில் ஆளை இறங்கி இருக்கும் அறிவுஞானம் என்பது ஒரு சிலவற்றைப் பொறுத்தவரை அடையவே முடியாததாக இருக்கும். நட்பினர் இறந்துபோவார்கள் ஆனால், இந்த விதமான வேதனைகள் வாழ்வின் ஆதாரமான தன்மையை அம்சத்தை குறைப்பதில்லை. தன்னைப் பற்றி தனக்கு இருக்கும் ஏற்படும் சுய வெறுப்பை போல். மேலும், புறவயமான ஆர்வங்கள் எல்லாம் ஏதாவது ஒரு செயல்பாட்டை ஊக்குவிக் கின்றன. அந்த ஆர்வம் உயிர்ப்போடு இருக்கும் வரை அது என் மனச்சோர்வுக்கான முழுமையான தடுப்புச் சக்தியாக விளங்குகிறது. மாறாக, ஒருவரிடம் உள்ள தன்னீர்ப்பு, சுயம் சார்ந்த ஆர்வம் எந்தவகையான முன்னோக்கிய செயலுக்கும் நம்மை வழி நடத்து வதில்லை. ஒரு நாட்குறிப்பேட்டை பராமரிக்க அது வழி செய்யலாம். தன்னைத்தானே உளவியல் ரீதியான அலசலுக்கு உட்படுத்த அது வழி செய்யலாம். ஒரு துறவியாக கூட நம்மை மாற்றலாம். ஆனால், துறவியாக இருந்தாலுமே துறவிமடத்தின் வழக்கமான நியமங்கள் அவரை தனது ஆன்மாவை மறக்க வைத்திருந்தால் ஒழிய அவர் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். மதம் காரணமாக கிடைப்பதாக அவர் சொல்லும் மகிழ்ச்சி அவர் ஒரு தெருக்கூட்டும் தொழிலாளியாக மாறுவதிலும் அவருக்குக் கிடைத்திருக்க முடியும். அதாவது, அவ்வாறாகவே வாழ்ந்திருக்கும்படியான கட்டாயம் அவருக்கு ஏற்பட்டால்). மிக அதிக அளவில் தன் முனைப்பில் ஆழ்ந்திருக்கும் அவமானம் அவலமானவர்களுக்கு, வேறு எந்த வழியிலும் குணப்படுத்த இயலாதவர்களுக்கு புறவயமான ஒழுங்கு, கட்டுப்பாடு மட்டுமே மகிழ்ச்சிக்கான பாதையாக அமைகிறது.

 

 தன்முனைப்பு, தன்னுள் ஆழ்ந்திருத்தல் என்பது பலவகைப்பட்டது. SINNER, NARCISSIST, MEGALOMANIAC – பாவி, அதீத  தற்காதல்காரர், அதீத தற்பெருமைக்காரர் -   ஆகிய மூன்று பரவலாக காணக் கிடைக்கும் பிரிவினரை நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

 

 பாவி அல்லது குற்றவாளி என்ற பிரிவினரை பற்றி நான் பேசும்போது பாவ காரியங்களை செய்கிறவர்களைப் பற்றிப் பேசவில்லை.  பாவகாரியங்களை, அந்த வார்த்தையை நாம் அர்த்தப்படுத்திக்கொள்ளும் விதத்தில், எல்லோருமே செய்கிறார்கள்; அல்லது, யாருமே செய்வதில்லை. குற்றம் அல்லது பாவம் குறித்த பிரக்ஞையில் ஆழ்ந்திருக்கும் மனிதனையே நான் பாவி என்று குறிப்பிடுகிறேன். இந்த மனிதர் தொடர்ந்த ரீதியில் தனது ஆன மறுதலிப்பை கடவுளின் மறுதலிப்பாக ஏற்றவாறு இருக்கிறார். அல்லது, அவருக்கு மத நம்பிக்கை உண்டு என்றால் அவர் தனது மறுதலிப்பை கடவுளின் மறுதலிப்பாக பொருள் பெயர்க்கிறார். தான் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது பற்றி அவருடைய மனதில் தன்னை பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அந்த பிம்பம், உண்மையில் தான் எப்படிப்பட்டவராக இருக்கிறோம் என்ற அவருடைய அறிதலோடு தொடர்ந்த ரீதியில் முரண்பட்டுக்கொண்டே, மோதிக்கொண்டேயிருக்கிறது. இந்த மனிதர் தன்னுடைய பிரக்ஞாபூர்வமான சிந்தனையில் தனது தாயின் முழங்கால்களில் உட்கார வைக்கப்பட்டு கற்பிக்கப்பட்ட மூதுரைகளை, பொன்மொழிகளைஅவர் பல காலத்திற்கு முன்பே புறமொதுக்கியிருக்கும் பட்சத்தில் ‘பாவம்’ குறித்த அவருடைய புரிதல் அவருடைய நனவிலி மனதில் ஆழப் புதைந்திருக்கும். அவர் போதையில் இருக்கும் போது, அல்லது, உறங்கிக் கொண்டிருக்கும்போது மட்டுமே அது மேலெழும்பி வரும். என்றாலும், அது ஒன்றே போதும் - எல்லாவற்றிலிருந்தும் கிடைக்கும் சுவையை அகற்றி விட அது ஒன்றே போதுமானதாகக்கூடும். அடியாழத்தில் அவர் இன்னமும் அவரது குழந்தைப்பிராயத்தில் அவருக்கு கற்பிக்கப்பட்ட அனைத்தையும் ஏற்றுக் கொண்டவரா கவே இருக்கிறார். கெட்ட வார்த்தையில் திட்டுவது தப்பு, மது அருந்துவது தப்பு, சாதாரண வியாபார தந்திரம் தவறு -எல்லாவற்றுக்கும் மேலாக பாலுறவு தவறு என்று. இந்த நுகர்வின்பங்கள் எதிலிருந்தும் அவர் தன்னை விலக்கிக்கொள்வதில்லை. ஆனால், அவை யெல்லாமே, அவை தன்னை மதிப்பழிக்கின்றன, கேவலப்படுத்துகின்றன என்ற உணர்வால் அவனுக்கு நஞ்சூட்டப்பட்டிருக்கின்றன. தனது முழுமொத்த ஆத்மாவாலும் அவன் விரும்பும் ஒரே இன்பம் தனது தாயால் அங்கீகரிக்கப்பட்டு, அன்போடு வருடித் தரப்படுவதுதான். அதைத் தனது குழந்தைப்பிராயத்தில் அனுபவித்ததை அவனால் நினைவுகூர முடிகிறது. இந்த இன்பம் அவனுக்கு இனியும் கிடைக்க வழியில்லை என்பதால் இனி எதுவுமே ஒரு பொருட்டல்லை என்று எண்ணுகிறான் அவன். குற்றம் புரிந்துதானாகவேண்டும் என்ற நிலையில் மிக ஆழமாக குற்றத்தில் இறங்க முற்படுகிறான் அவன். காதல்வயப்படும்போது தாய்மைக்கே உரித்தான பாசத்தை, அன்பை எதிர்பார்க்கிறான். ஆனால், அதை அவனால் ஏற்க இயலவில்லை. ஏனெனில், அம்மா என்ற பிம்பம் காரணமாக அவனால், பாலுறவும் அது சார்ந்த தொடர்புறவும் கொள்ளும் எந்த பெண்ணுக்கும் மரியாதை காட்ட முடியவில்லை. பின், தனது ஏமாற்றத்தில் அவன் கொடூரனாக மாறுகிறான். தன் கொடூர குணத்தை எண்ணி வருந்துகிறான். கற்பனை செய்யப்பட்ட குற்றம் அது குறித்த உண்மையான குற்ற உணர்வு ஆகிய அந்த அலுப்போட்டும் வழக்கமான சுழற்சியை புதிதாக மீண்டும் தொடங்குகிறான். இதுவே மிகவும் இறுகிய அளவில் தீயவர்களாக இருக்கும் பலரின் உளவியலாகும். அவர்களை இலக்கின்றி எதையோ செய்ய தூண்டுவது, அலையச் செய்வது அடைய சாத்தியமற்றதொரு விஷயத்திற்கான (அம்மா அல்லது அம்மா-பதிலி) அதீதப் பற்றும், அதனோடு சேர்ந்த அளவில் நமது ஆரம்ப வருடங்களில் அபத்தமானதொரு நெறிமுறைக் கோட்பாட்டைக் கைக்கொள்ளுதலும்தான். வாழ்வின் ஆரம்ப கால நம்பிக்கைகள் பாசங்கள் ஆகியவற்றின் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலையாவது இந்த தாய்மை சார் ஒழுக்கவியலுக்கு பலியாகிறவர்கள் மகிழ்ச்சியை நோக்கி முதல் அடி எடுத்துவைத்தலாக அமையும்.

 

அதீத தற்காதல்(Narcissism)  ஒருவகையில் வழக்கமாய் கொண்டிருக்கும் குற்றம் பற்றிய உணர்வின், புரிதலின் எதிரிடையான விஷயம் எனலாம்.  அது தன்னைத்தானே ஒருவர் வியந்து போற்றுதல், மற்றவர்களால் அப்படி வியந்து போற்றப்பட வேண்டும் என்று விரும்புதல் ஆகிய வழக்கத்தில் அமைந்திருப்பது. ஒரு புள்ளி வரை அது இயல்பானது. அதைக் கண்டிக்கவோ மதிப்பழிக்கவோ தேவையில்லை. இந்த வழக்கம் அதீதமான அளவில் ஒருவரை ஆட்கொள்ளும்போதுதான் அது ஒரு பெரிய அளவிலான குற்றம் அல்லது பாவ காரியம் ஆகிவிடுகிறது. பெண்கள் பலரிடம், குறிப்பாக, பணக்கார உயர்வர்க்க சமூகத்தைச் சேர்ந்த பல பெண்களிடம் அன்பை உணர்தலுக்கான திறனாற்றல் முற்றிலுமாக வறண்டுவிட்டது. அந்த இடத்தை, அத்தனை ஆண்களும் தன் மீது காதல் வயப்பட வேண்டும் என்று வலுவான ஆர்வம், வேட்கை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது. இத்தகைய பெண்களில் ஒருவர் தன்னை ஒரு ஆண் விரும்புகிறார் என்பதை தெரிந்துகொண்டுவிட்டால் அதன் பின் அந்த பெண்ணுக்கு அந்த ஆண் எந்த விதத்திலும் தேவைப்படாதவர் ஆகிறார். இதே விஷயம், அந்த அளவுக்கு இல்லை என்றாலும், ஆண்களுக்கும் நேர்கிறது. இதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக LIAISONS DANGEREUSES  (*"Les Liaisons Dangereuses," or "Dangerous Liaisons," 18ஆம் நூற்றாண்டின் ஒரு ப்ரெஞ்சு நாவல். இரண்டு உயர்குடி நபர்களைப் பற்றிய இந்நாவலில் அவர்கள் ஒருவரை யொருவர் காதல்வயப்படச் செய்து ஏமாற்றிக்கொள்கிறார்கள்; ஆட்டுவிக்கிறார்கள். இந்நாவலில் காதல், வேட்கை ஏமாற்றுதல், கட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகள் ஆகியவற்றை வீழ்ச்சியடைந்துவரும் ப்ரெஞ்சு மேற்குடி வர்க்கப் பின்னணியில் பேசுகிறது)  இன் கதாநாயகனைச் சொல்லலாம். தற்காதல், தற்பெருமை இந்த உச்சத்தில் ஒருவரிடம் இடம்பெறும் பட்சத்தில் தன்னைத் தாண்டி பிற எந்த மனிதரிடமும் ஒருவருக்கு நிஜமான ஆர்வம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, அன்பு, காதல் இவற்றிலிருந்து நிஜமான திருப்தியை, மனநிறைவை அடைய முடியாமல் போய்விடு கிறது. மற்ற ஆர்வங்கள், ஈடுபாடுகள் இன்னமும் மோசமாக சரிவடைகின்றன. உதாரணத்திற்கு அதீத தற்காதல் வயப்பட்டிருக்கும் ஒருவர், மகத்தான ஓவியர்களுக்கு அளிக்கப்படும் நினைவஞ்சலியால் ஈர்க்கப்படுபவர், ஓர் ஓவிய மாணவராக மாறலாம். ஆனால், ஓவியம் என்பது அவரைப் பொறுத்தவரை அடைய வேண்டிய இலக்கல்ல; இலக்கை அடைவதற்கான வழி மட்டுமே என்பதால் ஓவியக்கலையின் வழிமுறைகள்,  நுட்பங்கள் அவருக்கு ஆர்வமூட்டுவதில்லை எந்தவொரு விஷயத்தையும் தன்னோடு தொடர்புபடுத்தி மட்டுமே அவரால் பார்க்கமுடிகிறது. விளைவு, தோல்வியும் ஏமாற்றமுமே. கூடவே, கேலி கிண்டலும் வரவாகிறது. அவர் எதிர்பார்த்த புகழும் பாராட்டும் கிடைப்பதில்லை. தம்மையே கதாநாயகனாக கதாநாயகிகளாக உன்னதமாகச் சித்தரிக்கும் நாவலாசிரியர்களின் படைப்புகளுக்கும் இதே கதிதான். ஒரு பணியில் கிடைக்கக்கூடிய மெய்யான தரமான வெற்றி என்பது அந்த வேலை எது சம்பந்தமானதோ, எதனோடு தொடர்புடையதோ அந்த விஷயம் குறித்த உண்மையான ஆர்வம் அக்கறையை பொறுத்தே அமைகிறது. வெற்றிகரமான அரசியல்வாதிகள் ஒருவர் பின் ஒருவராக வீழ்ச்சியடைவது, படிப்படியாக அவர்களிடம் சமூக அக்கறை குறைந்து அந்த இடத்தில் தன்னைப் பற்றிய அதீத அக்கறையும் பிம்பம் குடியேறுவதுதான். தன் மீது மட்டுமே ஆர்வமும் அக்கறையும் கொண்டிருக்கும் நபர் பாராட்டத்தக்கவர் அல்ல. அத்தகைவராக அவர் தன்னை உணர்வதுமில்லை. அதன் விளைவாக உலகமே தன்னை வியந்து போற்ற வேண்டும் என்ற ஒற்றை அக்கறையைக் கொண்டிருக்கும் அந்த நபர் தனது இலக்கை அடைய வழியில்லை என்றே சொல்லலாம். அப்படியே அவர் உலகம் போற்றும் புகழை அடைந்தாலும் அவரால் முழு நிறைவை, முழுமையாக சந்தோஷத்தை அடைய முடியவில்லை. காரணம் மனித உள்ளுணர்வு என்பது எப்போதுமே தன்மனைப்பு கொண்டதாக இருப்பதில்லை.

 

அவ்விதமாய் ஒரு அதீதத் தற்காதல் கொண்ட ஆசாமி செயற்கையான அளவில் அவ்விதம் தன்னைத்தான் எல்லைக் குறுக்கிக்கொள்கிறான். அந்த மனிதன் ஒருவன் குற்ற உணர்வால் எந்த அளவுக்கு உண்மையாக மேலாதிக்கம் செய்யப்படுகிறானோ அந்த அளவுக்கு செயற்கையாக தன் எல்லையைக் குறுக்கிக்கொள்கிறான். கற்கால மனிதன் நல்ல வேட்டைக்காரராக இருப்பதற்காக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அவன் அதற்கான துரத்தியோடலில் ஆனந்தமும் அடைகிறான். தற்பெருமை  ஒரு கட்டத்திற்கு மேல் எந்த ஒரு செயல்பாட்டிலும் அதைச் செய்வதில் உள்ள இன்பத்தைக் கொன்றுவிடுகிறது. அவ்விதமாய் ஒருவித அலுப்பையும் மொண்ணைத்தனத்தையும் வரவாக்குகிறது. பல நேரங்களில் அதன் மூலாதாரம்  தயக்கம் என்பதாக இருக்கிறது. அதற்கான நிவாரணம் தன்மதிப்பு வளர்ச்சியடைவதில்தான் இருக்கிறது. ஆனால், இது தன்னிலிருந்து விலகிய அக்கறைகள் ஆர்வங்களால் தூண்டப்படும் வெற்றிகரமான செயல்பாட்டினால்தான் எட்டப்படுவதாகிறது.

 

ஒரு தற்புகழ்ச்சியாளன் (megalomaniac) தற்காதல்காரனிடமிருந்து(Narcissist) எப்படி வேறுபடுகிறான் என்றால் அவன் எல்லோரையும் வசியம் செய்பவனாக, இருக்க வேண்டும் என்பதை விட அதிகாரம் மிக்கவனாக, சக்தி வாய்ந்தவனாக இருக்கவே அதிகம் விரும்புகிறான். மற்றவர்கள் தன்னை நேசிப்பதை விட தன்னைப் பார்க்க அச்சப்படுவதை அவன் விரும்புகிறான். இந்தப் பிரிவில் தான் ஏராளமான பைத்தியங்களும், சரித்திரத்தின் மகத்தான மனிதர்களில் பெரும்பாலும் இடம்பெறு கிறார்கள். அதிகாரம் மீதான பற்று, காதல் இயல்பான மனிதகுலத்தில் ஒரு வலுவான அம்சமாக தற்பெருமைபோல் இடம்பெற்றுள்ளது. அவ்விதத்தில் அது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியது. ஆனால், அது அதீதமான அளவில் அல்லது எதார்த்த நிலைமை குறித்த போதுமான அறிதலும் புரிதலும் அற்ற அளவில் அமையும்போது மட்டுமே அது சகிக்கமுடியாததாகிறது. இது எங்கு ஏற்படுகிறதோ அந்த மனிதனை இது மகிழ்ச்சியற்ற வனாக்குகிறது, அல்லது, மடத்தனமானவனாக்குகிறது, அல்லது இரண்டுமாக்குகிறது. மகுடம் சூட்டப்பட்ட தலைவனாக தன்னை பாவித்துக்கொள்ளும் ஒரு மனநோயாளி ஒருவகையில் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் அவனுடைய மகிழ்ச்சி சிந்த சுவாதீனம் உள்ள மனிதன் பொறாமைகொள்ளும் வகையான மகிழ்ச்சி அல்ல. மாமன்னன் அலெக்சாண்டர் சித்த சுவாதீனமற்ற அந்த மனிதரைப் போன்ற போன்றவர் தான். ஆனால், அவரிடம் மனநோயாளியின் கனவை நனைவாக்கும் திறனாற்றல் இருந்தது. அதேசமயம் அவரால் தன்னுடையதேயான கனவை நனவாக்க முடியவில்லை. காரணம் அவருடைய வெற்றி வளர்ச்சியடைய அடைய அவருடைய கனவு தனது சாத்தியங்களை விரிவாக்கிக்கொண்டே போயிற்று. புகழுக்குத் தெரிந்த உச்சபட்ச மகத்தான மகத்தான வெற்றியாளர் அவர்தான் என்பது தெளிவானபோது தான் ஒரு கடவுள் என்று தீர்மானித்தார் அவர். அவர் மகிழ்ச்சியான மனிதராக இருந்தாரா? அவருடைய மது போதை, அவருடைய பெருங்கோபச் சீற்றங்கள், பெண்களிடம் அவருக்கு இருந்த ஈர்ப்பின்மை, அக்கறையின்மை, தன்னை தெய்வாம்சம் பொருந்தியவராக அவர் முடிவு செய்தது பறையறிவித்துக் கொண்டது  - இவை எல்லாமே அவர் மகிழ்ச்சியோடு இருக்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. மனித இயல்பில் ஓர் அம்சத்தை வளர்த்து, அதற்காக மற்ற அம்சங்கள் அனைத்தையும் பாழாக்குவதில் இறுதியான உறுதியான திருப்தி / நிறைவு இல்லை. அதேபோல், ஒருவருடைய தன் முனைப்பை,  ஈகோவை, பூதாகரமாகப் பெருக்கிக் காட்டுவதற்கான கச்சாப் பொருளாக உலகனைத்தையும் பாவிப்பதிலும் பரிபூரண நிறைவு கிட்டுவதில்லை. பொதுவாக மிகவும் மேனியாக் சித்தம் கலங்கியவர் ஆனாலும் சரி, குறைந்தபட்ச சித்த சுவாதீனம் உள்ளவரானாலும் சரி - ஒருவித அதீத அவமதிப்புக்கு ஆளாகியவராக, ஒருவித அதீத அவமதிப்பின் உற்பத்திப் பொருளாகவே இருப்பார். தனது பள்ளிப் பருவத்தில் நெப்போலியன் சக மாணவர்களை விட மிகவும் தாழ்நிலையில் இருந்ததால் பாதிப்புக்கு ஆளானவர். சக மாணவர்கள் செல்வந்தர்கள்; செல்வ வளம் மிக்க மேற்குடி வர்க்கத்தினர். நெப்போலியன் உதவித் தொகை பெற்று படிக்கும் ஏழை மாணவன். புலம்பெயர்ந்தோர் திரும்புதலை அவர் அனுமதித்தபோது தன் பள்ளியிலான சக மாணவர்கள் தன் முன் தலைதாழ்த்தி வணங்குவதைக் காணும் மன நிறைவு ஏற்பட்டது அவருக்கு. என்னவொரு ஆனந்தம் இது!  இருந்தாலும், அது மன்னரை பலி கொடுத்து, அதேவிதமான மனநிலை அடைவதான அதேவிதமானதொரு மனநிறைவுக்கு இட்டுச் சென்றது.  அது ஸெயிண்ட் ஹெலனாவுக்கு இட்டுச்சென்றது. எந்த மனிதனும் தன்னிகரற்ற சக்தித் திறனாற்றல் கொண்டவர் அல்ல என்பதே உண்மை என்பதால் அதிகாரம் மீதான காதலால் மட்டுமே முழு நிறைவடையும் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு வாழ்க்கை கண்டிப்பாக ,சீக்கிரமாகவோ காலதாமதமாகவோ, கடந்துசெல்ல முடியாத, வெற்றிகொள்ள முடியாத தடைக்கற்களை சந்திக்கவேண்டிவரும். இப்படித்தான் நடக்கும் என்ற ஆறுதலும் புரிதலும் நமது பிரக்ஞைக்குள் வலுக்க்ட்டாயமாகப் பிரவேசிக்காமல் ஒருவகையான மனநிலைப் பிறழ்வின் மூலமே தடுக்கப்படுவது சாத்தியம் என்றாலும், ஒரு மனிதன் போதுமான அளவு அதிகாரம் மிக்கவனாக, உயர்ந்தவனாக இருந்தால் இந்த விஷயம் குறித்து தனக்கு சுட்டிக்காட்டுவோரை, எடுத்துச்சொல்வோரை அவனால் சிறையில் அடைக்கவும் சிரச்சேதம் செய்யவும் முடியும்.  இங்ஙனம், ஒடுக்குமுறைகள் அரசியல் மற்றும் உளவியல் ஆய்வு சார் உணர்வுத்தளங்களில் ஒன்றுக்கொன்று கைகோர்த்துச் செல்கின்றன. மேலும், எங்கெல்லாம் உளவியல் ஆய்வு சார் ஒடுக்குமுறை கணிசமான வடிவில் இடம்பெறுகிறதோ அங்கே உண்மையான சந்தோஷம் என்பது இல்லை. அதிகாரம் தனது முறையான வரம்பெல்லைகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும் அளவில் அது மகிழ்ச்சிக்கு பெருமளவு வழிவகுக்கலாம். ஆனால், அதிகாரம் என்பதே வாழ்வின் இறுதி முடிவாக பாவிக்கப்படும் அளவில் அது பேரழிவுக்கு புறவயமாக இல்லாவிடினும் உள்வயமாக ஒருவரை அழைத்துச் செல்கிறது .

 

மகிழ்ச்சியின்மைக்கான உளவியல்ரீதியான காரணங்கள் ஏராளமானவை, பலதரப் பட்டவை என்பது தெளிவாகவே தெரிகிறது. ஆனால், அவையெல்லாமே தமக்கிடையே பொதுவான ஒரு அம்சத்தைக் கொண்டிருக்கிறது. அச்சு அசலாக மகிழ்ச்சியற்ற மனிதனாகத் திகழ்பவன் தனது வளரிளம்பருவத்தில் சில இயல்பான திருப்திகள் கிடைக்கப்பெறாமல் இழப்புற்றவனாக இருக்கிறான். அப்படி கிடைக்கப்பெறாத அந்த ஒரே திருப்தியை வேறு எந்த நிறைவுணர்வையும் விட மேலாக மதிக்கத் தொடங்குகிறான். அவ்விதமாய் தனது வாழ்க்கைக்கு ஒரு பக்கமான வழியே, அதிலும் வெற்றி குறித்த அளவுக்கதிகமான வலியுறுத்தல் கொண்டதாய், அதனோடு தொடர்புடைய செயல்பாடுகளை வலியுறுத்துவதற்கு மாறாக இறுதி வெற்றி குறித்து அளவுக்கதிகமான வலியுறுத்தல் கொண்ட அளவில் அமைந்ததை அவன் தனது வாழ்க்கைக்குத் தந்து விடுகிறான். இதில் இன்னொரு மாற்றமும் தற்காலத்தில் அதிக அளவு சகஜமாக காணப்படுகிறது. ஒரு மனிதன் தன்னை முழுமொத்தமாக முறியடிக்கப்பட்டதாக உணர்கிறான். ஆனால் அவன் எவ்வகையான நிறைவையும் நாடுவதில்லை; வெறும் கவனஞ்சிதறலையும் மறதியையுமே நாடுகிறான். அவ்விதமாய் அவன் இன்பத்தின் பக்கன் ஆகிறான். அதாவது, வாழ்க்கையின் உயிர்ப்புத்தன்மையை, உயிரோட்டத்தை குறைப்பதன் மூலம் வாழ்க்கையை சகித்துக்கொள்ளக்கூடியதாக மாற்ற முயல்கிறான். எடுத்துக்காட்டாக மது போதை ஒரு தற்காலிகத் தற்கொலை. அது வரவாக்கும் மகிழ்ச்சி வெறும் எதிர்மறையானது மட்டுமே. மகிழ்வின்மையின் கணநேரம் நிறுத்தம் மட்டுமே. தற்காதலனும், தற்புகழ்ச்சியாளனும் மகிழ்ச்சி என்பது சாத்தியமே என்று நம்புகிறார்கள். அதை அடைய சரியான வழிகளாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வழிகளை அவர்கள் பின்பற்றக்கூடும். ஆனால், போதைக்கிறக்கத்தை நாடும் மனிதன் அது எந்த வடிவத்திலானதாக இருந்தாலும் நம்பிக்கை அறவே இழந்துவிட்டவர். அவர் விஷயத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது மகிழ்ச்சி என்பது விரும்பத்தக்கதே என்று அவரிடம் வலியுறுத்துவது. மகிழ்ச்சியற்றிருக்கும் மனிதர்கள் சரியாகத் தூங்கமுடியாதவர்களைப் போல,  அது குறித்து எப்போதுமே பெருமிதவுணர்வு கொண்டிருப்பவர்கள். ஒருவேளை அவர்களுடைய பெருமிதம் தனது வாலை இழந்துவிட்ட நரி அது குறித்து அடையும் பெருமித உணர்வை ஒத்ததாக இருக்கலாம். அப்படியெனில் இந்த பெருமித உணர்விலிருந்து அவரை குணப்படுத்த நாம் செய்ய வேண்டியது – அவரால் இன்னொரு வாலை, புதிய வாலை வளர்க்க முடியும் என்பதையும், அதற்கான வழிவகைகளையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவது. மகிழ்ச்சியாக இருக்கமுடிவதற்கான ஒரு வழியை கண்டுகொண்ட நிலையிலும் வேண்டுமென்றே மகிழ்ச்சியின்மையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறவர்கள் அரிதாகவே இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அத்தகைய மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை ஆனால், மிகச் சிலராகவே இருப்பார்கள் என்பதால் அவர்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. எனவே, வாசகர் மகிழ்ச்சியற்று இருப்பதைவிட மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார் என்று நான் அனுமானித்துக் கொள்கிறேன். அவருடைய இந்த விருப்பம் நிறைவேற என்னால் உதவ இயலுமோ, இயலாதோ - எனக்குத் தெரியாது. ஆனால்,  எப்படியிருந்தாலும் அதற்கான முயற்சி எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வழியில்லை .