கவிஞர் வைதீஸ்வரன்
சமகாலத் தமிழ்க்கவிதை வரலாற்றில் தவிர்க்கமுடியாத முன்னோடிகளில் முக்கியமானவர் கவிஞர் வைதீஸ் வரன். கவிதைகளோடு, சிறுகதைகள், இலக்கியம் - சமூகம் சார்ந்த கட்டுரைகள் என பல எழுதியுள்ளவர். இன்றுவரை எழுதிக்கொண் டிருப்பவர். 2017 வரையான அவருடைய கவிதைகள் அனைத்தும் இடம்பெறும் முழுநிறைவான தொகுப்பு மனக்குருவி புதுப்புனல் அரங்கில் கிடைக்கும். கவிதைகளோடு வைதீஸ்வரன் அவர்களின் அருமையான கோட்டோவி யங்களும் கவிதை குறித்த அரிய கட்டுரைகளும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவருடைய கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இதுவரை இரண்டு தொகுப்புகள் வெளிவந்துள்ளன - 1. CITY WALLS , 2. MOUNTS, VALLEYS AND MYSELF

No comments:
Post a Comment