LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 19, 2025

கத்திமுனைப் பயணம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கத்திமுனைப் பயணம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நிரந்தரம் என்பதும் தாற்காலிகம் என்பதும்
காலக்கணக்கு மட்டுமல்ல…..
காலின்கீழ் கத்திமுனை உறுத்திக்கொண்டே
யிருக்கிறது.
கணநேர சந்தோஷம் பாதங்களின் கீழ் பஞ்சை
அடர்த்தியாக நீட்டிப் பரப்பிவைக்கும் நேரங்களில்
கத்திமுனை காணாமல் போய்விடுகிறது.
சமயங்களில் கால்பதியும் குளிர்நீர்ப்பரப்பின் இதம்
முனை மழுங்கச் செய்கிறது.
இறங்கித் தான் ஆகவேண்டுமென்றாலும்
பறக்கும் பொழுதுகள் உண்டு.
தம்மைக் கிழித்துக்கொண்டு நமக்கு
மலர்க்கம்பளம் விரிக்கும் தருணங்கள்
ஆகப்பெரும் வரம்.
என்றாலும் _
எப்போதுவேண்டுமானாலும் அது சிந்தச்
செய்யலாகும் சில ரத்தத்துளிகள்
பிரக்ஞையில் ஒரு மூலையில்
சேகரமாகிக்கொண்டு.
போகப்போக பழகிப்போய்விடுமாயினும்
கத்திமுனையின் கூர்மை ஓர்மையில்
ஆழமாகக் குத்திக் கிழித்தபடியே……

No comments:

Post a Comment