மனிதநேய மாசுகள்
நவீன படகுக்காரும்
கொண்ட
கட்சிப்பின்புலம் கொண்ட
அதிசாதாரணக் கவியொருவர்
வறுமை குறித்து பக்கம்பக்கமாக
எழுதித்தள்ளுவதை
வாய்பிளந்து ரசித்துக்கொண்டிருப்பவர்கள்
அவரை விட அதிசிறந்த கவிஞரொருவர்
அரைவேளை கஞ்சிக்கும் வழியில்லாமல்
வீட்டுவாடகை கட்ட வழியின்றி
மூச்சுத்திணறிக்கொண்டிருப்பதைக்
கவிதையாக்கி எழுதுவதை
புலம்பலென்று பகுத்து
கடந்துசெல்கிறார்கள்.

No comments:
Post a Comment