LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

சொல்லத் தோன்றும் சில…… லதா ராமகிருஷ்ணன்

 

சொல்லத் தோன்றும் சில……

 

லதா ராமகிருஷ்ணன்

ஆங்கில நாளிதழிலும் தமிழ் நாளிதழிலுமாய் தினமும் ஒன்றிரண்டு செய்திகள் மனதின் அமை தியை முறித்துப் போடத் தவறுவதில்லை.

சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி. 14 வயது டைய பள்ளிச் சிறுவர்கள் மூவரோ நால்வரோ அவர்களுடைய வகுப்புத் தோழி ஒருத்தியோடு அவளுடைய வீட்டில் ஒன்றாகப் படிப்பது வழக்க மாம். அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் வேலை நிமித்தம் வெளியே போயிருக்க அந்தப் பெண் ணின் தங்கையை வெளியே போய் விளையாடச் சொல்லியிருக்கிறார்கள் சிறுவர்கள். சிறிது நேரங் கழித்து வீடு வந்தவள் மூடியிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து பார்த்தால் வகுப்புத் தோழியை நிர்வாணமாக்கி கைகளை யும் கண்களையும் கட்டி நீலப்படம்போல் வீட்டில் நடத்திப் பார்க்க முயற்சி நடந்துகொண்டிருந்த தாம்.

அழுதுகொண்டே தங்கையிடம் வீட்டாரிடம் தெரி விக்க வேண்டாமென அக்கா சொல்லியிருக்கி றாள். சில நாட்களில் அக்காவுக்கும் தங்கைக் கும் ஏதோ சண்டை வர தங்கை அம்மாவிடம் நடந்த தைச் சொல்லிவிட்டாள்.

அவளுடைய பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தர அந்தப் பையன்கள் கூர்நோக்குப் பள்ளிக் கும் அந்தப் பெண் சீர்திருத்த இல்லத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் ஒரு செய்தி. CBSC PLUS 2 மாணவர்கள் இருவர். பெரிய விரோதமெல்லாம் கிடையாது. ஒருவனின் உடற் பருமனையும் அவனுடைய மார்புப் பகுதியையும் மற்றவன் கிண்டல் செய்துகொண்டேயிருப்பா னாம். பருமனாயிருக்கும் பையனை தேவையில் லாமல் அங்கே யிங்கே தொட்டு கேலி செய்வா னாம். அது BODY SHAMING ஆகவும் இருந் திருக்கலாம். ஓரினப்புணர்ச்சிக்கான அழைப்பாக வும் இருக்கலாம். பருமனாயுள்ள பையன் அது குறித்து பள்ளியிலும் புகார் செய்து பள்ளியிலும் அந்த இன்னொரு மாணவனைக் கண்டித்திருக்கி றார்கள். சமீபத்தில் அந்த பருமனான பையன் மற்றவனை நட்பாக ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று தயாராகக் கொண்டுசென்றிருந்த கத்தி யால் குத்தியிருக்கிறான். அந்தப் பையன் இறந்து விட்டான்.

விவரமறிந்து, கொன்றவனின் பெற்றோர் அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு எதனால் அப்படிச் செய்தேன் என்றும் தெரிவித்திருக்கிறான் அந்த மாணவன். அவனும் இப்போது கூர்நோக்கு இல்லத்தில்.

 சின்னக்குழந்தைகள் மீதான கவனமும், அக்கறை யும் வளரிளம்பருவத்தினர் மீதான அக்கறையும் இப்போதிருப்பதைக் காட்டிலும் இன்னும் பன் மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்ப தையே இத்தகைய செய்திகள் புலப்படுத்துகின் றன.

குழந்தைகளும் வளரிளம்பருவத்தினரும் பெற் றோர், ஆசிரியர்களின் பொறுப்பு என்ற பார்வை சரியல்ல. ஒட்டுமொத்த சமூகமும் இதற்கான பொறுப்பேற்க வேண்டும். இப்படி யொரு செய்தி யைப் படித்ததுமே சிலர் அதற்கு சாதிச்சாயம் பூசிப் பார்க்க முற்படுவதும் இந்தக் காலத்துப் பிள்ளை களே இப்படித்தான் என்று எல்லோரை யும் ஒரு மொந்தையாக்கி அங்கலாய்ப்பதும், பிரச்சனைக் குத் தீர்வாகாது.

 

மெகாத்தொடரெனும் மகாத்துயர். - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மெகாத்தொடரெனும் மகாத்துயர்.

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அந்த மெகாத்தொடரின் வறிய குடும்பத்தார் நேற்று 50 லட்சம் டௌரி கொடுக்கச் சம்மதித்து இருபதுகோடிகளுக்கு
நகைவாங்கி முடித்திருந்தார்கள்.
இன்று இன்னொரு தொலைக்காட்சி மெகாத்தொடரில்
அந்த இருபதுகோடி பெறுமானமுள்ள நகைகள் களவாடப்பட்டு விட்டன.
முதல் தொலைக்காட்சிச் சேனலிலிருந்து ஆறுபேர் ஆளுக் கொரு தீப்பந்தமேந்திக்கொண்டு
தெருத்தெருவாக திருடர்களைத் தேடிக்கொண்டு மாட்டுவண்டியில் சுற்றினார்கள்.
பெயரறியாத் திருடர்களின் பெயர்களை உரக்கப் பாடிக்கொண்டே சென்ற அவர்களை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தது நிலவு.
ஒரு திருப்பத்தில் திடீரென எதிர்ப்பட்ட திருடர்களில் ஒருவனை அவனுடைய கூட்டாளிகளுக்கே அடையாளம் தெரியவில்லை.
அரைநிமிடத்திற்கு முன்பு ‘இனி இவருக்கு பதில் இவர்
இந்தத் திருடர் பாத்திரத்தில் வருவார்’ என்று சின்னத்திரை யில் சிந்நேரம் ஓடிக்கொண்டிருந்த அறிவிப்பை
அவர் கவனிக்கத்தவறிவிட்டார்.
நடுத்தெருவிலமர்ந்தபடி அவர்கள் கோடிகளைப் பரப்பி பங்குபோட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
மாட்டுவண்டியில் அவர்களைத் தேடியபடியே வந்தவர்கள்
நடுவீதியில் இறைந்துகிடந்த பணத்தைப் பார்க்காமல் அந்தப்புறமாய் ஒதுங்கிச்சென்றார்கள்.
பார்த்துவிட்டால் பின் மெகாத்தொடரை முடித்துவிடநேருமே....
முடிந்தால் இன்னும் நாலு வருடங்களுக்கோ நாற்பது வருடங்களுக்கோ (நான் இருக்கமாட்டேன் என்பதால் நானூறு வருடங்களுக்கோ என்று சொல்வது நியாயமாகாது!)
நீளவேண்டியவையல்லவா மெகாத்தொடர்கள்?
ஆற அமர கோடிகளை எண்ணிமுடித்து நிமிர்ந்தவர்களுக்கு அத்தையம்மா
(அத்தை என்பதுதான் முக்கியமே தவிர யாருடைய என்பதல்ல. அத்தை ஒரு குறியீடு, அடைமொழி, மெகாத்தொடர்களுக்கான தனி அகராதி; வாதி; பிரதிவாதி இன்னுமுள மீதி….)
அன்போடு தங்க லோட்டாக்களில்
தேனீர் கொண்டுவருகிறாள்.
ஆசைதீரக் குடிக்கும் திருடர்கள் அரையுயிராய்
மயங்கிச் சாய்கிறார்கள்.
சாவதற்கு முன் கோடிகளைத் தொலைத்த அந்தக் குடும்பத் தைத் தேடி தங்கள் சேனலிலிருந்து அந்த இன்னொரு சேனலுக்குள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
பணத்தை ஒப்படைத்து
‘நல்லபடியாகத் திருமணத்தை முடியுங்கள். நாங்கள் நல்லவர்களாகிவிட்டோம் – இதோ வெறும் கைகளோடு விடைபெற்றுக்கொள்கிறோம் என்று ஒரே குரலில் நாத்தழுதழுக்கக் கண்கலங்கக் கூறுகிறார்கள்.
அதிலொருவன் மட்டும் அடக்கமாட்டாமல் கேட்டுவிடு கிறான். ”அதுசரி, அடித்தட்டு வர்க்கக் குடும்பமென்று அடிக்கடி அழுதவாறே அடிக்கோடிட்டுக் கூறிக்கொள்ளும் உங்களுக்கு இத்தனை கோடிகள் எப்படிக் கிடைத்தன?”
அதைக் கேட்ட அந்தக் குடும்பம்
அத்தை கொடுத்த விஷம் சரியாக வேலை செய்யவில்லை யென
மருந்துக் கம்பெனி மீது நஷ்ட ஈடு வழக்குபோட்டதில் இன்னும் சில கோடிகள் அவர்களுக்குக் கிடைத்ததாகவும் அதைக்கொண்டு அவர்கள் தங்கள் மெகாத்தொடரின் இரண்டாம் பகுதியை ஒளிபரப்பப்போவதாகவும் கூறப்படுகிறது.

கவிதானுபவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதானுபவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உபதேசிக்கும் கவிதைகளை எழுதிக்கொண்டே போனவருடைய வரிகளெல்லாம்
ஒவ்வொன்றாய் மலையுச்சியிலிருந்து உருண்டோடி
அதலபாதாளத்தில் விழுவதையறியாமல்
இன்னுமின்னுமாய் பிரசங்கம் செய்துகொண்டிருந்தவரை
ஆதுரத்தோடு பார்த்துக்கொண்டிருந்த அவருடைய
எழுதப்படாக் கவிதை
தனக்குள் முணுமுணுத்துக்கொண்டது:
பீடமல்ல கவிதை
பாழ்மனதின் எதிரொலி
உயிர்வலி
உன்மத்தக்களி
சரீரம் கடந்த நிலை
சரணாகதி
ஒருவேளை நோயுற்றிருக்கும் மருத்துவராயிருக்கலாம்
ஆனால் மருத்துவரில்லை கவிதை
பார்க்கும் ஆடி எனில் அதற்குள் தெரியும் முகம்
இன்மைக்கும் பன்மைக்கும் இடையே
உண்மைக்கும் பிரமைக்கும் இடையே
வலியுணர்ந்து வாழ்வுணர்ந்து
வாக்கின் வலுவுணர்ந்து
உணர்ந்ததை உட்குறிப்பாய் உணர்த்துவதே கவிதையென்றுணர்.
அடிக்குறிப்பாய்_
இதுவும்கூடக் கவிதையில்லையென்றுணர
முடிந்தால்
இனி நீயெழுதுவது கவிதையாகும்,
அறிவாய்."