பூமராங்……!
சக மனிதர்களை ரட்சிக்க வந்தவராய்
சுண்டுவிரலை அல்லது கட்டைவிரலைச்
சரேலென்றறுத்து
பெருகும் செவ்விரத்தத்தால் கையெழுத்திடாத குறையாய்
சொல்லிச்சொல்லிச்சொல்லிக்கொண்டே
யிருப்பவரால்
என்றுமே ஏனோ காண முடிவதில்லை
யவ்வொரு செயலில்
தன் சாயம் வெளுத்து
சுயரூபம் சுருங்கிக்கொண்டே போவதை


No comments:
Post a Comment