குழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம்
லதா ராமகிருஷ்ணன்
மே, 2018, திண்ணை (இணைய இதழ்) இதழில் பிரசுரமானது
நிறைய பள்ளிக்கூடங்களில் மிகக்குறைவான கவனிப்பையும் பராமரிப்பையும் பெறுவது கழிப்பறையாகவே இருந்துவருவது கண்கூடு. அல்லது, ஆசிரிய சிரியைகள் பயன்படுத்தும்
கழிப்பறை மட்டும் ஓரளவு சுத்தமாக இருக்கும்.
வகுப்புநேரத்தின்போது சிறுநீர் கழிக்கவேண்டும் என்றோ,
மலம் கழிக்கவேண்டும் என்றோ குழந்தைகள் கேட்பதற்கே
மிகவும் பயந்துகொண்டிருப்பதும்,கேட்டால் ஆயாவிடம்
அல்லது ஆசிரியரிடம் திட்டும், அடியும்வாங்க வேண்டியிருப்
பதும் வழக்கமாக நடந்துவருவது….
இதில் மழலையர் வகுப்பில் ஒரு பெண்குழந்தை மற்ற குழந்தைகளை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பதென்றால்….
அடிக்கடி சிறுநீர் கழிக்கச்செல்வதென் றால்… அப்படித்தான்
அந்த ஐந்துவயதிற்குட்பட்ட பெண்குழந்தை அடிக்கடி
போய்வந்து கொண்டிருந்தாள். நடக்கும்போது கால்களை
சற்று அகட்டி முகம் ஏதோ சொல்லொணா வலியில் சுளிக்க, போவாள்.
அந்தக் குழந்தையின் செய்கையில் ஏதோ வித்தியாசமு
ணர்ந்த ஆசிரியை குழந்தையை அழைத்து பரிவோடு
கேட்டதில் மழலை மாறாத குரலில் அந்தச் சிறுமி கோர்வை
யற்றுச் சொன்ன விஷயம் ஆசிரியையைநிலைகுலையச்
செய்தது.
சிறுமியினுடைய வார்த்தைகளின் சாராம்சம் இதுதான்:
“எங்க சித்தப்பா ஒண்ணுக்குப்போற இடத்தை எப்பவும் அழுத்திக்கிட்டே, நோண்டிக்கிட்டே இருப்பாங்க. ரொம்ப
வலிக்குது மிஸ்”
அதிர்ந்துபோன ஆசிரியை காட்டச்சொல்லிக் கேட்டபோது
வலியை மீறிய வெட்கத்தோடு அந்தப் பெண்குழந்தைகாட்டிய
இடம் சிவந்து புண்ணாகிக் கிடந்தது. எத்தனை நாட்கள்,
எந்தெந்த வேளைகளில் அந்த வேதனையைஅந்தக் குழந்தை அனுபவிக்கும்படியாகி யிருக்கும்?
வலியோடு அந்தக் குழந்தைக்கு எத்தகைய infections ஏற்பட்டிருக்கக்கூடும்…. அந்த அத்துமீறலை தினந்தினம் மரணபயத்தோடு எதிர்பார்த்து, எதிர்க்க வழியின்றி அந்தக்குழந்தையின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்…
குடும்பத்திற்குள்ளாக பெண்குழந்தைகள் மீது நிகழ்த்தப்
படும் இத்தகைய பாலியல் ரீதியான அத்துமீறல்கள் துன்புறுத்தல்கள் பெரும்பாலான நேரங்களில் வெளியே தெரியவராமலேயே போய்விடுகிறது. சம்பந்தப்பட்ட
ஆணின் அத்துமீறல் தெரிந்தும் தெரியாமலுமாய் அந்த வீட்டுப்பெண்கள் வாளாவிருந்துவிடுவதும் நடப்பதுதான்.
எல்லா வீடுகளிலும் இப்படித்தான், எல்லாக் குடும்பங்களிலு
முள்ள ஆண்களும் இப்படித்தான் என்பதல்ல.
ஆனால், குடும்பங்களில் பெண்கள் மீது, குறிப்பாக பெண்குழந்தைகள் மீது நடத்தப்படும் இத்தகைய பாலியல்
ரீதியான துன்புறுத்தல் களிலிருந்து சம்பந்தப்பட்ட குழந்தை
களைக் காப்பாற்றவேண்டுமா இல்லையா?
குடும்பங்களில் பலநேரங்களில் பெரியவர்கள் தங்கள் கோபம், ஏமாற்றம், விருப்புவெறுப்புகள்எல்லாவற்றிற்கும் வீட்டுக்குழந்தைகளை அடித்தும் திட்டியும் வடிகால் தேடிக்கொள்வதையும் பார்க்கிறோம்தானே.
பெண்குழந்தையைக் கட்டுப்பாடாக வளர்க்கிறோம் என்று பெண்குழந்தையின் பிறப்புறுப்பில் சூடுபோட்ட‘பாசமுள்ள’
தாய், பாட்டி என்றெல்லாம் நம்மிடையே இல்லையா என்ன?
(மனித நேயத்தைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதும் எழுத்
தாளர் ஒருவர் குழந்தையின் கண்ணை மட்டும் விட்டு மற்ற இடங்களில் அடித்து விளாசி,தோலையுரித்துப் பாடம் கற்பிக்கவேண்டும் என்று எழுதியிருந்தார்! இது என்னவிதமான மனித நேயம், சமூகஅக்கறை என்று திகைப்பாயிருந்தது).
குடும்பங்களில் குழந்தைகள் மீது, குறிப்பாக பெண்குழந்தை
கள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களிலிருந்துஅவர்களைக் காப்பாற்ற நாம் செய்யவேண்டியது என்ன என்று நாம் யோசித் தாகவேண்டும்.
குழந்தைகளுக்குGood Touch, Bad Touch என்று சொல்லித்தருவ
தோடு நம் கடமை முடிந்துவிடுகிறதா? Bad Touch என்றுதெரிந்
தும் அதிலிருந்து மீளமுடியாத சூழல் குழந்தையிடம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எத்தனை பெரிய,காலத்திற்கு
மான பாதிப்பை ஏற்படுத்தும்….
இந்த அத்துமீறல்கள் ஆண்குழந்தைகள் மீதும் நிகழ்த்தப்
படுகிறது. பல நேரங்களில் தங்கள் வீட்டுச் சிறுவர்களின் ஆணுறுப்பை வீட்டிலுள்ள பெரியவர்களோ, வீட்டிற்கு வருகை
தரும் பெரியவர்களோ கையால் அழுத்திப்பிடிப்பதும், ஆட்டு
வதும் சகஜமாய் காணக்கூடிய காட்சிகள்.
குழந்தையிடம் செல்லமாய் விளையாடுகிறோம் என்ற போர்வையில் இத்தகைய அத்துமீறல்கள் நிகழ்த்தப்படுகின்றன.
தங்கள் வீட்டுக் குழந்தைகளிடம், அல்லது, தங்களுக்குத்
தெரிந்த குழந்தை களிடம், குறிப்பாகபெண்குழந்தைகளிடம் இத்தகைய பாலியல்ரீதியான அத்து மீறல்களில் ஈடுபடுபவர்
களில் சற்றே பெரியசிறுவர்கள், விடலைப்பருவத்தினர்,
நடுத்தர வயதினர், முதியவர்கள் என பலதரப்பினர் உண்டு.
சிறுவர்கள்,விடலைப் பருவத்தினர் பாலுணர்வின் தாக்கத்
தால், கைக்குக் கிடைத்த பெண்ணிடம் அத்துமீறுகின்ற னர்.சிறுவர்களைப் பொறுத்தவரை அது அத்துமீறல் என்பதே தெரியாமல் இருக்கவும் வழியுண்டு.
அதுவும் சமீபகாலமாய் கைபேசி, இணையதளம் முதலிய
வற்றில் பெருகி யுள்ள நீலப்படங்கள் எத்தனைஆண்களால் புணரப்பட்டாலும் அதை ஒரு பெண் அமோகமாய் விரும்புவாள் என்றவிதமாகவே விதவிதமாய் உருவேற்றிவரு கின்றன.
திரைப்படங்கள் பெண்களை போகப்பொருளாகக் காட்டுவதை இணையமும், கைபேசியும் பன்மடங்கு அதிகமாக மிக அப்பட்டமாகக் காட்டுகின்றன.
இவற்றைப் பலவழிகளிலும் பார்க்க முடிந்த சிறுவர்கள், இளைஞர்கள் மனங்களில் இதன் மூலம் பெண்ணுக்கு நேரும்
அக புற வலியைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமலும், விருப்பமில்லாமலும் தங்களால் சுலபமாகத் தொடமுடிந்த பெண்குழந்தைகளிடம் தங்கள் அத்துமீறல்களை நிகழ்த்து
கிறார்கள்.
எல்லாம் தெரிந்த பெரியவர்கள் சிலரும் வீட்டிலுள்ள பெண்குழந்தையை பாதுகாப்பான போகப்பொருளாகக்
கையாளும் அவலமும் நடக்கிறது.
‘பெண்ணைத் தொட்டால் இன்பம், நாம் தொட்டாலே அவளுக்கு இன்பம்’ என்ற மனப்பான்மையோடு, யாரைத் தொட்டால் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற மனக்கணக்கோடு தங்கள் வீட்டுப்பெண்குழந்தையை, சிறுமியை பாலியல் தொந்தரவு செய்பவர்கள் – தங்கள் வீட்டிலுள்ள மற்ற பெண்களுக்குத் தெரியாமலும், தெரிந்தேயும் கூட இத்தகைய காரியத்தில் ஈடுபடுவது நடக்கிறது.
(சில வருடங்களுக்கு முன்னால்ஒரு படித்த பெண்மணி தன் மகளிடம் தன் கணவர் தவறாக நடந்ததுண்டு என்றும் குடும்ப கௌரவத்தை நினைத்துஅதை மனதிற்குள்ளேயே பூட்டிவைத்ததாகவும் கூறியிருந்ததைப் படித்தது நினைவுக்கு வருகிறது).
”சீ – சீ, இப்படியெல்லாம்கூட நடக்குமா என்ன? எங்கோ ஒரு
வீட்டில் நடப்பதை இப்படி எல்லோர் வீடுகளிலும்நடப்பதாக எழுதுவது எத்தனை அநியாயம்? வீணாக குழந்தைகள் மனங்
களில் பீதியைக் கிளப்புவதாய் எழுத லாமா?” என்றெல்லாம் அதிர்ந்துபோவதிலோ ஆவேசப்படுவதிலோ, அங்கலாய் ப்பதிலோ பயனில்லை.
இத்தகைய அத்துமீறல்கள் ஒரு வீட்டிலும் நடக்கலாகாது;
ஒரு குழந்தைக்கும் நடக்கலாகாது என்பதுதான் நம் குறிக்
கோளாக இருக்கவேண்டும்.
கல்விக்கூடங்களின் பங்கு:
1)பெண்குழந்தைகளுக்கு வீட்டில் நேரக்கூடிய பாலியல்
ரீதியான அத்துமீறல்களைத்தெரிந்துகொண்டு அந்த அநியாயத்
தைத் தடுத்து நிறுத்துவதில் கல்விக்கூடங்கள் பெரும்பங்காற்ற முடியும்.வீட்டில் தங்களுக்கு நேரும் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களை பயமின்றி யாரிடமேனும் எடுத்துரைக்க வும்,அந்த பாதிப்பிலிருந்து விடுபடவும் உரிய வழிகளை பள்ளிக்கூடங்கள் உருவாக்கித் தரவேண்டும்.
2)தொடர்ந்தஇடைவெளி களில் பள்ளிக் குழந்தைகளுக்கு – மழலையர் வகுப்பு முதல் – Good Touch, Bad Touch சொல்லிக்
கொடுப்பதோடு, அவர்களை வீட்டிலோ, அக்கம்பக்கத்திலோ ‘அசிங்கமாகத் தொடுபவர், துன்புறுத்துபவர் யார்என்று கேட்டு, சம்பந்தப்பட்ட நபரை அணுகி அவர்களிடம் இனி அவ்வாறு நடக்கலாகாது என்று அறிவுறுத்தலாம்.
3)குழந்தையின் மீது தான் நிகழ்த்திவரும் பாலியல்சீண்டல்
கள், துன்புறுத்தல் கள், அத்துமீறல்கள் வெளியேே தெரிந்து
விட்டதென்றாலே, அதை குடும்பத்தினர் கண்டுங் காணாமலும் இருந்தாலும் பள்ளி, சமூகத்திலுள்ள மற்றவர்கள் சும்மாயிருக்க மாட்டார்கள், கேள்வி கேட்பார்கள் என்று தெரியவந்தாலே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அச்சம் வந்துவிடும்.
தேவைப்பட்டால் அத்தகை யோர் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட ஆவனசெய்யப்பட வேண்டும்.
4)பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள் ஆகியோரை வரவழைத்து பள்ளிக் குழந்தைகளிடம் இந்தகுழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
இது தொடர்பாக அவர்களிடம் விவரங்களைக் கேட்டறிய
லாம்.
5)மாணாக்கர் களின் பெற்றோர்களுக்கு இது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தலாம்.
6)துண்டுப்பிரசுரங்கள் மூலம் இந்த அத்துமீறல்கள்
தொடர்பான விழிப்பு ணர்வை சமூகத்தில் ஏற்படுத்தலாம்.
7)ஊடகங்கள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும்
பங்காற்ற முடியும்.
மிக முக்கியமாக, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு,
சிறுவர் சிறுமிய ருக்கு தொடர்ந்த இடைவெளிகளில்நடத்தப்
படும் மருத்துவப் பரிசோதனைகளில் அவர்கள் மீது நிகழ்த்தப்
படக் கூடிய பாலியல் அத்துமீறல்களைக் கண்டறியத் தக்க மருத்துவப் பரிசோதனைகளும் இடம்பெறவேண்டியது இன்றி யமையாதது.
குழந்தைகள் குறைகேட்பு மையங்கள், அவசர உதவிக்கான தொலைபேசி எண் ஆகியவையும் தேவையானவையே.
என்றாலும், சிறு குழந்தைகள் தைரியமாக அந்த மையங்களை அணுகி குடும்பத்தினரால்,அக்கபக்கத்தில் உள்ளவர்களால் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல்களை எடுத்துரைத்து நிவாரணம் தேடமுன்வருவார்கள் என்று எதிர்பார்க்கவியலாது. பலவகையாக அவர்கள் அச்சுறுத்தப் பட்டிருப்பார்கள்.
எனவே, அவர்கள் தினமும் Home away from Home ஆக
பாவித்துச் சென்றுவரும் பள்ளிக் கூடங்களில் மேற்குறிப்
பிட்ட முன்முயற்சி கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமாகிறது.
இது குறித்து மத்திய, மாநில அரசுகள் முனைப்பாக கவனம் செலுத்துவதும், காலதாமதமின்றி செயல்பட வேண்டியதும்
மிக மிக அவசியம்.
No comments:
Post a Comment